இந்திய ரிசர்வ் வங்கியில் உள்ள 'ஓட்டுநர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சேலம் டிச.16 - அதிமுக அரசின் நல்ல திட்டங்களுக்காக கிடைத்த வெற்றிதான் ஏற்காடு இடைத் தேர்தல் வெற்றி என நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
ஏற்காடு இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் சரோஜாவை வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நேற்று முன் தினம் இரவு வாழப்பாடி பஸ் நிலையம் அருகே நடைப்பெற்றது. கூட்டத்திற்கு நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். வாழப்பாடி ஒன்றிய செயலாளரும், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவருமான சதீஷ்குமார் வரவேற்று பேசினார். ஏற்காடு எம்.எல்.ஏ.பி.சரோஜா, சேலம் புறநகர் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோவன்,ஏற்காடு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய செயலாளர் மணி, பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுக்கூட்டத்தில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி,வீட்டு வசதித் துறை அமைச்சர் வைத்தலிங்கம், ஊரக தொழில்துறை அமைச்சர் மோகன்,செம்மலை எம்.பி. மற்றும் கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட்டு, சமத்துவ மக்கள் கட்சி, இந்திய குடியரசு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இதில் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது. ஏற்காடு தொகுதி வாக்காளர்களுக்கு இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு மகத்தான வெற்றியை ஏற்காடு சட்டமன்ற தொகுதி அளித்ததன் மூலம் ஏற்காடு முதல்வர் ஜெயலலிதாவின் எக்கு கோட்டையாக உள்ளது என்படை நிரூபித்து காட்டியுள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதாவின் 2 1/2 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சென்றதன் மூலம் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது.எம்.ஜி.ஆர்.11 ஆண்டுகளும், ஜெயலலிதா 12 ஆண்டுகள் முடித்து 13 வது ஆண்டிலும் அடி எடுத்து வைத்துள்ளனர். கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் ஆளும் உரிமையை பெற்ற ஒரே இயக்கம் அதிமுக மட்டும்தான். அதிமுகவிற்கு ஜெயலலிதா பொறுப்பேற்று 25 ஆண்டுகளில் சோதனைகள்,வேதனைகளை எல்லாம் தாங்கி யாரும் அசைக்க முடியாத எக்கு கோட்டையாக அதிமுக திகழ்கிறது. தமிழக மக்கள் ஏற்ற தாழ்வுகள் இன்றி வாழும் வகையில் அவர்களின் சமூக பாதுகாப்பிற்காக ரூ.43 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்தவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாதான்.100 ஆண்டுகாலம் எதிர்கால சந்ததியினர்களஉம் அந்த பலனை பெறுவதற்காக ஜெயலலிதா லட்சிய நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார். 1 கோடியே 85 லட்சம் மக்களுக்கு விலையில்லா அரிசி வழங்கி உண்ண உணவு வழங்கியவர். வீடற்ற மக்களுக்கு ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் வீடுகள் ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.
ஏழை பெண்கள் திருமணத்திற்காக 25 ஆயிரம் பணமும், தாலிக்கு 4 கிராம் தங்கமும், அதுவும் படித்து பட்டதாரி பெண்ணாக இருந்தால் ரூ.50 ஆயிரமும்,தாலிக்கு 4 கிராம் தங்கமும் வழங்கி அவர்களது வாழ்வில் ஒளியேற்றி வருகிறார். இப்படிப்பட்ட நல்ல திட்டங்களுக்காகதான் ஏற்காடு தொகுதி மக்கள் இந்த வரலாற்று மிக்க வெற்றியை தந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் வீட்டு பெண்களின் பணி சுமையை குறைக்கும் வகையில் விலையில்லா மிக்சி,கிரைண்டர், மின்விசிறி போன்றவற்றை வழங்கி வருகிறார்.எல்லாவற்றிற்கும் மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ_மாணவிகளுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கல்வி தாயாக விளங்கி வருகிறார்.
