எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை, ஆக.7 - தி.மு.க. ஆட்சியில் டாமின் சுரங்கத்தில் மு.க.அழகிரி மகனின் ஒலம்பஸ் கிரானைட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கொள்ளை அடித்துள்ளது. வீடியோ ஆதாரத்துடன் திருட்டு அம்பலம் ஆகி உள்ளது. மு.க.அழகிரி மகன் தயாநிதிஅழகிரி ஒலம்பஸ் கிரானைட் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை கடந்த 2007-ம் ஆண்டு துவக்கினார். இந்த நிறுவனத்தின் இயக்குனராக தயாநிதி அழகிரி மற்றும் ந.நாகராஜன் ஆகிய இருவரும் இருந்தனர். இந்த நிறுவனம் மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கீழவளவு கிராமத்தில் பொக்கிஷ மலை அருகே டாமின் சுரங்கத்தின் அருகில் இடம் வாங்கி 2008-ம் ஆண்டு கிரானைட் சுரங்கம் தோண்ட அரசிடம் அனுமதியும் பெற்றனர். 2008-ம் ஆண்டே சுரங்கம் எந்த இடத்தில் தோண்ட போகிறோம் என்பதை குறிப்பிடும் MINING PLAN-க்கும் அனுமதி பெற்றனர்.
தயாநிதி அழகிரியின் ஒலம்பஸ் கிரானைட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 2009-2010-ம் ஆண்டில் சுமார் 165 கியூபிக் மீட்டர் கிரானைட் கற்களுக்கான குத்தகை தொகையும் 2010-2011-ம் ஆண்டில் சுமார் 1865 கியூபிக் மீட்டர் கிரானைட் கற்களுக்கான குத்தகை தொகையை செலுத்தி பெர்மிட் போட்டு கற்களை குவாரியை விட்டு வெளியே அனுப்பியதாக இந்த நிறுவனம் கணக்கு காண்பித்துள்ளது.
அதிர்ச்சி தகவல்
அதிர்ச்சி தகவலாக தயாநிதி அழகிரியின் ஒலம்பஸ் கிரானைட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் MINING PLAN- படி அவர்கள் இடத்தில் சுரங்கமே தோண்டவில்லை. ஒலம்பஸ் கிரானைட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சுரங்கமே தோண்டாமல் தொடர்ந்து கிரானைட் கற்களை மட்டும் அவர்கள் இடத்தில் வைத்துக் கொண்டே இருந்தனர். இதை ஆராயும் போது டாமின் சுரங்கத்தில் திருடுவதற்காகவே டாமின் சுரங்கத்திற்கு அருகில் உள்ள இடத்தை இவர்கள் வாங்கி தொடர்ந்து டாமின் சுரங்கத்தில் இருந்து கற்களை திருடி வந்துள்ளனர்.
டாமின் கிரானைட் சுரங்கத்தில் இருந்து தயாநிதி அழகிரியின் ஒலம்பஸ் கிரானைட் நிறுவன இடத்திற்கு கிரானைட் கற்களை கடத்தி வைத்ததற்கான வீடியோ ஆதாரங்கள் தினபூமி வசம் உள்ளது. இந்த வீடியோவில் ஒரு நாளில் சுமார் ரூபாய் ஒரு கோடி மதிப்புள்ள 225 கியூபிக் மீட்டர் கொண்ட 15 பெரிய கேங்சா கற்கள் கடத்தப்பட்டுள்ளன. தயாநிதி அழகிரியின் ஒலம்பஸ் கிரானைட் நிறுவனம் திருடிய டாமின் சுரங்கத்தில் ரூ.672 கோடி மதிப்புள்ள கிரானைட் கற்களை காணவில்லை.
