எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,டிச.17 - நன்றி கெட்ட கட்சி என்று காங்கிரசை விமர்சனம் செய்ததற்காக தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கனிமொழியின் எம்.பி. பதவிக்காக ஆதரவு கேட்டபோது 2ஜி வழக்கு நினைவுக்கு வரவில்லையா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கருணாநிதிக்கு கம்யூனிஸ்ட் கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற தேர்தல் அடுத்தாண்டு வரவுள்ளது. அநேகமாக வரும் மே மாதம் இந்த தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான அட்டவணை வரும் மார்ச் மாதம் வெளியாகும் என்றும் தெரிகிறது. இதனிடையே கூட்டணி குறித்து ஆலோசிப்பதற்காக சென்னையில் நேற்று முன்தினம் தி.மு.க. பொதுக்குழு கூடியது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுக்குழு உறுப்பினர்கள் காங்கிரசுடன் கூட்டணி வேண்டாம் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி,காங்கிரசுடன் தேர்தல் கூட்டணி கிடையாது என்று திட்டவட்டமாக அறிவித்தார். மேலும் காங்கிரஸ் கட்சியை நன்றி கெட்ட கட்சி என்று அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவரது இந்த விமர்சனம் காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் உள்பட பல்வேறு தலைவர்களும் கருணாநிதிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். கனிமொழியின் எம்.பி.பதவிக்காக காங்கிரசிடம் ஆதரவு கேட்டபோது கருணாநிதிக்கு 2ஜி வழக்கு நினைவுக்கு வரவில்லையா? என்று ஞானதேசிகன் கேள்வி எழுப்பியுள்ளார். 9 ஆண்டு காலம் பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு தற்போது நன்றி இல்லாமல் பேசுவது கருணாநிதிதான் என்று காங்கிரஸ் தலைவர்கள் குமறுகிறார்கள்.
இளங்கோவன்:_
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கருத்தை ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் கண்டித்து உள்ளார். அவர் கூறியதாவது:_ காங்கிரஸ் மீது இப்போது கூறும் குறைகளை கருணாநிதி இதற்கு முன்பும் கூறிவந்துள்ளார். இதே கருணாநிதி சில மாதங்களுக்கு முன் தன் மகளின் எம்.பி.பதவிக்காக காங்கிரசிடம் ஆதரவு கேட்டது ஏன்? இருந்தாலும் அவரது அறிவிப்பு எங்களுக்கு நிம்மதியை தந்திருக்கிறது. பெரிய சுமை நீங்கிவிட்டதாக கருதுகிறோம். தி.மு.க.வினரால் எங்களுக்கு ஏற்பட்ட கரை நீங்கிவிட்டதாகவே உணருகிறேன் என்று கூறினார்.
விஜயதாரணி
தி.மு.க.வுடன் நீண்ட நெடுங்காலமாக காங்கிரஸ் உறவு வைத்திருந்தது. ஆனால் ஒருபோதும் தி.மு.க.வுக்கு துரோகம் செய்தது இல்லை. நாங்கள் துரோகம் செய்ததாக கூறுகிறார்கள். மேல்சபை தேர்தலில் கனிமொழி எம்.பி.க்கு ஆதரவு கொடுத்ததை நினைத்துப்பார்க்க வேண்டும். 2ஜி வழக்கு விவகாரத்தில் காங்கிரஸ் நேர்மையாகவே நடந்து கொண்டது. முறையான விசாரணை நடந்துதான் நடவடிக்கையும் எடுக்கப்பட்டது என்று விஜயதாரணி கூறியுள்ளார். தி.மு.க.விலகியதால் காங்கிரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அவர் கூறினார்.
நாராயாணசாமி
9 ஆண்டுகள் உறவு வைத்திருந்தார்கள். இப்போது என்ன குறையை கண்டார்கள். என்பதுதான் புரியவில்லை என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். ஏற்கனவே கூட்டணியில் இருந்து அவர்கள் விலகினார்கள். அதை அதிகாரப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள். அவ்வளவுதான். யாருடன் கூட்டணி என்பதை காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும் என்று நாராயணசாமி மேலும் கூறினார்.
கிட்டத்தட்ட 9 ஆண்டு காலம் காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி வைத்திருந்தது. 2ஜி வழக்கில் ஆ.ராசாவும் கனிமொழியும் கைதான பிறகுதான் அந்த கூட்டணியில் அவர்களுக்கு ஒரு கசப்பு உணர்வு ஏற்பட்டது. அதுவரை மத்திய காங்கிரஸ் அரசை விமர்சிக்காத கருணாநிதி ஈழத்தமிழர்கள் பிரச்சினை உள்பட பல்வேறு பிரச்சினைகளில் காங்கிரசை மெல்ல மெல்ல விமர்சிக்க ஆரம்பித்தார். தற்போது ஒரே அடியாக உறவை முறித்துக்கொண்டுவிட்டார். ஆனால் இதை சந்தர்ப்பவாதம் என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள்.
