முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின் கம்பங்கள் வழியாக டி.வி கேபிள் அனுமதி கேட்டு மனு

திங்கட்கிழமை, 23 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.24 - சென்னையில் உள்ள ஆயிரக்கணக்கான தெரு விளக்கு மின்கம்பங்களில் டி.வி.கேபிள் மற்றும் தொலைபேசி வயர்கள் அனுமதியில்லாமல் கட்டப்பட்டிந்தன. இது போன்று அனுமதி பெறாத கேபிள் நிறுவனங்களின் வயர்கள் துண்டிக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரித்திருந்தது. இந்த நிலையில் வயர்களுக்கு அனுமதி கேட்டு பல நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:_

இதுவரை 141 நிறுவனங்கள் அனுமதிக்காக விண்ணப்பித்துள்ளன. அவற்றின் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து வருகிறோம். இந்த நிறுவனங்கள் மொத்தமாக 2,700 கி.மீ. தூரத்திற்கு கட்டப்பட்ட வயர்களுக்கு அனுமதி கோரியுள்ளன. 

இன்னும் ஒரு வாரத்தில் அனுமதிகள் வழங்கப்பட்டு, அடையாள அட்டைகள் தொங்கவிடப்படும். அதன் பின்னர் கட்டணம் வசூலிக்கப்படும். அதன் பின்னரும் அனுமதி இல்லாமல் வயர்கள் கொண்டு செல்லப்பட்டால் துண்டிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony