இந்திய ரிசர்வ் வங்கியில் உள்ள 'ஓட்டுநர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஜூன்.1 - சென்னையில் 2 வங்கிகளில் போலியான ஆவனங்களை கொடுத்து கோடிக்கணக்கில் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் மோசடி மன்னன் சுகாஷ் சந்திரசேகரை போலீசார் தேடி வந்தனர். சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இவர், முதல்வரின் பேரன் என்று கூறி தனது மோசடி லீலைகளை அரங்கேற்றியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இதே போல பெங்களுாரிலும் சுகாஷ் ஐ.ஏ.எஸ். அதிகாரி போல நடித்து மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக நூற்றுக்கணக்கான புகார்கள் குவிந்துள்ளன. 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் கர்நாடக மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில்தான் கடந்த 2010-ம் ஆண்டு சுகாஷ், அழகு நிலையம் ஒன்றில் மோசடி செய்த வழக்கில் சென்னையில் சேத்துப்பட்டு போலீசில் சிக்கினார். பின்னர் ஜாமீனில் விடுதலையாகி வங்கிகளில் கைவரிசை காட்டியுள்ளார். இது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கனரா வங்கியின் மண்டல மேலாளர் நல்லசிவம், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில், சுகாஷ் என்பவர் ரூ.19 கோடி கடன் வாங்கி மோசடி செய்து விட்டதாக புகார் கொடுத்திருந்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சுகாஷை தேடி வந்தனர்.விதிமுறைகளை மீறி கடன் கொடுத்ததாக வங்கியின் மேலாளர் ஜெகதீஸ் என்பவர் இந்த வழக்கில் அப்போது கைது செய்யப்பட்டார். இதே போல சேலையூரில் உள்ள ஒரு வங்கியிலும் ரூ.72 லட்சம் கடன் வாங்கி சுகாஷ் மோசடி செய்துள்ளார். இந்த 2 வழக்குகளில்தான் போலீசார் இவரை தேடி வந்தனர். கடந்த பல மாதங்களாக போலீசுக்கு தண்ணி காட்டி வரும் சுகாசை கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற் கொண்டனர்.
அப்போது தான் அவருடன் அவரது காதலியான நடிகை லீனா மரியம்பாலும் சேர்ந்து மோசடி செய்திருப்பது அம்பலமானது. இதையடுத்து 2 பேரையும் பொறி வைத்து பிடிக்க போலீசார் திட்டமிட்டனர். இருவரும் டெல்லியில் அசோகா பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இணை கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் சிவக்குமார் ஆகியோரது மேற்பார்வையில், உதவி கமிஷனர் வசுந்தரா தேவி, இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
கடந்த 28-ந் தேதி டெல்லியில் ஆடம்பர பங்களா ஒன்றில் பதுங்கி இருந்த நடிகை லீனாவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சுற்றி விளைத்து கைது செய்தனர். பின்னர் அங்கு அதிரடி சோதனை நடத்தி 9 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர். இதில் 2 கார்களில் போலியான நம்பர் பிளேட்டுகள் பொறுத்தப்பட்டிருந்தன.
லீனாவுடன் தங்கியிருந்த அவரது காதலன் சுகாஷ் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். கைதான லீனாவை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் மூலமாக டெல்லியில் இருந்து போலீசார் நேற்று காலை சென்னைக்கு அழைத்து வந்தனர். காலை 7.15 மணி அளவில் தமிழ் நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்ட்ரல் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. சுடிதார் அணிந்திருந்த அவர், ரெயிலில் இருந்து இறங்கும் போது போலீசாருடன் சாதாரண பயணி போலவே இறங்கினார்.
பின்னர் போலீசார் பத்திரமாக அவரை வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர். போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
லீனாவுக்கு ஆங்கிலம், மலையாளம் மட்டுமே தெரியும். அவர் சுகாசுடன் எப்படி நட்பு ஏற்பட்டது என்பது பற்றி கூறியதாவது:-
கேரளாவில் பிறந்த எனக்கு சினிமா நடிகையாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. 5 மலையாளப் படங்களில் நடித்தேன். சுகாஷ் கேரளாவில் தங்கி இருந்தபோது நான் நடித்த மலையாளப் படங்களை பார்த்துவிட்டு என்னை போனில் தொடர்பு கொண்டார். தான் ஒரு சினிமா டைரக்டர் என்று சொல்லி அடிக்கடி என்னிடம் பேசினார். தமிழ், இந்தியில் சினிமா முன்னணி பிரமுகர்களை தனக்கு தெரியும் என்று கூறினார். அவர்களிடம் எனக்கு சான்ஸ் வாங்கித் தருவதாக கூறினார். அதன்படி சென்னையில் முன்னணி டான்ஸ் மாஸ்டர் ஒருவரை சந்தித்தோம்.
