எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, டிச.25 - இந்தியாவை வழி நடத்தும் அதிகாரத்தை முதல்வர் ஜெயலலிதாவிற்கு வழங்குவோம் என்று எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அ.தி.மு.க.வினர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
அதிமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆரின் 26_வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அக்கட்சியின் பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிக்கனி பறிக்க தீவிர களப்பணி ஆற்றுவோம் என்று எம்ஜிஆர் நினைவிடம் முன்பாக அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றனர்.
அதிமுக நிறுவனத் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆர் கடந்த 1987ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி காலமானார். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 24ம் தேதி அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் அவரது நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு இன்று காலை 10.30 மணிக்கு அதிமுக பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா எம்ஜிஆர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து எம்ஜிஆர் நினைவிடத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த சிறிய மேடையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அதிமுக பொருளாளரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் உறுதிமொழிகளை வாசிக்க முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் உட்பட அனைத்து பிரிவு நிர்வாகிகளும் அங்கு திரளாக கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் திரும்பச்சொல்லி உறுதியேற்றனர்.
உறுதிமொழி விபரம் வருமாறு:_
ழூ அதிமுகவை உருவாக்கி தமிழக மக்களின் நெஞ்சங்களில் குடிகொண்டிருக்கும் எம்ஜிஆரின் புகழையும், மனிதாபிமான உணர்வுகளையும் எந்நாளும் மனதில் கொண்டு வாழ்வோம்.
ழூ முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசின் பல்வேறு திட்டங்களையும், சாதனைகளையும் கிராமங்கள் தோறும் பரப்ப உறுதி ஏற்போம்.
ழூ எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக வெற்றி சிகரத்தை தொடுவதற்கு முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓய்வறியா உழைப்பும் ஒப்பற்ற தியாகமும்தான் காரணம் என்பதை ஒருநாளும் மறவாது இருக்க உறுதி கூறுகிறோம்.
ழூ 'எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே' _ என்ற தூய உள்ளத்தோடு பணியாற்றும் முதலமைச்சர் ஜெயலலிதா தமிழகத்திற்கும், அதிமுகவிற்கும் ஆற்றிவரும் அரும்பணிகளுக்கு எந்நாளும் நன்றியோடும், உறுதியோடும் இருப்போம்.
ழூ பொது வாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு மக்கள் நலன் காக்க தன்னலம் இன்றி பாடுபடும் அதிமுக பொதுச் செயலாளர் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மனம் மகிழும் வண்ணம் தூய தொண்டராக மக்கள் பணியாற்றுவோம்.
ழூ அறிவும் ஆற்றலும் மிக்க தலைவருமான முதலமைச்சர் ஜெயலலிதாவின் மூலமாக இந்திய திரு நாட்டிற்க்கு புதுவாழ்வு ஏற்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற இந்நேரத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலில் அதிமுக முழுமையான வெற்றியை பெற அள்ளும் பகலும் அயராது உழைப்போம்.
ழூ தமிழ் மக்களை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய அரசின் துரோகங்களை மக்களிடம் எடுத்துச் சொல்வோம்.
ழூ தமிழக மக்களின் அடிப்படை வாழ்வாதாரமான காவிரி நதி நீர் பிரச்சனையில் முதலமைச்சர் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தையும் தமிழக மக்களிடம் எடுத்துச் சொல்வோம்.
ழூ இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்த தீர்மானங்கள் தான் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இன்று உலக நாடுகள் பலவும் குரல் எழுப்புகின்ற சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது என்ற உண்மையை தமிழக மக்களிடம் விலக்கிக் கூறுவோம்.
ழூ தமிழக முதலமைச்சர் தான் இந்திய நாட்டின் சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை மக்களிடம் எடுத்துரைப்போம்.
ழூ அம்மா உணவகம், அம்மா குடிநீர் திட்டம், பண்ணை பசுமை காய்கறித் திட்டம் போன்ற திட்டங்களை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்திய முதலமைச்சர் ஜெயலலிதாவின் இத்தகைய திட்டங்களை இந்திய நாட்டிற்கே விரைந்து வர பணியாற்றுவோம்.
