எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூன்.1 - சென்னையில் 2 வங்கிகளில் போலியான ஆவனங்களை கொடுத்து கோடிக்கணக்கில் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் மோசடி மன்னன் சுகாஷ் சந்திரசேகரை போலீசார் தேடி வந்தனர். சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இவர், முதல்வரின் பேரன் என்று கூறி தனது மோசடி லீலைகளை அரங்கேற்றியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இதே போல பெங்களுாரிலும் சுகாஷ் ஐ.ஏ.எஸ். அதிகாரி போல நடித்து மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக நூற்றுக்கணக்கான புகார்கள் குவிந்துள்ளன. 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் கர்நாடக மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில்தான் கடந்த 2010-ம் ஆண்டு சுகாஷ், அழகு நிலையம் ஒன்றில் மோசடி செய்த வழக்கில் சென்னையில் சேத்துப்பட்டு போலீசில் சிக்கினார். பின்னர் ஜாமீனில் விடுதலையாகி வங்கிகளில் கைவரிசை காட்டியுள்ளார். இது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கனரா வங்கியின் மண்டல மேலாளர் நல்லசிவம், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில், சுகாஷ் என்பவர் ரூ.19 கோடி கடன் வாங்கி மோசடி செய்து விட்டதாக புகார் கொடுத்திருந்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சுகாஷை தேடி வந்தனர்.விதிமுறைகளை மீறி கடன் கொடுத்ததாக வங்கியின் மேலாளர் ஜெகதீஸ் என்பவர் இந்த வழக்கில் அப்போது கைது செய்யப்பட்டார். இதே போல சேலையூரில் உள்ள ஒரு வங்கியிலும் ரூ.72 லட்சம் கடன் வாங்கி சுகாஷ் மோசடி செய்துள்ளார். இந்த 2 வழக்குகளில்தான் போலீசார் இவரை தேடி வந்தனர். கடந்த பல மாதங்களாக போலீசுக்கு தண்ணி காட்டி வரும் சுகாசை கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற் கொண்டனர்.
அப்போது தான் அவருடன் அவரது காதலியான நடிகை லீனா மரியம்பாலும் சேர்ந்து மோசடி செய்திருப்பது அம்பலமானது. இதையடுத்து 2 பேரையும் பொறி வைத்து பிடிக்க போலீசார் திட்டமிட்டனர். இருவரும் டெல்லியில் அசோகா பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இணை கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் சிவக்குமார் ஆகியோரது மேற்பார்வையில், உதவி கமிஷனர் வசுந்தரா தேவி, இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
கடந்த 28-ந் தேதி டெல்லியில் ஆடம்பர பங்களா ஒன்றில் பதுங்கி இருந்த நடிகை லீனாவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சுற்றி விளைத்து கைது செய்தனர். பின்னர் அங்கு அதிரடி சோதனை நடத்தி 9 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர். இதில் 2 கார்களில் போலியான நம்பர் பிளேட்டுகள் பொறுத்தப்பட்டிருந்தன.
லீனாவுடன் தங்கியிருந்த அவரது காதலன் சுகாஷ் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். கைதான லீனாவை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் மூலமாக டெல்லியில் இருந்து போலீசார் நேற்று காலை சென்னைக்கு அழைத்து வந்தனர். காலை 7.15 மணி அளவில் தமிழ் நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்ட்ரல் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. சுடிதார் அணிந்திருந்த அவர், ரெயிலில் இருந்து இறங்கும் போது போலீசாருடன் சாதாரண பயணி போலவே இறங்கினார்.
பின்னர் போலீசார் பத்திரமாக அவரை வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர். போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
லீனாவுக்கு ஆங்கிலம், மலையாளம் மட்டுமே தெரியும். அவர் சுகாசுடன் எப்படி நட்பு ஏற்பட்டது என்பது பற்றி கூறியதாவது:-
கேரளாவில் பிறந்த எனக்கு சினிமா நடிகையாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. 5 மலையாளப் படங்களில் நடித்தேன். சுகாஷ் கேரளாவில் தங்கி இருந்தபோது நான் நடித்த மலையாளப் படங்களை பார்த்துவிட்டு என்னை போனில் தொடர்பு கொண்டார். தான் ஒரு சினிமா டைரக்டர் என்று சொல்லி அடிக்கடி என்னிடம் பேசினார். தமிழ், இந்தியில் சினிமா முன்னணி பிரமுகர்களை தனக்கு தெரியும் என்று கூறினார். அவர்களிடம் எனக்கு சான்ஸ் வாங்கித் தருவதாக கூறினார். அதன்படி சென்னையில் முன்னணி டான்ஸ் மாஸ்டர் ஒருவரை சந்தித்தோம்.
