எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொல்கத்தா, மே.31 - பிரபல திரைப்பட தயாரிப்பாளரும் மேற்குவங்கத்தின் புகழ் பெற்ற இயக்குனருமான ரிது பர்னோ கோஷ் நேற்றுக்காலையில் மாரடைப்பால் தனது கொல்கத்தா இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 49.
இந்த 49 வயதிலும் இவர் பல விருதுகளை அள்ளிக்குவித்தவர். கிட்டத்தட்ட 12 தேசிய, சர்வதேச விருதுகளை அவர் பெற்றுள்ளார். உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் நேற்றுக்காலை 7,30 மணிக்கு மாரடைப்பால் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தார் தெரிவித்தனர். 1994-ல் குழந்தைகள் திரைப்படத்தை இயக்கி இவர் புகழ் பெற்றார். இவரது திரைப்படமான யுனிசி ஏப்ரல் 1995-ல் தேசிய விருதை தட்டிச்சென்றது. அடுத்தடுத்து பல்வேறு விருதுகளை இவர் பெற்றார். இவரது மறைவு செய்தி மேற்குவங்க திரையுலகை அதிர்ச்சிடையவைத்துள்ளது. இந்த செய்தியை எங்களால் நம்பவே முடியவில்லை. ஒரு நல்ல இயக்குனரை இளம் வயதில் இழந்துவிட்டோம் என்று திரையுலக பிரமுகர்கள் தெரிவித்தனர். பல்வேறு நடிகர், நடிகைகளும் அவரது வீட்டுக்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர். மேற்குவங்க தொழில்துறை அமைச்சர் பர்தா சாட்டர்ஜியும் கோஷ் இல்லத்திற்கு சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
மரணமடைந்த வங்காள இயக்குநர் ரிதுபர்னோ கோஷ் தன் 49 வயதில் தன் படங்களுக்காக 19 தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். இந்தியாவில் எந்த திரைப்பட இயக்குநரும் செய்யாத சாதனை இது. 20 ஆண்டுகள் மட்டுமே திரைத்துறையில் இயங்கிய ரிதுபர்னோ கோஷ், 19 படங்களை இயக்கியுள்ளார். இவற்றில் 2 இந்திப் படங்கள். 4 படங்களில் நடித்துள்ளார்.
16 படங்களுக்கு தேசிய விருது இவரது இயக்கத்தில் வெளியான 19 படங்களில் 16 படங்களுக்கு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. கிடைத்த தேசிய விருதுகளின் எண்ணிக்கையும் 19-தான். இந்தியில் எப்பேர்ப்பட்ட நடிகராக இருந்தாலும், இவரது வங்காளப் படத்தில் நடித்துவிட ஆர்வம் கொண்டிருந்தனர்.
ஐஸ்வர்யா ராய் அப்படி விரும்பிய நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராய். ரிதுபர்னோ கோஷ் இயக்கத்தில் சோக்கர் பாலி எனும் வங்காளப் படத்தில் அவர் நடித்தார். இந்தப் படம் பின்னர் இந்தி, தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. சிறந்த வங்க மொழி படத்துக்கான தேசிய விருது இந்தப் படத்துக்கு கிடைத்தது.
உனிஷே ஏப்ரல் ரிதுபர்னோ கோஷின் முதல் படம் ஹிரேர் அங்டி-க்கு எந்த விருதும் கிடைக்கவில்லை. ஆனால் இரண்டாவது படம் உனிஷே ஏப்ரல் சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை வென்றது. தேபஸ்ரீராய்க்கு (மனைவி ரெடி படத்தில் பாண்டியராஜன் ஜோடியாக நடித்தவர் இவர்தான்) கிடைத்த முதல் விருது இது.
தாஹன் ரிதுபர்னோ இயக்கிய மூன்றாவது படமான தாஹன் 1997-ல் வெளியானது. இந்தப் படத்துக்கு சிறந்த திரைக்கதை ஆசிரியர் விருது ரிதுபர்னோ கோஷூக்கும், சிறந்த நாயகிகளுக்கான விருது இந்திராணி ஹால்டர், ரிதுபர்னா சென்குப்தாவுக்கும் கிடைத்தது.
