எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பரங்குன்றம்,ஏப்.12 - தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு எதிராக மக்கள் கடும் கோபத்தில் உள்ளதால், எதிர்ப்பு அலையில் சிக்கித் தவிக்கின்றனர் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சியினர். கடந்த 5 ஆண்டு கால தி.மு.க ஆட்சியில் அடைந்த துன்பங்களுக்கு பழி தீர்க்கும் வகையில் அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க ஒட்டுமொத்த தமிழக மக்களும் முடிவெடுத்து விட்டனர்.
மக்களுக்கு நன்மை செய்வதற்காக மக்களால் மக்களே தேர்ந்தெடுக்கப்படும் அரசு மக்களாட்சி என்பது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் கொள்கை. அவரது கூற்றுப்படி அம்மக்களுக்காக மக்களின் வாழ்க்கைத்தரம், பொருளாதாரம், கல்வி, சமூக முன்னேற்றம், தொழில் முன்னேற்றம் ஆகியவற்றுக்காக நல்ல திட்டங்களை நடைமுறைப்படுத்தி மக்களையும், நாட்டையும் அனைத்து துறைகளிலும் முன்னேற்றப் பாடுபட வேண்டும். இதுதான் மக்களாட்சி தத்துவம்.
எம்.ஜி.ஆரின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டவர் கருணாநிதி. ஏற்கனவே ஆட்சியில் இருந்த கருணாநிதி இந்த மக்களாட்சி தத்துவத்தை மறந்து தமிழக மக்களையும், தமிழகத்தையும் மறந்து ஊழல் செய்து தானும், தனது குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே மகிழ்ச்சியாக வாழ வழிவகையை தேடிக் கொண்டார். தி.மு.க.வின் வளர்ச்சிக்காகவும், தான் சம்பாதித்த பொருள், உழைப்பு ஆகியவற்றை வழங்கிய எம்.ஜி.ஆர். அக்கட்சியின் வளர்ச்சிக்காக தன் உயிரையும் விடத் துணிந்தவர்.
சினிமாத் துறையில் தாங்கள் வளர்ச்சியடைவதற்காக கட்சியில் தங்களை இணைத்துக் கொள்வர். ஆனால் எம்.ஜி.ஆரோ, தி.மு.க.வை வளர்ப்பதற்காக அதில் இணைந்தவர். தி.மு.க.வின் வளர்ச்சிக்காக அவர் செய்த தியாகங்களை கண்டு பொறாமையடைந்த கருணாநிதி, அவரை தி.மு.க.வில் இருந்து 1971 ல் வெளியேற்றினார். அதன் பின் கருணாநிதியின் மக்கள் விரோத செயல்களை முறியடிக்க வேண்டும் என்பதற்காக 1972 ல் அ.தி.மு.க.வை உருவாக்கிய எம்.ஜி.ஆர், கருணாநிதியின் கொடுங்கோல் ஆட்சியில் இருந்து 1977 ல் தமிழக மக்களை மீட்டார்.
அவரது மறைவிற்கு பின் பிளவுபட்ட அ.தி.மு.கவினால் மீண்டும் ஆட்சியை பிடித்தார் கருணாநிதி. அப்போதும் மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை தீட்டாமல் அவரும், அவரது உறவினர்களும், குடும்பத்தினரும், தமிழக மக்களை எந்தெந்த வழிகளில் எல்லாம் தமிழக மக்களை சுரண்ட முடியுமோ அந்தெந்த வழிகளில் எல்லாம் சுரண்டி உலக பணக்காரர்கள் வரிசையில் இடம் பிடித்து விட்டனர். மக்களுக்கான புரட்சித் திட்டங்களை தீட்டுவதற்கு பதிலாக தனது குடும்ப வளர்ச்சிக்காக திட்டங்களை தீட்டி செயல்படுத்தினார் கருணாநிதி. கடந்த 5 ஆண்டுகளில் அவரது ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் கடும் அவதிக்குள்ளாகி விட்டனர்.
நெசவு, தொழிற்சாலைகள், சாயக்கழிவு தொழில், சிறு, குறு தொழில்கள், விவசாயம் என அனைத்து தொழில்களும் நசுங்கி விட்டன. கடுமையான விலைவாசி உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதை விடுத்து நன்றாக உள்ள ரோடுகளையும், ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு போடப்பட்ட ரோடுகளையும் தோண்டி மீண்டும் ரோடு போட்டு கொள்ளையடித்தல், மணல், கிரானைட் கொள்ளை என அனைத்து வகையான கொள்ளைகளிலும் பெருமளவு சம்பாதித்து விட்டனர் கருணாநிதியும், அவரது குடும்பத்தினரும், அவரது கட்சியினரும்.
