எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, மே.22 - கிரிக்கெட் சூதாட்ட கும்பல் தலைவன் பிரசாந்திடம் சென்னையில் வைத்து சி.பி.சி.ஐ.டி.போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையிலும், கிரிக்கெட் சூதாட்டம் மூலம் 20-க்கும் மேற்பட்ட தரகர்கள் கோடிகளை குவித்துள்ளனர். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் ஹரிஸ் பஜாஜ், நர்பத், வேதாச்சலம், பப்பு கவுதம், தீபஜ் பஜாஜ், சுனில் பஜன்லால் ஆகிய 6 தரகர்கள் பிடிப்பட்டனர்.
இவர்களிடமிருந்து ரூ.15 லட்சம் ரொக்கப்பணம், லேப்டாப், கம்ப்யூட்டர்கள், வயர்லெஸ் போன்கள், செல்போன்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சூதாட்ட கும்பலுக்கு அயனாவரத்தை சேர்ந்த பிரசாந்த் தலைவனாக செயல்பட்டது தெரியவந்தது.
போலீசார் தேடியதையடுத்து தலைமறைவாக இருந்த அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு தப்பிச் சென்று விட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் பிரசாந்த் நேற்று முன்தினம் மாலையில் கிண்டியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் திடீரென சரண் அடைந்தார்.
இதைத் தொடர்ந்து பத்திரிகை மற்றும் டி.வி. கேமரா மேன்கள் பிரசாந்தை படம் பிடிப்பதற்காக அங்கு படையெடுத்தனர். ஆனால் சி.பி.சி.ஐ.டி. போலீ சார் இதற்கு அனுமதிக்கவில்லை. இதன்பிறகு பிரசாந்திடம் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டது.
எத்தனை ஆண்டுகளாக சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகிறீர்கள்? இதில் எத்தனை கோடிகளை சம்பாதித்துள்ளீர்கள்? என்பது போன்ற கேள்விகளை கேட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கு பதில் அளித்து பிரசாந்த் கொடுத்துள்ள வாக்கு மூலம் வருமாறு:-
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நான் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகிறேன். இதனை ஒரு தொழில் போலவே நான் செய்து வருகிறேன். பல்வேறு முக்கிய பிரமுகர்களுடன் எனக்கு தொடர்பு உள்ளது. கிரிக்கெட் சூதாட்டம் மூலம் தினந்தோறும் லட்சக் கணக்கில் சம்பாதித்து வந்தேன். குறைந்தது ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் லாபம் கிடைக்கும்.
இப்படி கோடிக்கணக்கான ரூபாயை சூதாட்டம் மூலமாக நான் சுருட்டியுள்ளேன். என்னைப் போல பலர் சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் மிகுந்த ஈடுபாட்டுடன் இதில் பங்கேற்றுள்ளனர்.
இதுவே சூதாட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு உதவியது. இவ்வாறு பிரசாந்த் கூறியிருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பிரசாந்த் தென்ஆப்பிரிக்காவில் பதுங்கி இருந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் அவர் கடந்த சில நாட்களாக புனேயில் பதுங்கி இருந்தது தெரியவந்துள்ளது.
அவரை பிடிக்க உறவினர்கள் மற்றும் நண்பர்களையே சி.பி.சி.ஐ.டி. போலீசார் கருவியாக பயன்படுத்தினர். பிரசாந்தின் தம்பி ஒருவரை பிடித்து போலீசார் தீவிரமாக சோதனை நடத்தினர். இதுபற்றி தெரியவந்ததுமே, பிரசாந்த் தலைமறைவு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு வெளியில் வந்துள்ளார்.
தனது தம்பி மேல் வைத்திருந்த பாசமே சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் அவரை சரண் அடைய வைத்துள்ளது. அயனாவரத்தில் உள்ள பிரசாந்தின் பங்களா வீட்டில் சி.பி.சி.ஐ.டி, டி.எஸ்.பிக்கள் ராஜா சீனிவாசன், ஜெயச்சந்திரன், அரவிந்தன் ஆகியோர் நேற்று முன்தினம் மாலையில் அதிரடி சோதனை நடத்தி பாஸ்போர்ட் மற்றும் லேப்-டாப்புகளை கைப்பற்றியுள்ளனர்.
