எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை, ஏப். - 4 - புத்திசாலித்தனமான மிகச் சிறந்த கேப்டன் மகேந்திரசிங் தோனி என்று உலகக் கோப்பையை பறிகொடுத்த இலங்கை அணியின் கேப்டன் சங்ககாரா புகழாரம் சூட்டியுள்ளார். 10 வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கை வங்கதேச நாடுகளில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த போட்டியில் லீக் சுற்றுகளில் சற்று தடுமாறியது இந்திய அணி. பின்னர் சுதாரித்துக்கொண்ட தோனி தலைமையிலான இந்திய அணி காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி 28 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பையை இரண்டாவது முறையாக கைப்பற்றி சாதனை படைத்தது. ஆரம்பத்தில் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளான இந்திய அணி விமர்சனங்களை பொருட்படுத்தாது ஒன்றுபட்டு செயல்பட்டு இறுதியில் கோப்பையை கைப்பற்றியது. இதுவரை உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்திய நாடு வென்றதில்லை என்றிருந்த நிலையை மாற்றி, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்திய நாடே கோப்பையை கைப்பற்றி ஒரு புதிய வரலாற்று சாதனையை படைத்தது இந்தியா.
கோப்பைக்கான இறுதி போட்டியில் தோல்வி அடைந்த இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் குமார் சங்கக்காரா இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், மிகச் சிறந்த அணியிடம்தான் நாங்கள் தோல்வி அடைந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார். தங்கள் அணியின் தோல்வி குறித்து அவர் தெரிவிக்கையில், இந்திய அணியின் பேட்டிங் வரிசை மிகவும் வலிமையாக இருந்தது. நாங்கள் 300 ரன்களை எடுத்திருந்தால்கூட இந்திய அணி அதை எளிதில் எடுத்து வெற்றிபெற்றிருக்கும். மேலும் கவுதம் காம்பீர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தோனியின் துடிப்பான ஆட்டம் வெற்றிக்கனியை எங்களிடம் இருந்து தட்டிப்பறித்துவிட்டது. மொத்தத்தில் நாங்கள் ஒரு சிறந்த அணியிடம்தான் தோல்வி அடைந்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.
மிக நீண்ட காலத்திற்கு பிறகு உலக கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், அணியின் வீரர்கள் தேர்வுக் குழு தலைவருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கருத்து தெரிவிக்கையில், உணர்ச்சிப்பூர்வமான தருணம் இது. இந்திய வீரர்கள் ஒட்டுமொத்தமாக செயல்பட்டு இந்த பெருமையை நாட்டுக்கு பெற்றுத் தந்துள்ளனர். மகேந்திரசிங் தோனி தலைமையிலான இந்திய அணி, தற்போது மிகச் சிறந்த அணிகளாக உள்ள அனைத்து அணிகளையும் வென்றதன் மூலம் கோப்பையை வெல்ல தாங்கள் தகுதியானவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர். இதன் மூலம் தாங்கள் ஒரு சிறந்த அணி என்பதையும் உலகத்திற்கு காட்டியுள்ளனர். இந்திய அணி பேட்டிங்கில் மட்டும் சிறப்பான அணி என்ற கருத்தை மாற்றி, அவர்கள் பவுலிங் மற்றும் பீல்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு இலங்கை அணியை வெற்றிகண்டுள்ளனர். இது இந்திய வீரர்களின் மிகச் சிறந்த சாதனை என்றும் அவர் இந்திய வீரர்களை பாராட்டியுள்ளார்.
இலங்கை அணியின் பரிதாப தோல்வி குறித்து எழுதியுள்ள அந்நாட்டு பத்திரிகைகள் இந்திய அணி வெற்றிக்கு தகுதியான அணிதான் என்று புகழ்ந்துள்ளதோடு, இலங்கை அணியின் இறுதி வீரர்கள் தேர்வு குறித்து தங்களது கண்டனத்தையும் தெரிவித்துள்ளன. இறுதி போட்டியில் விளையாடும் 11 பேரை தேர்வு செய்தது யார்? என்று கேட்டதோடு, அஜந்தா மெண்டிசைவிட கூடுதலாக ரன்களை விட்டுக்கொடுக்கக்கூடிய ரந்தீவை தேர்வு செய்தது யார் என்று கேள்வியையும் எழுப்பியுள்ளன. மேலும் முழுவதுமாக உடல் தகுதி பெறாத முத்தையா முரளீதரனை தேர்வு செய்ததையும் குறைகூறியுள்ளன. உலக கோப்பை இறுதி போட்டி எவ்வளவு முக்கியமானது என்பதைப் பற்றி சிந்திக்காமல், முரளீதரனுக்கு வழியனுப்பு விழா நடத்த முயற்சித்திருப்பதை அந்த பத்திரிகைகள் கடுமையாக சாடியுள்ளன.
இந்திய கிரிக்கெட் வீரர்களின் இந்த மாபெரும் சாதனையை பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் வெகுவாக புகழ்ந்துள்ளனர். குறிப்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தேர்வுகுழுத் தலைவராக இருந்த இந்திய அணியின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான திலீப் வெங்சர்க்கார் தெரிவிக்கையில், கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி 1983 ல் உலக கோப்பை வென்ற பிறகு, அடுத்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 1987 ல் நடைபெற்றது. அப்போது அரை இறுதி போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியிடம் இதே வான்கடே மைதானத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. அந்த பழைய மோசமான நினைவுகளை தற்போதைய இந்திய அணியின் அபார வெற்றி துடைத்தெறிந்துவிட்டது. இனி மும்பை வான்கடே மைதானத்தை நினைக்கும்போது தற்போது வென்ற இந்த உலக கோப்பையின் இனிய நினைவுகள்தான் வரும். அந்த அளவுக்கு இந்த வெற்றி மிக நீண்ட நாட்களுக்கு பேசப்படும் என்று தெரிவித்தார்.
உலகக் கோப்பையை வென்றுள்ள இந்திய அணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்களும் பரிசு மழைகளும் குவிந்தவண்ணம் உள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 6 hours ago |
ஸ்வீட் பால்.4 days 12 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 11 hours ago |
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
மொபைல் செயலிகள் மூலம் மோசடி: நாடு முழுவதும் சி.பி.ஐ. சோதனை
01 May 2024புதுடில்லி : மொபைல் செயலிகள் மூலம் முதலீடு திட்டங்கள் என்ற பெயரில் நடைபெற்று வரும் மோசடி குறித்து நாடு முழுவதும் தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் சி.பி.ஐ.
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல
-
கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பா? - மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
01 May 2024புதுடெல்லி : கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்க
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தானம் அனுமதி
01 May 2024திருமலை : ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய பெங்களூரு மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தான அனுமதி வழங்கியுள்ளது.