எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, டிச.25 - இந்தியாவை வழி நடத்தும் அதிகாரத்தை முதல்வர் ஜெயலலிதாவிற்கு வழங்குவோம் என்று எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அ.தி.மு.க.வினர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
அதிமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆரின் 26_வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அக்கட்சியின் பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிக்கனி பறிக்க தீவிர களப்பணி ஆற்றுவோம் என்று எம்ஜிஆர் நினைவிடம் முன்பாக அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றனர்.
அதிமுக நிறுவனத் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆர் கடந்த 1987ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி காலமானார். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 24ம் தேதி அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் அவரது நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு இன்று காலை 10.30 மணிக்கு அதிமுக பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா எம்ஜிஆர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து எம்ஜிஆர் நினைவிடத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த சிறிய மேடையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அதிமுக பொருளாளரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் உறுதிமொழிகளை வாசிக்க முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் உட்பட அனைத்து பிரிவு நிர்வாகிகளும் அங்கு திரளாக கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் திரும்பச்சொல்லி உறுதியேற்றனர்.
உறுதிமொழி விபரம் வருமாறு:_
ழூ அதிமுகவை உருவாக்கி தமிழக மக்களின் நெஞ்சங்களில் குடிகொண்டிருக்கும் எம்ஜிஆரின் புகழையும், மனிதாபிமான உணர்வுகளையும் எந்நாளும் மனதில் கொண்டு வாழ்வோம்.
ழூ முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசின் பல்வேறு திட்டங்களையும், சாதனைகளையும் கிராமங்கள் தோறும் பரப்ப உறுதி ஏற்போம்.
ழூ எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக வெற்றி சிகரத்தை தொடுவதற்கு முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓய்வறியா உழைப்பும் ஒப்பற்ற தியாகமும்தான் காரணம் என்பதை ஒருநாளும் மறவாது இருக்க உறுதி கூறுகிறோம்.
ழூ 'எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே' _ என்ற தூய உள்ளத்தோடு பணியாற்றும் முதலமைச்சர் ஜெயலலிதா தமிழகத்திற்கும், அதிமுகவிற்கும் ஆற்றிவரும் அரும்பணிகளுக்கு எந்நாளும் நன்றியோடும், உறுதியோடும் இருப்போம்.
ழூ பொது வாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு மக்கள் நலன் காக்க தன்னலம் இன்றி பாடுபடும் அதிமுக பொதுச் செயலாளர் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மனம் மகிழும் வண்ணம் தூய தொண்டராக மக்கள் பணியாற்றுவோம்.
ழூ அறிவும் ஆற்றலும் மிக்க தலைவருமான முதலமைச்சர் ஜெயலலிதாவின் மூலமாக இந்திய திரு நாட்டிற்க்கு புதுவாழ்வு ஏற்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற இந்நேரத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலில் அதிமுக முழுமையான வெற்றியை பெற அள்ளும் பகலும் அயராது உழைப்போம்.
ழூ தமிழ் மக்களை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய அரசின் துரோகங்களை மக்களிடம் எடுத்துச் சொல்வோம்.
ழூ தமிழக மக்களின் அடிப்படை வாழ்வாதாரமான காவிரி நதி நீர் பிரச்சனையில் முதலமைச்சர் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தையும் தமிழக மக்களிடம் எடுத்துச் சொல்வோம்.
ழூ இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்த தீர்மானங்கள் தான் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இன்று உலக நாடுகள் பலவும் குரல் எழுப்புகின்ற சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது என்ற உண்மையை தமிழக மக்களிடம் விலக்கிக் கூறுவோம்.
ழூ தமிழக முதலமைச்சர் தான் இந்திய நாட்டின் சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை மக்களிடம் எடுத்துரைப்போம்.
ழூ அம்மா உணவகம், அம்மா குடிநீர் திட்டம், பண்ணை பசுமை காய்கறித் திட்டம் போன்ற திட்டங்களை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்திய முதலமைச்சர் ஜெயலலிதாவின் இத்தகைய திட்டங்களை இந்திய நாட்டிற்கே விரைந்து வர பணியாற்றுவோம்.
ழூ நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் சொத்து தனியார் வசம் சென்றுவிடாமல் மதியுகமாய் செயல்பட்ட முதலமைச்சர் நாட்டிற்கே தலைமை ஏற்கும் நிலை வந்தால் மட்டுமே இந்திய நாட்டின் இயற்கை வளங்கள் அனைத்தும் பாதுகாக்கப்படும் என்ற உண்மையை மக்களுக்கு எடுத்துச் சொல்வோம்.
