முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குற்றாலத்தில் சாரல்: அலை மோதிய சுற்றுலா பயணிகள்

திங்கட்கிழமை, 8 ஜூலை 2013      தமிழகம்
Image Unavailable

 

தென்காசி, ஜூலை. 9 - குற்றாலத்தில் மீண்டும் சாரல் மழை பெய்ததால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இங்கு கடந்த 2 நாட்களாக சாரல் இல்லை. இதனால் பேரருவியில் நீர்வரத்து குறைந்தது. இந்நிலையில் முதல் நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது. குளிர்ந்த காற்றும் வீசியது. இதனால் குற்றாலம் பேரருவியில் நீர்வரத்து அதிகரித்தது. விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. 

இதையடுத்து வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டது. ஆண்களின் வரிசையும், பெண்களின் வரிசையும் அஞ்சல் அலுவலகம் வரை நீண்டிருந்தது. இதே போல் பழைய குற்றாலம், ஐந்தருவியில் நீண்ட வரிசையில் நின்று சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். குற்றாலத்தில் இருந்து பழைய குற்றாலம் செல்லும் சாலையில் உள்ள குளத்திலும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். 

பழைய குற்றாலம், ஐந்தருவி சாலையில் உள்ள தோப்புகள், மரங்கள் அடர்ந்த பகுதிகளில் சுற்றுலா பயணிகள் உணவு சமைத்து உண்டு மகிழ்ந்தனர். குற்றாலத்தில் சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்களும் போக்குவரத்தில் ஒரு வழிப்பாதை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்