Idhayam Matrimony

குன்னூர் மாஜிஸ்திரேட் தங்கராஜ் ஜாமீனில் விடுதலை

திங்கட்கிழமை, 1 ஜூலை 2013      தமிழகம்
Image Unavailable

திருப்பூர், ஜூலை.2 - பல்லடம் பெண் போலீஸ் எஸ்.ஐ.யை திருமணம் செய்தவதாக கூறி ஏமாற்றிய குன்னூர் மாஜிஸ்திரேட் தங்கராஜ் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஊஞ்சம்பாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (33)  இவர் நீலகிரி மாவட்டம் குன்னூர் கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றி வந்தார். இவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி விட்டதாக பல்லடம் பெண் போலீஸ் சப்-இன்பெக்டர் உமா மகேஸ்வரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் தங்கராஜை போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். அவர் மீது கற்பழிப்பு, ஏமாற்றுதல், கிரிமினல் நடவடிக்கை ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் தங்கராஜ் தரப்பில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து ஜாமீன் மனுவை ஏற்றுக்கொண்ட மாவட்ட நீதிபதி கணேசன் சொந்த ஜாமீனில் வெளிவர உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago