எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.17 - நகர் ஊரமைப்பு நில உபயோகத் தகவல் தொகுப்பு உருவாக்கப்படும் என்று சட்டப் பேரவையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மானியக்கோரிக்கை விவாதத்திற்குப் பிறகு அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் அறிவிப்பு விவரம் வருமாறு:-
நகர் ஊரமைப்புத் துறையின் நில உபயோகத் தகவல்களை பொதுமக்கள் இணையதளம் மூலம் அறிந்து கொள்ளும் வகையில் நகர் ஊரமைப்பு நில உபயோகத் தகவல் தொகுப்பு உருவாக்கப்படும். இதன் மூலம் ஒவ்வொரு மனையிலும் அனுமதிக்கக்கூடிய வளர்ச்சிகள் மற்றும் அதற்கான நெறிமுறைகள் பற்றிய விவரங்கள் இணைய தளத்தின் மூலம் அறிந்து கொள்ள இயலும்.
புராதன இடங்கள் மற்றும் அதனைச் சார்ந்துள்ள பகுதிகளைச் சீரழிவிலிருந்து பேணிப் பாதுகாப்பது மிகவும் அவசியமாகிறது. இத்திட்டத்தைச் செயல்படுத்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையால் 39 நகரங்களும் ஊரக வளர்ச்சித் துறையால் 10 நகரங்களும் புராதன நகரங்களாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளன. புராதன நகர மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நகர ஊரமைப்பு வளர்ச்சி நிதியிலிருந்து 5 புராதன நகரங்களுக்குத் தலா ரூ.1 கோடி வரை மானியமாக வழங்கப்படும்.
நகரங்களின் அளவு பெருகி வருவதும் மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து வருவதும் அதிக அளவிலான போக்குவரத்துத் தேவைகளையும், சாலைகளில் நெரிசலையும் உருவாக்கியுள்ளது. போக்குவரத்தைச் சீர்செய்ய போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 9 நகராட்சிகளுக்கு தலா ரூ.50 லட்சம் வரையிலும, 1 மாநகராட்சிக்கு ரூ.1 கோடி வரையிலும் நகர் ஊரமைப்பு வளர்ச்சி நிதியிலிருந்து மானியமாக வழங்கப்படும்.
பொதுமக்கள் தூய்மையான காற்றை சுவாசிக்கவும், அசதி ஏற்படுத்தும் பரபரப்பான அலுவல்களுக்கிடையில் சிறிது நேரம் இளைப்பாறவும் பூங்காக்கள் ஏற்படுத்தப்படுகின்றன. பொதுமக்களின் நலனுக்காக பூங்காக்களை மேம்படுத்தி பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது. பூங்கா மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 20 பூங்காக்களை மேம்படுத்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தலா ரூ.10 இலட்சம் வரை மானியமாக வழங்கப்படும்.
அங்கீகரிக்கப்படாத வீடுகள் மற்றும் வீட்டுமனைகளைக் கண்டறிவும், கள ஆய்வு மேற்கொள்ளவும், சட்ட நெறிமுறைகளைச் செயல்படுத்தவும், இதன் மூலம் திட்டக்குழு மங்களுக்கு கூடுதல் வருவாய் ஈட்டவும் வாகன வசதி மிகவும் அவசியமாகிறது. மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சிக் குழுமத்திற்கும், கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல் மற்றும் கடலூர் ஆகிய உள்ளூர்த்திட்டக் குழுமங்களுக்கும் மொத்தம் 6 வாகனங்கள் வழங்கப்படும்.
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் வளர்ச்சி விதிமுறையில், ஒவ்வொரு கட்டத்திலும் மழைநீர் சேகரிப்பு வசதி ஏற்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மழைநீர் சேகரிப்பு செயல்முறைகளை வலுவானதாகவும், சீரானதாகவும் ஆக்க விரிவான தணிக்கை முறை தேவைப்படுகிறது.
முன்னோடியாக உள்ள அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் மழைநீர் சேகரிப்பு பற்றிய தணிக்கை மேற்கொள்ளப்படும்.
பரந்த குடியிருப்புகளில் மக்களின் பொழுதுபோக்கு வசதிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட திறந்த வெளியிடங்களில் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துடன் கலந்தாலோசித்து விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக்குழுமத்தின் நில உபயோகத் தகவல்களை பொதுமக்கள் இணைதளம் மூலம் அறிந்து கொள்ளும் வகையில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும நில உபயோகத் தகவல் தொகுப்பு (கஹடூக்ஷ மஙூடீ ஐடூக்ச்ஙுஙிஹசிடுச்டூ நநீஙூசிடீஙி) உருவாக்கப்படும். இதன் மூலம் ஒவ்வொரு மனையிலும் அனுமதிக்கக்கூடிய வளர்ச்சிகள் மற்றும் அதற்கான நெறிமுறைகள் பற்றிய விவரங்கள் இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ள இயலும்.