ழூ நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் சொத்து தனியார் வசம் சென்றுவிடாமல் மதியுகமாய் செயல்பட்ட முதலமைச்சர் நாட்டிற்கே தலைமை ஏற்கும் நிலை வந்தால் மட்டுமே இந்திய நாட்டின் இயற்கை வளங்கள் அனைத்தும் பாதுகாக்கப்படும் என்ற உண்மையை மக்களுக்கு எடுத்துச் சொல்வோம்.
ழூ எப்பொழுதும் ஏழை எளிய மக்களின் நலனுக்காகவே சிந்தித்து அவர்களது வாழ்வு ஏற்றம் பெறுவதற்காகவே திட்டங்களை தீட்டி செயல்படுத்திவரும் முதலமைச்சருடைய வளர்ச்சித் திட்டங்கள் மக்களிடம் முழுமையாக சென்றடைய பணியாற்றுவோம்.
ழூ தமிழக மக்களுக்கு உண்மையான உணவுப் பாதுகாப்பினை ஏற்படுத்தியுள்ள முதலமைச்சர்தான் பசிப்பிணி போக்கும் அன்னமிட்ட கை என்ற உண்மையை மக்களிடம் எடுத்துச் சொல்வோம்.
ழூ மக்களின் உடமைக்கும், உரிமைக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியை நடத்திய கருணாநிதியின் அராஜகங்களை முறியடித்து மக்களுக்கு பாதுகாப்பையும் நிறைவான வாழ்வையும் அளித்திருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான பொற்கால ஆட்சிக்கு மக்கள் பேராதரவை அளித்திட அதிமுக தொண்டர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பை செய்ய உறுதி ஏற்போம்.
ழூ விரைவில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு உட்பட்ட 40" தொகுதிகளிலும் அதிமுகவை மகத்தான வெற்றி பெறச் செய்து எதிர்கால இந்தியாவை வழிநடத்தும் அதிகாரத்தை முதலமைச்சர் ஜெயலலிதாவின் பொற்கரங்களில் வழங்கும் வகையில் அர்ப்பணிப்போடு கூடிய கடும் உழைப்பின் மூலம் முழு ஆற்றலோடு களப்பணி ஆற்றுவோம்.
இவ்வாறு உறுதி ஏற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தங்கம் விலை சற்று சரிவு
04 Jul 2025சென்னை, தங்கம் விலை நேற்று சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72,400 ரூபாய்க்கும் விற்பனையானது.
-
அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்
04 Jul 2025சிவகங்கை, திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் பிரேதபரிசோதனை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-07-2025.
04 Jul 2025 -
ஆபரேஷன் சிந்தூரின் போது 3 எதிரிகளை எதிர் கொண்டோம்: ராணுவ துணை தலைமை தளபதி
04 Jul 2025புதுடெல்லி, ஆபரேஷன் சிந்தூரின் போது ஒரு எல்லையில் பாகிஸ்தான், சீனா, துருக்கி என 3 எதிரிகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது என்று ராணுவத் துணைத் தலைமை தளபதி ராகுல் ஆர்.
-
பரந்தூர் விமான நிலையம்: முதல்வருக்கு விஜய் கடிதம்
04 Jul 2025சென்னை : பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படாது என்கிற உத்தரவாதத்தை அப்பகுதி மக்களுக்கு உடனடியாக அளிக்க வேண்டும் என என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு த
-
அரசு ஊழியர்களுக்கு அக். 1 முதல் ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
04 Jul 2025சென்னை, தமிழக அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சரண், வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
திருப்பூர் மாவட்டம் புதுப்பெண் தற்கொலை வழக்கில் மாமியார் கைது
04 Jul 2025திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் அருகே புதுப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
-
டிரினிடாட் - டொபாகோ பிரதமருக்கு கும்பமேளா புனிதநீரை பரிசாக வழங்கினார் பிரதமர் மோடி
04 Jul 2025போர்ட் ஆப் ஸ்பெயின் : டிரினிடாட்- டொபாகோ நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசருக்கு மகாகும்பமேளாவின் புனித நீரையும், ரா
-
வரும் 2026 சட்டப்பேரவை தேர்தல் த.வெ.க. முதல்வர் வேட்பாளர் விஜய்: பனையூர் கூட்டத்தில் 20 தீர்மானங்கள்
04 Jul 2025சென்னை, 2026 சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய். த.வெ.க. தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் தங்கும் விடுதி: முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
04 Jul 2025சென்னை, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.10.57 கோடி செலவில் கட்டப்பட்ட பக்தர்கள் தங்கும் விடுதியை திறந்து வைத்து, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலின் 6 பணியா
-
இமாச்சல்லில் மேகவெடிப்பு: 69 பேர் பலி; ரூ.700 கோடி சேதம்
04 Jul 2025சிம்லா : இமாச்சல பிரதேச மாநிலத்தில் பருவமழைக் காரணமாக ஏற்பட்ட மேகவெடிப்பு, மழை வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் 69 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
04 Jul 2025மேட்டூர் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 19,286 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
அஜித்குமார் கொலை வழக்கில் 3-வது நாளாக மாவட்ட நீதிபதி விசாரணை
04 Jul 2025சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் திருப்புவனத்தில் 3-வது நாளாக மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தினார்.
