முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

33 இன்ஸ்பெக்டர்கள் இட மாற்றம்

திங்கட்கிழமை, 16 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.17 - தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த 33 இன்ஸ்பெக்டர்களை இடம் மாற்றம் செய்து தமிழக காவல்துறை டிஜிபி ராமானுஜம் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக காவல்துறையில் காலியாக உள்ள இடங்களை நிரப்பும் பொருட்டு ஏடிஎஸ்பி யாக இருந்தவர்களை டிஎஸ்பியாகவும், டிஎஸ்பியாக இருந்தவர்களை எஸ்பியாகவும், இன்ஸ்பெக்டர்களாக இருந்தவர்களை உதவி கமிஷனராகவும் பதவி உயர்வு செய்து தமிழக காவல்துறை டிஜிபி ராமானுஜம் உத்தரவிட்டார்.

இதைதொடர்ந்து பல்வேறு போலீஸ் நிலையங்களில் காலியாக உள்ள இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்பும் வகையில் 33 இன்ஸ்பெக்டர்களை முதற்கட்டமாக இடம் மாற்றம் செய்து ராமானுஜம் அறிவித்துள்ளார்.சென்னையில் பணிபுரிந்து வந்த 19 இன்ஸ்பெக்டர்களை வெளிமாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில், குறிப்பாக வேப்பேரி இன்ஸ்பெக்டர் பழனிவேல், மத்திய குற்றபிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர்,  புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி, கோட்டை இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் அடங்குவர்.

மேலும், மற்ற மாவட்டங்களில் பணிபுரிந்து  வந்த  14 இன்ஸ்பெக்டர்கள்  பல்வேறு  இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்