ஆட்சியை மீண்டும் தி.மு.க. பிடிக்க முடியாது என்று தெரிந்த உடன் 2011-ம் ஆண்டு ஒலம்பஸ் கிரானைட் நிறுவன இடத்தில் சுரங்கம் தோண்ட ஆரம்பித்தனர். இவர்களின் இடத்தில் பெரும்பாலும் கிராவல் மண் மட்டுமே இருந்தது. 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் ஒலம்பஸ் சுரங்கத்தையும் டாமின் சுரங்கத்தையும் சட்டவிரோதமாக இணைத்துவிடுகிறார்கள். டாமின் பாதுகாப்பு இடைவெளி பகுதியையும் தோண்டினார்கள். இதற்கான வீடியோ ஆதாரமும் உள்ளது. சுரங்கத்தின் உள்ளே சென்று வேலை பார்க்கும் நேரத்தில் இந்த வீடியோக்கள் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் தொழில்துறை அமைச்சர் வேலுமணி சட்டசபையில் மு.க.அழகிரி சம்பந்தமாக பேசியதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் தான் எந்த காலத்திலும் கிரானைட் தொழிலில் ஈடுபடவில்லை என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் விதத்தில் தன்னுடைய மகன் பெயரில் உள்ள கிரானைட் சுரங்கம் நடைபெற்றதை மறைத்துவிட்டார். இதை தொடர்ந்து மு.க.அழகிரி மகன் தயாநிதி அழகிரியின் ஒலம்பஸ் கிரானைட் நிறுவனம் அடித்த கொள்ளையை அதிகாரிகள் மறைத்துவிட்டதால் பாதுகாப்பு இடைவெளியில் சுரங்கம் தோண்டியதாக SHOW CAUSE நோட்டீசுக்கு பதில் அளித்த ஒலம்பஸ் நிறுவனம் டாமின் நிறுவன கிரானைட் சுரங்கத்தின் பாதுகாப்பு இடைவெளியை நாங்கள் தோண்டவில்லை என்று முழு பூசணிக்காயையும் சோற்றில் மறைக்கும் விதமாக பதில் அளித்தனர். இதன் பின் சுரங்கம் தோண்டுவது நிறுத்தப்பட்டது.
தி.மு.க. ஆட்சியில் கடந்த 20.7.2010-ம் தேதியன்று ரூ.1500 கோடி கிரானைட் சுரங்க ஊழல் நடவடிக்கை எடுக்காத மாவட்ட கலெக்டர் என்ற தலைப்பில் தினபூமி நாளிதழ் செய்தி வெளியிட்டு இருந்தது. இதை தொடர்ந்து 21.7.2010-ம் தேதியன்று அதிகாலை தினபூமி நாளிதழில் ஆசிரியர் S.மணிமாறன் மற்றும் பத்திரிகையாளரும் அவரது மகனுமான M.ரமேஷ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பத்திரிகையாளர்களின் கடும் எதிர்ப்பை அடுத்து அடுத்த நாளே அவசர அவசரமாக சிறையில் இருந்து வெளியே அனுப்பி வைத்தனர். தி.மு.க. அரசின் ஊழல்களை தொடர்ந்து செய்தி வெளியிட்டதால் மேலும் 5 பொய் வழக்குகளை தி.மு.க. அரசு தொடர்ந்தது. இதை கண்டித்து அ.தி.மு.க. பொது செயலாளரும் தற்போதைய முதல்வருமான ஜெ.ஜெயலலிதா அவர்கள் இந்த நடவடிக்கையை எதிர்த்தும் அனைத்து பொய் வழக்குகளையும் வாபஸ் வாங்க கோரி கண்டன அறிக்கையும் வெளியிட்டார்.
