முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீலகிரியில் விடிய விடிய மழை:அதிபட்சமாக குன்னூரில் 74 மி.மீ.,மழை பதிவானது

சனிக்கிழமை, 23 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

ஊட்டி, ஏப்.- 23 - நீலகிரி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த மழையின் காரணமாக அதிகபட்சமாக குன்னூரில் 74 மி.மீ.,மழை பதிவானது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதில் குன்னூர் பகுதியில் புதன்கிழமை இரவு பெய்த கன மழையின் காரணமாக மவுண்ட் பிளசண்ட் பகுதியில் தடுப்பு சுவர் இடந்து விழுந்ததில் இரண்டு சிறுமிகள் பலியாயினர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய மழை கொட்டித்தீர்த்தது. மேலும் நேற்று காலையில் 8 மணி முதல் 12 மணி வரை நல்ல வெயில் அடித்தது. அதன் பின்னர் தொடர்ந்து மழை பெய்யத்தொடங்கியது. தொடர்ந்து பெய்து வரும் மழையினால் ஊட்டிக்கு குடிநீர் வழங்கும் அணைகள் உட்பட மாவட்டத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யும் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது. நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழையளவு வருமாறு:​

எமரால்டு- 32 மி.மீ.,கோடநாடு- 50 மி.மீ.,குன்னூர்- 74 மி.மீ., பர்லியார்- 52 மி.மீ.,கேத்தி- 52 மி.மீ., அவலாஞ்சி- 24 மி.மீ.,குந்தா பாலம்- 42 மி.மீ., கெத்தை-37 மி.மீ., ஊட்டி- 17 மி.மீ., கோத்தகிரி- 58 மி.மீ.,நடுவட்டம் 20.6 மி.மீ., அப்பர்பவானி- 25 மி.மீ., கிண்ணக்கொரை- 38 மி.மீ., தேவாலா மற்றும் கல்லட்டி- 10 மி.மீ., இதில் அதிகபட்சமாக குன்னூரில் 74 மி.மீ.,மழை பதிவாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்