எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நகரி,ஏப்.29 - சாய்பாபா உடல் அடக்கத்திற்கு 20 நாட்களுக்கு முன்பே சவப்பெட்டி வாங்கியது தொடர்பாக விசாரணை நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புட்டபர்த்தி சாய்பாபா கடந்த 24 ம் தேதி காலை 7.40 மணிக்கு மரணமடைந்தார். அவரது மரணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. தற்போது புதிதாக சவப்பெட்டி விவகாரம் தலையெடுத்துள்ளது. சாய்பாபா இறந்ததும் அவரது உடல் நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட குளிர்சாதன சவப் பெட்டியில் வைக்கப்பட்டது. அவரது உடலை பக்தர்கள் பார்த்து தரிசனம் செய்வதற்கு வசதியாக கூம்பு வடிவில் பெட்டி தயாரிக்கப்பட்டிருந்தது. இது போன்ற வடிவில் சவப்பெட்டி தயாரித்தது இதுவே முதல் முறையாகும்.
கோவையை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் பெங்களூர் கிளையில் இந்த சவப்பெட்டி தயாரிக்கப்பட்டுள்ளது. ராஜேந்திரநாத் ரெட்டி என்பவர் இதற்கு ஆர்டர் கொடுத்துள்ளார். இதன் விலை ரூ. ஒரு லட்சத்து 7 ஆயிரம். ஏப்ரல் 4 ம் தேதி சவப்பெட்டி கோவையில் இருந்து பெங்களூர் அல்சூருக்கு அனுப்பப்பட்டது. அங்கிருந்து ஏப்ரல் 5 ம் தேதி புட்டபர்த்தி சென்றுள்ளது. ஆனால் இந்த சவப்பெட்டி யாருக்காக ஆர்டர் கொடுக்கப்பட்டது என்று அந்த நிறுவனத்துக்கு தெரியாது. சாய்பாபா இறந்ததும் 24 ம் தேதி மாலை அவரது உடல் இந்த சவப்பெட்டியில் வைக்கப்பட்டதை டி.வியில் பார்த்த கோவை நிறுவனத்தின் உரிமையாளர் லெட்சுமி, இந்த சவப் பெட்டி தங்களது நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது போல் இருக்கிறதே என சந்தேகமடைந்தார். இது பற்றி சவப்பெட்டிக்கு ஆர்டர் கொடுத்த ராஜேந்திரநாத் ரெட்டியுடன் தொடர்பு கொண்டு விசாரித்த போது அவர் சாய்பாபாவுக்காக பிரத்யேகமாக ஆர்டர் கொடுத்ததை ஒப்புக் கொண்டார்.
சவப்பெட்டிக்கு முன் கூட்டியே ஆர்டர் கொடுத்தது ஏன்? யார் இதற்கு ஆர்டர் கொடுக்க சொன்னார்கள் என்பது மர்மமாக உள்ளது. சாய்பாபா மார்ச் 28 ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்பு ஏப்ரல் 15 ம் தேதிதான் அவரது உடல்நிலை மோசமடைந்தது. ஆனால் ஏப்ரல் 4 ம் தேதியே சவப்பெட்டிக்கு ஆர்டர் கொடுத்தது ஏன் என்பது மர்மமாக இருப்பதாக சாய்பாபா பக்தர்கள் தெரிவித்தனர். இது குறித்து சவப்பெட்டி தயாரித்து கொடுத்த நிறுவனத்தின் உரிமையாளர் லெட்சுமியிடம் கேட்ட போது, சவப்பெட்டி சாய்பாபாவுக்கென்று எங்களுக்கு தெரியாது. டி.வியில் பார்த்த பிறகுதான் நாங்கள் தயாரித்தது என தெரியவந்தது என்றார். சாய் டிரஸ்ட் உறுப்பினர்கள் யாராவது ராஜேந்திரநாத் ரெட்டி மூலம் இதற்கு ஆர்டர் கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது பற்றி டிரஸ்ட் உறுப்பினர் எஸ்.எஸ். நாகானந்திடம் கேட்ட போது, சாய்பாபா குடும்பத்தினர் சவப்பெட்டிக்கு ஆர்டர் கொடுத்திருக்கிறார்கள் என்றார்.
