முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுனாமி பாதித்த பகுதிகளை ஜப்பான் பிரதமர் பார்வையிட்டார்

செவ்வாய்க்கிழமை, 12 ஏப்ரல் 2011      உலகம்
Image Unavailable

 

டோக்கியோ,ஏப்.12  - சுனாமி பாதித்த பகுதிகளை ஜப்பான் பிரதமர் நவோட்டா கான் பார்வையிட்டார். கடந்த மாதம் 11 ம் தேதி வட ஜப்பான் பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து உண்டான சுனாமியால் புகுஷிமா நகரம் வெகுவாக பாதிக்கப்பட்டது. சுமார் 30 ஆயிரம் பேர் இந்த சுனாமியால் இறந்தனர் எனத் தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து அப்பகுதியில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு நடைபெற்று வருகின்றன. 

இந்த நிலையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நவோட்டாகான் பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என்று அவர் தெரிவித்தார். சுனாமியால் இழந்த வீடுகளை மீண்டும் கட்டித் தருவதாகவும், அவர்கள் மீன் பிடித்து வாழ்க்கை நடத்துவதற்கான வசதிகளை செய்து தருவதாகவும் பிரதமர் அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்