கருணாநிதியின் விமர்சனத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியனும் கண்டித்து உள்ளார். இதுகுறித்து தா.பாண்டியன் கூறியதாவது:_
இலங்கையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது கருணாநிதிக்கு வராத கோபம் இப்போது வந்திருக்கிறது. காரணம் 2ஜி வழக்கில் ஆ.ராசாவையும் கனிமொழியையும் சிக்க வைத்தது காங்கிரஸ், சிறையில் தள்ளியது காங்கிரஸ் என்று கருணாநிதி கூறுகிறார். 2ஜி வழக்கு முடியும் தருவாயில் அவர் இப்படி சொல்கிறார். ஆக குடும்பமா? நாடா? என்ற கேள்வி வரும்போது குடும்பத்தை முன்னிலைப்படுத்துவதுதான் அவருக்கு வழக்கம். தமிழர்கள் கொல்லப்பட்டபோது வராத கோபம் இப்போது அவருக்கு வருகிறது என்றால் எல்லாம் குடும்பப்பாசம்தான். தன் கட்சியினரை 2ஜி வழக்கில் சிக்க வைத்துவிட்டார்கள் என்ற கோபம்தான் அவரது விமர்சனத்திற்கு காரணம். இவ்வாறு தா.பாண்டியன் கருணாநிதி மீது அடுக்ககாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் கருணாநிதியை கண்டித்து உள்ளனர். இது கருணாநிதியின் சந்தர்ப்பவாத அரசியல் என்றும் அவர் ஒரு நல்ல நடிகர் என்றும் அவரை அவரது கட்சியினரே நம்பமாட்டார்கள் என்றும் பல்வேறு அமைப்பின் தலைவர்கள் தெரிவித்தனர். கனிமொழியின் எம்.பி.பதவிக்காக ஆதரவு கேட்டபோது 2ஜி வழக்கு பற்றி கருணாநிதியின் நினைவுக்கு வராதது ஏன் என்றும் சில பிரமுகர்கள் கேள்வி எழுப்பினர். கருணாநிதியின் விமர்சனம் காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் மட்டுமல்ல சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மத்தியிலும் வியப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
வாக்குகளுக்காக பீகாரை சுரண்டுகிறார்கள்: தே.ஜ.க. கூட்டணி மீது தேஜஸ்வி தாக்கு
30 Oct 2025பாட்னா, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, தொழில்களை எல்லாம் குஜராத்தில் அமைத்துவிட்டு, பீகார் மாநிலத்தை வாக்குகளுக்காக சுரண்டி வருகிறது என ஆர்.ஜே.டி.
-
தேசியத் தலைவர்கள் விழாவை எல்லா சமூகத்தினரும் கொண்டாட வேண்டும்: துணை ஜனாதிபதி வேண்டுகோள்
30 Oct 2025ராமநாதபுரம், வருகின்ற காலத்திலாவது எல்லா தேசியத் தலைவர்களுடைய விழாவையும் எல்லா சமூகத்தினரும் கொண்டாடுகின்ற விழாவாக மாற்ற வேண்டும் என பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மரியா
-
63-வது குருபூஜை - 118-வது ஜெயந்தி விழா: பசும்பொன் தேவர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
30 Oct 2025மதுரை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (30.10.2025) ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில், முத்துராமலிங்கத் தேவரின் 118-வது பிறந்த நாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-10-2025.
30 Oct 2025 -
பி.எம்.ஸ்ரீ திட்ட ஒப்பந்தத்தில் இருந்து விலகுகிறது கேரள அரசு
30 Oct 2025திருவனந்தபுரம், பி.எம்.ஸ்ரீ திட்ட ஒப்பந்தத்தில் இருந்து விலக கேரள அரசு முடிவு செய்துள்ளது.
-
கேரளாவில் திருமண விழாவில் ருசிகரம்: ‘கியூ ஆர்’ கோடு மூலம் ‘மொய்’ வசூல்
30 Oct 2025எர்ணாகுளம், கேரளாவில் நடந்த திருமண விழாவில் ‘கியூ ஆர்’ கோடு மூலம் ‘மொய்’ வசூலிக்கப்பட்டது.
-
ஐ.பி.எல். கொல்கத்தா அணியின் புதிய பயிற்சியாளரானார் அபிஷேக்
30 Oct 2025கொல்கத்தா, ஐ.பி.எல். டி20 கிரிக்கெட்டில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
-
ஜப்பான் பிரதமருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
30 Oct 2025புதுடெல்லி, ஜப்பான் பெண் பிரதமருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
-
சென்னையில் நாய், பூனை வளர்க்க உரிமம் பெறாவிட்டால் அபராதம்
30 Oct 2025சென்னை, சென்னையில் நாய், பூனை வளர்க்க உரிமம் பெறாவிட்டால் இனி ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரித்துள்ளது.
-
சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் 150 சிக்சர் அடித்த 2வது வீரர்: சூர்யகுமார் புதிய மைல் கல்
30 Oct 2025கான்பெர்ரா, சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக இந்த மைகல்லை (150 சிக்சர்கள்) எட்டிய 2-வது வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார்.
-
பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு 'பாரத ரத்னா' வழங்க பரிந்துரை செய்வோம்: நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
30 Oct 2025மதுரை, பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு 'பாரத ரத்னா' வழங்க பரிந்துரை செய்வோம் என்று நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
டெஸ்ட் வரலாற்றில் முதல் முறை: உணவு இடைவேளைக்கு முன் தேநீர் இடைவேளை: இந்தியா - தெ.ஆப்பிரிக்க போட்டியில் அறிமுகம்
30 Oct 2025மும்பை, டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக உணவு இடைவேளைக்கு முன் தேநீர் இடைவேளை நடைமுறைக்கு வருகிறது.
-
தமிழகத்தில் வரும் 5-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு
30 Oct 2025சென்னை, கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வரும் 5-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய
-
தங்கம் விலை உயர்வு
30 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று காலை கிராமுக்கு 225 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,100-க்கும், சவரனுக்கு 1,800 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.88,800-க்கும் விற்பனையானது.
-
தமிழ் உணர்வை ஊட்டி வளர்த்தவர்: சீமானுக்கு வைகோ திடீர் புகழாரம்
30 Oct 2025ராமநாதபுரம், தமிழ் உணர்வை ஊட்டி வளர்த்தவர் சீமான் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
-
மதுரையில் தேவர் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மரியாதை
30 Oct 2025மதுரை, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
-
திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு: தேவஸ்தான தலைவர் தகவல்
30 Oct 2025திருப்பதி, திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு அளித்த பேட்டியில் கூறியதாவது:- முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவின்படி எஸ். சி. மற்றும் எஸ்.டி.
-
பனையூர் த.வெ.க. அலுவலகத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் படத்திற்கு விஜய் மலர்தூவி மரியாதை
30 Oct 2025சென்னை, பனையூரில் அமைந்துள்ள த.வெ.க. அலுவலகத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் உருவ படத்திற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
-
விஜயுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கம்
30 Oct 2025மும்பை, விஜயுடன் கூட்டணி பேச்சுவார்த்தை என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, கூட்டணி கட்சியுடன் ஆலோசனை செய்தே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்: த.வெ.க எதிர்ப்பு
30 Oct 2025சென்னை, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை நாங்கள் எதிர்க்கிறோம் - த.வெ.க கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் கூறினார்.
-
பசும்பொன்னில் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், தினகரன் சந்திப்பு
30 Oct 2025சென்னை, பசும்பொன்னில் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், டி.டி.வி.தினகரன் ஒன்றாக சந்தித்துக் கொண்டனர்.
-
33 ஆண்டுகளுக்கு பிறகு அணு ஆயுத சோதனை நடத்துகிறது அமெரிக்கா..!
30 Oct 2025நியூயார்க், அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து பிற நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
-
தமிழக வீராங்கனைக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்: துணை முதல்வர் உதயநிதி
30 Oct 2025சென்னை, தடகளத்தில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகையை துணை முதல்வர் உதயநிதி வழங்கி பாராட்டினார்.
-
பணி அனுமதியை புதுப்பிக்கும் விவகாரம்: அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம்
30 Oct 2025நியூயார்க், அமெரிக்காவில் பணி அனுமதியை புதுப்பிக்கும் விவகாரத்தில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ஏள புதிய முடிவால் அங்கு பணிபுரியும் ஏராளமான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயத்தை
-
நெல் கொள்முதல் விவகாரம்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
30 Oct 2025மதுரை, நெல் கொள்முதல் விவகாரத்தில் தி.மு.க. அரசு பச்சை பொய் கூறுகிறது என்ற எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார். மேலும், அ.தி.மு.க.


