எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை, ஆக.7 - தி.மு.க. ஆட்சியில் டாமின் சுரங்கத்தில் மு.க.அழகிரி மகனின் ஒலம்பஸ் கிரானைட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கொள்ளை அடித்துள்ளது. வீடியோ ஆதாரத்துடன் திருட்டு அம்பலம் ஆகி உள்ளது. மு.க.அழகிரி மகன் தயாநிதிஅழகிரி ஒலம்பஸ் கிரானைட் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை கடந்த 2007-ம் ஆண்டு துவக்கினார். இந்த நிறுவனத்தின் இயக்குனராக தயாநிதி அழகிரி மற்றும் ந.நாகராஜன் ஆகிய இருவரும் இருந்தனர். இந்த நிறுவனம் மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கீழவளவு கிராமத்தில் பொக்கிஷ மலை அருகே டாமின் சுரங்கத்தின் அருகில் இடம் வாங்கி 2008-ம் ஆண்டு கிரானைட் சுரங்கம் தோண்ட அரசிடம் அனுமதியும் பெற்றனர். 2008-ம் ஆண்டே சுரங்கம் எந்த இடத்தில் தோண்ட போகிறோம் என்பதை குறிப்பிடும் MINING PLAN-க்கும் அனுமதி பெற்றனர்.
தயாநிதி அழகிரியின் ஒலம்பஸ் கிரானைட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 2009-2010-ம் ஆண்டில் சுமார் 165 கியூபிக் மீட்டர் கிரானைட் கற்களுக்கான குத்தகை தொகையும் 2010-2011-ம் ஆண்டில் சுமார் 1865 கியூபிக் மீட்டர் கிரானைட் கற்களுக்கான குத்தகை தொகையை செலுத்தி பெர்மிட் போட்டு கற்களை குவாரியை விட்டு வெளியே அனுப்பியதாக இந்த நிறுவனம் கணக்கு காண்பித்துள்ளது.
அதிர்ச்சி தகவல்
அதிர்ச்சி தகவலாக தயாநிதி அழகிரியின் ஒலம்பஸ் கிரானைட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் MINING PLAN- படி அவர்கள் இடத்தில் சுரங்கமே தோண்டவில்லை. ஒலம்பஸ் கிரானைட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சுரங்கமே தோண்டாமல் தொடர்ந்து கிரானைட் கற்களை மட்டும் அவர்கள் இடத்தில் வைத்துக் கொண்டே இருந்தனர். இதை ஆராயும் போது டாமின் சுரங்கத்தில் திருடுவதற்காகவே டாமின் சுரங்கத்திற்கு அருகில் உள்ள இடத்தை இவர்கள் வாங்கி தொடர்ந்து டாமின் சுரங்கத்தில் இருந்து கற்களை திருடி வந்துள்ளனர்.
டாமின் கிரானைட் சுரங்கத்தில் இருந்து தயாநிதி அழகிரியின் ஒலம்பஸ் கிரானைட் நிறுவன இடத்திற்கு கிரானைட் கற்களை கடத்தி வைத்ததற்கான வீடியோ ஆதாரங்கள் தினபூமி வசம் உள்ளது. இந்த வீடியோவில் ஒரு நாளில் சுமார் ரூபாய் ஒரு கோடி மதிப்புள்ள 225 கியூபிக் மீட்டர் கொண்ட 15 பெரிய கேங்சா கற்கள் கடத்தப்பட்டுள்ளன. தயாநிதி அழகிரியின் ஒலம்பஸ் கிரானைட் நிறுவனம் திருடிய டாமின் சுரங்கத்தில் ரூ.672 கோடி மதிப்புள்ள கிரானைட் கற்களை காணவில்லை.
