எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மே.22 - கிரிக்கெட் சூதாட்ட கும்பல் தலைவன் பிரசாந்திடம் சென்னையில் வைத்து சி.பி.சி.ஐ.டி.போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையிலும், கிரிக்கெட் சூதாட்டம் மூலம் 20-க்கும் மேற்பட்ட தரகர்கள் கோடிகளை குவித்துள்ளனர். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் ஹரிஸ் பஜாஜ், நர்பத், வேதாச்சலம், பப்பு கவுதம், தீபஜ் பஜாஜ், சுனில் பஜன்லால் ஆகிய 6 தரகர்கள் பிடிப்பட்டனர்.
இவர்களிடமிருந்து ரூ.15 லட்சம் ரொக்கப்பணம், லேப்டாப், கம்ப்யூட்டர்கள், வயர்லெஸ் போன்கள், செல்போன்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சூதாட்ட கும்பலுக்கு அயனாவரத்தை சேர்ந்த பிரசாந்த் தலைவனாக செயல்பட்டது தெரியவந்தது.
போலீசார் தேடியதையடுத்து தலைமறைவாக இருந்த அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு தப்பிச் சென்று விட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் பிரசாந்த் நேற்று முன்தினம் மாலையில் கிண்டியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் திடீரென சரண் அடைந்தார்.
இதைத் தொடர்ந்து பத்திரிகை மற்றும் டி.வி. கேமரா மேன்கள் பிரசாந்தை படம் பிடிப்பதற்காக அங்கு படையெடுத்தனர். ஆனால் சி.பி.சி.ஐ.டி. போலீ சார் இதற்கு அனுமதிக்கவில்லை. இதன்பிறகு பிரசாந்திடம் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டது.
எத்தனை ஆண்டுகளாக சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகிறீர்கள்? இதில் எத்தனை கோடிகளை சம்பாதித்துள்ளீர்கள்? என்பது போன்ற கேள்விகளை கேட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கு பதில் அளித்து பிரசாந்த் கொடுத்துள்ள வாக்கு மூலம் வருமாறு:-
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நான் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகிறேன். இதனை ஒரு தொழில் போலவே நான் செய்து வருகிறேன். பல்வேறு முக்கிய பிரமுகர்களுடன் எனக்கு தொடர்பு உள்ளது. கிரிக்கெட் சூதாட்டம் மூலம் தினந்தோறும் லட்சக் கணக்கில் சம்பாதித்து வந்தேன். குறைந்தது ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் லாபம் கிடைக்கும்.
இப்படி கோடிக்கணக்கான ரூபாயை சூதாட்டம் மூலமாக நான் சுருட்டியுள்ளேன். என்னைப் போல பலர் சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் மிகுந்த ஈடுபாட்டுடன் இதில் பங்கேற்றுள்ளனர்.
இதுவே சூதாட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு உதவியது. இவ்வாறு பிரசாந்த் கூறியிருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பிரசாந்த் தென்ஆப்பிரிக்காவில் பதுங்கி இருந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் அவர் கடந்த சில நாட்களாக புனேயில் பதுங்கி இருந்தது தெரியவந்துள்ளது.
அவரை பிடிக்க உறவினர்கள் மற்றும் நண்பர்களையே சி.பி.சி.ஐ.டி. போலீசார் கருவியாக பயன்படுத்தினர். பிரசாந்தின் தம்பி ஒருவரை பிடித்து போலீசார் தீவிரமாக சோதனை நடத்தினர். இதுபற்றி தெரியவந்ததுமே, பிரசாந்த் தலைமறைவு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு வெளியில் வந்துள்ளார்.
தனது தம்பி மேல் வைத்திருந்த பாசமே சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் அவரை சரண் அடைய வைத்துள்ளது. அயனாவரத்தில் உள்ள பிரசாந்தின் பங்களா வீட்டில் சி.பி.சி.ஐ.டி, டி.எஸ்.பிக்கள் ராஜா சீனிவாசன், ஜெயச்சந்திரன், அரவிந்தன் ஆகியோர் நேற்று முன்தினம் மாலையில் அதிரடி சோதனை நடத்தி பாஸ்போர்ட் மற்றும் லேப்-டாப்புகளை கைப்பற்றியுள்ளனர்.
