எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஊட்டி, ஏப்.- 23 - நீலகிரி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த மழையின் காரணமாக அதிகபட்சமாக குன்னூரில் 74 மி.மீ.,மழை பதிவானது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதில் குன்னூர் பகுதியில் புதன்கிழமை இரவு பெய்த கன மழையின் காரணமாக மவுண்ட் பிளசண்ட் பகுதியில் தடுப்பு சுவர் இடந்து விழுந்ததில் இரண்டு சிறுமிகள் பலியாயினர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய மழை கொட்டித்தீர்த்தது. மேலும் நேற்று காலையில் 8 மணி முதல் 12 மணி வரை நல்ல வெயில் அடித்தது. அதன் பின்னர் தொடர்ந்து மழை பெய்யத்தொடங்கியது. தொடர்ந்து பெய்து வரும் மழையினால் ஊட்டிக்கு குடிநீர் வழங்கும் அணைகள் உட்பட மாவட்டத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யும் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது. நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழையளவு வருமாறு:
எமரால்டு- 32 மி.மீ.,கோடநாடு- 50 மி.மீ.,குன்னூர்- 74 மி.மீ., பர்லியார்- 52 மி.மீ.,கேத்தி- 52 மி.மீ., அவலாஞ்சி- 24 மி.மீ.,குந்தா பாலம்- 42 மி.மீ., கெத்தை-37 மி.மீ., ஊட்டி- 17 மி.மீ., கோத்தகிரி- 58 மி.மீ.,நடுவட்டம் 20.6 மி.மீ., அப்பர்பவானி- 25 மி.மீ., கிண்ணக்கொரை- 38 மி.மீ., தேவாலா மற்றும் கல்லட்டி- 10 மி.மீ., இதில் அதிகபட்சமாக குன்னூரில் 74 மி.மீ.,மழை பதிவாகியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


