எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.15 - சரக்கு சேவை வரியை அமுல்படுத்தும் வரை வரி வருவாய் இழப்பீட்டு தொகையை நிறுத்த கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுக்குறித்து பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
மத்திய விற்பனை வரி விகிதத்தை குறைத்திருப்பதால் 20102011ம் ஆண்டு மற்றும் அதன் தொடர்ச்சியான ஆண்டுகளில் மாநில அரசுகளுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை ஈடு செய்வது தொடர்பாக நிலுவையில் உள்ள சில பிரச்சினைகளை கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். இதுக்குறித்து தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளின் ஆட்சேபங்கள், மாநில நிதியமைச்சர்களின் உயர் அதிகார குழுத் தலைவர் மூலம் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் ஏற்றுக் கொள்ள முடியாத நிலைப்பாட்டிலேயே மத்திய அரசு டிப்பது துரதிருஷ்டவசமானது. 20102011ம் ஆண்டிற்கும் வருவாய் இழப்பீட்டுத் தொகை வழங்க மத்திய அரசு ஒப்புக் கொண்ட போதிலும் மதிப்புக் கூட்டு வரி விகிதத்தை 4 சத வீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்தியதன் மூலம் கிடைத்த கூடுதல் வருவாயை கழிப்பதன் மூலம் அந்த நிதியாண்டிற்கான உரிய இழப்பீட்டுத் தொகை திட்டமிட்டே கட்டுப்படுத்தப்பட்டது.
மத்திய விற்பனை வரி இழப்பீட்டை, மதிப்புக் கூட்டு வரி விகிதத்தை திருத்தி அமைத்ததன் மூலம் கிடைத்த கூடுதல் வருவாயுடன் இணைக்கும் மத்திய அரசின் நடவடிக்கை ஒரு தலைபட்சமானது. ஏற்றுக் கொள்ள இயலாதது. மத்திய விற்பனை வரி விகிதத்தை குறைப்பதற்கும், மதிப்புக் கூட்டு வரி விகிதத்தை உயர்த்துவதற்கும் எந்த தொடர்பும் இல்லை. மத்திய விற்பனை வரி இழப்பீட்டுத் தொகைக்கான நெறிமுறைகளின் ஒரு பகுதியாக இது இடம் பெறவில்லை.
இரண்டாவதாக, மத்திய விற்பனை வரி ஈட்டுத் தொகையை 20112012 முதல் நிறுத்தி வைக்கும் முடிவும் கடும் ஆட்சேபத்திற்குரியது. சரக்கு மற்றும் சேவை வரி அறிமுக முன்னோடியாகவே மத்திய விற்பனை வரி விகிதம் குறைக்கப்பட்டது. சரக்கு மற்றும் சேவை வரி குறித்து ஒரு மித்த கருத்தை உருவாக்குவதோடு, உரிய நடைமுறைகள் கொண்டு வருவதும் மத்திய அரசின் பொறுப்பாகும். இந்நிலையில் சரக்கு மற்றும் சேவை வரியை அறிமுகம் செய்ய தவறியதால் ஏற்பட்ட இழப்பை மாநிலங்கள் ஏற்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.
சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் செய்யப்படும் வரை மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய வேண்டிய தார்மீகப் பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. மேலும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் மத்திய விற்பனை வரி விகித குறைப்பினால் கடுமையான வருவாய் இழப்புக்கு ஆளாகியுள்ளது. மத்திய அரசின் இழப்பீட்டை கணக்கில் எடுத்துக் கொண்ட பின்னரும் 200708 மற்றும் 201011 ஆகியவற்றிற்கு இடைப்பட்ட ஆண்டுகளில் தமிழக அரசுக்கு கூடுதலாக ரூ. 2,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த வரி இழப்பால் வருவாய் ஆதாரம் சரிந்துள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் இது ஆண்டுக்கு ரூ. 1,500 கோடி முதல் ரூ. 2,000 கோடி வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பாக மாநிலங்களிடையே ஒருமித்த கருத்தை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் மத்திய அரசின் ஒருதலைபட்சமான நியாயமற்ற நடவடிக்கைகள் கூட்டாட்சித் தத்துவ முறைக்கு எதிரானவை. எனவே 1.4.2010 முதல் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பை அமல்படுத்தாமல் இருப்பதை மத்திய விற்பனை வரி இழப்பீட்டுத் தொகையை நிறுத்துவதற்கான காரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
மாநிலங்களுக்கு கணிச மான வருவாய் இழப்பு ஏற்படுவதால், சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் செய்யப்படும் வரை மத்திய அரசு இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண் டும். 20102011ம் ஆண்டிற் கான மத்திய விற்பனை வரி இழப்பீட்டுத் தொகையுடன் மதிப்புக்கூட்டு வரியை 4 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்தி இருப்பதை தொடர்புபடுத்தக் கூடாது. மேலும் சரக்கு மற்றும் சேவை வரியை நடைமுறைப்படுத்த மேலும் தாமதமாகும் பட்சத்தில் மத்திய விற்பனை வரி விகிதத்தை ஏற்கனவே இருந்தது போலவே 4 சதவீதம் உடனடியாக அமல்படுத்த வேண்டும். இந்த பிரச்சினைகளில் பிரதமர் கவனம் செலுத்தி உடனடியாக தீர்வு காண்பார் என நான் நம்புகிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
புதுச்சேரியில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் இன்று இயங்கும்
24 Oct 2025புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு அலுவலகங்கள் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.
