முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு

வியாழக்கிழமை, 4 ஜூலை 2013      தமிழகம்
Image Unavailable

தென்காசி, ஜூலை. 5 - குற்றாலம் மலை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழை காரணமாக பேரருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. குற்றாலம் பகுதியில் மழை பெய்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக குற்றாலம் பேரருவியில் பாதுகாப்பு வளைவின் மீது தண்ணீர் விழுந்தது. ஐந்தருவியின் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. வானம் மேகமூட்டத்துடன் அவ்வப்போது மிதமான சாரல், குளிர்ந்த காற்று என பருவ நிலை மாறி மாறி காணப்பட்டது. அத்துடன் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகளவில் காணப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்