எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தருமபுரி. ஜூலை 6 - தமிழகத்தை பெரும் பரபரப்புக்குள்ளாக்கிய காதல் கலப்புத் திருமணம் செய்த இளவரசன் நேற்று முன்தினம் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை அடுத்து தருமபுரி மாவட்டம் முழுவதிலும் போலீசார் குவிக்கப்பட்டு, தீவிர பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம், நாயக்கன்கொட்டாயைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகள் திவ்யா.
இவருக்கும், நாயக்கன்கொட்டாய் அருகே உள்ள நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசன் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இளவரசனை திருமணம் செய்து கொள்ள திவ்யாவின் தந்தை நாகராஜ் உள்ளிட்ட குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் கடந்த அக்டோபர் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து திவ்யாவின் அப்பா நாகராஜ் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
இவரது தற்கொலைக்கு இளவரசன் மற்றும் அவரது குடும்பத்தினர் தான் காரணம் என
கூறியதால் இரு சமூகத்தினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் நத்தம் காலனி, நாயக்கன்கொட்டாய், உள்ளிட்ட கிராமங்களில் கடந்த நவம்பர் மாதம் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டது.
இது சம்மந்தமாக 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, இதற்கான விசாரணை இன்று வரை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் திவ்யா உடல்நிலை சரியில்லாத தனது தாயாரைப் பார்த்துவிட்டு
வருவதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் இளவரசனின் வீட்டுக்கு திரும்பவில்லை. இதையடுத்து அவர் எங்கு இருக்கிறார் என்ற விபரம் தெரியாததால், திவ்யாவின் தாயார் சென்னை உயர்nullதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
மனு விசாரணைக்கு வந்த போது, திவ்யா அவரது தாயாருடன் கோர்ட்டில் ஆஜராகி தற்போது
தனது மனநிலை சரியில்லாததாலும், உடல்நிலை சரியில்லாத தனது தாயாரை கவனிக்க
வேண்டியிருப்பதாலும் தனது தாயாருடன் செல்ல விரும்புவதாக தெரிவித்ததை அடுத்து, அவரது
தாயாருடன் செல்ல nullகோர்ட் அனுமதி அளித்தது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, கோர்ட்டில் ஆஜரான
திவ்யா இளவரசனுடன் சேர்ந்து இனி வாழ விரும்பில்லை எனவும், தனது தாயாருடனே இருக்க
விரும்புவதாகவும் தெரிவித்ததை அடுத்தும், திவ்யாவின் தாயார் ஆள்கொணர்வு மனுவை வாபஸ்
பெற்றுக் கொண்டதை அடுத்தும், இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் தருமபுரி அரசு கலைக்கல்லூரி பின்புறம் உள்ள ரயில்வே
தண்டவாளத்தில் இளவரசன் இறந்து கிடந்தார். போலீசார் இறந்து கிடந்த இளவரசனின் உடலை nullண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு மாலை 6 மணியளவில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி
மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை அறையில் வைத்தனர்.
நேற்று காலை இளவரசனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அங்கு
கூடியிருந்த இளவரசன் உறவினர்கள் பிரேதப் பரிசோதனையை நடத்தக்கூடாது எனவும்,
வெளிமாவட்டங்களில் இருந்து மருத்துவர்களை அழைக்க வேண்டும் எனவும், அல்லது வேறு மாவட்ட மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனையை நடத்த வேண்டும் எனவும், பிரேதப் பரிசோதனையை வீடியோ படம் பிடிக்க வேண்டும் எனவும், பிரேத பரிசோதனை அறிக்கையை தங்களிடம் காண்பிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டதால் கோவை மண்டல ஐஜி டேவிட்சன் தேவாசிர்வாதம், சேலம் சரக டிஐஜி சஞ்சய் குமார், எஸ்பிக்கள் ஆஸ்ரா கார்க், செந்தில்குமார், சக்திவேல் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பல கட்டப் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கலைந்து செல்லவில்லை. மேலும் சென்னை உயர்nullதிமன்றத்தில் இளவரசன் இறப்பு குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த nullகோர்ட்பிரேதப் பரிசோதனையை நடத்தி அதன் வீடியோ, அறிக்கையை இளவரசன் அப்பாவிடம் தரவேண்டும் என்றும், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் ஏதேனும் சந்தேகம் இருந்தால்
மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்யலாம் எனவும், அதுவரை இளவரசன் உடல் தருமபுரியில்
மருத்துவமனையிலேயே பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் ஆணையிட்டது.
இந்த உத்தரவை போலீஸ் அதிகாரிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தெரிவித்ததுடன்,
அனைவரும் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். மேலும் அவர்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல
தனியாக பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது என கூறியதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசு ஏற்பாடு செய்திருந்த பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்க தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களைச்
சேர்ந்த ஆயிரக்கணக்கான போலீசார் தருமபுரி நகரம், செல்லன்கொட்டாய், நாயக்கன்கொட்டாய்,
அண்ணாநகர், கொண்டம்பட்டி, நத்தம் காலனி உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 hour ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-09-2025.
