எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொல்கத்தா, மே.31 - பிரபல திரைப்பட தயாரிப்பாளரும் மேற்குவங்கத்தின் புகழ் பெற்ற இயக்குனருமான ரிது பர்னோ கோஷ் நேற்றுக்காலையில் மாரடைப்பால் தனது கொல்கத்தா இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 49.
இந்த 49 வயதிலும் இவர் பல விருதுகளை அள்ளிக்குவித்தவர். கிட்டத்தட்ட 12 தேசிய, சர்வதேச விருதுகளை அவர் பெற்றுள்ளார். உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் நேற்றுக்காலை 7,30 மணிக்கு மாரடைப்பால் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தார் தெரிவித்தனர். 1994-ல் குழந்தைகள் திரைப்படத்தை இயக்கி இவர் புகழ் பெற்றார். இவரது திரைப்படமான யுனிசி ஏப்ரல் 1995-ல் தேசிய விருதை தட்டிச்சென்றது. அடுத்தடுத்து பல்வேறு விருதுகளை இவர் பெற்றார். இவரது மறைவு செய்தி மேற்குவங்க திரையுலகை அதிர்ச்சிடையவைத்துள்ளது. இந்த செய்தியை எங்களால் நம்பவே முடியவில்லை. ஒரு நல்ல இயக்குனரை இளம் வயதில் இழந்துவிட்டோம் என்று திரையுலக பிரமுகர்கள் தெரிவித்தனர். பல்வேறு நடிகர், நடிகைகளும் அவரது வீட்டுக்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர். மேற்குவங்க தொழில்துறை அமைச்சர் பர்தா சாட்டர்ஜியும் கோஷ் இல்லத்திற்கு சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
மரணமடைந்த வங்காள இயக்குநர் ரிதுபர்னோ கோஷ் தன் 49 வயதில் தன் படங்களுக்காக 19 தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். இந்தியாவில் எந்த திரைப்பட இயக்குநரும் செய்யாத சாதனை இது. 20 ஆண்டுகள் மட்டுமே திரைத்துறையில் இயங்கிய ரிதுபர்னோ கோஷ், 19 படங்களை இயக்கியுள்ளார். இவற்றில் 2 இந்திப் படங்கள். 4 படங்களில் நடித்துள்ளார்.
16 படங்களுக்கு தேசிய விருது இவரது இயக்கத்தில் வெளியான 19 படங்களில் 16 படங்களுக்கு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. கிடைத்த தேசிய விருதுகளின் எண்ணிக்கையும் 19-தான். இந்தியில் எப்பேர்ப்பட்ட நடிகராக இருந்தாலும், இவரது வங்காளப் படத்தில் நடித்துவிட ஆர்வம் கொண்டிருந்தனர்.
ஐஸ்வர்யா ராய் அப்படி விரும்பிய நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராய். ரிதுபர்னோ கோஷ் இயக்கத்தில் சோக்கர் பாலி எனும் வங்காளப் படத்தில் அவர் நடித்தார். இந்தப் படம் பின்னர் இந்தி, தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. சிறந்த வங்க மொழி படத்துக்கான தேசிய விருது இந்தப் படத்துக்கு கிடைத்தது.
உனிஷே ஏப்ரல் ரிதுபர்னோ கோஷின் முதல் படம் ஹிரேர் அங்டி-க்கு எந்த விருதும் கிடைக்கவில்லை. ஆனால் இரண்டாவது படம் உனிஷே ஏப்ரல் சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை வென்றது. தேபஸ்ரீராய்க்கு (மனைவி ரெடி படத்தில் பாண்டியராஜன் ஜோடியாக நடித்தவர் இவர்தான்) கிடைத்த முதல் விருது இது.
தாஹன் ரிதுபர்னோ இயக்கிய மூன்றாவது படமான தாஹன் 1997-ல் வெளியானது. இந்தப் படத்துக்கு சிறந்த திரைக்கதை ஆசிரியர் விருது ரிதுபர்னோ கோஷூக்கும், சிறந்த நாயகிகளுக்கான விருது இந்திராணி ஹால்டர், ரிதுபர்னா சென்குப்தாவுக்கும் கிடைத்தது.
பரிவாலி இந்தப் படத்துக்கும் இரு தேசிய விருதுகள் கிடைத்தன. சிறந்த நடிகைக்கான விருது கிரண் கெர்-க்கும், சிறந்த துணை நடிகைக்கான விருது சுதிபா சக்ரபர்த்திக்கும் கிடைத்தது.
சிறந்த இயக்குநர் முதல் விருது ரிதுபர்னோ கோஷ் அடுத்து இயக்கிய அசுக், சிறந்த படத்துக்கான விருதினையும், அதற்கடுத்து வெளியிட்ட உத்ஸப் படத்துக்காக சிறந்த இயக்குநர் விருதினையும் வென்றார். சிறந்த இயக்குநராக அவர் பெற்ற முதல் விருது இது. 2002-ல் அவர் வெளியிட்ட டிட்லி மட்டும் எந்த விருதையும் வெல்லவில்லை.