இதற்கிடையே சிறையில் அடைக்கப்பட்டுள்ள 6 தரகர்களில் ஹரிஸ் பஜாஜ், பப்பு, வேதாச்சலம், நர்பத் ஆகிய 4 பேரை 10 நாட்கள் காவலில் எடுக்க போலீஸ் சைதாப்பேட்டை கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை இன்று (22-ந் தேதி) நடக்கிறது. அப்போது 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 4 days ago |
-
அரசின் மானியம் இல்லாவிட்டால்... எலான் மஸ்க்கை எச்சரித்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப்
01 Jul 2025வாஷிங்டன் : அரசின் மானியங்கள் இல்லாவிட்டால் டெஸ்லா சி.இ.ஓ., எலான் மஸ்க், அநேகமாக தென்னாப்பிரிக்கா திரும்பி விடுவார் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
-
மாற்றுத்திறனாளிகளுக்கான நியமன கவுன்சிலர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் : தமிழக அரசு அறிவிப்பு
01 Jul 2025சென்னை : தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன கவுன்சிலர் பதவிக்கு வரும் 17-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவி
-
இளைஞர் மரண வழக்கில் கைதான 5 காவலர்கள் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு
01 Jul 2025சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கு தொடர்பாக கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.
-
இந்தியா-அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம்: வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ தகவல்
01 Jul 2025வாஷங்டன், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரதமர் நரேந்திர மோடியுடன் நல்ல உறவைக் கொண்டுள்ளார் என்றும் இந்தியா - அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் குறித்த அறி
-
இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்: தமிழக மீனவர்கள் 7 பேர் கைது
01 Jul 2025இராமேசுவரம் : தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
படித்த வேலையில்லாத இளைஞர்களுக்காக வெற்றி நிச்சயம் திட்டத்தை முதல்வர் துவக்கி வைத்தார் : ரூ.12 ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்க ஏற்பாடு
01 Jul 2025சென்னை : சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற "நான் முதல்வன்" திட்டத்தின் மூன்றாண்டு வெற்றி விழாவில் உலகத்தரம் வாய்ந்த முன்னணி பயிற்சி நிறுவனங்கள் மற்
-
பிறந்தநாளை முன்னிட்டு வெங்கையா நாயுடு, அகிலேஷுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
01 Jul 2025சென்னை : முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் இருவருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து த
-
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.58 குறைப்பு
01 Jul 2025புதுடில்லி : வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.58 குறைக்கப்பட்டுள்ளது.
-
ராமநாதபுரம் வரை தேசிய நெடுஞ்சாலையை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
01 Jul 2025புதுடில்லி : மதுரையில் இருந்து பரமக்குடி வரையிலுள்ள தேசிய நெடுஞ்சாலை 87-ஐ ராமநாதபுரம் வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
-
வீடு, வீடாக சென்று பிரசாரம் ஏன்? அமைச்சர் துரைமுருகன் விளக்கம்
01 Jul 2025சென்னை, டிரெண்ட் மாறியதால் ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரசாரம் மூலம் மக்களை வீடு, வீடாக சென்று சந்திக்க உள்ளோம் என்று அமைச்சர் துரைமுருகன் கூறி உள்ளார்.
-
இஸ்ரேல் பிரதமர் அமெரிக்க பயணம்
01 Jul 2025டெல்அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரும் ஜூலை 7 ஆம் தேதியன்று அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நடுவானில் கட்டுப்பாட்டை இழந்த ஏர் இந்தியா விமானம்
01 Jul 2025புதுடில்லி : அகமதாபாத் விமான விபத்தில் 270 பேர் உயிரிழந்த அடுத்த ஓரிரு நாட்களில் டில்லியில் இருந்து வியன்னா சென்ற ஏர் இந்தியா விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டு இருந
-
காவலாளி அஜித் குமார் மரணம்: நீதி விசாரணைக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
01 Jul 2025மதுரை : திருப்புவனம் காவலாளி அஜித் குமார் மரண வழக்கில், மதுரை மாவட்ட நீதிபதி ஜான் கந்தர்லால் சுரேஷ் தலைமையில், நீதி விசாரணைக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்
