எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி, ஏப்.26 - தி.மு.க தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதியின் மகள் கனிமொழி எம்.பி. மீது 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சி.பி.ஐ.அதிகாரிகள் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இந்த கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் கனிமொழி ஒரு கூட்டுச்சதியாளர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதாவது ஊழலுக்கு உடந்தையாக இருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனாலும் எதிர்பார்த்தபடி குற்றப்பத்திரிக்கையில் தயாளு அம்மாள் பெயர் இடம்பெறவில்லை. ராசா லஞ்சம் வாங்கியதாக குற்றப்பத்திரிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த 2008 ம் ஆண்டு செல்போன் கம்பெனிகளுக்கு 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் மத்திய அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இந்த இழப்பிற்கு தி.மு.க.வை சேர்ந்த அப்போதைய தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆண்டி முத்து ராசாவே முழுப்பொறுப்பு என்றும் தணிக்கை குழு குற்றம்சாட்டியிருந்தது. இந்த அறிக்கை பத்திரிகைகளில் வெளி வந்தபோது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உலகிலேயே நடந்த மிகப்பெரிய இமாலய ஊழல் இதுதான் என்று அமெரிக்க பத்திரிகைகளே வாயை பிளக்கும் அளவுக்கு செய்திகளை வெளியிட்டன. இதனால் இந்த ஊழல் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
எதிர்க்கட்சிகளின் வற்புறுத்தலால் ஆ.ராசா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதை அடுத்து அவரது வீடுகளிலும் அவரது உதவியாளர்கள் வீடுகளிலும் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன. அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு கிடைத்தது.
மேலும் இந்த ஊழல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த ஊழல் வழக்கை தங்களது கண்காணிப்பில் சி.பி.ஐ.அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் எனறு சுப்ரீம் கோர்ட்டு கட்டளையிட்டது.
இதை அடுத்து ஆ.ராசாவிடம் துருவித் துருவி சி.பி.ஐ.அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பிறகு விசாரணை நடந்து கொண்டிருந்த போதே ஒரு நாள் ஆ.ராசா கைது செய்யப்பட்டார். அடுத்து அவரது உதவியாளர்களான சந்தோலியா, சித்தார்த் பெகுரா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட ஆ.ராசாவும் இரு உதவியாளர்களும் பின்னர் சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சி.பி.ஐ.காவலில் எடுக்கப்பட்டனர். சி.பி.ஐ. காவல் முடிந்ததை அடுத்து இவர்கள் மூன்று பேரும் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் இப்போதும் திகார் சிறையில்தான் உள்ளனர்.
இந்த நிலையில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஒரு கம்பெனிக்கு கிடைத்த ஊழல் பணம் கலைஞர் டி.வி.க்கு கைமாறியதாக செய்திகள் வெளியாயின.
முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் குறைந்த ஏலத்திற்கு 2ஜி. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்ற ஸ்வான் டெலிகாம் என்ற கம்பெனி தனது துணை நிறுவனத்தின் மூலம் கலைஞர் டி.வி.க்கு ரூ. 214 கோடியை கொடுத்ததாக செய்திகள் வெளியாயின.
ஆனால் இந்த ரூ. 214 கோடியை அதே கம்பெனியிடம் தாங்கள் திருப்பி கொடுத்துவிட்டதாக கலைஞர் டி.வி. நிர்வாகம் கூறினாலும் கூட கலைஞர் டி.வி.க்கு ரூ.214 கோடியை அளித்தது தொடர்பாக ஸ்வான் டெலிகாம் நிர்வாக தலைவர் பல்வாவை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.
இதை அடுத்து சி.பி.ஐ. காவலில் சிறிது நாட்கள் இருந்த பல்வாவும் பிறகு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு உத்தரவின்படி அதே திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக 80,000 பக்கங்களை கொண்ட முதலாவது குற்றப்பத்திரிகை கடந்த 2ம் தேதி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் நேற்று இரண்டாவது ( துணை ) குற்றப்பத்திரிகை நேற்று இதே நீதி மன்றத்தில் நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டது.
