முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாய்லாந்து அருகே விமான விபத்தில் 49 பேர் பலி

வியாழக்கிழமை, 17 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

பாங்காங், அக்.18 - தாய்லாந்து அருகே விமானம் நொறுங்கி விழுந்ததில் 11 நாடுகளைச் சேர்ந்த 49 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். தென்கிழக்கு ஆசிய நாடான லாவோ தலைநகரில் வியாட்டினிலிருந்து பக்ஸி நகரத்துக்கு ஒரு விமானம் புறப்பட்டுச் சென்றது. 

இதில் கனடா, சீனா, மலேசியா, தைவான், இங்கிலாந்து, கொரியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 44 பயணிகள், விமான ஊழியர்கள் 5 பேர் இருந்தனர். பக்ஸி விமான நிலையம் அருகே வந்தபோது மோசமான வானிலை காரணமாக விமானம் வழி தவறி சென்றது. விமான நிலையம் அருகே உள்ள மெகாங் ஏரியில் விமானம் நொறுங்கி விழுந்தது. 

இதில் விமன ஊழியர்கள், பயணிகள் உள்பட 49 பேர் உடல் கருகி இறந்தனர். விமான விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.  

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்