அதன்பிறகு மும்பையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த பிரபல டைரக்டரிடம் என்னை அழைத்துச் சென்று அறிமுகப் படுத்தினார். சுகாஷ் மீது எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது. அவருடன் நெருங்கி பழகி காதலித்தேன். அவரைப்பற்றி விசாரித்த போது தமிழக அரசியல் தலைவர் ஒருவரின் மகள் வழி பேரன் என்றும், அதே குடும்பத்தில் திருமணம் செய்யப்போகிறேன் என்றும் சொன்னார். இதனால் சுகாசுடன் நெருங்கிப்பழகி அவரை திருமணம் செய்ய திட்டமிட்டேன்.
ஆனால் திருமணம் செய்ய வில்லை. ஒன்றாக வாழ்ந்து வந்தோம். 6 மாதத்துக்கு முன் டெல்லியில் பண்ணை வீட்டை வாடகைக்கு பிடித்து தங்கி குடும்பம் நடத்தினோம். அப்போது போலீசார் வந்து என்னை கைது செய்துவிட்டனர். அவர் சாதுர்யமாக தப்பிச்சென்று விட்டார்.இவ்வாறு லீனா கூறியுள்ளார்.
தொடர்ந்து அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. ஆங்கிலத்தில் பேசுவதால் மெதுவாக ஒவ்வொன்றாக சொல்கிறார். இதனால் வாக்கு மூலம் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது.
டெல்லியில் கைது செய்யப்பட்டபோது அவர் கர்ப்பமாக இருப்பதாக நீதிபதியிடம் கூறியுள்ளார். அதனால் அவரை இங்குள்ள மருத்துவமனையில் பரிசோதிக்க உள்ளனர்.
நடிகை லீனா மரியா பால் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்
மோசடி செய்து தனியார் நிறுவன உரிமையாளர் மற்றும் வங்கி அதிகாரிகளை ஏமாற்றிய குற்றச்சாட்டின் கீழ் கைதான நடிகை லீனா மரிய பால் தாம்பரம் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.
இது குறித்து போலீஸார் தெரிவித்ததாவது...
சென்னை சேலையுரைச் சேர்ந்த ஸ்கைலார்க் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் அவுட்பிட்டர்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்த சக்ரவர்த்தி என்பவர் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் கொடுத்த புகாரில் தான் 20.04.2012 அன்று 08431316706 என்ற நம்பரில் இருந்து கைபேசி அழைப்பில் பேசிய பெண் குரல், தனது பெயர் லீனா மரியா என்றும், தான் கர்நாடகா மாநிலத்தின் புராஜெக்ட் டெவலப்மென்ட் நிறுவனராக உள்ள ஜெயக்குமார் என்பவரின் தனி அலுவலர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, கைபேசியை ஜெயகுமாரிடம் கொடுத்துள்ளார். அதில் பேசிய நபர் மனுதாரர் நடத்திவந்த ாஸ்கைலார்க் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் அவுட்பிட்டர்ஸ்ா நிறுவனம் கர்நாடக மாநிலத்தின் மருத்துவ மற்றும் போக்குவரத்து ஊழியர்களுக்கு சீருடை தைப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதன் வகையில் ஜெயக்குமார் எனக் கருதப்படுகிற நபர் பதிவுக் கட்டணம் ரீபண்டபுள் கட்டணமாக ரூ.62,47,016டி- ஐ அவருடைய வங்கிக் கணக்கில் செலுத்த வைத்துள்ளார். இதை உண்மை என நம்பிய புகார்தாரரும் அவ்வாறே பணத்தை செலுத்தியுள்ளார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த புகார்தாரர் சக்கரவர்த்தி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப் பிரிவு கு.எண். 24டி2013 சடி.பி 406,419.420 இ.த.ச. மற்றும் 120(டி) இ.த.ச.வில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும் இதே நபர் ஜெயக்குமார் என தம்மை கனரா வங்கி, அம்பத்தூர் கிளையில் கம்பெனி பெயரில் அக்கவுன்ட் வைத்திருக்கும் பாலசுப்பரமணியன் மற்றும் அவரது மனைவி சித்ரா மேலும் அந்த வங்கியின் முதன்மை மேலாளர் ஜெகதீசா ஆகியோர்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு, அவர்களை ஏமாற்றி வெண்டிங் மெஷின் சம்மந்தமான கர்நாடக அரசின் பல கோடி மதிப்பிலான ஆணை வாங்கித் தருவதாகக் கூறி 19.22 கோடி பெற்று ஏமாற்றியுள்ளார். இது சம்மந்தமாக சென்னை மத்திய குற்றப்பிரிவு கு.எண். 64டி13 சடிபி 170, 406, 409,419,420 473 ரூ 34 இ.த.ச. மற்றும் 66-ன் குற்றப்பிரிவு கீழ் 2008-ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
குற்றவாளி லீனா மரிய பால் சென்னை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார் என்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-12-2025.
