எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஜூன்.1 - சென்னையில் 2 வங்கிகளில் போலியான ஆவனங்களை கொடுத்து கோடிக்கணக்கில் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் மோசடி மன்னன் சுகாஷ் சந்திரசேகரை போலீசார் தேடி வந்தனர். சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இவர், முதல்வரின் பேரன் என்று கூறி தனது மோசடி லீலைகளை அரங்கேற்றியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இதே போல பெங்களுாரிலும் சுகாஷ் ஐ.ஏ.எஸ். அதிகாரி போல நடித்து மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக நூற்றுக்கணக்கான புகார்கள் குவிந்துள்ளன. 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் கர்நாடக மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில்தான் கடந்த 2010-ம் ஆண்டு சுகாஷ், அழகு நிலையம் ஒன்றில் மோசடி செய்த வழக்கில் சென்னையில் சேத்துப்பட்டு போலீசில் சிக்கினார். பின்னர் ஜாமீனில் விடுதலையாகி வங்கிகளில் கைவரிசை காட்டியுள்ளார். இது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கனரா வங்கியின் மண்டல மேலாளர் நல்லசிவம், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில், சுகாஷ் என்பவர் ரூ.19 கோடி கடன் வாங்கி மோசடி செய்து விட்டதாக புகார் கொடுத்திருந்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சுகாஷை தேடி வந்தனர்.விதிமுறைகளை மீறி கடன் கொடுத்ததாக வங்கியின் மேலாளர் ஜெகதீஸ் என்பவர் இந்த வழக்கில் அப்போது கைது செய்யப்பட்டார். இதே போல சேலையூரில் உள்ள ஒரு வங்கியிலும் ரூ.72 லட்சம் கடன் வாங்கி சுகாஷ் மோசடி செய்துள்ளார். இந்த 2 வழக்குகளில்தான் போலீசார் இவரை தேடி வந்தனர். கடந்த பல மாதங்களாக போலீசுக்கு தண்ணி காட்டி வரும் சுகாசை கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற் கொண்டனர்.
அப்போது தான் அவருடன் அவரது காதலியான நடிகை லீனா மரியம்பாலும் சேர்ந்து மோசடி செய்திருப்பது அம்பலமானது. இதையடுத்து 2 பேரையும் பொறி வைத்து பிடிக்க போலீசார் திட்டமிட்டனர். இருவரும் டெல்லியில் அசோகா பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இணை கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் சிவக்குமார் ஆகியோரது மேற்பார்வையில், உதவி கமிஷனர் வசுந்தரா தேவி, இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
கடந்த 28-ந் தேதி டெல்லியில் ஆடம்பர பங்களா ஒன்றில் பதுங்கி இருந்த நடிகை லீனாவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சுற்றி விளைத்து கைது செய்தனர். பின்னர் அங்கு அதிரடி சோதனை நடத்தி 9 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர். இதில் 2 கார்களில் போலியான நம்பர் பிளேட்டுகள் பொறுத்தப்பட்டிருந்தன.
லீனாவுடன் தங்கியிருந்த அவரது காதலன் சுகாஷ் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். கைதான லீனாவை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் மூலமாக டெல்லியில் இருந்து போலீசார் நேற்று காலை சென்னைக்கு அழைத்து வந்தனர். காலை 7.15 மணி அளவில் தமிழ் நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்ட்ரல் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. சுடிதார் அணிந்திருந்த அவர், ரெயிலில் இருந்து இறங்கும் போது போலீசாருடன் சாதாரண பயணி போலவே இறங்கினார்.
பின்னர் போலீசார் பத்திரமாக அவரை வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர். போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
லீனாவுக்கு ஆங்கிலம், மலையாளம் மட்டுமே தெரியும். அவர் சுகாசுடன் எப்படி நட்பு ஏற்பட்டது என்பது பற்றி கூறியதாவது:-
கேரளாவில் பிறந்த எனக்கு சினிமா நடிகையாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. 5 மலையாளப் படங்களில் நடித்தேன். சுகாஷ் கேரளாவில் தங்கி இருந்தபோது நான் நடித்த மலையாளப் படங்களை பார்த்துவிட்டு என்னை போனில் தொடர்பு கொண்டார். தான் ஒரு சினிமா டைரக்டர் என்று சொல்லி அடிக்கடி என்னிடம் பேசினார். தமிழ், இந்தியில் சினிமா முன்னணி பிரமுகர்களை தனக்கு தெரியும் என்று கூறினார். அவர்களிடம் எனக்கு சான்ஸ் வாங்கித் தருவதாக கூறினார். அதன்படி சென்னையில் முன்னணி டான்ஸ் மாஸ்டர் ஒருவரை சந்தித்தோம்.