இதற்கிடையே சிறையில் அடைக்கப்பட்டுள்ள 6 தரகர்களில் ஹரிஸ் பஜாஜ், பப்பு, வேதாச்சலம், நர்பத் ஆகிய 4 பேரை 10 நாட்கள் காவலில் எடுக்க போலீஸ் சைதாப்பேட்டை கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை இன்று (22-ந் தேதி) நடக்கிறது. அப்போது 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
கரூர் வழக்கு தொடர்பாக த.வெ.க. நிர்வாகிகளிடம் 3 -வது நாளாக நீடித்த சி.பி.ஐ. விசாரணை
31 Dec 2025புதுடெல்லி, கரூர் வழக்கு தொடர்பாக த.வெ.க. நிர்வாகிகளிடம் நேற்று 3 -வது நாளாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
-
பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு அரசு ரூ.248 கோடி நிதி ஒதுக்கீடு தமிழ்நாடு அரசாணை வெளியீடு
31 Dec 2025சென்னை, பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு கொள்முதல் செய்வதற்கு ரூ.248 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு
-
4 மாவட்டங்களில் ரூ.48 கோடியில் விளையாட்டு உட்கட்டமைப்பு பணிகள் துணை முதல்வர் உதயநிதி அடிக்கல்
31 Dec 2025சென்னை, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரூ.48.76 கோடியில் விளையாட்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 31-12-2025.
31 Dec 2025 -
ஒரே நாளில் இரண்டு முறை குறைந்தது தங்கத்தின் விலை: சவரன் ரூ. 99,840-க்கு விற்பனை
31 Dec 2025சென்னை, ஒரே நாளில் நேற்று தங்கம் சவரனுக்கு ரூ. 960 ரூபாய் குறைந்தது, ஒரு சவரன் 99 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையானது.
-
தமிழ்நாடு மக்களுக்கு நிம்மதியை வழங்கும் ஆண்டாக 2026 புத்தாண்டு அமையட்டும் : எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
31 Dec 2025சென்னை, புத்தாண்டு தமிழக மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை வழங்கும் ஆண்டாக அமையட்டும் என்றும் நிறைவான சந்தோஷத்தையும், தித்திக்கும் நிகழ்வுகளையும் வழங்கும் ஆண்டாக அமையட்ட
-
உலகிலேயே முதல் நாடாக கிரிபாட்டி தீவில் பிறந்தது புத்தாண்டு
31 Dec 2025கிரிபாட்டி, உலகிலேயே முதல் நாடாக 2026-ஐ கிரிபாட்டி தீவு வரவேற்று கொண்டாடியது.
-
நியூசிலாந்தில் புத்தாண்டு கொண்டாட்டம்
31 Dec 2025வெலிங்டன், 2026 புத்தாண்டை வாணவேடிக்கைகளுடன் நியூசிலாந்து வரவேற்றது.
-
சட்டம் ஒழுங்கைக் காக்க முடியவில்லை என்றால் எதற்கு ஆட்சியில் இருக்கிறீர்கள்..? தமிழக அரசுக்கு இ.பி.எஸ். கேள்வி
31 Dec 2025சென்னை, போதைப் பொருளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், சட்டம் ஒழுங்கைக் காக்க முடியவில்லை என்றால், எதற்கு நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள்?
-
சாலை வரி விலக்கு நீட்டிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் நன்றி
31 Dec 2025சென்னை, சாலை வரி விலக்கு நீட்டிப்பு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளனர்.
-
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள் ஆலோசனை
31 Dec 2025சென்னை, அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.
-
ஆபரேஷன் சிந்தூரின்போது சீனா மத்தியஸ்தம் செய்ததா? இந்தியா திட்டவட்டமாக மறுப்பு
31 Dec 2025புதுடெல்லி, இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற சண்டையின் போது மத்தியஸ்தம் செய்ததாக டிரம்ப் கூறி வரும் நிலையில் தற்போது சீனாவும் இதே கருத்தை கூறியுள்ளதை இந்தியா திட்டவட
-
தமிழக சட்டசபை தேர்தல்: விருப்ப மனுக்கள் வழங்கும் கால அவகாசத்தை நீட்டித்த காங்கிரஸ்
31 Dec 2025சென்னை, தமிழக சட்டசபை தேர்தலில் விருப்ப மனுக்கள் வழங்க கால அவகாசத்தை ஜனவரி மாதம் 15-ம் தேதி வரை நீட்டித்து காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் மீண்டும் இ.பி.எஸ். தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமையும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை
31 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் மீண்டும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆசியுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமையும் என்று அ.தி.மு.க.
