எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, மே.19 - சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த சூதாட்ட தரகர்களின் தலைவர் தென் ஆப்பிரிக்காவுக்கு தப்பிச் சென்று விட்டதாகவும், அவரது கார் சென்னை விமான நிலையத்தில் சிக்கியதாகவும் போலீசார் தெரிவித்தனர். ஐ.பி.எல். கிரிக்கெட் வெற்றி-தோல்வி பற்றி சென்னையில் சூதாட்டம் நடத்தியதை போலீசார் கண்டு பிடித்தனர். அவர்கள் சென்னையில் தனி அலுவலகம் அமைத்து செயல்பட்டு வந்தனர். 20 இடங்களில் தரகர்கள் செயல்பட்டனர். இவர்கள் தங்களுக்கிடையே `நெட்வொர்க்' அமைத்துக் கொண்டு தங்கள் இருப்பிடத்தில் இருந்தவாறே பந்தயம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் மாநில சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 6 பேர் கைது செய்யப்பட்டனர். அனைவரும் வசதி படைத்தவர்கள். வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். சூதாட்டத்தை நடத்திய முக்கிய புள்ளிகள் பலர் தப்பி ஓடி விட்டனர். அவர்களில் ஒருவர் பிரசாந்த் அயனாவரம் மேடவாக்கம் டேங்க் ரோட்டில் வசிக்கிறார். இவர்தான் சென்னையில் உள்ள சூதாட்ட தரகர்கள் சங்கத்தின் தலைவராக செயல்பட்டார். அவரைத்தேடி போலீசார் நேற்று முன்தினம் வீட்டுக்கு சென்றனர். அங்கு அவர் இல்லை. அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது அவர் குடும்பத்துடன் வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருந்ததாக தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் விமான நிலையம் சென்றனர். அங்கு அவரது கார் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததை கண்டு பிடித்தனர். குடும்பத்தினருடன் விமானத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு தப்பிச் சென்று விட்டது தெரிய வந்தது. பிரசாந்த்துக்கு அயனாவரத்தில் மிகப்பெரிய ஆடம்பர பங்களா உள்ளது. ஒரு ஆண்டுக்கு முன்புதான் இந்த பங்களாவை அவர் ரூ.3 1ற2 கோடிக்கு வாங்கினார்.
இந்த பங்களாவில் 8 தனித் தனி வீடுகள் உள்ளன. இங்கு 7 மாதங்களுக்கு முன்பு குடியேறினார். இங்கு அக்கம் பக்கம் வசிப்பவர்கள் அனைவரும் வசதி படைத்தவர்கள். பிரசாந்த்தை அவர்கள் பைனான்சியர் என்றே கருதி இருந்தனர். அவரது அலுவலகத்துக்கு வசதி படைத்தோர் வந்து செல்வதாகவும் தெரிவித்தனர். பக்கத்து வீட்டுக்காரர்களுடன் பிரசாந்த் பேச மாட்டார். புன்சிரிப்பு மட்டும் சிரிப்பார். கார் நேராக வீட்டுக்குள் சென்றுதான் நிற்கும்.
அதேபோல் வீட்டில் இருந்தே கார் புறப்பட்டுச் செல்லும் அந்த அளவுக்கு அவரது பயணம் ரகசியமாக இருக்கும். வீட்டுக் காவலாளியிடம் போலீசார் விசாரித்த போது, பிரசாந்த்தின் மனைவி 10 நாட்களுக்கு முன் வட நாட்டுக்கு சுற்றுலா சென்று விட்டதாகவும், பிரசாந்த்தும் அவரது 2 மகன்களும் 2 நாட்களுக்கு முன் வெளியூர் சென்றதாகவும் தெரிவித்தார். இந்த சூதாட்டத்தில் பிரசாந்த் முக்கிய பங்கு வகித்தார் என்று சி.பி.சி.ஐ.டி போலீசார் தெரிவித்தனர்.
தலைமறைவாக இருக்கும் 8 பேரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பிரசாந்த் வீட்டில் கோர்ட்டு அனுமதியுடன் போலீசார் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர். அவருக்கு டெல்லியைச் சேர்ந்த சூதாட்டக்காரர்களுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் பிடிப்பட்ட 6 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
மதுரையில் த.வெ.க. 2-வது மாநில மாநாடு?
12 Jul 2025சென்னை : த.வெ.க. 2-வது மாநில மாநாட்டை மதுரையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு்ள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
சீர்கெட்டுள்ள சட்ட நடைமுறைகள்: தலைமை நீதிபதி கவாய் வேதனை
12 Jul 2025ஐதராபாத் : நம்முடைய சட்ட நடைமுறைகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அளவுக்கு அது சீர்கெட்டு காணப்படுகிறது என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.
-
தங்கம் விலை 3-வது நாளாக உயர்வு
12 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.520 உயா்ந்து ரூ.73,120-க்கு விற்பனையாகிறது.
