முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆளுநர் ரோசய்யாவின் 80-வது பிறந்தநாள்: முதல்வர் வாழ்த்து

வியாழக்கிழமை, 4 ஜூலை 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.5 - ஆளுநர் ரோசய்யா தனது 80-வது பிறந்த நாளை ராஜ்பவனில் நேற்று கொண்டாடினார். அப்போது அவருக்கு தனது வாழ்த்துக்களை முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர்  ஜெயலலிதா, நேற்று (4.7.2013),   தமிழ்நாடு ஆளுநர் முனைவர் கே.ரோசய்யாவின் 80-வது பிறந்த நாளையொட்டி மலர்கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பினார்கள்.  அதில்:-

``தங்களின் 80-வது பிறந்தநாளான இன்று என்னுடைய அன்பான வாழ்த்துக்களை தங்களுக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தாங்கள் பல ஆண்டுகள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து இந்த நாட்டுக்கும், மக்களுக்கும் தொடர்ந்து சேவை செய்ய வேண்டுமென்று இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்'' என்று முதல்வர் ஜெயலலிதா அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும்,  தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று (4.7.2013)  தமிழ்நாடு ஆளுநரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து, தனது மகிழ்ச்சியினை பகிர்ந்து கொண்டார்கள்.

அப்போது,  தனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த  தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவுக்கு தனது  நன்றியினை  தமிழ்நாடு ஆளுநர்   தெரிவித்துக் கொண்டார்கள். 

இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்