ஏற்கனவே கொள்ளையடித்தது போதாது என்று நடைபெறவுள்ள சட்டசபை பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் தமிழகத்தில் கொள்ளையிட கருணாநிதி திட்டமிட்டுள்ளார். ஆனால் கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் கருணாநிதியால் பாதிக்கப்பட்ட மக்கள் அவருக்கு எதிராக ஓரணியில் திரண்டுள்ளனர். இதையறிந்த கருணாநிதி, தேர்தல் பிரச்சாரங்களில் உளறி வருகிறார். அவரது ஆட்சியில் அவரால் ஏற்பட்ட பிரச்சினைகளை அப்போதே தீர்க்காமல் வெற்றி பெற்றால் தீர்த்து வைக்கப் போவதாக கூறி வருகிறார். இதனால் பாதிக்கப்பட்டோர் எரிச்சல் அடைந்துள்ளனர்.
கருணாநிதியின் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் மக்கள் மட்டுமின்றி கால்நடைகள், விலங்குகள், இயங்கை வளங்கள் அனைத்தும் பாதிப்புக்கு உள்ளாகி விட்டன.
அனைத்து துறைகளிலும் தமிழகம் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது. மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்டது. காவல் துறையினர், வக்கீல்கள், நீதிபதிகளுக்கு பாதுகாப்பில்லை. ஆட் கடத்தல், கொலை, கொள்ளை, வழிப்பறி ஆகியன சர்வசாதாரணமாக நடக்கிறது. இதனால் தமிழகமே தலைகுனிந்து நிற்கிறது. மக்கள் மரண பீதியில் உள்ளனர். எப்போது எது நடக்கும் என்பதறியாமலும், வீடுகளை பூட்டி சென்றால் வீட்டில் உள்ள பொருட்கள் கொள்ளை போகின்றன. நாட்டில் பஞ்சம் அதிகரித்து விட்டதால் வழிப்பறி சம்பவங்கள் தொடர்கதையாகி விட்டது. மக்கள் நிம்மதியிழந்து விட்டனர். அராஜகம், அடிதடி, வெட்டுக்குத்து, கொலை, கொள்ளைகள் என தமிழகத்தில் மலிந்து விட்டன.
இதனால் ஆட்சிக் கட்டிலில் இருந்து கருணாநிதியை தூக்கியெறிய மக்கள் காலத்தை எதிர்நோக்கி காத்திருந்தனர். இந்நிலையில் கருணாநிதியின் ஆட்சி முடிவுக்கு கொண்டு வருவதற்காக தேர்தலும் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 13 ல் கருணாநிதிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், தி.முக.வினருக்கும் முடிவு கட்ட மக்கள் தயாராகி விட்டனர். பல்வேறு தில்லுமுல்லு நாடகங்களை அரங்கேற்றி எப்படியும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரத் துடிக்கும் கருணாநிதியின் ஆசை கனவுகளை தகர்க்கும் வகையில் தேர்தல் ஆணையம் பல அதிரடியான நேர்மையான நடவடிக்கைகளை எடுத்ததால் தி.மு.க.வின் திட்டங்கள் தவிடுபொடியாகி விட்டன. இதனால் தி.மு.க.வினர் கலக்கமடைந்துள்ள நிலையிலும், மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தி.மு.கவின் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் பட்ட இன்னல்களால் தி.முக.வுக்கு எதிராக மக்கள் களமிறங்கி விட்டனர். அவர்களது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என கருத்துக்கணிப்புகளும் வெளியாகி உள்ளன. இந்த கருத்துக் கணிப்புகளால் கொதிப்படைந்த கருணாநிதியும், அவரது மகன்கள், பேரன்கள் அனைவரும் பல்வேறு தில்லுமுல்லுகளை அரங்கேற்றி வருகின்றனர். கருணாநிதிக்கும், தி.மு.க. ஆட்சிக்கும் எதிராக மக்கள் எதிர்ப்பாக கிளம்பி விட்டனர். இந்த நிலையில் கருணாநிதியின் தில்லுமுல்லுகளை முறியடிக்கவும், கருத்துக் கணிப்பை உண்மையாக்கும் வகையிலும் தேர்தல் கமிஷன் நடவடிக்கைகள் ஜனநாயகமாக தேர்தல் நடைபெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ந்து போன கருணாநிதி, தமிழகத்தில் யார் ஆட்சி நடக்கிறது, நான் முதல்வராக இருக்கிறேனா? அறிவிக்கப்படாத எமர்ஜென்சி என மேடைகளில் புலம்பி வருகிறார்.