-
கை விரல் ரேகை பதியாதவர்களின் ரேஷன் கார்டுகள் செல்லாதா..? தமிழக அரசு விளக்கம்
04 Jul 2025சென்னை, வரும் ஜூன் 30-ம் தேதிக்குள் கை விரல் ரேகை பதியாதவர்களின் ரேஷன் கார்டுகள் செல்லாது என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு தமிழக அரசு விளக்கமளித்துள
-
நகர வளர்ச்சியை நோக்கமாக கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டம்: : முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
04 Jul 2025சென்னை : தமிழ்நாட்டின் நகர வளர்ச்சியை நோக்கமாக கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
தி.மு.க., பா.ஜ.க.வுடன் என்றைக்கும் த.வெ.க. கூட்டணி இல்லை: விஜய்
04 Jul 2025சென்னை, தி.மு.க., பா.ஜ.க.வுடன், என்றைக்கும் நேரடியாகவோ, மறைமுகவோ கூட்டணி இல்லை, என்பதில் த.வெ.க.
-
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது
04 Jul 2025நீலகிரி : அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
-
திபெத் விவகாரத்தில் இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை
04 Jul 2025பெய்ஜிங் : திபெத் விவகாரத்தில் தலையிடுவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
அஜித்குமார் கொலை வழக்கு: நீதிபதியிடம் திருப்புவனம் அரசு மருத்துவர் சாட்சியம்
04 Jul 2025சிவகங்கை : உயரதிகாரிகள் கூறியதாக, போலீஸார் அஜித்குமார் உடலை எடுத்துச் சென்றனர் என மாவட்ட நீதிபதியிடம் திருப்புவனம் அரசு மருத்துவர் கார்த்திகேயன் சாட்சியம் அளித்தார்.
-
பா.ம.க. கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது: அருள் எம்.எல்.ஏ.
04 Jul 2025சென்னை, ஜி.கே.மணி அனுமதி இல்லாமல் பா.ம.க. கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது என்று அருள் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
-
சொகுசு கப்பலுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி அ.தி.மு.க. மறியல் போராட்டம்
04 Jul 2025புதுச்சேரி : சுற்றுலா சொகுசு கப்பல் வருகையை எதிர்த்து அ.தி.மு.க. மறியல் போராட்டம் நடத்தியது.
-
இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: காசாவில் 15 பேர் பலி
04 Jul 2025காசா சிட்டி : காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
பரபரப்பான வாக்கெடுப்பில் அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி மசோதா 4 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றம்
04 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிமுகம் செய்த 'பிக் பியூட்டிபுல் பில்' எனப்படும் வரி மற்றும் செலவு மசோதா காங்கிரசில் குறுகிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்
-
ஓராண்டில் 17,702 பேர் தேர்வு: டி.என்.பி.எஸ்.சி. தகவல்
04 Jul 2025சென்னை : டி.என்.பி.எஸ்.சி.
-
கால்நடை பராமரிப்புத்துறைக்கு ரூ.25 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
04 Jul 2025சென்னை, சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ரூ.25.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டால