இதில் தி.மு.க.தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதியின் மகளும் கலைஞர் டி.வி.யில் 20 சதவீத பங்குகளை வைத்திருப்பவருமான கனிமொழி எம்.பி. பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.
ஊழலுக்கு உடந்தையாக சதித்திட்டம் தீட்டியதாக அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கனிமொழி ஒரு கூட்டுச்சதியாளர் என்று இந்த துணை குற்றப்பத்திரிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் கருணாநிதியின் மனைவியும் கலைஞர் டி.வி.யில் 60 சதவீத பங்குளை வைத்திருப்பவருமான தயாளு அம்மாள் பெயர் இந்த குற்றப்பத்திரிகையில் எதிர்பார்த்தபடி இடம் பெறவில்லை.
கலைஞர் டி.வி.யில் தயாளு அம்மாளுக்கு 60 சதவீதமும் கனிமொழிக்கு 20 சதவீதமும், அதன் நிர்வாக இயக்குனர் சரத் குமாருக்கு 20 சதவீதமும் பங்குகள் உள்ளன.
ஆ.ராசா மீது லஞ்சம் வாங்கியதாக குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த பணத்தில் ரூ.200 கோடி ஸ்வான் டெலிகாம் நிறுவனர் ஷாகீத் உஸ்மான் பல்வாவின் பங்குதாரர் நிறுவனம் ஒன்றின் மூலமாக கலைஞர் டி.வி.க்கு கைமாறியுள்ளது என்பதை ஏற்கனவே சி.பி.ஐ, கோர்ட்டில் சி.பி. ஐ.அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குசேகான் புரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் சினியுக் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் மூலமாக இந்த பணம் கலைஞர் டி.வி.க்கு சென்றதாகவும் சிபிஐ. தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவர் மீதும் இபிகோ. ( இந்திய தண்டனைச் சட்டம் ) 120 பி. ( கிரிமினல் சதித்திட்டம் ) இபிகோ. 468 ( போலி மற்றும் மோசடி ) இ.பி.கோ. 471 ( உண்மையான ஆவணம் போல போலி ஆவணங்களையும் எலக்ட்ரானிக் பதிவுகளையும் பயன்படுத்துதல் ) இபிகோ. 420 ( மோசடி மற்றும் ஏமாற்றுதல் , கண்ணியமற்ற முறையில் சொத்துக்களை அனுமதித்தல் ) இபிகோ. 109 ( உடந்தையாக இருத்தல் ) ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் ஆ.ராசா மற்றும் 11 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
அவர்களின் பெயர்கள் வருமாறு
முன்னாள் தொலை தொடர்பு அமைச்சர் ஆ.ராசா, முன்னாள் தொலை தொடர்பு துறை செயலாளர் சித்தார்த் பெகுரா, ராசாவின் முன்னாள் தனிசெயலாளர் ஆர்.கே. சந்தோலியா, ஸ்வான் டெலிகாம் நிறுவனர் ஷாகீத் உஸ்மான் பல்வா, யுனிடெக் ஒயர்லெஸ் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா, மும்பையை சேர்ந்த டி.பி.ரியாலிட்டீஸ் நிறுவன இயக்குனர் வினோத் கோயங்கா, ரிலையன்ஸ் தொலை தொடர்பு குழும நிர்வாக இயக்குனர் கவுதம் தோஷி, இதே ரிலையன்ஸ் கம்பெனியின் இரு துணை தலைவர்களான ஹரி நாயர், சுரேந்திர பிப்பாரா, கனிமொழி ஆகியோர் உள்பட 11 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும் இந்த குற்றப்பத்திரிகையில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெறுவதற்கு எடிசலாட் டி.பி. டெலிகாம் நிறுவனமும் யுனிடெக் நிறுவனமும் தகுதியற்ற நிறுவனங்களாக இருந்தன. ஆனால் இந்த நிறுவனங்களை தகுதியுள்ளவைகளாக மாற்றுவதற்காக ராசா விதிமுறைகளையே திருத்தினார் என்றும் கூறப்பட்டுள்ளது.
