எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.11 - பிரபல காமெடி நடிகர் மயில்சாமிக்கு மிரட்டல் விடுத்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை விருகம்பாக்கம் வெங்கடேஸ்வரா நகரில் வசித்து வருபவர் பிரபல காமெடி நடிகர் மயில்சாமி.
இவருக்கு கடந்த ஞாயிற்றுகிழமையன்று இரவு 9.15 மணியளவில் மர்ம போன் ஒன்று வந்தது. அதில் பேசியவர்'எங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. பணத்தை கொடுக்க மறுத்தால் உங்களது ரகசியங்களை வெளியில் கூறிவிடுவோம்' என்று கூறி போனை துண்டித்தார்.
இதைதொடர்ந்து விருகம்பாக்கம் போலீசில் மயில்சாமி புகார் அளித்தன் பேரில் இன்ஸ்பெக்டர் கோபால் குரு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். முதற்கட்டமாக அந்த போன் நபர் யாருடையது? எங்கிருந்து தொடர்பு கொண்டார்? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், அதே பகுதியை சேர்ந்த ஆயிஷா (வயது 35) என்பவரின் போன் நம்பர் என தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