சென்னை பெருநகர் பகுதியில் இரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து முறைகள் சிறப்பாக அமைந்துள்ளன. பெருகிவரும் தனியார் போக்குவரத்து வாகனங்களால் சாலைகளில் அதிக நெரிசல் ஏற்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்தை மக்கள் தேர்ந்தெடுக்க பல்வேறு போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைப்பது அவசியமாகிறது. பல்வேறு போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைப்பு செய்வது குறித்து சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் ஆய்வு மேற்கொள்ளும்.
வண்டலூரிலிருந்து மீஞ்சூர் வரை 63 கி.மீ. நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் வெளிவட்டச் சாலையின் கிழக்குப் பகுதியில் எதிர்காலப் போக்குவரத்து வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ள 50 மீட்டர் நிலப்பகுதியின் மேம்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
மீண்டும் சரிந்த தங்கம் விலை
09 Mar 2026சென்னையில் நேற்று தங்கம் விலை மீண்டும் குறைந்து விற்பனையானது.
-
மீண்டும் தள்ளிப்போகிறதா? 'ஜனநாயகன்' திரைப்படம் மறு ஆய்வு ஒத்திவைப்பு
09 Mar 2026சென்னை, விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கான மறு ஆய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
தமிழக சட்டசபை தேர்தல் தேதி வரும் 15ம் தேதி வெளியாகிறது
09 Mar 2026சென்னை, வரும் 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதியை அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
-
மத்திய அரசு நடைமுறைப்படுத்த விரும்பும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நோயை விட கொடுமையானது: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
09 Mar 2026சென்னை, மத்திய அரசு நடைமுறைப்படுத்த விரும்பும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நோயை விட கொடுமையானது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி அறிவிப்பு
09 Mar 2026தெஹ்ரான், ஈரானின் புதிய உச்ச தலைவரை தேர்வு செய்வதற்காக மதகுருமார் கவுன்சில் ஆலோசனை நடத்தியது.
-
பாராளுமன்ற மாநிலங்களவை தேர்தல்: 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு
09 Mar 2026சென்னை, தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்கள் 4 பேர், அ.தி.மு.க.
-
மேற்கு ஆசிய போர் பதற்றம்: பாராளுமன்ற விவாதம் கோரி எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்
09 Mar 2026புதுடெல்லி, மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போர் குறித்தும், அதனால் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் குறித்தும் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வலியுறுத்தி எத
-
சட்டசபை தேர்தல் நடைபெறும் 3 மாநிலங்களில் பா.ஜ.க. மத்திய பார்வையாளர்கள் நியமனம்
09 Mar 2026டெல்லி, மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மூன்று மாநிலங்களுக்கு மத்திய பார்வையாளர்களை பா.ஜ.க. தலைவர் நிதின் நவீன் நியமித்தார்.
-
டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு விஜய் வாழ்த்து
09 Mar 2026சென்னை, டி-20 உலக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்தார்.
-
தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி தொடர்ந்தால்தான் தமிழ் சமூகம் எதிர்பார்க்கும் முன்னேற்றம் கிடைக்கும் : திருச்சி தி.மு.க. மாநாட்டில முதல்வர் மு.கஸ்டாலின் பேச்சு
09 Mar 2026தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி தொடர்ந்தால்தான் தமிழ் சமூகம் எதிர்பார்க்கும் முன்னேற்றம் கிடைக்கும் என்று திருச்சி தி.மு.க. மாநாட்டில முதல்வர் மு.கஸ்டாலின் பேசினார்.
-
அமித்ஷா குறித்து சர்ச்சை கருத்து: ராகுல் மீதான அவதூறு வழக்கு: வருகிற 12-ம் தேதி விசாரணை
09 Mar 2026டெல்லி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணை வரும் 12-ம் தேதி மீண்டும் நடைபெறவுள்ளது.
-
3 கோரிக்கைகளை வலியுறுத்தி த.வெ.க. தலைமையில் 12-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்
09 Mar 2026சென்னை, விஜய்யின் மக்கள் சந்திப்பை முடக்கும் வகையிலான வழிகாட்டு நெறிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட 3 கோரிக்கைகளை வழியுறுத்தி வரும் மார்ச் 12-ம் தேதி த,வெ,க, சா
-
சவுதியில் இந்தியர் கொல்லப்பட்டதாக வெளியான தகவலில் உண்மையில்லை: இந்திய தூதரக அதிகாரி தகவல்
09 Mar 2026ரியாத், ஈரான் போர் அதிகரித்து வரும் நிலையில், சவுதி அரேபியாவில் 'ஏவுகணை தாக்குதலில்' ஒரு இந்தியர் இறந்ததாக வெளியான செய்திகளை ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் நிராகரித்தது.