-
கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து சந்திக்கிறார் விஜய்
24 Oct 2025சென்னை: கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.
-
மழை, முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
24 Oct 2025சென்னை: மழை, முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் மற்றும் துறைசார் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
-
சேலம் அருகே விபத்தில் 3 பேர் பலி
24 Oct 2025உளுந்தூர்பேட்டை: சேலம் அருகே டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-10-2025.
24 Oct 2025 -
என்றும் மருது சகோதரர்கள் நினைவை போற்றுவோம் நினைவு நாளில் முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
24 Oct 2025சென்னை: மருது சகோதரர்கள் நினைவை போற்றுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு: வங்கக்கடலில் அக். 27-ம் தேதி உருவாகிறது 'மோந்தா' புயல் வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
24 Oct 2025சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
துபாயில் இந்திய மாணவர் உயிரிழப்பு
24 Oct 2025துபாய்: துபாய் பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் உயிரிழந்தார்.
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் அடுத்த வாரம் முதல் தமிழகத்தில் துவக்கம் தலைமை தேர்தல் ஆணையம் தகவல்
24 Oct 2025சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
வரும் 28-ம் தேதி மாமல்லபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம்
24 Oct 2025சென்னை, 'என் வாக்குச்சாவடி' 'வெற்றி வாக்குச்சாவடி' என்ற பெயரில் தி.மு.க.
-
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துள்ளது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்
24 Oct 2025வாஷிங்டன்: ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துள்ளது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்காதது ஏன்..? மலேசியா பிரதமர் அன்வர் விளக்கம்
24 Oct 2025கோலாலம்பூர், ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்காதது ஏன் என்பது குறித்து மலேசியா பிரதமர் அன்வர் விளக்கமளித்துள்ளார்.
-
முகத்துவாரத்தில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
24 Oct 2025சென்னை, முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
-
பீகாரில் 10 சட்டசபை தொகுதிகளில் இன்டியா கூட்டணிக்குள் போட்டி
24 Oct 2025பாட்னா: பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் இன்டியா கூட்டணிக் கட்சியினர் 10 தொகுதிகளில் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
-
போதைப் பொருள் வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சம்மன்
24 Oct 2025சென்னை: போதைப் பொருள் வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா வுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
24 Oct 2025ஒகேனக்கல்: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 57 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டதை அடுத்து அங்கு தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்க
-
குனார் நதியில் அணை கட்ட தாலிபான்கள் எடுத்த முடிவால் பாகிஸ்தானுக்கு புது பிரச்சினை
24 Oct 2025பாகிஸ்தான், குனார் நதியில் அணை கட்ட தாலிபான்கள் எடுத்த முடிவால்பாகிஸ்தானுக்கு புது பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
-
குண்டு வைக்க சதி: டெல்லியில் 2 பயங்கரவாதிகள் கைது
24 Oct 2025புதுடெல்லி: டெல்லியில் குண்டு வைக்க சதி திட்டம் தீட்டிய ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
ஆம்னி பேருந்து தீ விபத்து: பிரமதர் மோடி, ஆந்திரா அரசு சார்பில் நிவாரணம் அறிவிப்பு
24 Oct 2025ஐதராபாத், ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்து கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்னதேகுரு கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் மீது மோதி
-
தமிழகத்தில் திடீர் மின்சார கட்டணம் அதிகரிப்பு ஏன்? மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்
24 Oct 2025சென்னை, தமிழகத்தில் திடீர் மின்சார கட்டணம் அதிகரிப்பு ஏன் என்பது குறித்து மின்வாரிய அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
-
5 டி-20 போட்டிகள் தொடர்: ஆஸ்திரேலியா சென்றடைந்த இந்திய இளம் வீரர்கள் அணி
24 Oct 2025பெர்த்: 5 டி-20 போட்டிகள் தொடரில் பங்கேற்க இந்திய இளம் வீரர்கள் அணி ஆஸ்திரேலியா சென்றடைந்தது.
வருகிற 29-ந் தேதி....
-
பீகாரில் என்.டி.ஏ. ஆட்சிக்கு வந்தால் நிதிஷ் குமாரால் முதல்வராக முடியாது தேஜஸ்வி யாதவ் பிரச்சாரம்
24 Oct 2025பாட்னா: என்.டி.ஏ.
-
தி.மலை நீர் நிலைகளிலும், மலைப்பகுதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட் உத்தரவு
24 Oct 2025சென்னை: மலைப் பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் பள்ளிகளில் மாணவர் இடைநிற்றல் விகிதம் அதிகரிப்பு
24 Oct 2025சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிகளில் மாணவர் இடைநிற்றல் விகிதம் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளது.
-
ஆந்திரா, கர்னூல் மாவட்டத்தில் பயங்கரம்: ஆம்னி பேருந்து தீ விபத்தில் 23 பேர் உடல் கருகி உயிரிழப்பு 18 பேர் படுகாயம் - மாவட்ட ஆட்சியர் தகவல்
24 Oct 2025கர்னூல்: ஆந்திரம் மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் ஐதராபாத்-பெங்களூரு தனியார் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 23 பேர் பலியானதாகவும், 18 பேர் மருத்துவமனையில் சிகிச்ச


