எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.9 - தமிழ்நாட்டில் தொடர்ந்து இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவ மழை, காரணமாக தென் மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. காவிரி டெல்டா பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. ஆனால் சென்னை உள்பட வட மாவட்டங்களில் போதிய மழை இல்லாமல் வறண்ட வானிலை காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் வட மாவட்டங்களிலும் மழை பெய்கிறது.
நேற்று முன்தினம் தாம்பரத்தில் 40 மி.மீ. மழை பதிவாகி இருந்தது. காஞ்சீபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், உத்தர மேரூர், மதுராந்தகம், தாம்பரம், பல்லாவரம் உட்பட பல பகுதிகளில் கடந்த சனி, ஞாயிறுகளில் பரவலாக நல்ல மழை பெய்தது. பகலில் வாகனம் மேக மூட்டத்துடன் குளிர்ந்த சூழ்நிலை நிலவியது.
இதே போல் நேற்றிரவு சென்னை, திருவள்ளுார், காஞ்சீபுரம் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இதில் நுங்கம்பாக்கத்தில் 22.2 மி.மீட்டர் மழை பெய்தது. மீனம்பாக்கத்தில் 4.2 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. பெய்தது.
இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறுகையில், ''தென்மேற்கு பருவ மழையின் தாக்கம் மற்றும் வெப்ப சலனம் காரணமாக வட மாவட்டங்களில் மழை பெய்கிறது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டின் ஓரிரு மாவட்டங்களில் மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்'' என்றார்.
நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில் அதிகபட்சமாக திருவாரூரில் 4 செ.மீ. செங்கல்பட்டு, காவேரிப்பாக்கம், காரைக்கால், நாகை, நீடாமங்கலம், பாபநாசத்தில் 3 செ.மீ. மழையும், சென்னை மாவட்டத்தில் 2 செ.மீ. மழையும், கும்பகோணம், காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர், மதுராந்தகம், எண்ணூரில் 1 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய


