எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பூர், ஜூலை. 3 - திருப்பூர் பத்மினி கார்னரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21 ம் தேதி தே.மு.தி.க. சார்பில் நடைபெற்ற விழாவில் விஜயகாந்த் கலந்து கொண்டார். அப்போது முதல்வர் ஜெயலலிதா மீது களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறாக பேசியதாக விஜயகாந்த் மீது திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வக்கீல் சுப்பிரமணியம் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ஆஜராகும்படி விஜயகாந்துக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இந்த வழக்கு ஜூன் 13 ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்த போதும் விஜயகாந்த் ஆஜராகவில்லை. அவர் தரப்பில் ஆஜரான வக்கீல் விஜயகாந்துக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் நேரில் ஆஜராகவில்லை என்று கூறினார். இதையடுத்து விசாரணை நேற்று 2 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இதற்கிடையே மின்வெட்டை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்திலும் விஜயகாந்த் முதல்வரை அவதூறாக பேசியதாக மாவட்ட அரசு வக்கீல் சுப்பிரமணியம் வழக்கு தொடர்ந்தார். இந்த அவதூறு வழக்கு விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா உள்ளிட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் 5 பேர் ஆஜராகுமாறு கோர்ட் உத்தரவிட்டது. மேற்கண்ட இரு வழக்குகளும் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போதும் விஜயகாந்த் ஆஜராகவில்லை. அவரது மனைவி பிரேமலதா மட்டும் ஆஜரானார்.
விஜயகாந்துக்கு உடல் நிலை சரியில்லை என்று வக்கீல் ரகுபதி மனு தாக்கல் செய்து 2 மாத காலம் அவகாசம் கேட்டார். இதையடுத்து நீதிபதி கணேசன் வழக்கு விசாரணையை 30 ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார். கோர்ட்டில் இருந்து வெளியே வந்த பிரேமலதா நிருபர்களிடம் கூறியதாவது, தே.மு.தி.க. மக்கள் பிரச்சினைக்காக எப்போதும் போராடும் கட்சியாகும். மக்கள் பிரச்சினைக்காக கோர்ட்டுக்கு வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. கோர்ட், வழக்கு போன்றவைகளால் தே.மு.தி.க.வை முடக்க முடியாது. மக்கள் நலப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றார் அவர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026