-
பராமரிப்பு சார்ந்த பொருளாதாரம் இந்திய இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பை அளிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
09 Mar 2026புதுடெல்லி, குழந்தைகளை பராமரித்தல், முதியோர்களை பராமரித்தல், சுகாதாரத்தை பராமரித்தல் உள்ளிட்ட பராமரிப்பு சார்ந்த பொருளாதாரம், இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பை அளிப்பதாக
-
வயது மூப்பு மற்றும் மருத்துவக் காரணங்களால் நிர்வாக முடிவுகளை எடுக்கும் நிலையில் ராமதாஸ் இல்லை: நீதிமன்றத்தில் அன்புமணி தரப்பில் மனு தாக்கல்
09 Mar 2026சென்னை, 87 வயதாகும் ராமதாஸ் மருத்துவ காரணங்களால் பா.ம.க.வின் நிர்வாக முடிவுகளை எடுக்கும் நிலையில் இல்லை.
-
ஈரான் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு: இந்தியாவின் நிலைப்பாடு குறித்து பார்லி.யில் ஜெய்சங்கர் விளக்கம்
09 Mar 2026புதுடெல்லி, ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் போர் விவகாரத்தில், பதற்றத்தைத் தணிக்க பேச்சுவார்த்தையும் ராஜதந்திரமுமே சரியான தீர்வைத் தரும் என்று பாராளுமன்றத்தில் மத்திய வ
-
நேபாள நாடாளுமன்ற தேர்தல்: ராஷ்டிரிய சுதந்திர கட்சி பெரும்பான்மை வெற்றி: பிரதமராக பொறுப்பேற்கிறார் பாலேந்திர ஷா
09 Mar 2026காத்மண்டு, ராஷ்டிரிய சுதந்திர கட்சி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ள நிலையில் அந்த கட்சியின் பாலேந்திர ஷா பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.
-
வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் ரூ. 5.08 கோடியில் அமைக்கப்பட்ட அகத்தியர் நகர் விளையாட்டு திடல்: துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்
09 Mar 2026சென்னை, வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் 5.08 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய விளையாட்டு திடலை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: காங்., வேட்பாளர்களை தேர்வு செய்ய 4 பேர் சிறப்பு குழு நாளை ஆலோசனை
09 Mar 2026சென்னை, காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்ய 4 பேர் கொண்ட சிறப்பு குழு நாளை சென்னையில் ஆலோசனை நடத்துகிறது.
-
கொச்சியில் நாளை நடைபெறவுள்ள என்.டி.ஏ. தேர்தல் பிரச்சார கூட்டம்: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு
09 Mar 2026கொச்சி, கொச்சியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் நாளை நடைபெறும் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நாளை பங்கேற்கிறார்.
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: த.வெ.க. தலைவர் விஜய் நேரில் ஆஜராக சி.பி.ஐ. மீண்டும் சம்மன்
09 Mar 2026புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி விஜய் இன்று (மார்ச் 10) டெல்லி சி.பி.ஐ.
-
கூடுதல் வரி விதிப்பதாக ட்ரம்ப் மிரட்டல்: அமெரிக்காவில் தென்கொரியா 29 லட்சம் கோடி ரூபாய் முதலீடு
09 Mar 2026சியோல், தென் கொரிய பொருட்கள் மீது 25 சதவீத கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விடுத்திருந்த மிரட்டல், தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்ப
-
கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: விலைவாசி உயர்வை தடுக்க மத்திய அரசு பல நடவடிக்கை: பார்லி.யில் நிர்மலா சீதாராமன் பதில்
09 Mar 2026புதுடெல்லி, கச்சா எண்ணெய் விலை தற்போது உயர்ந்து வரும் நிலையில், இந்தியாவில் பணவீக்கம் குறைந்த அளவிலேயே இருப்பதால் கச்சா எண்ணெய் உயர்வு பாதிப்பை ஏற்படுத்தாது.
-
திருப்புவனமம் காவலாளி அஜித்குமார் மீது நிகிதா அளித்த நகை திருட்டு புகாரை முடித்து வைத்தது மதுரை நீதிமன்றம்
09 Mar 2026சிவகங்கை, மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் அஜித்குமார் மீது நிகிதா அளித்த நகை திருட்டு புகாரை முடித்து வைப்பதாக மதுரை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
-
இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
09 Mar 2026அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 92.33 ஆக கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.