ஆட்சியை மீண்டும் தி.மு.க. பிடிக்க முடியாது என்று தெரிந்த உடன் 2011-ம் ஆண்டு ஒலம்பஸ் கிரானைட் நிறுவன இடத்தில் சுரங்கம் தோண்ட ஆரம்பித்தனர். இவர்களின் இடத்தில் பெரும்பாலும் கிராவல் மண் மட்டுமே இருந்தது. 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் ஒலம்பஸ் சுரங்கத்தையும் டாமின் சுரங்கத்தையும் சட்டவிரோதமாக இணைத்துவிடுகிறார்கள். டாமின் பாதுகாப்பு இடைவெளி பகுதியையும் தோண்டினார்கள். இதற்கான வீடியோ ஆதாரமும் உள்ளது. சுரங்கத்தின் உள்ளே சென்று வேலை பார்க்கும் நேரத்தில் இந்த வீடியோக்கள் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் தொழில்துறை அமைச்சர் வேலுமணி சட்டசபையில் மு.க.அழகிரி சம்பந்தமாக பேசியதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் தான் எந்த காலத்திலும் கிரானைட் தொழிலில் ஈடுபடவில்லை என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் விதத்தில் தன்னுடைய மகன் பெயரில் உள்ள கிரானைட் சுரங்கம் நடைபெற்றதை மறைத்துவிட்டார். இதை தொடர்ந்து மு.க.அழகிரி மகன் தயாநிதி அழகிரியின் ஒலம்பஸ் கிரானைட் நிறுவனம் அடித்த கொள்ளையை அதிகாரிகள் மறைத்துவிட்டதால் பாதுகாப்பு இடைவெளியில் சுரங்கம் தோண்டியதாக SHOW CAUSE நோட்டீசுக்கு பதில் அளித்த ஒலம்பஸ் நிறுவனம் டாமின் நிறுவன கிரானைட் சுரங்கத்தின் பாதுகாப்பு இடைவெளியை நாங்கள் தோண்டவில்லை என்று முழு பூசணிக்காயையும் சோற்றில் மறைக்கும் விதமாக பதில் அளித்தனர். இதன் பின் சுரங்கம் தோண்டுவது நிறுத்தப்பட்டது.
தி.மு.க. ஆட்சியில் கடந்த 20.7.2010-ம் தேதியன்று ரூ.1500 கோடி கிரானைட் சுரங்க ஊழல் நடவடிக்கை எடுக்காத மாவட்ட கலெக்டர் என்ற தலைப்பில் தினபூமி நாளிதழ் செய்தி வெளியிட்டு இருந்தது. இதை தொடர்ந்து 21.7.2010-ம் தேதியன்று அதிகாலை தினபூமி நாளிதழில் ஆசிரியர் S.மணிமாறன் மற்றும் பத்திரிகையாளரும் அவரது மகனுமான M.ரமேஷ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பத்திரிகையாளர்களின் கடும் எதிர்ப்பை அடுத்து அடுத்த நாளே அவசர அவசரமாக சிறையில் இருந்து வெளியே அனுப்பி வைத்தனர். தி.மு.க. அரசின் ஊழல்களை தொடர்ந்து செய்தி வெளியிட்டதால் மேலும் 5 பொய் வழக்குகளை தி.மு.க. அரசு தொடர்ந்தது. இதை கண்டித்து அ.தி.மு.க. பொது செயலாளரும் தற்போதைய முதல்வருமான ஜெ.ஜெயலலிதா அவர்கள் இந்த நடவடிக்கையை எதிர்த்தும் அனைத்து பொய் வழக்குகளையும் வாபஸ் வாங்க கோரி கண்டன அறிக்கையும் வெளியிட்டார்.