அதன்பிறகு மும்பையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த பிரபல டைரக்டரிடம் என்னை அழைத்துச் சென்று அறிமுகப் படுத்தினார். சுகாஷ் மீது எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது. அவருடன் நெருங்கி பழகி காதலித்தேன். அவரைப்பற்றி விசாரித்த போது தமிழக அரசியல் தலைவர் ஒருவரின் மகள் வழி பேரன் என்றும், அதே குடும்பத்தில் திருமணம் செய்யப்போகிறேன் என்றும் சொன்னார். இதனால் சுகாசுடன் நெருங்கிப்பழகி அவரை திருமணம் செய்ய திட்டமிட்டேன்.
ஆனால் திருமணம் செய்ய வில்லை. ஒன்றாக வாழ்ந்து வந்தோம். 6 மாதத்துக்கு முன் டெல்லியில் பண்ணை வீட்டை வாடகைக்கு பிடித்து தங்கி குடும்பம் நடத்தினோம். அப்போது போலீசார் வந்து என்னை கைது செய்துவிட்டனர். அவர் சாதுர்யமாக தப்பிச்சென்று விட்டார்.இவ்வாறு லீனா கூறியுள்ளார்.
தொடர்ந்து அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. ஆங்கிலத்தில் பேசுவதால் மெதுவாக ஒவ்வொன்றாக சொல்கிறார். இதனால் வாக்கு மூலம் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது.
டெல்லியில் கைது செய்யப்பட்டபோது அவர் கர்ப்பமாக இருப்பதாக நீதிபதியிடம் கூறியுள்ளார். அதனால் அவரை இங்குள்ள மருத்துவமனையில் பரிசோதிக்க உள்ளனர்.
நடிகை லீனா மரியா பால் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்
மோசடி செய்து தனியார் நிறுவன உரிமையாளர் மற்றும் வங்கி அதிகாரிகளை ஏமாற்றிய குற்றச்சாட்டின் கீழ் கைதான நடிகை லீனா மரிய பால் தாம்பரம் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.
இது குறித்து போலீஸார் தெரிவித்ததாவது...
சென்னை சேலையுரைச் சேர்ந்த ஸ்கைலார்க் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் அவுட்பிட்டர்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்த சக்ரவர்த்தி என்பவர் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் கொடுத்த புகாரில் தான் 20.04.2012 அன்று 08431316706 என்ற நம்பரில் இருந்து கைபேசி அழைப்பில் பேசிய பெண் குரல், தனது பெயர் லீனா மரியா என்றும், தான் கர்நாடகா மாநிலத்தின் புராஜெக்ட் டெவலப்மென்ட் நிறுவனராக உள்ள ஜெயக்குமார் என்பவரின் தனி அலுவலர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, கைபேசியை ஜெயகுமாரிடம் கொடுத்துள்ளார். அதில் பேசிய நபர் மனுதாரர் நடத்திவந்த ாஸ்கைலார்க் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் அவுட்பிட்டர்ஸ்ா நிறுவனம் கர்நாடக மாநிலத்தின் மருத்துவ மற்றும் போக்குவரத்து ஊழியர்களுக்கு சீருடை தைப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதன் வகையில் ஜெயக்குமார் எனக் கருதப்படுகிற நபர் பதிவுக் கட்டணம் ரீபண்டபுள் கட்டணமாக ரூ.62,47,016டி- ஐ அவருடைய வங்கிக் கணக்கில் செலுத்த வைத்துள்ளார். இதை உண்மை என நம்பிய புகார்தாரரும் அவ்வாறே பணத்தை செலுத்தியுள்ளார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த புகார்தாரர் சக்கரவர்த்தி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப் பிரிவு கு.எண். 24டி2013 சடி.பி 406,419.420 இ.த.ச. மற்றும் 120(டி) இ.த.ச.வில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும் இதே நபர் ஜெயக்குமார் என தம்மை கனரா வங்கி, அம்பத்தூர் கிளையில் கம்பெனி பெயரில் அக்கவுன்ட் வைத்திருக்கும் பாலசுப்பரமணியன் மற்றும் அவரது மனைவி சித்ரா மேலும் அந்த வங்கியின் முதன்மை மேலாளர் ஜெகதீசா ஆகியோர்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு, அவர்களை ஏமாற்றி வெண்டிங் மெஷின் சம்மந்தமான கர்நாடக அரசின் பல கோடி மதிப்பிலான ஆணை வாங்கித் தருவதாகக் கூறி 19.22 கோடி பெற்று ஏமாற்றியுள்ளார். இது சம்மந்தமாக சென்னை மத்திய குற்றப்பிரிவு கு.எண். 64டி13 சடிபி 170, 406, 409,419,420 473 ரூ 34 இ.த.ச. மற்றும் 66-ன் குற்றப்பிரிவு கீழ் 2008-ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
குற்றவாளி லீனா மரிய பால் சென்னை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார் என்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பொரி முறுக்கு![]() 6 hours 4 min ago |
வாழைத்தண்டு மோர் கூட்டு![]() 3 days 3 hours ago |
முட்டைக்கோஸ் வடை![]() 1 week 6 hours ago |
-
சூரியனில் 2-வது ராட்சத துளை: பூமியை விட 30 மடங்கு பெரிது
31 Mar 2023வாஷிங்டன் : நமது பால்வளி அண்டத்தில் உள்ள பிரமாண்ட நட்சத்திரமான சூரியனில் சமீப ஆண்டுகளாகவே பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு வருகிறது.
