எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பரங்குன்றம்,ஏப்.12 - தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு எதிராக மக்கள் கடும் கோபத்தில் உள்ளதால், எதிர்ப்பு அலையில் சிக்கித் தவிக்கின்றனர் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சியினர். கடந்த 5 ஆண்டு கால தி.மு.க ஆட்சியில் அடைந்த துன்பங்களுக்கு பழி தீர்க்கும் வகையில் அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க ஒட்டுமொத்த தமிழக மக்களும் முடிவெடுத்து விட்டனர்.
மக்களுக்கு நன்மை செய்வதற்காக மக்களால் மக்களே தேர்ந்தெடுக்கப்படும் அரசு மக்களாட்சி என்பது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் கொள்கை. அவரது கூற்றுப்படி அம்மக்களுக்காக மக்களின் வாழ்க்கைத்தரம், பொருளாதாரம், கல்வி, சமூக முன்னேற்றம், தொழில் முன்னேற்றம் ஆகியவற்றுக்காக நல்ல திட்டங்களை நடைமுறைப்படுத்தி மக்களையும், நாட்டையும் அனைத்து துறைகளிலும் முன்னேற்றப் பாடுபட வேண்டும். இதுதான் மக்களாட்சி தத்துவம்.
எம்.ஜி.ஆரின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டவர் கருணாநிதி. ஏற்கனவே ஆட்சியில் இருந்த கருணாநிதி இந்த மக்களாட்சி தத்துவத்தை மறந்து தமிழக மக்களையும், தமிழகத்தையும் மறந்து ஊழல் செய்து தானும், தனது குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே மகிழ்ச்சியாக வாழ வழிவகையை தேடிக் கொண்டார். தி.மு.க.வின் வளர்ச்சிக்காகவும், தான் சம்பாதித்த பொருள், உழைப்பு ஆகியவற்றை வழங்கிய எம்.ஜி.ஆர். அக்கட்சியின் வளர்ச்சிக்காக தன் உயிரையும் விடத் துணிந்தவர்.
சினிமாத் துறையில் தாங்கள் வளர்ச்சியடைவதற்காக கட்சியில் தங்களை இணைத்துக் கொள்வர். ஆனால் எம்.ஜி.ஆரோ, தி.மு.க.வை வளர்ப்பதற்காக அதில் இணைந்தவர். தி.மு.க.வின் வளர்ச்சிக்காக அவர் செய்த தியாகங்களை கண்டு பொறாமையடைந்த கருணாநிதி, அவரை தி.மு.க.வில் இருந்து 1971 ல் வெளியேற்றினார். அதன் பின் கருணாநிதியின் மக்கள் விரோத செயல்களை முறியடிக்க வேண்டும் என்பதற்காக 1972 ல் அ.தி.மு.க.வை உருவாக்கிய எம்.ஜி.ஆர், கருணாநிதியின் கொடுங்கோல் ஆட்சியில் இருந்து 1977 ல் தமிழக மக்களை மீட்டார்.
அவரது மறைவிற்கு பின் பிளவுபட்ட அ.தி.மு.கவினால் மீண்டும் ஆட்சியை பிடித்தார் கருணாநிதி. அப்போதும் மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை தீட்டாமல் அவரும், அவரது உறவினர்களும், குடும்பத்தினரும், தமிழக மக்களை எந்தெந்த வழிகளில் எல்லாம் தமிழக மக்களை சுரண்ட முடியுமோ அந்தெந்த வழிகளில் எல்லாம் சுரண்டி உலக பணக்காரர்கள் வரிசையில் இடம் பிடித்து விட்டனர். மக்களுக்கான புரட்சித் திட்டங்களை தீட்டுவதற்கு பதிலாக தனது குடும்ப வளர்ச்சிக்காக திட்டங்களை தீட்டி செயல்படுத்தினார் கருணாநிதி. கடந்த 5 ஆண்டுகளில் அவரது ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் கடும் அவதிக்குள்ளாகி விட்டனர்.