-
த.வெ.க.வுடன் காங்கிரஸ் கூட்டணியா? காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் பதில்
31 Dec 2025காரைக்குடி, காரைக்குடியில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பா.சிதம்பரம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- பிப்ரவரி மாதமே தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு
-
தமிழகத்தில் 2027 டிசம்பர் 31ஆம் தேதி வரை மின்சார வாகனங்களுக்கு மேலும் 2 ஆண்டுகள் வரி விலக்கு நீட்டிப்பு: தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு
31 Dec 2025சென்னை, தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கான 100 சதவீதம் சாலை வரி விலக்கு 2027 டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது
-
இறுதிச்சடங்கில் இந்தியா சார்பில் ஜெய்சங்கர் பங்கேற்பு: பிரதமர் மோடியின் இரங்கல் கடிதம் கலீதா ஜியா மகனிடம் ஒப்படைப்பு
31 Dec 2025டாக்கா, மறைந்த வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று டாக்கா நகரத்துக்குச் சென்ற நிலையில் பிரதமர்
-
அதிபர் ட்ரம்ப் அரசுக்கு பதிலடி: அமெரிக்கர்கள் மீது பயணத்தடை விதித்தது 2 ஆப்பிரிக்க நாடுகள்...!
31 Dec 2025மாலி, அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவுக்குப் பதிலடியாக மாலி மற்றும் புர்கினா ஃபஸோ ஆகிய 2 நாடுகளின் அரசுகள் அமெரிக்கர்கள் மீது பயணத் தடை விதித்துள்ளன.
-
ஏற்றமிகு ஆண்டாக 2026 அமையட்டும்: முதல்வர் ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து: நாம் மாபெரும் வெற்றியை நோக்கி முன்செல்கிறோம்
31 Dec 2025சென்னை, 2025 ஆண்டில் மாநில உரிமைகளுக்கான நமது போராட்டங்களுக்கு குறைவே இல்லை என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைதியும், நல்லிணக்கமும், மகிழ்ச்சியும், புதிய வ
-
பிறந்தது 2026 புத்தாண்டு: சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்
31 Dec 2025புதுடெல்லி, 2026ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் வகையில் கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது.
-
சட்டப்பேரவை தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்: மாவட்ட செயலாளர்களுக்கு இ.பி.எஸ். அறிவுறுத்தல்
31 Dec 2025சென்னை, சட்டப்பேரவை தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் தொகுதி வாரியாக வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்களின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அ.தி.மு.க.
-
கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமா...? த.வெ.க. நிர்வாகி நிர்மல் குமார் விளக்கம்
31 Dec 2025புதுடெல்லி, கரூர் வழக்கு தொடர்பாக விஜய்யிடம் விரைவில் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளதாக சி.டி.ஆர். நிர்மல் குமார் கூறியுள்ளார்.
-
2.22 கோடி ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு: தமிழ்நாடு முழுவதும் டோக்கன்கள் வழங்கும் பணி விரைவில் துவக்கம்
31 Dec 2025சென்னை, தமிழ்நாடு முழுவதும் உள்ள 2.22 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன்கள் வழங்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளது.
-
கல்வி நிதி விடுவிப்பதை தவிர மற்ற எல்லாவற்றிலும் ஆர்வம்: மத்திய அமைச்சர் மீது கனிமொழி விமர்சனம்
31 Dec 2025சென்னை, தமிழ்நாட்டுப் பிள்ளைகளுக்கு சேரவேண்டிய ரூ. 2,291 கோடி கல்வி நிதியை விடுவிப்பதைத் தவிர, தமிழ்நாட்டில் நடக்கும் மற்ற எல்லாவற்றிலும் மத்திய பா.ஜ.க.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை ஜன. 6-ம் தேதி கூடுகிறது
31 Dec 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 6-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