அதன்பிறகு மும்பையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த பிரபல டைரக்டரிடம் என்னை அழைத்துச் சென்று அறிமுகப் படுத்தினார். சுகாஷ் மீது எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது. அவருடன் நெருங்கி பழகி காதலித்தேன். அவரைப்பற்றி விசாரித்த போது தமிழக அரசியல் தலைவர் ஒருவரின் மகள் வழி பேரன் என்றும், அதே குடும்பத்தில் திருமணம் செய்யப்போகிறேன் என்றும் சொன்னார். இதனால் சுகாசுடன் நெருங்கிப்பழகி அவரை திருமணம் செய்ய திட்டமிட்டேன்.
ஆனால் திருமணம் செய்ய வில்லை. ஒன்றாக வாழ்ந்து வந்தோம். 6 மாதத்துக்கு முன் டெல்லியில் பண்ணை வீட்டை வாடகைக்கு பிடித்து தங்கி குடும்பம் நடத்தினோம். அப்போது போலீசார் வந்து என்னை கைது செய்துவிட்டனர். அவர் சாதுர்யமாக தப்பிச்சென்று விட்டார்.இவ்வாறு லீனா கூறியுள்ளார்.
தொடர்ந்து அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. ஆங்கிலத்தில் பேசுவதால் மெதுவாக ஒவ்வொன்றாக சொல்கிறார். இதனால் வாக்கு மூலம் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது.
டெல்லியில் கைது செய்யப்பட்டபோது அவர் கர்ப்பமாக இருப்பதாக நீதிபதியிடம் கூறியுள்ளார். அதனால் அவரை இங்குள்ள மருத்துவமனையில் பரிசோதிக்க உள்ளனர்.
நடிகை லீனா மரியா பால் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்
மோசடி செய்து தனியார் நிறுவன உரிமையாளர் மற்றும் வங்கி அதிகாரிகளை ஏமாற்றிய குற்றச்சாட்டின் கீழ் கைதான நடிகை லீனா மரிய பால் தாம்பரம் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.
இது குறித்து போலீஸார் தெரிவித்ததாவது...
சென்னை சேலையுரைச் சேர்ந்த ஸ்கைலார்க் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் அவுட்பிட்டர்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்த சக்ரவர்த்தி என்பவர் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் கொடுத்த புகாரில் தான் 20.04.2012 அன்று 08431316706 என்ற நம்பரில் இருந்து கைபேசி அழைப்பில் பேசிய பெண் குரல், தனது பெயர் லீனா மரியா என்றும், தான் கர்நாடகா மாநிலத்தின் புராஜெக்ட் டெவலப்மென்ட் நிறுவனராக உள்ள ஜெயக்குமார் என்பவரின் தனி அலுவலர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, கைபேசியை ஜெயகுமாரிடம் கொடுத்துள்ளார். அதில் பேசிய நபர் மனுதாரர் நடத்திவந்த ாஸ்கைலார்க் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் அவுட்பிட்டர்ஸ்ா நிறுவனம் கர்நாடக மாநிலத்தின் மருத்துவ மற்றும் போக்குவரத்து ஊழியர்களுக்கு சீருடை தைப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதன் வகையில் ஜெயக்குமார் எனக் கருதப்படுகிற நபர் பதிவுக் கட்டணம் ரீபண்டபுள் கட்டணமாக ரூ.62,47,016டி- ஐ அவருடைய வங்கிக் கணக்கில் செலுத்த வைத்துள்ளார். இதை உண்மை என நம்பிய புகார்தாரரும் அவ்வாறே பணத்தை செலுத்தியுள்ளார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த புகார்தாரர் சக்கரவர்த்தி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப் பிரிவு கு.எண். 24டி2013 சடி.பி 406,419.420 இ.த.ச. மற்றும் 120(டி) இ.த.ச.வில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும் இதே நபர் ஜெயக்குமார் என தம்மை கனரா வங்கி, அம்பத்தூர் கிளையில் கம்பெனி பெயரில் அக்கவுன்ட் வைத்திருக்கும் பாலசுப்பரமணியன் மற்றும் அவரது மனைவி சித்ரா மேலும் அந்த வங்கியின் முதன்மை மேலாளர் ஜெகதீசா ஆகியோர்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு, அவர்களை ஏமாற்றி வெண்டிங் மெஷின் சம்மந்தமான கர்நாடக அரசின் பல கோடி மதிப்பிலான ஆணை வாங்கித் தருவதாகக் கூறி 19.22 கோடி பெற்று ஏமாற்றியுள்ளார். இது சம்மந்தமாக சென்னை மத்திய குற்றப்பிரிவு கு.எண். 64டி13 சடிபி 170, 406, 409,419,420 473 ரூ 34 இ.த.ச. மற்றும் 66-ன் குற்றப்பிரிவு கீழ் 2008-ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
குற்றவாளி லீனா மரிய பால் சென்னை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார் என்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-09-2025.