யாரும் எந்த சூழ்நிலையிலும் குறை சொல்ல முடியாத ஆட்சியாக தமிழத்தில் அதிமுக வழங்கி வருகிறது.சமீபத்தில் நடந்த கூட்டுறவு சங்க தேர்தலிலும் வெற்றி பெற்றோம். இதன் மூலம் நமது இயக்கத்தைச் சேர்ந்த 2 லட்சத்து 4 ஆயிரம் பேர் பதவி பெற்றுள்ளனர். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழக மக்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. ஏற்காடு தேர்தலில் மிகப்பெரிய அடித்தளத்தை உருவாக்கி தந்துள்ளீர்கள். இதன் மூலம் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் தா வெற்றி பெறுவோம். கடந்த சட்டமன்ற தேர்தலிலும், அதன் பிறகு நடந்த இடைத் தேர்தலிலும் ஜெயலலிதா முதல்வராக வேண்டும் என்ற வாக்குகள் கேட்டோம். அதுபோல் வரும் பாராளுமன்ற தேர்தலிலும் நமது களப்பணியானது ஜெயலலிதாவை பிரதமராக்க வாக்களிக்க வேண்டும் என்று கேட்க வேண்டும். அதற்குதான் நிங்கள் பெற்று தந்த வெற்றி அடித்தளமாக அமைந்துவிட்டது என்று சொன்னேன்.இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் வாக்காளர்களுக்கு ஏற்காடு எம்.எல்.ஏ.சரோஜா நன்றி தெரிவித்து பேசினார். இதில் எம்.எல்.ஏ.க்கள் எம்.கே.செல்வராஜ்,விஜயலட்சுமி பழனிசாமி,பல்பாக்கி கிருஷ்ணன், எஸ்.கே.செல்வம்,ஜி.வெங்கடாஜலம்,மாதேஸ்வரன், முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாச்சலம், சேலம் மேயர் சவுண்டப்பன்,துணை மேயர் நடேசன்,மண்டல தலைவர்கள் தியாகராஜன்,மாதேஸ்வரன்,சண்முகம், பிரகாஷ், நகர கூட்டுறவு வங்கி தலைவர் எம்.துரைராஜ், மாணவரணி செயலாளர் சக்திவேல், மகளிரணி செயலாளர் ஜமுனா ராணி,பாசறை செயலாளர் டாக்டர் சதீஷ்குமார், எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் நெத்திமேடு முத்து, மேட்டூர் நகர சபை தலைவர் லலிதா சரவணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முடிவில் வாழப்பாடி பேரூராட்சி தலைவர் சிவகுமார் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பொரி முறுக்கு![]() 6 hours 4 min ago |
வாழைத்தண்டு மோர் கூட்டு![]() 3 days 3 hours ago |
முட்டைக்கோஸ் வடை![]() 1 week 6 hours ago |
-
புதிய மாவட்டமாக ஆரணி உருவாக்கப்படுமா? - சட்டசபையில் அமைச்சர் பதில்
01 Apr 2023சென்னை : ஆரணி, கும்பகோணம் புதிய மாவட்டமாக உருவாக்கப்படுமா என்பது குறித்து சட்டசபையில் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 01-04-2023.
01 Apr 2023 -
மாணவிகளிடம் தரக்குறைவான பேச்சு: மதுரை காமராஜர் பல்கலை. பேராசிரியர் கைது
01 Apr 2023மதுரை : மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் மாணவிகளிடம், சாதி ரீதியாக தரக்குறைவாக பேசிய வரலாற்றுத் துறை பேராசிரியர் எஸ்.சி., எஸ்.டி.
-
மாநகராட்சி, நகராட்சிகளில் வார்டுகளை மறுவரையறை செய்ய குழு அமைக்க முடிவு : அமைச்சர் கே.என். நேரு தகவல்
01 Apr 2023சென்னை : தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, திருச்செங்கோடு நகராட்சிக்குட்பட்ட வார்டுகளை மறுவரையறை செய்ய வேண்டும் என திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன்
-
காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம்: 64 சதவீத கால்வாய் வெட்டும் பணி நிறைவு: அமைச்சர் தகவல்
01 Apr 2023சென்னை : காவிரி - குண்டாறு இணைப்பு நடந்தே தீரும் என்றும் 64 சதவீத கால்வாய் வெட்டும் பணி நிறைவு பெற்றுள்ளது என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 10 மாநிலங்களில் ஜூன் வரை இயல்பைவிட அதிக வெப்பம் நிலவும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
01 Apr 2023பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 10 மாநிலங்களில் இம்மாதம் முதல் ஜூன் வரையிலான கோடைக்காலத்தில் இயல்பைவிட அதிக வெப்பநிலை காணப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து
-
கீழடி அருங்காட்சியகத்தை குடும்பத்தினருடன் பார்வையிட்ட நடிகர் சூர்யா, ஜோதிகா
01 Apr 2023சிவகங்கை : திரை உலகின் முன்னணி நடிகரான சூர்யா, தனது மனைவி ஜோதிகா, தந்தை சிவக்குமார் மற்றும் உறவினர்களுடன் கீழடி அருங்காட்சியகத்தை நேற்று பார்வையிட்டார்
-
இலவச ரேசன் பொருளுக்கு முண்டியடித்த மக்கள்: பாகிஸ்தானில் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழப்பு
01 Apr 2023இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச ரேசன் பொருள் வாங்க ஒரே சமயத்தில் மக்கள் குவிந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர
-
எக்ஸ்.பி.பி. வகை கொரோனா திரிபு தற்போது இந்தியாவில் பரவுகிறது : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
01 Apr 2023புதுடெல்லி : முதலில் அமெரிக்கா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, டென்மார்க் உள்ளிட்ட 14 நாடுகளில் காணப்பட்ட எக்ஸ்.பி.பி.