மற்றொரு உறுப்பினரான முன்னாள் நீதிபதி டி.என். பகவதி கூறுகையில், சவப்பெட்டி ஆர்டர் கொடுத்தது பற்றியோ, புட்டபர்த்திக்கு கொண்டு வந்தது பற்றியோ எதுவும் தெரியாது என்றார். ஆனந்தபூர் மாவட்ட கலெக்டர் ஜனார்த்தனரெட்டியும் தனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறி விட்டார். 96 வயது வரை உயிரோடு இருப்பேன் என்று சொன்ன பாபா, உயிர் பிழைத்து வருவார் என்று நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால் அவர் இறப்பதற்கு 20 நாட்களுக்கு முன்பே சவப்பெட்டிக்கு ஆர்டர் கொடுத்திருப்பது மர்மமாக இருப்பதாக பக்தர்கள் கூறினர். இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று பெங்களூர் காயத்ரி நகர் காளிகா ஆசிரம பீடாதிபதி யோகேஸ்வர ருசி குமாரசாமி கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
சென்னை அணியில் இணையும் லிவிங்ஸ்டன் - தேஷ்பாண்டே..!
14 Nov 2025சென்னை: ஆர்.சி.பி.-ல் இருந்து லியாம் லிவிங்ஸ்டனும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து துஷார் தேஷ்பாண்டேவும் சி.எஸ்.கே.
-
கொல்கத்தா முதல் டெஸ்ட்: பும்ரா வேகத்தில் வீழ்ந்த தென் ஆப்பிரிக்கா அணி
14 Nov 2025கொல்கத்தா: கொல்கத்தா முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா வேகத்தில் தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 159 ரன்களுக்கு சுருண்டது.
-
ஆசிய வில்வித்தை போட்டி: இந்தியாவுக்கு 3 தங்கப்பதக்கம்
14 Nov 2025டாக்கா: வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்று வரும் 24-வது ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 3 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது.
-
டெல்லி குண்டுவெடிப்புக்கும் மும்பை தாக்குதலுக்கும் நெருங்கிய தொடர்பு..!
14 Nov 2025டெல்லி: டெல்லி குண்டுவெடிப்பின்போது கைப்பற்றப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள்தான், மும்பையிலும் 5 குண்டுவெடிப்பு தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியு
-
பயிற்சியாளராக சவுதி நியமனம்
14 Nov 202519-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 16-ந்தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
-
மஹுவா சட்டசபை தொகுதியில் லல்லுவின் மூத்த மகன் தோல்வி
14 Nov 2025டெல்லி: மஹுவா தொகுதியில் தொகுதியில் லல்லு பிரசாத்தின் மகன் தேஜ் பிரதாப் தோல்வியடைந்துள்ளார்.
-
ஐ.பி.எல். லக்னோ அணியில் ஷமி..?
14 Nov 2025லக்னோ: இந்திய வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியை டிரேடிங் முறையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
பீகாரின் ஒரே முதல்வர் நிதிஷ்குமார் தான் : ஆளுங்கட்சியின் பதிவு உடனடி நீக்கம்
14 Nov 2025டெல்லி: பீகாரில் நிதிஷ்குமார் தான் முதல்வர் என்று ஒருங்கிணைந்த ஜனதா தளம் சமூக ஊடகத்தில் பதிவிட்டதுடன், அதனை உடனடியாக நீக்கியும் விட்டதாகக் கூறப்படுகிறது.
-
வரும் டிசம்பர் 16-ம் தேதி அபுதாபியில் நடைபெறும் ஐ.பி.எல். 2026 மினி ஏலம்
14 Nov 2025மும்பை: அடுத்த மாதம் 16-ம் தேதி அபுதாபியில் வீரர்களின் ஏலம் நடைபெற உள்ளது. ஐ.பி.எல் வீரர்களின் ஏலம் தொடர்ந்து 3-வது முறையாக வெளிநாட்டில் நடக்கிறது
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-11-2025.
