எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,ஏப்.- 25 - பிளஸ் 2 முடித்த மாணவர்கள் சேரும் வகையில் பி.வி.எஸ்.சி. உள்ளிட்டவற்றுக்கு வரும் 2 ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக பதிவாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, 2011 - 12 கல்வி ஆண்டில் பி.வி.எஸ்.சி உள்ளிட்ட படிப்புகளில் மாணவர்களை சேர்க்க வரும் 2 ம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் தொடங்குகிறது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் மே 7 ம் தேதியாகும். சென்னை வேப்பேரி, நாமக்கல் ஆகிய இடங்களில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி, தூத்துக்குடியில் உள்ள மீன்வள கல்லூரி, மதுரை, கோவை, திருச்சி, ராஜபாளையம், வேலூர் ஆகிய இடங்களில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மையங்கள் ஆகியவற்றில் விண்ணப்பங்கள் கிடைக்கும். விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஜூன் மாதம் 3 வது வாரம் மேலே குறிப்பிட்ட பல்கலைக் கழக இணையதளத்தில் ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரியில் ஜூலை 13, 14 ம் தேதிகளில் கவுன்சிலிங் நடைபெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