இருக்கும் விதிமுறைகளுக்கு பதிலாக ராசா முன்னுரிமை பட்டியலை திருத்தியதாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் அட்டர்னி ஜெனரல் வாஹன்வதி கம்பெனி தரகர் நீரா ராடியா உள்பட 125 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஒரு ஊழல் வழக்கில் நாட்டின் உயர் மட்ட சட்ட அதிகாரியாக இருக்கும் ஒருவர் சாட்சியாக சேர்க்கப்பட்டு ஆஜராவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ராசா யுனிடெக் மற்றும் ஸ்வான் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டுள்ளார்.இதற்கான விண்ணப்பங்களை பெறுவதற்கான தேதியை முன் கூட்டியே ராசா தன்னிச்சையாக முடிவு செய்ததாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி லைசென்ஸ் வழங்கும் விஷயத்தில் பிரதமரின் அலுவலகம் , சட்ட அமைச்சகம், தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் ஆகியவற்றின் ஆலோசனைகளையும் ராசா புறக்கணித்து விட்டார் என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பாக இதுவரை ஆ.ராசா, பெகுரா, சந்தோலியா, பால்வா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 5 நிறுவன அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள கனிமொழி எம்.பி. இதுவரை கைதாகவில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-09-2025.
23 Sep 2025 -
சென்னையில் மாவட்ட தேர்தல் அலுவலர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை
23 Sep 2025சென்னை : சென்னை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
-
அரசின் திட்டங்களின் நிலை குறித்து விருதுநகரில் அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஆலோசனை
23 Sep 2025விருதுநகர் : விருதுநகரில் அரசின் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தை கடந்தது
23 Sep 2025சென்னை : தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு உயர்ந்து புது உச்சம் தொட்டுள்ளது.
-
75 ஆண்டுகள் ஆனாலும் தி.மு.க. என்றும் எழுச்சியுடன் இருக்கும் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
23 Sep 2025விருதுநகர் : தி.மு.க.வை தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று விருதுநகரில் நடைபெற்ற தி.மு.க.
-
அ.தி.மு.க.வை யாராலும் அசைக்கவே முடியாது : நீலகிரியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
23 Sep 2025நீலகிரி : தொண்டர்களால் உருவான அ.தி.மு.க.வை ஒருபோதும் யாராலும் அசைக்க முடியாது என்று நீலகிரியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
-
71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா: 3 தேசிய விருதுகளை பெற்ற ‘பார்க்கிங்’ திரைப்படக்குழு
23 Sep 2025புது டெல்லி : 2023-ம் ஆண்டிற்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் தமிழ் திரைப்படமா பார்க்கிங் பட தயாரிப்பாளர், இயக்குனர் (திரைக்கதை), எம்.எஸ்.
-
'சென்னை ஒன்று செயலி’ மூலம் 4,395 பேர் பஸ்-ரயில்களில் பயணம்
23 Sep 2025சென்னை : சென்னை ஒன்று செயலி மூலம் ஒரே நாளில் மட்டும் மொத்தம் 4,395 பயணிகள் பயணம் செய்து உள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
அரசு மாணவர் விடுதியில் ராகிங்: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