-
அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சி: படகு கவிழ்ந்ததில் 6 பேர் பலி
01 Apr 2023வாஷிங்டன் : அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சித்த போது படகு கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்தனர்.
-
வணிக பயன்பாடு கியாஸ் சிலிண்டர் விலை ரூ. 76 குறைப்பு
01 Apr 2023சென்னை : வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரின் விலை 76 ரூபாய் குறைக்கப்பட்டு உள்ளது.
-
கொலை வழக்கில் ஒரு ஆண்டு சிறைக்கு பிறகு சித்து விடுதலை
01 Apr 2023பாட்டியாலா : கொலை வழக்கில் ஒரு ஆண்டு சிறை தண்டனை முடிந்து நேற்று சிறையில் இருந்து சித்து விடுதலை ஆனார்.
-
ஆருத்ரா நிறுவன மோசடி: நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் விசாரிக்க போலீசார் முடிவு
01 Apr 2023சென்னை : ஆருத்ரா நிறுவன மோசடி தொடர்பாக நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
-
அமெரிக்காவில் சக்தி வாய்ந்த சூறாவளியில் சிக்கி 3 பேர் பலி
01 Apr 2023வாஷிங்டன் : அமெரிக்காவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த சூறாவளியில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.
-
மணிகண்ட ராஜேஷ் நடிக்கும் மை டியர் டயானா
01 Apr 2023நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சசோகதரரும், பிக் பாஸ் பிரபலமும், நடிகருமான மணிகண்ட ராஜேஷ் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் இணையத் தொடருக்கு 'மை டியர் டயானா' என பெயரிடப்பட்
-
இங்கிலாந்து பிரதமரின் வெளிநாடு பயணங்களுக்கு ரூ. 4.46 கோடி செலவு
01 Apr 2023லண்டன் : இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், வெளிநாட்டு பயணங்களுக்காக இந்திய ரூபாய் மதிப்பின்படி 4.46 கோடி செலவிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
-
இளைஞர்களின் முயற்சிகளுக்கு பிரதமர் மோடி உதவுகிறார்: மத்திய நிதி அமைச்சர் பேச்சு
01 Apr 2023இளைஞர்களின் புதிய முயற்சிகளுக்கு பிரதமர் மோடி உதவுகிறார் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
-
சூடானில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து 10 தொழிலாளர்கள் பலி
01 Apr 2023கார்டூம் : சூடானில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 10 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
-
படப்பிடிப்பைத் தொடங்கி வைத்த இளையராஜா
01 Apr 2023MAA AAI புரடக்ஷன்ஸ் LLP-ன் தயாரிப்பில் 'சஷ்டிபூர்த்தி' என்று பெயரிடப்பட்ட படத்தின் பூஜை இசைஞானி இளையராஜா ஸ்டுடியோவில் சமீபத்தில் நடைபெற்றது.
-
ரஷ்யாவிடம் இழந்த நிலங்களை மீட்போம்: ஜெலன்ஸ்கி சூளுரை
01 Apr 2023கீவ் : போர் தொடங்கி 400 நாள் போர் நிறைவடைந்த நிலையில், ரஷ்யாவிடம் இழந்த நிலங்களை மீட்போம் என உக்ரைன் அதிபர் சூளுரைத்துள்ளார்.
-
பத்து தல விமர்சனம்
01 Apr 2023பத்துதல என்கிற பெயர் வைக்கக் காரணம் படத்தில் சிம்புவின் பெயர் ஏ.ஜி.இராவணன் என்பதுதான். அதற்கேற்ற கம்பீரத்துடன் வருகிறார் சிம்பு.
-
‘இந்தியன் 2’ படப்பிடிப்புக்காக தைவான் சென்றார் கமல்ஹாசன்
01 Apr 2023‘இந்தியன் 2’ படப்பிடிப்புக்காக நடிகர் கமல்ஹாசன் தைவான் புறப்பட்டுச் சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.
-
பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழா
01 Apr 2023பொன்னியின் செல்வன் முதல் பாகம் சென்ற ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை செய்தது.
-
நாவல் படத்தை இயக்கும் ஐசுஜான்சி
01 Apr 2023கதை திரைக்கதை வசனம் எழுதி நாவல் என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் பெண் இயக்குனரான ஐசுஜான்சி.
-
வரலட்சுமி நடிக்கும் மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்
01 Apr 2023கொன்றால் பாவம் இயக்குனரின் அடுத்தபடைப்பு மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன், வரலட்சுமி சரத்குமார் மற்றும் ஆரவ் இருவரும் போலீஸ் அதிகாரிகளாக முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றன