மு.க.அழகிரி-மகன் மாட்டிக் கொள்வார் என்ற பயத்தில் தினபூமி ஆசிரியர் மீது கைது-பொய் வழக்குகள்
தி.மு.க. ஆட்சியில் நடந்த இந்த கைது, பொய்வழக்குகள் ஆகியவற்றிற்கு காரணம் என்ன என்று ஆராய்ந்தபோது தினபூமி நாளிதழ் செய்தி வெளியிட்ட ரூ.1500 கோடி மதிப்புள்ள கற்கள் அனைத்தும் டாமின் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் இருந்து P.R.P. நிறுவனத்தால் கடத்தி வைக்கப்பட்டவைதான். இந்த திருட்டை கண்டு பிடிக்க தினபூமி நாளிதழ் ஒரு மாபெரும் புலனாய்வு வேட்டையை நடத்தியது. இந்த புலனாய்வு வேட்டையில் வெள்ளூத்து மலை டாமின் சுரங்கம் அருகே ஏராளமான ரகசிய காமராக்கள் பயன்படுத்தப்பட்டன. பல மாதங்கள் நடந்த இந்த புலனாய்வு வேட்டையில் வெள்ளூத்து மலை டாமின் சுரங்கத்தில் இருந்து P.R.P. நிறுவனம் P.R.P. நிறுவன லாரிகளில் டாமின் முத்திரை இல்லாமல் கிரானைட் கற்களை கொள்ளை அடித்து P.R.P. நிறுவன இடத்திற்கு கடத்தி கொண்டு செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. P.R.P. நிறுவனம் வெள்ளூத்து மலை டாமின் சுரங்கத்தில் இருந்து சராசரியாக தினமும் ரூ.2 கோடி மதிப்புள்ள 551 கியூபிக் மீட்டர் கிரானைட் கற்களை கடத்தியது. இதற்கு ஆதாரமும் தினபூமியிடம் உள்ளது. இதே தவறைத்தானே மு.க.அழகிரி மகன் நிறுவனமும் செய்து வருகிறது. மு.க.அழகிரியின் மகன் மாட்டிக் கொள்வார் என்ற பயத்தின் காரணமாகவே இந்த கைது நடவடிக்கையும் பொய் வழக்குகளும் என்பது புலனாகிறது.
தி.மு.க. ஆட்சியில் இருக்கும் வரை தயாநிதி அழகிரியின் ஒலம்பஸ் கிரானைட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் டாமின் சுரங்கத்தில் திருடிவிட்டு தி.மு.க. ஆட்சி முடிந்த உடன் பழைய தேதியில் இயக்குனர் பொறுப்பில் இருந்து விலகிவிட்டதாக கூறி திருட்டில் இருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார்.
ரூ.672 கோடி மதிப்புள்ள கிரானைட் கற்கள் மாயம்
தயாநிதி அழகிரியின் ஒலம்பஸ் கிரானைட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் திருடிய டாமின் சுரங்கத்தில் ரூ.672 கோடி மதிப்புள்ள கிரானைட் கற்கள் மாயமாகி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
தங்கம் விலை மீண்டும் உச்சம் : ஒரு பவுன் ரூ.97,000-ஐ கடந்தது
17 Oct 2025சென்னை : சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை நேற்று (அக்.17) வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-10-2025.
17 Oct 2025 -
அரபிக்கடலில் இன்று புதிய புயல் சின்னம் உருவாகிறது: வரும் 21-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
17 Oct 2025சென்னை, தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால் தமிழ்நாட்டி
-
தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: 16 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்
17 Oct 2025சென்னை, தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 16 சட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.
-
அமெரிக்காவில் மாணவி பலாத்காரம்: குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
17 Oct 2025வாஷிங்டன், அமெரிக்காவில் மாணவி பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
-
தமிழ்நாடு அரசு தொடந்த கவர்னருக்கு எதிரான 2 வழக்குகளில் 4 வாரங்களில் தீர்ப்பு: தலைமை நீதிபதி
17 Oct 2025புதுடெல்லி, தமிழ்நாடு அரசு தொடந்த கவர்னருக்கு எதிரான 2 வழக்குகளில் 4 வாரங்களில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
-
வடகிழக்கு பருவமழை தீவிரம்: தமிழ்நாடு முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு
17 Oct 2025சென்னை : வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
விஜய் கூட்ட நெரிசல் துயரம்: சி.பி.ஐ. குழுவினர் கரூர் வருகை
17 Oct 2025கரூர் : விஜய் கூட்ட நெரிசல் துயரம் தொடர்பாக பிரவீன்குமார் ஐ.பி.எஸ் தலைமையிலான சி.பி.ஐ குழு நேற்று கரூர் வந்தது.
-
இன்று 9 மாவட்டங்களில் கனமழை
17 Oct 2025சென்னை : தமிழகத்தில் இன்று நீலகிரி, ஈரோடு, சேலம், கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு
-
பிரதமர் மோடி-இலங்கை பிரதமர் சந்திப்பு : மீனவர்கள் நலன் குறித்து விரிவாக ஆலோசனை
17 Oct 2025புதுடெல்லி : இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா, பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசினார்.