-
போப் பிரான்சிஸ் விரைவில் குணமடைய பிரதமர் வாழ்த்து
31 Mar 2023புதுடெல்லி : உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போப் பிரான்சிஸ் விரைவில் குணமடைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
சைபர் தாக்குதல் அச்சுறுத்தலில் இந்திய அரசின் வலைதளங்கள் : ஆய்வில் அதிர்ச்சி தகவல்
31 Mar 2023சென்னை : இந்திய மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசு வலைதளங்கள் சைபர் தாக்குதலுக்கு ஆளாகும் அச்சுறுத்தலில் இருப்பதாக சைபர் செக்யூரிட்டி சார்ந்து இயங்கி வரும் செக்யூரின் (S
-
பிரதமரின் கல்வி ஆவணங்களை கேட்ட விவகாரம்: டெல்லி முதல்வருக்கு 25,000 ரூபாய் அபராதம் : குஜராத் ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு
31 Mar 2023காந்திநகர் : பிரதமர் மோடியின் கல்வி ஆவணங்களை வழங்க தலைமை தகவல் ஆணையர் உத்தரவிட்டதை குஜராத் ஐகோர்ட் ரத்து செய்துள்ளது.
-
புதுமைப்பெண் திட்டத்தால் பெண்களின் உயர் கல்வி சேர்க்கை 29 சதவீதம் உயர்வு : கொள்கை விளக்கக்குறிப்பில் தகவல்
31 Mar 2023சென்னை : “புதுமைப் பெண் திட்டத்தால் பெண்களின் உயர் கல்வி சேர்க்கை கடந்த ஆண்டை விட 29 சதவீதம் அதிகரித்து உள்ளதாக உயர் கல்வித்துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப
-
தினசரி பாதிப்பு 3,094 ஆக உயர்வு: கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது
31 Mar 2023புதுடெல்லி : நாட்டில் தினசரி பாதிப்பு 3,094 ஆக உயர்ந்துள்ளது. இதனை அடுத்து கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
-
புதிய மாவட்டமாக ஆரணி உருவாக்கப்படுமா? - சட்டசபையில் அமைச்சர் பதில்
01 Apr 2023சென்னை : ஆரணி, கும்பகோணம் புதிய மாவட்டமாக உருவாக்கப்படுமா என்பது குறித்து சட்டசபையில் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.
-
சென்னை கலாஷேத்ரா விவகாரம்: தற்காலிகமாக போராட்டத்தை கைவிட மாணவிகள் ஒப்புதல்
31 Mar 2023சென்னை : சென்னை கலாஷேத்ரா விவகாரத்தில் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட மாணவிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.
-
புதுச்சேரி சட்டப்பேரவையில் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்
31 Mar 2023புதுச்சேரி : திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தி புதுச்சேரி சட்டப்பேரவையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
ம.பி.யில் கோவில் கிணறு சுவர் இடிந்த விபத்தில் பலியானோர் 35 ஆக உயர்வு : ஜனாதிபதி, பிரதமர் மோடி இரங்கல்
31 Mar 2023இந்தூர் : மத்திய பிரதேசத்தில் கோவில் கிணற்று சுவர் இடிந்ததில் பலி எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 01-04-2023.