கருணாநிதிக்கும், தி.மு.க ஆட்சிக்கும் எதிராக ஓட்டுப் போட மக்கள் முடிவெடுத்ததற்கான காரணங்கள்:
1. தொடர் மின்வெட்டு
2. அனைத்து பொருட்களின் விலையேற்றம்
3. பெட்ரோல், டீசல் விலை உயர்வு
4. பன்னாட்டு நிறுவனங்களில் கணிசமான தொகைகளை பெற்றுக் கொண்டு அவற்றை வாழ வைக்க தமிழக மக்களை மின்வெட்டால் அவதியுறச் செய்தது
5. இந்நிறுவனங்களுக்காக ஏழை, எளிய, நடுத்தர, விவசாயிகளின் நிலங்களை குறைந்த விலைக்கு மிரட்டி பெற்றது.
6. மக்களாட்சி தத்துவத்தை விட்டு விட்டு மன்னராட்சி கொள்கையை கடைப்பிடித்தது
7. மகன் துணை முதல்வர், மற்றொரு மகன் மத்திய அமைச்சர், மகள் எம்.பி, மருமகன் மற்றொரு மத்திய அமைச்சர், இது தவிர கருணாநிதியின் வாரிசுகள் தமிழகத்தில் உள்ள பெரிய நகரங்களை தத்தெடுத்துக் கொண்டு அங்கு குறுநில மன்னர்கள் போல் அராஜகம் செய்வது,
8. கைத்தறி, நெசவு, பின்னலாடை, பீடி, பட்டாசு, தீப்பெட்டி, ஜவுளி உட்பட அனைத்து உள்நாட்டு சிறு மற்றும் குறுந்தொழில்களை அழித்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தது.
9. பஸ் கட்டண உயர்வு
10. சுகாதார சீர்கேடு, அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காதது,
11. தமிழகத்திற்கு சேர வேண்டிய தண்ணீரை அண்டை மாநிலங்களில் இருந்து பெற்றுத் தர முயற்சி எடுக்காதது.
12. இலங்கையில் தமிழர் படுகொலையை தடுத்து நிறுத்த குரல் கொடுக்காதது.
13. அன்றாட வயிற்றுப் பிழைப்பாக கடலில் மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை சிங்கள வெறியர்கள் சுட்டுக் கொலை செய்வதை எதிர்த்து குரல் கொடுக்காதது.
14. தமிழக மீனவர்களுக்கு பேராசை அதிகம். அதனால்தான் எல்லை தாண்டி சென்று மீன் பிடிக்கிறார்கள். ஏன் எல்லை தாண்டி செல்ல வேண்டும் என எகத்தாளமான கருணாநிதியின் பேச்சு.
15. கருணாநிதியின் குடும்பம், அவரது கட்சியினர் கொள்ளை லாபம் சம்பாதிக்க இயற்கை வளங்களை கொள்ளையடித்தது
16. 2 ஏக்கர் நிலம் தராதது. சட்டம், ஒழுங்கு சீரழிவு
ஆகியவற்றுக்காக தி.மு.க. அரசையும், கருணாநிதியையும் தூக்கி எறிய தமிழக மக்கள் தயாராகி விட்டனர். இதற்காக ஏப்ரல் 13 ஐ எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அன்றைய தினம் தமிழக மக்கள் ஒட்டுமொத்தமாக அ.தி.மு.க.விற்கு ஓட்டளிக்க முடிவும் செய்து விட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
தனியார் பல்கலை. திருத்தச் சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் தகவல்
25 Oct 2025சென்னை: 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.
-
பா.ஜ.க. போட்டி வேட்பாளருக்கு பிரசாந்த் கிஷோர் திடீர் ஆதரவு
25 Oct 2025கோபால்கஞ்ச்: பா.ஜ.க. போட்டி வேட்பாளருக்கு பிரசாந்த் கிஷோர் திடீர் ஆதரவு தெரிவித்தார்.
-
தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்காவில் 40 விமானங்கள் ரத்து
25 Oct 2025வாஷிங்டன்: தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்காவில் 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
சர்வதேச ஒருநாள், டி- 20 கிரிக்கெட்: விராட் கோலி உலக சாதனை
25 Oct 2025சிட்னி: சர்வதேச வெள்ளைப்பந்து (ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள்) கிரிக்கெட்டில் விராட் கோலி இதுவரை 18,443 ரன்கள் குவித்தன் மூலம் வெள்ளைப்பந்து போட்டிகளில் அதிக ரன் குவித்
-
இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்: அதிக ரன், விக்கெட் வீழ்த்திய வீரர்களில் இந்தியா முதலிடம்
25 Oct 2025சிட்னி: இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா - 202 ரன்கள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார்.