-
ஜி.டி.நாயுடு பாலத்தில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை: அமைச்சர் உறுதி
17 Oct 2025சென்னை : ஜி.டி.நாயுடு புதிய மேம்பாலம் பகுதியில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
-
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம்: புகாரளிக்க தொடர்பு எண்கள் அறிவிப்பு
17 Oct 2025சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து தொலைபேசி வாயிலாகவும், வாட்ஸ் ஆப் மூலமும் புகார் தெரிவிப்பதற்கான தொடர்பு எண்கள
-
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்: பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் தோல்வி
17 Oct 2025பாரீஸ், பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி ஏற்பட்டது.
-
நெல் கொள்முதல் விவகாரம்: இ.பி.எஸ். குற்றச்சாட்டிற்கு அமைச்சர் சக்கரபாணி பதில்
17 Oct 2025சென்னை : நெல் தேங்குவதற்கு மத்திய அரசே காரணம் என்று இ.பி.எஸ். குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்துள்ளார்.
-
விமான உணவில் கிடந்த முடி: பயணிக்கு ரூ.35 ஆயிரம் வழங்க ஏர் இந்தியாவுக்கு கோர்ட் உத்தரவு
17 Oct 2025சென்னை, விமான உணவில் முடி இருந்ததை முன்னிட்டு பயணிக்கு ரூ.35 ஆயிரம் வழங்க ஏர் இந்தியாவுக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தீபாவளி பண்டிகையை கோவாவில் கடற்படை வீரர்களுடன் கொண்டாட பிரதமர் மோடி திட்டம்
17 Oct 2025புதுடெல்லி : இந்த ஆண்டு தீபாவளியை கோவா கடற்கரையில் கடற்படை வீரர்களுடன் இணைந்து கொண்டாட பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
-
ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணவ படுகொலையை தடுக்க புதிய ஆணையம்: சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
17 Oct 2025சென்னை, ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் சாதி ஆணவப் படுகொலையை தடுக்க புதிய ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தெருக்கள், சாலைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு இடைக்கால தடை : மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
17 Oct 2025மதுரை : தமிழகம் முழுவதும் தெருக்கள், சாலைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
-
துணை ஜனாதிபதி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
17 Oct 2025சென்னை : துணை ஜனாதிபதி, முன்னாள் தலைமை செயலாளர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தினமும் ஆயிரம் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் : சட்டசபையில் இ.பி.எஸ். வலியுறுத்தல்
17 Oct 2025சென்னை : நெல்கொள்முதல் நிலையங்களில் தினமும் ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
இனி சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தினால் ரூ.25 ஆயிரம் அபராதம்: போக்குவரத்து துறை கடும் எச்சரிக்கை
17 Oct 2025சென்னை, சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தினால் ரூ. 25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
ஊழல் குற்றச்சாட்டில் பஞ்சாப் டி.ஐ.ஜி. கைது : ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்
17 Oct 2025சண்டிகர் : ஊழல் குற்றச்சாட்டில் பஞ்சாப் டி.ஐ.ஜி. ஹர்சரண் சிங் புல்லரை கைது செய்துள்ள சி.பி.ஐ., அவரிடம் இருந்து ரூ.
-
ஜப்பான் முன்னாள் பிரதமர் காலமானார்
17 Oct 2025டோக்கியோ, ஜப்பான் முன்னாள் பிரதமர் டோமிச்சி முர்யமா நேற்று காலமானார்.
-
ஹங்கேரியில் விரைவில் புதினுடன் 2-வது சந்திப்பு: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்
17 Oct 2025வாஷிங்டன், புதினுடன் அலாஸ்காவில் சந்தித்து பேசிய நிலையில், 2-வது பேச்சுவார்த்தை ஹங்கேரி நாட்டில் உள்ள புடாபெஸ்ட் நகரில் நடைபெற உள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் முடக்கம்: ஆன்லைனில் டிக்கெட் புக் செய்ய முடியாமல் பயணிகள் கடும் அவதி
17 Oct 2025புதுடெல்லி, : தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வதற்காக ஏராளமானோர் ஐ.ஆர்.சி.டி.சி.