15 Nov 2025 -
திருநள்ளாறு கோவில் ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பக்தர்கள் அவதி
15 Nov 2025புதுச்சேரி : திருநள்ளாறு கோவில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பக்தர்கள் அவதியடைந்தனர்.
-
எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் த.வெ.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்
15 Nov 2025சென்னை, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை கண்டித்து த.வெ.க. சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருக்கிறது.
-
பீகார் சட்டசபை தேர்தல்: ஆர்.ஜே.டி 23 சதவீத வாக்குகளை பெற்று முதலிடம்
15 Nov 2025பாட்னா : பீகாரில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் வெளியாகியுள்ளது.
-
4 ரிக்டர் அளவில் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
15 Nov 2025காபுல், ஆப்கானிஸ்தானில் 4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது.
-
தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை உணவுத்திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
15 Nov 2025சென்னை, சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான உணவுத்திட்டத்தை சனிக்கிழமை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், டிசம்பர் முதல் தமிழகத்தில் அனைத்து மாநகராட்சி,
-
எஸ்.ஐ.ஆர். தொடர்பான கூட்டங்களுக்கு த.வெ.க.வையும் அழைக்க வேண்டும்;: தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கடிதம்
15 Nov 2025சென்னை : தேர்தல் ஆணையம் நடத்தும் கூட்டங்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அழைப்பு விடுக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் கடிதம் எழு
-
பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் மூலம் தேர்தல் ஆணையத்தின் தவறான செயல்கள் வெளிப்பட்டுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
15 Nov 2025சென்னை, பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் மூலம் தேர்தல் ஆணையத்தின் தவறான செயல்கள் வெளிப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இது அனைவருக்குமான பாடம் என்
-
பெண்களின் சுதந்திரம் கேள்விக்குறி: நடவடிக்கை எடுக்க வி.எச்.பி. வலியுறுத்தல்
15 Nov 2025சென்னை : தமிழகத்தில் பெண்களின் சுதந்திரம் கேள்விக்குறியாக உள்ளதையடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு வி.எச்.பி. வலியுத்தினார்.
-
நவ்காம் காவல் நிலையத்தில் நடந்தது தற்செயலான வெடி விபத்துதான்: ஜம்மு காஷ்மீர் டி.ஜி.பி. விளக்கம்
15 Nov 2025ஸ்ரீநகர், காஷ்மீரில் நடந்தது தற்செயலான வெடி விபத்து தான் என்று ஜம்மு காஷ்மீர் டி.ஜி.பி. நலின் பிரபாத் தெரிவித்துள்ளார்.
-
டெல்லி கார் வெடிப்பு வழக்கு; மேலும் ஒரு டாக்டர் பஞ்சாப்பில் கைது
15 Nov 2025சண்டிகார் : டெல்லியில் கார் வெடி வழக்கில் பஞ்சாபில் மேலும் ஒரு டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
15 Nov 2025சென்னை : எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கில் ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை நடைபெறவுள்ளது.
-
20 ஆயிரம் தமிழர்களுக்கான வேலை வாய்ப்பு நழுவி விட்டது: அண்ணாமலை
15 Nov 2025சென்னை, தமிழகத்தில் 20 ஆயிரம் பேருக்கான வேலை வாய்ப்பு நழுவி விட்டது என்று அண்ணாமலை தெரிவித்தார்.
-
வேடந்தாங்கலில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்
15 Nov 2025சென்னை, வேடந்தாங்கலில் வெளிநாட்டு பறவைகள் குவிந்தன.
-
பீகார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: டி.டி.வி.தினகரன்
15 Nov 2025சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க - த.வெ.க இடையேதான் போட்டி என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.
-
பீகார் தேர்தல் இறுதி நிலவரம்
15 Nov 2025பாட்னா : பீகார் இறுதி நிலவரம் வெளியாகியுள்ளது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


