எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,ஜூலை.9 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தயாளு அம்மாள் மனுவை உடனடியாக விசாரிக்க சுப்ரீம்கோர்ட்டு மறுத்துவிட்டது. ரூ.1.80 லட்சம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஜூலை 8-ம் தேதி (நேற்று) ஆஜராக வேண்டும் என்று தயாளு அம்மாளுக்கு ஏற்கனவே சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷைனி உத்தரவிட்டிருந்தார். தமக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்றும் சென்னையில் இருந்து டெல்லிக்கு பயணம் செய்ய உடல்நிலை இடம் தராது. அதனால் தமக்கு நேரடியாக கோர்ட்டில் ஆஜராகுவதில் இருந்து விலக்க அளிக்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்தில் தயாளு அம்மாள் சார்பாக மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் தயாளு அம்மாள் சார்பாக அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட கோர்ட்டு, தயாளு அம்மாளுக்கு கண்டனம் தெரிவித்தது. வழக்கை வேண்டுமென்றே காலதாமதப்படுத்த செய்யும் நோக்கத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது என்று நீதிபதி மீனா பீர்பால் சாடியிருந்தார்.
இந்தநிலையில் தயாளு அம்மாளுக்கு டெல்லி சிறப்பு சி.பி.ஐ. கோர்ட்டு விதித்திருந்த காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இதனையொட்டி தயாளு அம்மாள் சார்பாக நேற்று சுப்ரீம்கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்றுக்கொள்ள தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் மறுத்துவிட்டது. உடனடியாக விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அறிவித்துவிட்டதோடு நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் விசாரிக்க உத்தரவிட்டார். வழக்கு விசாரணை இன்று நடைபெறுகிறது. தயாளு அம்மாள் ஆஜராக வேண்டும் என்று டெல்லி சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நேற்றுடன் முடிவடைந்ததாக தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
10 Feb 2026- திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மர் மூலவருக்கு அலங்கார திருமஞ்சன சேவை.
- இராமேஸ்வரம் சுவாமி வெள்ளி கைலாச வாகனம், அம்பாள் தங்க சிம்ம வாகனம்.
-
இன்றைய ராசிபலன்
10 Feb 2026 -
இன்றைய நாள் எப்படி?
10 Feb 2026