ரெயின் கோட் ரிதுபர்னோ கோஷ் இயக்கிய முதல் இந்திப் படம் இந்த ரெயின்கோட். இந்தி மொழியில் சிறந்த படத்துக்கான தேசிய விருதினை இந்தப் படம் வென்றது. அடுத்த படமான அந்தர் மஹால் விருதுகள் எதையும் பெறவில்லை.
முதல் ஆங்கிலப் படம் ரிதுபர்னோ இயக்கிய முதல் ஆங்கிலப் படம் தி லாஸ்ட் லியர். இந்தப் படம் ஆங்கில மொழியில் சிறந்த படத்துக்கான தேசிய விருதை வென்றது. 2008-ல் ரிதுபர்னோ கோஷ் இயக்கிய இரண்டு படங்கள் கேலா மற்றும் ஷோப் சரித்ரோ கல்போனிக். இதில் ஷோப் சரித்ரோ கல்போனிக் சிறந்த மாநில மொழிப் படத்துக்கான தேசிய விருது வென்றது.
அபோஹோமன் 2010-ல் இந்தப் படம் வெளியானது. சிறந்த இயக்குநர் (ரிதுபர்னோ கோஷ்), சிறந்த நடிகை (அனன்யா சாட்டர்ஜி), சிறந்த படம் ஆகிய மூன்று தேசிய விருதுகளை அள்ளியது இந்தப் படம். அதே ஆண்டில் நெளக்காடுபி என்ப படத்தை வெளியிட்டார். ஆனால் எந்த விருதும் கிடைக்கவில்லை.
சித்ராங்கதா 2011-ல் எந்தப் படத்தையும் ரிதுபர்னோ கோஷ் இயக்கவில்லை. ஆனால் அடுத்த ஆண்டு இரு படங்களை இயக்கினார். இவற்றில் சன்கிளாஸ் என்ற இந்திப் படமும் ஒன்று. இதற்கு விருது எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் சித்ரங்கதா என்ற வங்காள மொழிப் படத்துக்காக கடந்த ஆண்டின் சிறந்த மாநில மொழிப் படத்துக்கான தேசிய விருதினைப் பெற்றார் ரிதுபர்னோ கோஷ்.
சர்வதேச அங்கீகாரம் ரிதுபர்னோ கோஷ் படங்கள் இடம்பெறாத சர்வதேச திரைப்பட விழாக்கள் மிகச் சிலதான். அந்த அளவு சர்வதேச அளவில் அவருக்கு அங்கீகாரம் கிடைத்திருந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 2 weeks ago |
-
அணு ஆயுதங்களை பயன்படுத்த நாங்கள் திட்டமிடவில்லை : பாகிஸ்தான் அமைச்சர் தகவல்
13 May 2025இஸ்லாமாபாத் : காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இல்லை.
-
முதல்வர் மு.க.ஸ்டாலினின் பல்வேறு திட்டங்களால் மகளிர் நலன்களை மேம்படுத்துவதில் இந்தியாவிற்கே தமிழ்நாடு வழிகாட்டி : தமிழக அரசு பெருமிதம்
13 May 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலினின் பல்வேறு திட்டங்களால் மகளிர் நலன்களை மேம்படுத்துவதில் இந்தியாவிற்கே தமிழ்நாடு வழிகாட்டியாக உள்ளது என்று தமிழக அரசு பெருமிதம் தெரிவித்து
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : கோவை மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
13 May 2025கோவை : பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
-
பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு பிரதமர் மோடி திடீர் விசிட் : வீரர்களுடன் கலந்துரையாடி பாராட்டு
13 May 2025புதுடெல்லி : பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்துக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, வீரர்களுடன் கலந்துரையாடி அவர்களின் துணிச்சலை பாராட்டினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-05-2025
13 May 2025 -
லிபியா தலைநகரில் கடும் மோதல்: 6 பேர் உயிரிழப்பு
13 May 2025வட ஆப்பிரிக்க, வட ஆப்பிரிக்க நாடான லிபியாவின் தலைநகர் திரிப்பொலியில் இரண்டு ஆயுதப் படைகளுக்கு இடையிலான மோதலில் 6 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
-
ஜம்மு-காஷ்மீரில் பள்ளிகள் மீண்டும் திறப்பு
13 May 2025பாகிஸ்தான் : இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு, எல்லையில் அமைதி நிலவுகிறது.
-
சவுதி பட்டத்து இளவரசருடன் அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திப்பு
13 May 2025ரியாத் : அமெரிக்க ஜனாதிபதியாக 2வது முறையாக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார்.
-
பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு: முதல்வர் மு.க. ஸ்டாலின் கருத்துக்கு இ.பி.எஸ். பதில்
13 May 2025சென்னை : பொள்ளாச்சி தீர்ப்பு குறித்த முதல்வர் மு.க. ஸ்டாலினின் கருத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் கருத்து கூறியுள்ளார்.