01 Apr 2023 -
மாணவிகளிடம் தரக்குறைவான பேச்சு: மதுரை காமராஜர் பல்கலை. பேராசிரியர் கைது
01 Apr 2023மதுரை : மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் மாணவிகளிடம், சாதி ரீதியாக தரக்குறைவாக பேசிய வரலாற்றுத் துறை பேராசிரியர் எஸ்.சி., எஸ்.டி.
-
புதிய உச்சம் தொட்டது தங்கம் விலை: சவரன் ரூ.45 ஆயிரத்தை நெருங்குகிறது
31 Mar 2023சென்னை : தங்கம் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த நிலையில் நேற்று புதிய உச்சம் தொட்டிருக்கிறது.
-
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஏப்ரல் 11-ல் நடக்கிறது
31 Mar 2023புதுடெல்லி : காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 11-ம் தேதி கூடுகிறது.
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்வு ஆவணங்கள் சமர்ப்பிப்பு
31 Mar 2023சென்னை : அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்வு ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. சமர்ப்பித்துள்ளது.
-
மாநகராட்சி, நகராட்சிகளில் வார்டுகளை மறுவரையறை செய்ய குழு அமைக்க முடிவு : அமைச்சர் கே.என். நேரு தகவல்
01 Apr 2023சென்னை : தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, திருச்செங்கோடு நகராட்சிக்குட்பட்ட வார்டுகளை மறுவரையறை செய்ய வேண்டும் என திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன்
-
காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம்: 64 சதவீத கால்வாய் வெட்டும் பணி நிறைவு: அமைச்சர் தகவல்
01 Apr 2023சென்னை : காவிரி - குண்டாறு இணைப்பு நடந்தே தீரும் என்றும் 64 சதவீத கால்வாய் வெட்டும் பணி நிறைவு பெற்றுள்ளது என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
விரைவில் உலகின் முன் தோன்றுவேன்: வீடியோ மூலம் அம்ரித்பால் விளக்கம்
31 Mar 2023சண்டிகர் : தான் தப்பி ஓடவில்லை என்றும் விரைவில் உலகின்முன் தோன்றுவேன் என்றும் பஞ்சாபில் தேடப்பட்டு வரும் மத போதகர் அம்ரித்பால் சிங் தெரிவித்துள்ளார்.
-
பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 10 மாநிலங்களில் ஜூன் வரை இயல்பைவிட அதிக வெப்பம் நிலவும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
01 Apr 2023பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 10 மாநிலங்களில் இம்மாதம் முதல் ஜூன் வரையிலான கோடைக்காலத்தில் இயல்பைவிட அதிக வெப்பநிலை காணப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து
-
இலவச ரேசன் பொருளுக்கு முண்டியடித்த மக்கள்: பாகிஸ்தானில் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழப்பு
01 Apr 2023இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச ரேசன் பொருள் வாங்க ஒரே சமயத்தில் மக்கள் குவிந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர
-
கீழடி அருங்காட்சியகத்தை குடும்பத்தினருடன் பார்வையிட்ட நடிகர் சூர்யா, ஜோதிகா
01 Apr 2023சிவகங்கை : திரை உலகின் முன்னணி நடிகரான சூர்யா, தனது மனைவி ஜோதிகா, தந்தை சிவக்குமார் மற்றும் உறவினர்களுடன் கீழடி அருங்காட்சியகத்தை நேற்று பார்வையிட்டார்
-
வணிக பயன்பாடு கியாஸ் சிலிண்டர் விலை ரூ. 76 குறைப்பு
01 Apr 2023சென்னை : வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரின் விலை 76 ரூபாய் குறைக்கப்பட்டு உள்ளது.
-
அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சி: படகு கவிழ்ந்ததில் 6 பேர் பலி
01 Apr 2023வாஷிங்டன் : அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சித்த போது படகு கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்தனர்.
-
எக்ஸ்.பி.பி. வகை கொரோனா திரிபு தற்போது இந்தியாவில் பரவுகிறது : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
01 Apr 2023புதுடெல்லி : முதலில் அமெரிக்கா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, டென்மார்க் உள்ளிட்ட 14 நாடுகளில் காணப்பட்ட எக்ஸ்.பி.பி.
-
அமெரிக்காவில் சக்தி வாய்ந்த சூறாவளியில் சிக்கி 3 பேர் பலி
01 Apr 2023வாஷிங்டன் : அமெரிக்காவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த சூறாவளியில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.