நெசவு, தொழிற்சாலைகள், சாயக்கழிவு தொழில், சிறு, குறு தொழில்கள், விவசாயம் என அனைத்து தொழில்களும் நசுங்கி விட்டன. கடுமையான விலைவாசி உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதை விடுத்து நன்றாக உள்ள ரோடுகளையும், ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு போடப்பட்ட ரோடுகளையும் தோண்டி மீண்டும் ரோடு போட்டு கொள்ளையடித்தல், மணல், கிரானைட் கொள்ளை என அனைத்து வகையான கொள்ளைகளிலும் பெருமளவு சம்பாதித்து விட்டனர் கருணாநிதியும், அவரது குடும்பத்தினரும், அவரது கட்சியினரும்.
ஏற்கனவே கொள்ளையடித்தது போதாது என்று நடைபெறவுள்ள சட்டசபை பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் தமிழகத்தில் கொள்ளையிட கருணாநிதி திட்டமிட்டுள்ளார். ஆனால் கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் கருணாநிதியால் பாதிக்கப்பட்ட மக்கள் அவருக்கு எதிராக ஓரணியில் திரண்டுள்ளனர். இதையறிந்த கருணாநிதி, தேர்தல் பிரச்சாரங்களில் உளறி வருகிறார். அவரது ஆட்சியில் அவரால் ஏற்பட்ட பிரச்சினைகளை அப்போதே தீர்க்காமல் வெற்றி பெற்றால் தீர்த்து வைக்கப் போவதாக கூறி வருகிறார். இதனால் பாதிக்கப்பட்டோர் எரிச்சல் அடைந்துள்ளனர்.
கருணாநிதியின் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் மக்கள் மட்டுமின்றி கால்நடைகள், விலங்குகள், இயங்கை வளங்கள் அனைத்தும் பாதிப்புக்கு உள்ளாகி விட்டன.
அனைத்து துறைகளிலும் தமிழகம் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது. மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்டது. காவல் துறையினர், வக்கீல்கள், நீதிபதிகளுக்கு பாதுகாப்பில்லை. ஆட் கடத்தல், கொலை, கொள்ளை, வழிப்பறி ஆகியன சர்வசாதாரணமாக நடக்கிறது. இதனால் தமிழகமே தலைகுனிந்து நிற்கிறது. மக்கள் மரண பீதியில் உள்ளனர். எப்போது எது நடக்கும் என்பதறியாமலும், வீடுகளை பூட்டி சென்றால் வீட்டில் உள்ள பொருட்கள் கொள்ளை போகின்றன. நாட்டில் பஞ்சம் அதிகரித்து விட்டதால் வழிப்பறி சம்பவங்கள் தொடர்கதையாகி விட்டது. மக்கள் நிம்மதியிழந்து விட்டனர். அராஜகம், அடிதடி, வெட்டுக்குத்து, கொலை, கொள்ளைகள் என தமிழகத்தில் மலிந்து விட்டன.
இதனால் ஆட்சிக் கட்டிலில் இருந்து கருணாநிதியை தூக்கியெறிய மக்கள் காலத்தை எதிர்நோக்கி காத்திருந்தனர். இந்நிலையில் கருணாநிதியின் ஆட்சி முடிவுக்கு கொண்டு வருவதற்காக தேர்தலும் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 13 ல் கருணாநிதிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், தி.முக.வினருக்கும் முடிவு கட்ட மக்கள் தயாராகி விட்டனர். பல்வேறு தில்லுமுல்லு நாடகங்களை அரங்கேற்றி எப்படியும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரத் துடிக்கும் கருணாநிதியின் ஆசை கனவுகளை தகர்க்கும் வகையில் தேர்தல் ஆணையம் பல அதிரடியான நேர்மையான நடவடிக்கைகளை எடுத்ததால் தி.மு.க.வின் திட்டங்கள் தவிடுபொடியாகி விட்டன. இதனால் தி.மு.க.வினர் கலக்கமடைந்துள்ள நிலையிலும், மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தி.மு.கவின் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் பட்ட இன்னல்களால் தி.முக.வுக்கு எதிராக மக்கள் களமிறங்கி விட்டனர். அவர்களது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என கருத்துக்கணிப்புகளும் வெளியாகி உள்ளன. இந்த கருத்துக் கணிப்புகளால் கொதிப்படைந்த கருணாநிதியும், அவரது மகன்கள், பேரன்கள் அனைவரும் பல்வேறு தில்லுமுல்லுகளை அரங்கேற்றி வருகின்றனர். கருணாநிதிக்கும், தி.மு.க. ஆட்சிக்கும் எதிராக மக்கள் எதிர்ப்பாக கிளம்பி விட்டனர். இந்த நிலையில் கருணாநிதியின் தில்லுமுல்லுகளை முறியடிக்கவும், கருத்துக் கணிப்பை உண்மையாக்கும் வகையிலும் தேர்தல் கமிஷன் நடவடிக்கைகள் ஜனநாயகமாக தேர்தல் நடைபெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ந்து போன கருணாநிதி, தமிழகத்தில் யார் ஆட்சி நடக்கிறது, நான் முதல்வராக இருக்கிறேனா? அறிவிக்கப்படாத எமர்ஜென்சி என மேடைகளில் புலம்பி வருகிறார்.