24 Dec 2025 -
ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை..! வெள்ளி விலை புதிய உச்சம்
24 Dec 2025சென்னை, சென்னையில் தங்கம் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.240 உயா்ந்து ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 400-க்கு விற்பனையாகி புதிய உச்சம் தொட்டுள்ளது.
-
ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கான குரல் தமிழ்நாட்டில் இருந்து ஒலிக்கும்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவு
24 Dec 2025சென்னை, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை மீட்டெடுக்க தமிழ்நாடு முழுவதும் 389 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் பங்கெடுத்தனர் என
-
தமிழக அரசியல் வரலாற்றின் பொற்காலம்: எம்.ஜி.ஆருக்கு இ.பி.எஸ். புகழஞ்சலி
24 Dec 2025சென்னை, எம்.ஜி.ஆரின் நினைவு நாளில், நம் உயிர்நிகர் தலைவரை வணங்குகிறேன் என்று தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசியல் வரலாற்றின் பொற்கால அத்தியாயம் என்று புகழஞ்சல
-
100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம்: தமிழ்நாட்டில் தி.மு.க.-கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
24 Dec 2025சென்னை, 100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம் தொடர்பாக தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
-
ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு: இரண்டு கட்டங்களாக நடத்த தமிழ்நாடு வனத்துறை திட்டம்
24 Dec 2025சென்னை, ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு - இரண்டு கட்டங்களாக நடத்த தமிழ்நாடு வனத்துறை திட்டமிட்டுள்ளது.
-
எல்.வி.எம்.-3 திட்டம் வெற்றி: விண்வெளி துறையில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருகிறது: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
24 Dec 2025புதுடெல்லி, எல்.வி.எம்.-3 திட்டம் வெற்றியை அடுத்து விண்வெளி துறையில் இந்தியா தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
-
நாகையில் அதிர்ச்சி சம்பவம்: மதுபோதையில் மனைவி கையை வெட்டி குளத்தில் வீசிய கணவர்..!
24 Dec 2025நாகை, நாகையில் மதுபோதையில் மனைவியின் கையை வெட்டி குளத்தில் வீசிய கணவரால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா: அரசியல் பேச்சுக்கு தடை விதித்த மலேசியா போலீஸ்
24 Dec 2025கோலாலம்பூர், ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் ரீதியாக பேசுவதற்கு மலேசியா போலீஸ் தடை விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
த.வெ.க. கூட்டணியில் இணைய ஓ.பன்னீர்செல்வம் அணி முடிவு? 38 தொகுதிகளை கேட்டுப்பெறவும் முடிவு
