முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானாவில் 2ம் நாளாக முழு அடைப்பு போராட்டம்

வியாழக்கிழமை, 24 பெப்ரவரி 2011      அரசியல்
Image Unavailable

நகரி, பிப்.24 - தனிமாநிலம் கேட்டு இரண்டு நாள் பந்து நடத்தப்போவதாக தெலுங்கானா கூட்டு போராட்டக்குழு அறிவித்தது. நேற்று முன்தினம் முதல்நாள் பந்து நடந்தது. நேற்று இரண்டாம் நாள் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி கல்வி நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகள், தியேட்டர்கள் மூடிக்கிடந்தன. பஸ்கள், ஆட்டோக்கள் எதுவும் ஓடவில்லை.
இதனால் தெலுங்கானா பகுதியில் உள்ள கரீம் நகர், வாராங்கல், மெதக் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. அப்போது அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் இருக்க பாதுகாப்பு படையினர், அதிரடிப்படையினர் ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்