கருணாநிதிக்கும், தி.மு.க ஆட்சிக்கும் எதிராக ஓட்டுப் போட மக்கள் முடிவெடுத்ததற்கான காரணங்கள்:
1. தொடர் மின்வெட்டு
2. அனைத்து பொருட்களின் விலையேற்றம்
3. பெட்ரோல், டீசல் விலை உயர்வு
4. பன்னாட்டு நிறுவனங்களில் கணிசமான தொகைகளை பெற்றுக் கொண்டு அவற்றை வாழ வைக்க தமிழக மக்களை மின்வெட்டால் அவதியுறச் செய்தது
5. இந்நிறுவனங்களுக்காக ஏழை, எளிய, நடுத்தர, விவசாயிகளின் நிலங்களை குறைந்த விலைக்கு மிரட்டி பெற்றது.
6. மக்களாட்சி தத்துவத்தை விட்டு விட்டு மன்னராட்சி கொள்கையை கடைப்பிடித்தது
7. மகன் துணை முதல்வர், மற்றொரு மகன் மத்திய அமைச்சர், மகள் எம்.பி, மருமகன் மற்றொரு மத்திய அமைச்சர், இது தவிர கருணாநிதியின் வாரிசுகள் தமிழகத்தில் உள்ள பெரிய நகரங்களை தத்தெடுத்துக் கொண்டு அங்கு குறுநில மன்னர்கள் போல் அராஜகம் செய்வது,
8. கைத்தறி, நெசவு, பின்னலாடை, பீடி, பட்டாசு, தீப்பெட்டி, ஜவுளி உட்பட அனைத்து உள்நாட்டு சிறு மற்றும் குறுந்தொழில்களை அழித்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தது.
9. பஸ் கட்டண உயர்வு
10. சுகாதார சீர்கேடு, அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காதது,
11. தமிழகத்திற்கு சேர வேண்டிய தண்ணீரை அண்டை மாநிலங்களில் இருந்து பெற்றுத் தர முயற்சி எடுக்காதது.
12. இலங்கையில் தமிழர் படுகொலையை தடுத்து நிறுத்த குரல் கொடுக்காதது.
13. அன்றாட வயிற்றுப் பிழைப்பாக கடலில் மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை சிங்கள வெறியர்கள் சுட்டுக் கொலை செய்வதை எதிர்த்து குரல் கொடுக்காதது.
14. தமிழக மீனவர்களுக்கு பேராசை அதிகம். அதனால்தான் எல்லை தாண்டி சென்று மீன் பிடிக்கிறார்கள். ஏன் எல்லை தாண்டி செல்ல வேண்டும் என எகத்தாளமான கருணாநிதியின் பேச்சு.
15. கருணாநிதியின் குடும்பம், அவரது கட்சியினர் கொள்ளை லாபம் சம்பாதிக்க இயற்கை வளங்களை கொள்ளையடித்தது
16. 2 ஏக்கர் நிலம் தராதது. சட்டம், ஒழுங்கு சீரழிவு
ஆகியவற்றுக்காக தி.மு.க. அரசையும், கருணாநிதியையும் தூக்கி எறிய தமிழக மக்கள் தயாராகி விட்டனர். இதற்காக ஏப்ரல் 13 ஐ எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அன்றைய தினம் தமிழக மக்கள் ஒட்டுமொத்தமாக அ.தி.மு.க.விற்கு ஓட்டளிக்க முடிவும் செய்து விட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 12 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 12 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 12 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 5 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 11 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.