-
எல்லை நிர்ணய விவகாரங்களில் இந்தியாவுடன் பேச தயார்: சீனா
01 Jul 2025பெய்ஜிங் : இந்தியாவுடன் எல்லை பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.
-
2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்: இங்கி.க்கு பதிலடி கொடுக்குமா இந்தியா?
01 Jul 2025பர்மிங்காம் : 2-வது டெஸ்ட் இன்று தொடங்கவுள்ள நிலைியல் வெற்றியே பெறாத மைதானத்தில் இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்திய அணி? என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசி
-
தொலைபேசி அழைப்பு கசிவு: தாய்லாந்து பிரதமர் ஷினவத்ராவை இடைநீக்கம் செய்தது நீதிமன்றம்
01 Jul 2025பேங்காக், கம்போடிய செனட் தலைவர் ஹன் சென் உடனான தொலைபேசி உரையாடல் கசிந்த விவகாரம் தொடர்பாக தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை அந்நாட்டு நீதிமன்றம் இடைநீக்கம் செய
-
காசாவில் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதலில் 74 பொதுமக்கள் பலி
01 Jul 2025காசாமுனை : காசாவில் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் படை நடத்திய தாக்குதலில் 74 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர்.
-
10-வது ஆண்டில் டிஜிட்டல் இந்தியா; அதிகாரமளித்தலின் புதிய சகாப்தம்: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
01 Jul 2025புதுடில்லி : டிஜிட்டல் இந்தியா திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் ஆனதை நினைவு கூறும் வகையில், அதிகாரமளித்தலின் புதிய சகாப்தத்திற்கு வழிவகுத்த ஒரு பயணத்திற்கு நாம் சாட்சியாக நி
-
இ.பி.எஸ். வீட்டிற்கு செல்வீர்களா? - முதல்வர் ஸ்டாலின் அளித்த பதில்
01 Jul 2025சென்னை : இ.பி.எஸ். வீட்டிற்குச் செல்வீர்களா? என்ற கேள்விக்கு முதல்வர் ஸ்டாலினிடம் அளித்த பதிலளித்துள்ளார்.
-
தகவல் கிடைத்தவுடன் திருப்புவனம் கோவில் காவலர் உயிரிழந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்து விட்டோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
01 Jul 2025சென்னை : திருப்புவனம் கோவில் காவலர் உயிரிழந்த விவகாரத்தில் தகவல் கிடைத்தவுடன் நடவடிக்கை எடுத்துவிட்டோம். கைது நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.
-
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவை: இ.பி.எஸ்.
01 Jul 2025சென்னை, “திருப்புவனம் காவல் மரணத்தில் உயிரிழந்த அஜித்குமார் வழக்கை சி.பி.ஐ.-க்கு மாற்ற வேண்டும் என அ.தி.மு.க.
-
பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவது தவிர வேறு எந்த விஷயத்திலும் பாக்.குடன் பேச்சு இல்லை : மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டம்
01 Jul 2025நியூயார்க் : பயங்கரவாத அமைப்புகளை இந்தியா இனி விட்டு வைக்காது என்றும் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவது தவிர வேறு எந்த விஷயத்திலும் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை ந
-
வரி மசோதா நிறைவேறினால் புதிய அரசியல் கட்சியை தொடங்குவேன்: மஸ்க்
01 Jul 2025நியூயார்க் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொண்டு வந்துள்ள வரி மற்றும் செலவு மசோதாவுக்கு உலக பணக்காரரான எலான் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
-
த.வெ.க. கொடி பயன்படுத்த தடை விதிக்க கோரி வழக்கு: ஜூலை 3-ம் தேதி தீர்ப்பு
01 Jul 2025சென்னை : த.வெ.க.