மு.க.அழகிரி-மகன் மாட்டிக் கொள்வார் என்ற பயத்தில் தினபூமி ஆசிரியர் மீது கைது-பொய் வழக்குகள்
தி.மு.க. ஆட்சியில் நடந்த இந்த கைது, பொய்வழக்குகள் ஆகியவற்றிற்கு காரணம் என்ன என்று ஆராய்ந்தபோது தினபூமி நாளிதழ் செய்தி வெளியிட்ட ரூ.1500 கோடி மதிப்புள்ள கற்கள் அனைத்தும் டாமின் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் இருந்து P.R.P. நிறுவனத்தால் கடத்தி வைக்கப்பட்டவைதான். இந்த திருட்டை கண்டு பிடிக்க தினபூமி நாளிதழ் ஒரு மாபெரும் புலனாய்வு வேட்டையை நடத்தியது. இந்த புலனாய்வு வேட்டையில் வெள்ளூத்து மலை டாமின் சுரங்கம் அருகே ஏராளமான ரகசிய காமராக்கள் பயன்படுத்தப்பட்டன. பல மாதங்கள் நடந்த இந்த புலனாய்வு வேட்டையில் வெள்ளூத்து மலை டாமின் சுரங்கத்தில் இருந்து P.R.P. நிறுவனம் P.R.P. நிறுவன லாரிகளில் டாமின் முத்திரை இல்லாமல் கிரானைட் கற்களை கொள்ளை அடித்து P.R.P. நிறுவன இடத்திற்கு கடத்தி கொண்டு செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. P.R.P. நிறுவனம் வெள்ளூத்து மலை டாமின் சுரங்கத்தில் இருந்து சராசரியாக தினமும் ரூ.2 கோடி மதிப்புள்ள 551 கியூபிக் மீட்டர் கிரானைட் கற்களை கடத்தியது. இதற்கு ஆதாரமும் தினபூமியிடம் உள்ளது. இதே தவறைத்தானே மு.க.அழகிரி மகன் நிறுவனமும் செய்து வருகிறது. மு.க.அழகிரியின் மகன் மாட்டிக் கொள்வார் என்ற பயத்தின் காரணமாகவே இந்த கைது நடவடிக்கையும் பொய் வழக்குகளும் என்பது புலனாகிறது.
தி.மு.க. ஆட்சியில் இருக்கும் வரை தயாநிதி அழகிரியின் ஒலம்பஸ் கிரானைட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் டாமின் சுரங்கத்தில் திருடிவிட்டு தி.மு.க. ஆட்சி முடிந்த உடன் பழைய தேதியில் இயக்குனர் பொறுப்பில் இருந்து விலகிவிட்டதாக கூறி திருட்டில் இருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார்.
ரூ.672 கோடி மதிப்புள்ள கிரானைட் கற்கள் மாயம்
தயாநிதி அழகிரியின் ஒலம்பஸ் கிரானைட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் திருடிய டாமின் சுரங்கத்தில் ரூ.672 கோடி மதிப்புள்ள கிரானைட் கற்கள் மாயமாகி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
பழனி முருகன் கோவிலில் ஹெலிகாப்டரில் வந்து சாமி தரிசனம் செய்த சிங்கப்பூர் மந்திரி
14 Jul 2025பழனி : பழனி முருகன் கோவிலில் ஹெலிகாப்டரில் வந்து சாமி தரிசனம் செய்தார் சிங்கப்பூர் மந்திரி சண்முகம்.
-
உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் மீது 45 நாளில் தீர்வு : கூடுதல் தலைமை செயலாளர் உறுதி
14 Jul 2025சென்னை : ''உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காணப்படும் என அரசு கூடுதல் தலைமை செயலாளரான ஐ.ஏ.எஸ்., அதிகாரி அமுதா தெரிவித்
-
சரோஜா தேவி மறைவு: பிரதமர் மோடி இரங்கல்
14 Jul 2025புதுடெல்லி : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
நான் துரோகியா? - மல்லை சத்யா ஆவேசம்
14 Jul 2025சென்னை : ம.தி.மு.க.விற்கு நான் நன்றி கடன் பட்டவனாக இருப்பேன் நான் துரோகி அல்ல என்று மல்லை சத்யா கூறினார்.
-
ஓடும் ரெயிலில் கர்ப்பிணியை கீழே தள்ளிய வழக்கு: குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவு
14 Jul 2025திருப்பத்தூர் : ஓடும் ரெயிலில் கர்ப்பிணியை கீழே தள்ளிய வழக்கில் குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஆய்வுக்கு பயந்து விருதுநகரில் 200-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் மூடல்
14 Jul 2025விருதுநகர் : விருதுநகரில் நேற்று 200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன.
-
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
14 Jul 2025காபுல் : ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் பதிவானது.
-
பாஸ்டேக் ஸ்டிக்கரை ஒட்டாமல் இருந்தால் நடவடிக்கை; தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
14 Jul 2025புதுடெல்லி : பாஸ்டேக் ஸ்டிக்கரை ஒட்டாமல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
-
நடத்தை விதிகளை மீறல்: சிராஜுக்கு ஐ.சி.சி.அபராதம்
14 Jul 2025லார்ட்ஸ் : 2-வது இன்னிங்சின் போது பென் டக்கெட் விக்கெட்டை வீழ்த்திய சிராஜ், ஆக்ரோஷமாக கொண்டாடினார். டக்கெட் முகத்திற்கு முன்பு வந்து முறைத்தப்படி சென்றார்.