24 Dec 2025சென்னை, த.வெ.க.
-
தன்மானம் காக்க, தன்னையே தந்தவர்: பெரியாரின் 52-வது நினைவு நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
24 Dec 2025சென்னை, தன்மானம் காக்க, தன்னையே இந்த மண்ணுக்குத் தந்தவர் பெரியார் என்று அவரின் 52-வது நினைவு நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
விவசாயிகளுக்கு பயிர் நிவாரணம்: ரூ.289.63 கோடி நிதி ஒதுக்கீடு: செய்து அரசாணை வெளியீடு
24 Dec 2025சென்னை, விவசாயிகளுக்கு பயிர் நிவாரணம் வழங்க ரூ.289.63 கோடி நிதி ஒதுக்கீடு செய்தற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
-
வைகுண்ட ஏகாதசி விழா: ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும் : ரயில்கள் விவரம் வெளியீடு
24 Dec 2025சென்னை, வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கதத்தில் நின்று செல்லும் ரயில்களின் விவரங்ளை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
எம்.ஜி.ஆர். படத்திற்கு மரியாதை செலுத்திய செங்கோட்டையன்
24 Dec 2025சென்னை, எம்.ஜி.ஆர். படத்திற்கு த.வெ.க. நிர்வாகி செங்கோட்டையன் மரியாதை செலுத்தினார்.
-
அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் ரூ.34.30 கோடி மதிப்பிலான 20 அதிநவீன குளிர்சாதன பேருந்துகளின் சேவை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
24 Dec 2025சென்னை, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு ரூ.34.30 கோடி மதிப்பிலான பல அச்சுகள் கொண்ட 20 அதிநவீன குளிர்சாதன சொகுசு பேருந்துகள் இயக்கத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று
-
எம்.ஜி.ஆர். பாதையில் பயணித்திட உறுதியேற்போம்: டிடிவி தினகரன்
24 Dec 2025சென்னை, எம்.ஜி.ஆர். பாதையில் எந்நாளும் பயணித்திட இந்நாளில் உறுதியேற்போம் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
-
அன்பு, அமைதி தழைக்க வேண்டும்: கிறிஸ்துவ பெருமக்களுக்கு இ.பி.எஸ். வாழ்த்து
24 Dec 2025சென்னை, அன்பு, அமைதி, சகோதரத்துவம் தழைக்க வேண்டும் என்று இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துவ பெருமக்களுக்கு அ.தி.மு.க.
-
நாட்டில் புதிதாக மேலும் 3 விமான நிறுவனங்களுக்கு அனுமதி
24 Dec 2025புதுடெல்லி, உள்நாட்டு விமானப் போக்குவரத்து துறையை மேலும் பலப்படுத்தும் விதமாக மூன்று விமான நிறுவனங்களுக்கு மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
-
விஜய் ஹசாரே கோப்பை: 50 ஓவர்களில் 574 ரன்களை எடுத்து பீகார் அணி சாதனை
24 Dec 2025பாட்னா, விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் 50 ஓவர்களில் 574 ரன்கள் எடுத்து பீகார் அணி புதிய சாதனை படைத்துள்ளது.
-
சமூகநீதிப் பாதையில் தொடர்ந்து பயணிக்க நாம் உறுதியேற்போம்: பெரியாரின் நினைவு நாளில் இ.பி.எஸ். பதிவு
24 Dec 2025சென்னை, தமிழ்நாட்டின் பகுத்தறிவுப் பாதைக்கு வித்திட்ட சுடரொளி தந்தை பெரியார் என்று எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
கடலூர்: திட்டக்குடி அருகே சாலை விபத்தில் 7 பேர் பலி
24 Dec 2025கடலூர், கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே சாலை விபத்தில் 7 பேர் பலியான சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை: கிறிஸ்துவ பெருமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து: சிறுபான்மையினருக்கு காவலனாக இருப்போம் என உறுதி
24 Dec 2025சென்னை, இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துவ பெருமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், தி.மு.க.
-
தமிழகத்தை பாசிச சக்திகளால் ஒன்றுமே செய்ய முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
24 Dec 2025சென்னை, ஜனநாயகத்தில் வலிமை மிக்க சக்திகள் ஒன்று சேர்ந்து இருக்கும் போது எந்த பாசிச சக்திகளாலும் தமிழ்நாட்டை ஒன்றும் செய்ய முடியாது என கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் 
-
ஆரவல்லி மலைத்தொடரில் சுரங்கங்களுக்கு அனுமதியா? மத்திய அரசு விளக்கம்
24 Dec 2025புதுடெல்லி, டெல்லி முதல் குஜராத் வரையிலான முழு ஆரவல்லி மலைத்தொடரையும் மத்திய அரசு பாதுகாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்று அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி பயணம்
24 Dec 2025கள்ளக்குறிச்சி, வீரசோழபுரம் தேசிய நெடுஞ்சாலை அருகே நடைபெறும் அரசு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு இன்று (