23 Sep 2025சென்னை : அரசு மாணவர் விடுதியில் நடந்த ராகிங் செயலுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
23 Sep 2025சென்னை : தமிழகத்தில் 29-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் நயினார் சந்திப்பு
23 Sep 2025சென்னை : டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.
-
‘இந்தியா ஏ’ கேப்டன் பொறுப்பில் இருந்து ஷ்ரேயஸ் ஐயர் திடீர் விலகல்
23 Sep 2025லக்னோ : ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஷ்ரேயஸ் ஐயர் விலகியுள்ளார்.
-
சொகுசு கார்கள் வாங்கிய விவகாரம்: நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் சுங்கத்துறையினர் சோதனை
23 Sep 2025கொச்சி : நடிகர்கள் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், நடிகர்கள் பிருத்விராஜ், துல்கர் சல்மானுக்கு சொந்தமான கார்களை பறிமுதல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
-
100 ஆண்டுகளை கடந்தும் தி.மு.க. நிலைத்து இருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
23 Sep 2025சென்னை, தமிழர்களின் உணர்வால் வேர்விட்டிருக்கும் நம் தி.மு.க. இன்னும் நூறு ஆண்டுகளைக் கடந்தும் நிலைத்து நிற்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
சுப்ரீம் கோர்ட்டில் டி.கே.சிவக்குமார் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
23 Sep 2025பெங்களூரு : கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மீது சொத்து குவிப்பு வழக்கை சி.பி.ஐ.
-
சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரெயில்
23 Sep 2025மதுரை, சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
-
காய்த்த மரம்தான் கல்லடி படும்: விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் பதில்
23 Sep 2025சென்னை : காய்த்த மரம்தான் கல்லடி படும் என்று விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துள்ளார்.
-
யூத புத்தாண்டு: ஜனாதிபதி முர்மு வாழ்த்து
23 Sep 2025டெல்லி : ஜனாதிபதி திரெளபதி முர்மு யூத புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
-
H-1B விசா கட்டண உயர்வில் மருத்துவர்களுக்கு விலக்களிக்க பரிசீலனை
23 Sep 2025நியூயார்க் : எச்-1பி விசா கட்டண உயர்வில் டாக்டர்களுக்கு விலக்கு அளிக்க அமெரிக்கா பரிசீலனை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
இந்து மதத்தினரின் மக்கள் தொகை 30 கோடியாக சரிவு: உ.பி. முதல்வர்
23 Sep 2025லக்னோ : இந்து மதத்தினரின் மக்கள் தொகை 30 கோடியாக சரிந்ததாக யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
-
விமானத்தின் சக்கரப் பகுதியில் அமா்ந்து ஆப்கானில் இருந்து டெல்லி வந்த சிறுவனால் பரபரப்பு
23 Sep 2025புதுடெல்லி, ஆப்கானிஸ்தானில் இருந்து டெல்லி வந்த விமான சக்கரத்தில் சிறுவன் பயணம் செய்தார்.
-
மாணவர்களுக்கு தயார்நிலையில் 2-ம் பருவம் பாடப்புத்தகங்கள் : பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்
23 Sep 2025சென்னை : பள்ளி மாணவர்களுக்கு 2-ம் பருவம் பாடப்புத்தகம் தயார் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
திருமங்கலம் - வடுகப்பட்டி நான்கு வழிச் சாலை டிசம்பர் 25-ல் திறப்பு
23 Sep 2025மதுரை : திருமங்கலம் - வடுகப்பட்டி நான்கு வழிச்சாலை டிசம்பர் மாதம் திறக்கப்படும் என்று நெடுஞ்சாலை துறை தெரிவித்துள்ளது.
-
துணைவேந்தர் நியமன விவகாரம்: மத்திய அரசு, கவர்னரின் செயலாளர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
23 Sep 2025புதுடெல்லி : துணைவேந்தர் நியமன விவகாரத்தில் மத்திய அரசு கவர்னரின் செயலாளர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
ஆத்திகர்களாலும், நாத்திகர்களாலும் தி.மு.க. ஆட்சி கொண்டாடப்படுகிறது : அமைச்சர் சேகர் பாபு பெருமிதம்
23 Sep 2025சென்னை : ஆத்திகர்களாலும், நாத்திகர்களாலும் திமுக ஆட்சி கொண்டாடப்படுகிறது என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.