பரிவாலி இந்தப் படத்துக்கும் இரு தேசிய விருதுகள் கிடைத்தன. சிறந்த நடிகைக்கான விருது கிரண் கெர்-க்கும், சிறந்த துணை நடிகைக்கான விருது சுதிபா சக்ரபர்த்திக்கும் கிடைத்தது.
சிறந்த இயக்குநர் முதல் விருது ரிதுபர்னோ கோஷ் அடுத்து இயக்கிய அசுக், சிறந்த படத்துக்கான விருதினையும், அதற்கடுத்து வெளியிட்ட உத்ஸப் படத்துக்காக சிறந்த இயக்குநர் விருதினையும் வென்றார். சிறந்த இயக்குநராக அவர் பெற்ற முதல் விருது இது. 2002-ல் அவர் வெளியிட்ட டிட்லி மட்டும் எந்த விருதையும் வெல்லவில்லை.
ரெயின் கோட் ரிதுபர்னோ கோஷ் இயக்கிய முதல் இந்திப் படம் இந்த ரெயின்கோட். இந்தி மொழியில் சிறந்த படத்துக்கான தேசிய விருதினை இந்தப் படம் வென்றது. அடுத்த படமான அந்தர் மஹால் விருதுகள் எதையும் பெறவில்லை.
முதல் ஆங்கிலப் படம் ரிதுபர்னோ இயக்கிய முதல் ஆங்கிலப் படம் தி லாஸ்ட் லியர். இந்தப் படம் ஆங்கில மொழியில் சிறந்த படத்துக்கான தேசிய விருதை வென்றது. 2008-ல் ரிதுபர்னோ கோஷ் இயக்கிய இரண்டு படங்கள் கேலா மற்றும் ஷோப் சரித்ரோ கல்போனிக். இதில் ஷோப் சரித்ரோ கல்போனிக் சிறந்த மாநில மொழிப் படத்துக்கான தேசிய விருது வென்றது.
அபோஹோமன் 2010-ல் இந்தப் படம் வெளியானது. சிறந்த இயக்குநர் (ரிதுபர்னோ கோஷ்), சிறந்த நடிகை (அனன்யா சாட்டர்ஜி), சிறந்த படம் ஆகிய மூன்று தேசிய விருதுகளை அள்ளியது இந்தப் படம். அதே ஆண்டில் நெளக்காடுபி என்ப படத்தை வெளியிட்டார். ஆனால் எந்த விருதும் கிடைக்கவில்லை.
சித்ராங்கதா 2011-ல் எந்தப் படத்தையும் ரிதுபர்னோ கோஷ் இயக்கவில்லை. ஆனால் அடுத்த ஆண்டு இரு படங்களை இயக்கினார். இவற்றில் சன்கிளாஸ் என்ற இந்திப் படமும் ஒன்று. இதற்கு விருது எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் சித்ரங்கதா என்ற வங்காள மொழிப் படத்துக்காக கடந்த ஆண்டின் சிறந்த மாநில மொழிப் படத்துக்கான தேசிய விருதினைப் பெற்றார் ரிதுபர்னோ கோஷ்.
சர்வதேச அங்கீகாரம் ரிதுபர்னோ கோஷ் படங்கள் இடம்பெறாத சர்வதேச திரைப்பட விழாக்கள் மிகச் சிலதான். அந்த அளவு சர்வதேச அளவில் அவருக்கு அங்கீகாரம் கிடைத்திருந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 10 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி5 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் திடீர் ராஜினாமா
22 Apr 2024டெல் அவிவ் : இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் அஹ்ரோன் ஹலிவா திடீரெனெ ராஜினாமா செய்துள்ளார்.
-
பார்லி. தேர்தல் வாக்குப்பதிவு சதவீதத்தில் குளறுபடி ஏன்? - சத்யபிரத சாகு விளக்கம்
22 Apr 2024சென்னை : செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதத்தை அளித்த காரணத்தால் தான் வாக்குப்பதிவு சதவீதத்தில் மாறுபாடு ஏற்பட்டது என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு த
-
கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கேட்டவருக்கு ரூ.75,000 அபராதம் : டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தள்ளுபடி