17 Sep 2025 -
சற்று குறைந்த தங்கம் விலை
17 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை நேற்று சவரன் ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ,82,160க்கு விற்பனையானது.
-
இனி விருப்ப ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு சலுகைகள்: மத்திய அரசு அறிவிப்பு
17 Sep 2025புதுடெல்லி, 20 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வுபெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
-
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Sep 2025சென்னை, தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் 21 மாவட்டங்களில் இன்று (செப்.18-ம் தேதி) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
பெரியார் 147-வது பிறந்தநாள்: இ.பி.எஸ். உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி
17 Sep 2025சென்னை, பெரியாரின் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
-
பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: அமித்ஷாவிடம் இ.பி.எஸ். நேரில் வலியுறுத்தல்
17 Sep 2025சென்னை, டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து தேச விடுதலைக்காக பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
கொடிக்கம்பம் அகற்றும் நடவடிக்கை: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு
17 Sep 2025சென்னை, கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கைக்கு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
-
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது
17 Sep 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 8,641 கன அடியாகக் குறைந்தது.
-
தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவு பேரொளி பெரியார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
17 Sep 2025சென்னை, தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார் என அவரது பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
பிரதமர் மோடி பிறந்த நாளில் 12 ஆண்டுகளாக இலவச டீ வழங்கும் வியாபாரி..!
17 Sep 2025சென்னை, பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவசமாக டீயை வியாபாரி வழங்கினார்.
-
திருப்பதி பிரம்மோற்சவ விழா: பாதுகாப்பு பணிக்கு 4,200 போலீசார் குவிப்பு
17 Sep 2025திருப்பதி, திருப்பதி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 4,200 போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
75-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் வாழ்த்து
17 Sep 2025புதுடெல்லி, பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் பி்றந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
-
தமிழ்நாட்டை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
17 Sep 2025சென்னை, தமிழ்நாட்டைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
பிரதமர் நரேந்திரமோடிக்கு இத்தாலி பிரதமர் வாழ்த்து
17 Sep 2025ரோம், பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் மெலோனி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு சாபக்கேடு: சித்தராமையா பேச்சு
17 Sep 2025பெங்களூரு, யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு ஒரு சாபக்கேடு என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
-
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு இறுதி முடிவு 24-ம் தேதி வெளியீடு
17 Sep 2025சென்னை, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு வரும் 24-ம் தேதி வரை நடக்கிறது.
-
வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம்: டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
17 Sep 2025புதுடெல்லி, வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம் என்று டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட்கருத்து தெரிவித்துள்ளது.
-
இந்திய தயாரிப்பு பொருட்களை மட்டும் மக்கள் வாங்க வேண்டும்: பிரதமர் நரேந்திரமோடி கோரிக்கை
17 Sep 2025போபால், நீங்கள் வாங்கும் எந்தவொரு பொருளும் இந்திய தயாரிப்பு பொருளாக இருக்க வேண்டும் என 140 கோடி இந்தியர்களிடமும் பிரதமர் மோடி வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.
-
மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை: உ.பி அரசு முடிவு
17 Sep 2025டெல்லி: எந்தவித தூண்டுதலும் இல்லாமல் மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
-
விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி ஐகோர்ட்டில் வழக்கு
17 Sep 2025சென்னை: விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
2025-ம் ஆண்டில் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.22.08 லட்சம் கோடியாக அதிகரிப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா தகவல்
17 Sep 2025அமராவதி, ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் மூலம் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு ஏற்படும் என்று தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜி.எஸ்.டி.
-
மயிலாடுதுறை ஆணவக்கொலை: பெண்ணின் தாய் உள்ளிட்ட 4 பேர் சிறையில் அடைப்பு
17 Sep 2025மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஆணவக் கொலை வழக்கில் பெண்ணின் தாய் உள்பட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? ரஜினி அதிரடி பதில்
17 Sep 2025சென்னை: திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? என்ற கேள்விக்கு நடிகர் ரஜினி பதில் அளித்துள்ளார்.
-
அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது: துணை பிரதமர்
17 Sep 2025தோஹா: இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது என்றும் இருதரப்பு விவகாரங்களில் 3-ம் தரப்பின் மத்தியஸ்தத்தை ஏற்க பாகிஸ்தான் தயார் என்றும்
-
டேராடூன் நகருக்கு மீண்டும் ரெட் அலர்ட்
17 Sep 2025உத்தரகாண்ட்: டேராடூன் நகருக்கு மீண்டும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.