எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொழும்பு, டிச. 22 - இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு உள்நாட்டிலேயே தீர்வு காண வேண்டும் என அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்ஷே அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கையில் அமைதியும், சமாதானமும், நிலவ இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் விக்ணேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைவர் ஆர்.சம்பந்தன் ஆகியோர் தன்னுடன் இணைந்து பணியாற்றுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ராஜபக்ஷே இதனை தெரிவித்தார்.
தேசத்தில் சமாதானம் ஏற்பட அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து பாடுபடவேண்டும் என்றார். தமிழர் பிரச்சினையில், வெளிநாட்டு தலையீட்டுக்காக காத்திருப்பதைவிட உள்நாட்டிலேயே தீர்வு காண்வதால் நாம் பெருமிதம் கொள்ளலாம். மேலும் இது எதிர்கால சந்ததியனருக்கு நாம் செய்யும் கடமையாகும் என தெரிவித்தார்.
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் மாகாணத் தேர்தல் நடைபெற்றது இலங்கை ஜனநாயகத்தின் ஒரு மைல்கல் என்றும் கூறினார்.
2014 மார்ச் மாதம் ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கையின் மனித உரிமைகள் குறித்த விபரங்கள் விவாதத்துக்கு வரவிருக்கும் நிலையில் ராஜபக்ஷேவின் இந்த அழைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