22 Apr 2024புதுடெல்லி : கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.
-
இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு
22 Apr 2024இந்திய திரையுலகின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
-
பிரதமரின் சர்ச்சை பேச்சு: தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்: தமிழக அமைச்சர் பதிவு
22 Apr 2024சென்னை : பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டுள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு தள்ளுபடி
22 Apr 2024சென்னை : விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
கம்யூ. சிந்தனையை செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி : உ.பி.யில் பிரதமர் மோடி பேச்சு
22 Apr 2024அலிகார் : மாவோயிஸ்ட், கம்யூனிஸ்டுகளின் சிந்தனையை இந்தியாவில் செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி செய்வதாக உத்தரப்பிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றஞ
-
பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்ப பிரதமர் புதிய யுக்திகளை வைத்துள்ளார்: ராகுல் காந்தி
22 Apr 2024புதுடெல்லி : மக்களின் உண்மையான பிரச்சினைகளில் இருந்து அவர்களின் கவனத்தை திசை திருப்ப பிரதமர் மோடி பல புதிய யுக்திகளை கொண்டிருப்பதாகவும், ஆனால் அவரின் பொய்களுக்கு முடிவு
-
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது : தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
22 Apr 2024சென்னை, தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்ற பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
தமிழகம், கர்நாடக உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் வெப்ப அலை வீசும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
22 Apr 2024புதுடில்லி, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 22) வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
சென்னை-சேலம் விமான சேவை நேரம் மாற்றம்
22 Apr 2024சென்னை : சென்னை விமானநிலையத்துக்கு மதிய நேரத்தில் சேலத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த தனியார் ஏர்லைன்ஸ் விமான சேவையின் நேரம் மாலை நேரத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது.
-
தமிழக மகளிர் காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமனம்
22 Apr 2024சென்னை : தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவியாக ஹசீனா சையத் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ஜம்மு காஷ்மீரில் 9 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
22 Apr 2024ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் நேற்று 9 இடங்களில் தேசிய புலனாய்வு படை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) சோதனையில் ஈடுபட்டனர்.
-
மக்களவை தேர்தல்: சூரத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
22 Apr 2024சூரத் : சூரத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார்.
-
மே 1-ம் தேதி வரை ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு
22 Apr 2024புதுடெல்லி : சா்வதேச போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபா் சாதிக்கின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
நாடு முழுவதும் வெப்ப அலை: தேர்தல் ஆணையம் ஆலோசனை
22 Apr 2024புதுடெல்லி : நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருப்பதால் வாக்குப்பதிவு, பிரச்சாரம் நடைமுறைகளில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என்பது குறித்து டெல்லியில
-
ஆந்திர சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Apr 2024ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
-
ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு: 24,000 பணியிட உத்தரவுகளை ரத்து செய்து கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவு
22 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்க ஆசிரியர்கள் பணி நியமன ஊழல் தொடர்பான வழக்கை விசாரித்த கொல்கத்தா ஐகோர்ட், மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தால் அமைக்கப்பட்ட 2016-ம் ஆண்டு
-
65 வயதுக்கு மேற்பட்டோரும் மருத்துவ காப்பீடு பெறலாம் : இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு
22 Apr 2024புதுடெல்லி, இனி 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் மருத்துவ காப்பீடு பெறலாம் என இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்:தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீத குளறுபடிக்கு செயலியே காரணம்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
22 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் நடைபெற்ற வாக்குப்பதிவில் ஏற்பட்ட குளறுபடிக்கு செயலியே காரணம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.
-
வல்லவன் வகுத்ததடா விமர்சனம்
22 Apr 2024நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் ஆனா கை விட மாட்டான், கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான் ஆனா கை விட்டுருவான்” என்ற வாக்கியத்தை வைத்துக்கொண்டு இயக்குநர் விநாயக்
-
அசல் ஆவண நகல் ஒப்படைப்பு: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 25-ம் தேதி வரை நீட்டிப்பு
22 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வரும் 25-ம் தேதி வரை 34-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்கும், "நிறம் மாறும் உலகில்"
22 Apr 2024நான்கு விதமான வாழ்க்கை, நான்கு கதைகள் அதை இணைக்கும் ஒரு புள்ளி, என நம் வாழ்வின் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளை பேசும் அழகான படமாக இப்படம் உருவாகியுள்ளார் அறிமுக இயக்குந