-
காசாவில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் உயிரிழப்பு
14 Jul 2025காசா முனை : காசாவில் நடந்த ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் பலியாகினர். இதற்கு தொழில்நுட்ப தவறு என இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளது.
-
சாய்னா நேவாலின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது
14 Jul 2025ஐதராபாத் : 7 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாகவும், கணவர் காஷ்யப்பை பிரிவதாகவும் சாய்னா நேவால் அறிவித்துள்ளார்.
-
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மருத்துவமனையில் அனுமதி
14 Jul 2025புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
-
அமெரிக்காவில் மத வழிபாட்டு தலத்தில் துப்பாக்கி சூடு-2 பேர் பலி
14 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் மத வழிபாட்டு தலத்தில் துப்பாக்கி சூடு நடந்தது. இதில் 2 பேர் உயிரிழந்தனர்.
-
உ.பி.யில் கனமழைக்கு 14 பேர் பலி
14 Jul 2025லக்னோ : உத்தரபிரதேசத்தில் பெய்த கனமழைக்கு 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி: இந்திய அணி திணறல்
14 Jul 2025லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. களத்தில் ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் உள்ளனர்.
-
இங்கிலாந்தில் விமானம் தரையில் விழுந்து விபத்து
14 Jul 2025லண்டன் : இங்கிலாந்தில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
-
இளையராஜா தொடர்ந்த வழக்கில் நடிகை வனிதா பதிலளிக்க உத்தரவு
14 Jul 2025சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த வழக்கில் நடிகை வனிதா விஜயகுமார் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்
14 Jul 2025ஜகார்த்தா : இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகி உள்ளது.
-
தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துங்கள்: 'உடன்பிறப்பே வா' நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
14 Jul 2025சென்னை : தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துங்கள் என்று நேற்று நடைபெற்ற 'உடன்பிறப்பே வா' நிகழ்வில் 3 மாவட்ட தி.மு.க.
-
மதுரையில் செப். 4-ந் தேதி மாநாடு: ஓ.பி.எஸ். தகவல்
14 Jul 2025சென்னை : மதுரையில் வரும் செப்., 4ம் தேதி நடத்தப்படும் மாநாட்டில், எதிர்காலத்தில் நாம் என்ன முடிவுகளை எடுக்கப்போகிறோம் என்பது குறித்த அறிவிப்பை வெளியிட இருப்பதாக ஓ.பி.எஸ
-
மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு
14 Jul 2025சென்னை : காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் வரத்து காரணமாக கடந்த 5ஆம் தேதி நடப்பு ஆண்டி 2-வது மு
-
நடிகை சரோஜா தேவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
14 Jul 2025சென்னை : தென்னிந்தியத் திரையுலகின் பழம்பெரும் நடிகையான சரோஜா தேவி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
பத்திரப்பதிவு அலுவலகத்தில் இன்று கூடுதல் டோக்கன்கள்
14 Jul 2025சென்னை : பத்திரப்பதிவு அலுவலகத்தில் இன்று கூடுதல் டோக்கன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மானாமதுரைக்கு புதிய டி.எஸ்.பி. நியமனம்
14 Jul 2025சிவகங்கை : மானாமுதுரைககு புதிய டி.எஸ்.பி. நியமனம் செய்யப்பட்டார்.
-
தமிழக அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்ல புதிய செய்தி தொடர்பாளர்களாக 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்
14 Jul 2025சென்னை : தமிழ்நாடு அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் மற்றும் தேவையான இனங்களில் செய்தி ஊடகங்கள் மூலமாக சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கும், ப