-
இந்தியாவுடனான மோதலில் 11 பாக்., வீரர்கள் உயிரிழப்பு
13 May 2025இஸ்லாமாபாத் : மே 7 முதல் 4 நாட்களுக்கு நடைபெற்ற இந்தியாவுடனான மோதலில் தங்கள் ராணுவத்தைச் சேர்ந்த 11 வீரர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
-
ஜம்மு -காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
13 May 2025ஜம்மு : ஜம்மு -காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் நேற்று (செவ்வாய்கிழமை) காலை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
-
மக்களின் சட்டப்பூர்வ உரிமைகளை தி.மு.க. அரசு நிலைநாட்டி வருகிறது : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவு
13 May 2025சென்னை : மக்களின் சட்டப்பூர்வ உரிமைகளை தி.மு.க. அரசு நிலைநாட்டி வருகிறது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
ரூ.586.94 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 13 பகுதிகளில் 5,180 அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறப்பு : அமைச்சர் தா. மோ. அன்பரசன் தகவல்
13 May 2025சென்னை : 13 திட்டப்பகுதிகளில் 5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறக்கப்படவுள்ளதாக குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ.
-
9 ஆயிரம் இடங்களில் முகாம்கள் நடைபெறுகிறது: மகளிர் உரிமைத் திட்டத்தில் வரும் ஜூன் 4-ம் தேதி விண்ணப்பிக்கலாம்
13 May 2025சென்னை : மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுப்பட்ட பெண்கள் வரும் ஜூன் 4-ம் தேதி விண்ணப்பிக்கலாம்.
-
பாகிஸ்தானுக்கு ஆயுதங்களுடன் விமானம் அனுப்பப்படவில்லை: சீனா திட்டவட்டம்
13 May 2025பீஜிங் : பாகிஸ்தானுக்கு ஆயுதங்களுடன் விமானம் அனுப்பப்படவில்லை என்று சீனா திட்டவட்டமாக தெரிவித்தது.
-
சி.பி.எஸ்.இ. +2 தேர்வில் 83.39 சதவீதம் பேர் தேர்ச்சி
13 May 2025புதுடெல்லி : சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 83.39 சதவீத மாணவர்க்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
13 May 2025சென்னை : பொல்லாத அதிமுக நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது.
-
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளை காப்பாற்ற நடந்த முயற்சிகளை தி.மு.க .முறியடித்தது : தீர்ப்பை வரவேற்று துணை முதல்வர் உதயநிதி பதிவு
13 May 2025சென்னை : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இன்றைக்கு நீதி கிடைக்க தி.மு.க.வே காரணம் என்று பொள்ளாச்சி வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து வழங்கிய தீர்ப்பை வரவேற்று துணை மு
-
சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்ச்சியில் சென்னை மண்டலம் 4-ம் இடம்
13 May 2025புதுடெல்லி : சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று பிற்பகல் வெளியிடப்பட்ட நிலையில், மொத்தம் 93.66 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.
-
ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாட கொடி யாத்திரை நடத்த பா.ஜ.க. முடிவு
13 May 2025புதுடெல்லி, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றியை பாஜக கொண்டாடும் வகையில் நாடு முழுவதிலும் ‘திரங்கா யாத்ரா நடத்துகிறது.
-
அமெரிக்கப் பொருட்களுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதிக்க இந்தியா முடிவு
13 May 2025புதுடெல்லி : அமெரிக்க தயாரிப்புகளுக்கான இறக்குமதி வரியை அதிகரிக்க இந்தியா முடிவெடுத்துள்ளது.
-
பாகிஸ்தான் ராணுவத்தின் 51 இடங்களை தாக்கினோம்: பலுசிஸ்தான் விடுதலைப்படை தகவல்
13 May 2025குவெட்டா, பாகிஸ்தானின் தென்மேற்கில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக அறிவிக்க கோரி பலுசிஸ்தான் விடுதலைப்படை (பிஎல்ஏ) என்ற பெயரில் கிளர்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாக
-
எங்களுடைய கூட்டணி வலுவாக இருக்கிறது: 2026 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி கூட்டணி தொடரும் : முதல்வர் மு.க. ஸ்டாலின் பதில்
13 May 2025சென்னை : எங்களுடைய கூட்டணி வலுவாக, கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கிறது என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 8 பெண்களுக்கு 85 லட்சம் ரூபாய் இழப்பீடு: சி.பி.ஐ. வழக்குரைஞர்
13 May 2025கோவை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கும், ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10 ல
-
பஹல்காம் பயங்கரவாதிகள் பற்றி தகவல் அளித்தால் ரூ.20 லட்சம் சன்மானம்
13 May 2025புதுடெல்லி, பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 3 பேர் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு, ரூ.20 லட்சம் சன்மானம் வழங்கப்படும்.