-
3.5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்: பிரதமர் மோடி
12 Jul 2025புதுடெல்லி, வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத் தொகை திட்டம் தோராயமாக 3.5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும் என்று தெரிவித்துள்ளார்.
-
கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் : விசாரணையில் தகவல்
12 Jul 2025கடலூர் : கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
12 Jul 2025சென்னை : மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-07-2025.
12 Jul 2025 -
3 மாதத்தில் குரூப் 4 தேர்வு முடிவு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பேட்டி
12 Jul 2025சென்னை, குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தெரிவித்துள்ளார்.
-
ராசிபுரம் நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி
12 Jul 2025சென்னை, ராசிபுரம் நகராட்சியை கண்டித்து வரும் 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
இன்ஜின்கள் அணைக்கப்பட்டதால் விபத்து: அகமதாபாத் விமான விபத்து குறித்து முதற்கட்ட அறிக்கையில் பரபரப்பு தகவல்
12 Jul 2025புதுடெல்லி, ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு அதன் 2 இன்ஜின்களும் அணைக்கப்பட்டதே காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
-
தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெறுவோம்: அ.தி.மு.க. அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும்: அமித்ஷா மீண்டும் திட்டவட்டம்
12 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அமைக்கும் அரசின் அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும் என்று அமித்ஷா கூறினார்.
-
முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி
12 Jul 2025கடலூர், கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீராதாரமாக காட்டுமன்னார்கோவில் லால் பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.
-
திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலில் இ.பி.எஸ். தரிசனம்
12 Jul 2025விழுப்புரம், விழுப்புரம் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலில் நள்ளிரவு சுவாமி தரிசனம் செய்தார்.
-
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு 14-ம் தேதி உள்ளூர் விடுமுறை
12 Jul 2025மதுரை, கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு மட்டும் 14-ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட கலெக்டர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்
-
இங்கிலாந்து ஜோடி சாம்பியன்
12 Jul 2025'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் மிகவும் கவுரவமிக்கதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.
-
இந்திய அணி அதனை செய்திருக்க கூடாது: இங்கிலாந்து முன்னாள் வீரர் விமர்சனம்
12 Jul 2025லண்டன் : இந்திய அணி பந்து மாற்றத்தை தேர்வு செய்திருக்கக்கூடாது என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஸ்டீவ் ஹார்மிசன் விமர்சித்துள்ளார்.
-
‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம்: 77 லட்சத்தை தாண்டிய உறுப்பினர் சேர்க்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
12 Jul 2025சென்னை, 'ஓரணியில் தமிழ்நாடு' பரப்புரையில் இதுவரை 77,34,937 பேர் (49,11,090 புதிய உறுப்பினர்கள்) தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர் என தி.மு.க.
-
யுனெஸ்கோ பட்டியலில் செஞ்சி கோட்டை: அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்
12 Jul 2025சென்னை : செஞ்சி கோட்டை தமிழர்களின் கட்டிடக்கலை நுட்பத்தையும், வீரம் செறிந்த வரலாற்றையும் உலகுக்குப் பறைசாற்றுகிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க, பரிசல் இயக்க 18-வது நாளாக தடை
12 Jul 2025ஒகேனக்கல், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடையானது 18-வது நாளாக நீடிக்கிறது.
-
ஆடித் திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு: நினைவு நாணயம் வெளியிடுகிறார்
12 Jul 2025அரியலூர், கங்கைகொண்டசோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித் திருவாதிரையன்று நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
-
பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த விமர்சனம்: விராட் கோலிக்கு சுரேஷ் ரெய்னா ஆதரவு
12 Jul 2025மும்பை : பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த விமர்சனம் தொடர்பாக விராட் கோலிக்கு சுரேஷ் ரெய்னா ஆதரவு தெரிவித்துள்ளார்.
-
ஆர்.சி.பி. கூட்டநெரிசலுக்கு ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் : விசாரணை அறிக்கையில் தகவல்
12 Jul 2025பெங்களூரு : பெங்களூரில், ஆர்.சி.பி.
-
சர்ச்சை கேள்விகள் தவிர்ப்பு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தகவல்
12 Jul 2025சென்னை : குரூப்-4 தேர்வு வினாத்தாளில் அரசியல் மற்றும் சாதி, சமயம் சார்ந்த கேள்விகளை கேட்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்ததாக டி.என்.பி.எஸ்.சி.
-
எதிர்க்கட்சிகள் அமைத்துள்ளது கூட்டணியல்ல: தமிழ்நாட்டின் ஒற்றுமையை சிதைக்கும் ஒரு சதித்திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனம்
12 Jul 2025சென்னை, அ.தி.மு.க. - பாஜக கூட்டணி, தமிழ்நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்கும் சதித்திட்டம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
-
குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்தார்
12 Jul 2025சென்னை, தஞ்சாவூரில் குளத்தில் மூழ்கி பலியான 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.