-
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேர் கைது
25 Oct 2025புதுடெல்லி: டெல்லியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
டெல்டா மாவட்டங்களில் பருவமழை காரணமாக ஏற்பட்டுள்ள பயிர் சேதங்கள் குறித்து கணக்கெடுப்பு முடிந்தவுடன் நிவாரணம் வழங்கப்படும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
25 Oct 2025சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்பட்டுள்ள வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர் சேதங்கள் வேளாண் மற்றும் வருவாய் துறை அலுவலர்களால் கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
-
கரூர் நெரிசல்: மத்திய அரசின் ரூ.2 லட்சம் நிதி பாதிக்கப்பட்டோரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது
25 Oct 2025கரூர்: தமிழக வெற்றி கழகத்தின் தலைவா் விஜய் செப்.27 இல் கரூா் நகரில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட 41 போ் பலியானவர்களின் குடும்பத்தி
-
ரஷ்யாவின் அனைத்து எண்ணெய் நிறுவனங்கள் மீது தடை விதிக்க அமெரிக்காவுக்கு உக்ரைன் அதிபர் கோரிக்கை
25 Oct 2025ரஷ்யா: ரஷ்யாவின் அனைத்து எண்ணெய் நிறுவனங்கள் மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
-
சாதனையை சமன் செய்த ராணா
25 Oct 2025ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3-வது மற்றும் கடைசி போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் நேற்று மோதியது.
-
மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் 45 ஆயிரம் கனஅடியாக குறைப்பு
25 Oct 2025மேட்டூர்: மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 45,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
-
3-வது ஒருநாள் போட்டியில் ரோகித், விராட் கோலி பேட்டிங்கை பார்த்தது மகிழ்ச்சி: கேப்டன் சுப்மன்
25 Oct 2025சிட்னி: கோலி பேட்டிங்கை பார்த்தது மகிழ்ச்சியாக இருந்ததாக கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
இந்தியா வெற்றி...
-
ஆதாயத்திற்காக செயல்படாது தி.மு.க.: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
25 Oct 2025காஞ்சிபுரம்: தி.மு.க.
-
ரோகித் - கோலி அபாரம்: கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றி
25 Oct 2025சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஓருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
-
பீல்டிங்கின்போது ஸ்ரேயாஸ் காயம்
25 Oct 2025மும்பை: ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை ஸ்ரேயாஸ் ஐயர் பின்னோக்கி ஓடி சென்று அற்புதமாக பிடித்த போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் ஸ்ரேயாஸ் அய்யருக்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-10-2025.
26 Oct 2025 -
8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் ‘மோந்தா' புயல்
26 Oct 2025சென்னை : 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் ‘மோந்தா' புயல், சென்னைக்கு கிழக்கு - தென் கிழக்கு திசையில் 790 கி.மீ தூரத்தில் புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது.
-
கரூர் சம்பவம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இன்று சென்னையில் சந்திக்கிறார் த.வெ.க. தலைவர் விஜய்
26 Oct 2025கரூர் : கரூர் சம்பவம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இன்று சென்னையில் த.வெ.க. தலைவர் விஜய் சந்திக்கிறார்.
-
ஆசியான் உச்சி மாநாடு: மலேசியாவில் ட்ரம்புக்கு உற்சாக வரவேற்பு
26 Oct 2025கோலாலம்பூர் : ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்க மலேசியா சென்ற அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
நேரடியாக போர் தொடுப்போம்: ஆப்கானுக்கு பாக். பகிரங்க எச்சரிக்கை
26 Oct 2025லாகூர் : ஆப்கானிஸ்தானுடன் நடந்து வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படாவிட்டால் பாகிஸ்தான் வெளிப்படையான போரை தொடங்கும் என்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச
-
சிறையில் படுக்கை, தலையணை கோரிய நடிகர் தர்ஷன் மனு மீது 29-ந் தேதி தீர்ப்பு
26 Oct 2025பெங்களூரு : சிறையில் படுக்கை, தலையணை கோரிய நடிகர் தர்ஷன் மனு மீது 29-ந் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் - 4 பேர் பலி
26 Oct 2025கீவ் : உக்ரைன் , ரஷ்யா இடையே நேற்று 1 ஆயிரத்து 340வது நாளாக போர் நீடித்த நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 4 பேர் பலியானார்கள்.
-
திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா: தங்க தேரில் சுவாமி வீதிஉலா
26 Oct 2025திருச்செந்தூர் : திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று தங்க தேரில் சுவாமி வீதிஉலா நடந்தது.ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து சாமி தரிசனம
-
கனடா மீதும் மேலும் 10 சதவீத வரி விதிப்பு : அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
26 Oct 2025வாஷிங்டன் : கனடா மீதும் மேலும் 10 சதவீத வரி விதிப்பு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
கேரளாவில் நிலச்சரிவு: ஒருவர் பலி
26 Oct 2025திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இடுக்கி மாவட்டம் அடிமலி கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.


