எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ஜூலை. 28 - மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி.க்கள் பரிந்துரை செய்துள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தார். அவர் ஜனாதிபதியாகி விட்டதால் அந்தப் பதவி இப்போது காலியாக உள்ளது. இந்த நிலையில் ராகுலுக்கு அந்தப் பதவியை வழங்க வேண்டும் என்பது கோரிக்கையாக ஒலிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு 10 எம்.பி.க்கள் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது,
நாடாளுமன்றத்துக்கு வெளியேயும், உள்ளேயும் காங்கிரஸ் கட்சி பல சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. ராகுல் காந்தி மக்களவையில் குறிப்பிடத்தக்க பங்கு வகிப்பதற்கு இதுதான் சரியான தருணம் என்று கருதுகிறோம். எனவே அவரை மக்களவை காங்கிரஸ் தலைவராக நியமிக்க வேண்டும். மக்கள் பிரச்சினைகளை மக்களவையில் ராகுல் திறமையாக எடுத்து வைப்பார் என்றும் சக நாடாளுமன்ற உறுப்பினர்களை கவரும் வகையில் அவரது செயல்பாடுகள்இருக்கும் என்றும் நம்புகிறோம். எதிர்க்கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் சவால்களை ராகுல் திறமையாக கையாள்வார். சுமார் 50 சதவீத இளைஞர்களை கொண்ட நமது நாட்டில் துடிப்பான இளைஞர்கள் உயர் பதவிக்கு வர வேண்டும் என்ற கருத்து பரவலாக காணப்படுகிறது. இதனடிப்படையில் வருங்காலத்தில் சிறந்த தலைவராக வருவதற்கும், இளைஞர்களை கவருவதற்கும் அதிக வாய்ப்புள்ளது. இதன் மூலம் காங்கிரசின் பலமும் அதிகரிக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