19 Sep 2025 -
போர்ச்சுகல் செல்லும் தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
19 Sep 2025சென்னை : போர்ச்சுகல் செல்லும் தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார்.
-
மறைந்த நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி, கமல்ஹாசன் நேரில் அஞ்சலி
19 Sep 2025மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் உடலுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அதிகாலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
கரூர் எஸ்.பி.யிடம் மீண்டும் மனு அளியுங்கள்: இ.பி.எஸ். பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு
19 Sep 2025மதுரை : கரூர் பேருந்து நிலையம் அருகே எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் மாவட்ட எஸ்.பி.யிடம் மீண்டும் மனு அளிக்க அ.தி.மு.க.வுக்கு உயர் நீதிமன்றம
-
பாதுகாப்பை மீறி த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்குள் நுழைந்த இளைஞர்: போலீஸ் விசாரணையில் புதிய தகவல்
19 Sep 2025சென்னை, பாதுகாப்பை மீறி நடிகர் விஜய் வீட்டிற்குள் நுழைந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
-
சீனாவில் ஓட்டல் மேஜையை அசுத்தம் செய்தவர்களுக்கு 3 கோடி ரூபாய் அபராதம்
19 Sep 2025பெய்ஜிங், சீனாவில் ஓட்டல் மேஜையை அசுத்தம் செய்த வாலிபர்களுக்கு ரூ.3 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதிக்கு 35 ஆண்டு சிறை தண்டனை
19 Sep 2025வாஷிங்டன், அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதிக்கு 35 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
-
ரோபோ சங்கருக்கு நடிகர் விஜய் புகழஞ்சலி
19 Sep 2025சென்னை : தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர் ரோபோ சங்கர் என்று தவெக தலைவர் விஜய் புகழஞ்சலி செலுத்தி
-
அமெரிக்காவில் தெலங்கானா இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதில் புதிய தகவல்
19 Sep 2025ஐதராபாத் : அமெரிக்காவில் தெலங்கானா இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதில் புதிய தகவல் வெளயாகியுள்ளது.
-
வாக்குத்திருட்டு நடப்பது எப்படி? - ராகுல் காந்தி பதிவால் பரபரப்பு
19 Sep 2025டெல்லி : வாக்குத் திருட்டு எப்படி நடக்கிறது என்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ள கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
உடல் நலக்குறைவால் காலமான நடிகர் ரோபோ சங்கர் உடல் தகனம்
19 Sep 2025சென்னை, நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் இரவு காலமானார். அவருக்கு வயது 46.
-
புதிய குடியேற்ற விதியின்படி இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட முதல் இந்தியர்
19 Sep 2025லண்டன், இங்கிலாந்தில் புதிய குடியேற்ற விதிகளை கொண்ட ‘ஒன்-இன், ஒன்-அவுட்’ என்ற ஒப்பந்தம் ஆகஸ்டு முதல் அமலுக்கு வந்துள்ள நிலையல், தற்போது முதல்முறையாக இங்கிலான்தில்
-
இன்று பம்பையில் நடைபெறும் அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு
19 Sep 2025திருவனந்தபுரம், பம்பையில் இன்று நடைபெறவுள்ள அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தில் தமிழ்நாடு அமைச்சர்கள் சேகர் பாபு, பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கிறார்கள்.
-
தீபாவளிக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்
19 Sep 2025சென்னை, தீபாவளி பண்டிகைக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கபடவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சேவைகளுக்கு புதிய வசதி அறிமுகம் : மத்திய அமைச்சர் தகவல்
19 Sep 2025புதுடெல்லி : தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சேவைகளுக்கு புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
-
பாக்.கில் 2 வெடிகுண்டு தாக்குதல் - 11 பேர் பலி
19 Sep 2025லாகூர் : பாகிஸ்தானில் ஒரே நாளில் 2 வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்துள்ளது. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
7.5 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
19 Sep 2025மாஸ்கோ, 7.5 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்: குற்றவாளியை பிடிக்க சென்ற 3 போலீசார் சுட்டுக்கொலை..!
19 Sep 2025வாஷிங்டன், அமெரிக்காவில் குற்றவாளியை பிடிக்க சென்ற 3 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
திண்டுக்கல் மாவட்டத்தில் மினி பேருந்துகளை இயக்க விண்ணப்பிக்கும் காலம் நிறைவு
19 Sep 2025திண்டுக்கல், திண்டுக்கலில் புதிய ரூட்களில் மினி பேருந்துகளை இயக்குவதற்கு விண்ணப்பங்கள் நிறைவு பெற்றது.
-
ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தடை
19 Sep 2025காபூல், ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு அந்நாட்டு அரசு தடைவிதித்துள்ளது.
-
தமிழகத்தில் 42 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து
19 Sep 2025புதுடெல்லி, தமிழ்நாட்டில் 6 ஆண்டுகளாக தேர்தலில் பங்கேற்காமல் இருந்த 42 கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
இந்தியாவுக்கு அதிக வரி விதித்தது ஏன்..? அதிபர் ட்ரம்ப் விளக்கம்
19 Sep 2025லண்டன், இந்தியாவுக்கு அதிக வரி விதித்தது ஏன் என்று அதிபர் ட்ரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.
-
வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது : அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்
19 Sep 2025தஞ்சாவூா் : வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படமாட்டாது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
-
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் எதிரிகளுக்கு நமது வலிமையை காட்டினோம்: ராஜ்நாத்சிங் பேச்சு
19 Sep 2025டெல்லி, ஆபரேஷன் சிந்தூரின்போது நமது பதிலடியின் வலிமையை எதிரிகளுக்கு காட்டினோம் என்று ராஜ்நாத் சிங் கூறினார்.
-
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் புதின் விரும்பவில்லை; இங்கி., உளவுத்துறை தலைவர்
19 Sep 2025இஸ்தான்புல், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர புதின் விரும்பவில்லை என்று இங்கிலாந்து உளவுத்துறை தலைவர் ரிச்சர்ட் மோரி தெரிவித்துள்ளார்.