முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டாக்டர் சுப்பையா கொலை: 7 பேர் முன் ஜாமீன் கேட்டு மனு

செவ்வாய்க்கிழமை, 24 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.25 - சென்னை அபிராமபுரத்தில் டாக்டர் சுப்பையா வெட்டி கொல்லப்பட்ட வழக்கில் வக்கீல்கள் உட்பட 7 பேர் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். சென்னை அபிராமபுரத்தில் டாக்டர் சுப்பையா கடந்த வாரம் மர்ம கும்பலால் வெட்டப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த 23.9.13 அன்று காலை உயிரிழந்தார். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி வக்கீல்கள் வில்லியம்ஸ், பைசல் உள்பட 7 பேர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை நீதிபதி மாலா நேற்று விசாரித்தார். தமிழக அரசு சார்பாக அரசு வக்கீல் சண்முக வேலாயுதம் ஆஜராகி யாருக்கும் முன்ஜாமீன் தரக்கூடாது என்றார். முன்ஜாமீன் கேட்டவர்கள் யாரும் கோர்ட்டில் ஆஜராகவில்லை. வழக்கு விசாரணை நாளை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்