ழூ எப்பொழுதும் ஏழை எளிய மக்களின் நலனுக்காகவே சிந்தித்து அவர்களது வாழ்வு ஏற்றம் பெறுவதற்காகவே திட்டங்களை தீட்டி செயல்படுத்திவரும் முதலமைச்சருடைய வளர்ச்சித் திட்டங்கள் மக்களிடம் முழுமையாக சென்றடைய பணியாற்றுவோம்.
ழூ தமிழக மக்களுக்கு உண்மையான உணவுப் பாதுகாப்பினை ஏற்படுத்தியுள்ள முதலமைச்சர்தான் பசிப்பிணி போக்கும் அன்னமிட்ட கை என்ற உண்மையை மக்களிடம் எடுத்துச் சொல்வோம்.
ழூ மக்களின் உடமைக்கும், உரிமைக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியை நடத்திய கருணாநிதியின் அராஜகங்களை முறியடித்து மக்களுக்கு பாதுகாப்பையும் நிறைவான வாழ்வையும் அளித்திருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான பொற்கால ஆட்சிக்கு மக்கள் பேராதரவை அளித்திட அதிமுக தொண்டர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பை செய்ய உறுதி ஏற்போம்.
ழூ விரைவில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு உட்பட்ட 40" தொகுதிகளிலும் அதிமுகவை மகத்தான வெற்றி பெறச் செய்து எதிர்கால இந்தியாவை வழிநடத்தும் அதிகாரத்தை முதலமைச்சர் ஜெயலலிதாவின் பொற்கரங்களில் வழங்கும் வகையில் அர்ப்பணிப்போடு கூடிய கடும் உழைப்பின் மூலம் முழு ஆற்றலோடு களப்பணி ஆற்றுவோம்.
இவ்வாறு உறுதி ஏற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: புள்ளி பட்டியல் 'ஏ' பிரிவில் முதலிடத்தில் இந்திய அணி
15 Sep 2025துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் தற்போது வரை 6 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்த நிலைியல் புள்ளி பட்டியலில் ஏ பிரிவில் இந்திய அணியும் பி பிரிவில் ஆப்கானிஸ்தானும்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-09-2025.
15 Sep 2025 -
வக்பு திருத்த சட்டத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு: சில விதிகளுக்கு இடைக்காலத் தடை
15 Sep 2025புதுடெல்லி, மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு முழுவதுமாக தடை எந்த முகாந்திரமும் இல்லை என்று தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், வக்ஃப் சட்டத் திருத்த சட்
-
நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் அமைச்சரவையில் 3 பேர் பதவியேற்பு
15 Sep 2025காத்மாண்டு : நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் புதிய அமைச்சரவையில் 3 பேர் அமைச்சர்களாக நேற்று பதவியேற்றனர்.
-
மருத்துவ படிப்பை பாதியில் உதறிய மதராசி பட நடிகர்
15 Sep 2025சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான மதராசி படத்தில் துப்பாக்கியை எடுத்து சித்தார்தா சங்கரிடம் கொடுக்கும் காட்சி இருக்கும். திரையில் இந்த காட்சி வரும்போத
-
மிராய் திரைவிமர்சனம்
15 Sep 2025பேரரசர் அசோகர் சாகாவரம் பெறக்கூடிய ரகசியங்களை 9 புத்தகங்களில் எழுதி அதனை ஒரு இடத்தில் மறைத்து வைக்கிறார்.
-
விஜய் வருகையால் அனைத்து கட்சிகளின் வாக்குகள் சிதறும் : கார்த்தி சிதம்பரம் எம்.பி. கருத்து
15 Sep 2025மாானமதுரை : விஜய் வருகையால் அனைத்து கட்சிகளின் வாக்குகள் சிதறும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் 'அன்புக்கரங்கள' திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்
15 Sep 2025சென்னை, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 2000 உதவித்தொகை வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று (செப். 15) தொடக்கி வைத்தார்.
-
குமாரசம்பவம் திரைவிமர்சனம்
15 Sep 2025இயக்குநராக வேண்டும் என்ற என்னத்தில் பயணிக்கும் நாயகன் குமரன் தியாகராஜன் வீட்டில் திடீர் மரணம் ஒன்று நிகழ்கிறது.
-
இந்தியாவுடனான உறவை முறிக்க முடியாது: அமெரிக்காவுக்கு ரஷ்யா பதில்
15 Sep 2025மாஸ்கோ : எண்ணை வாங்கும் விவகாரம் தொடர்பாக இந்தியாவுடனான உறவை முறிக்க முடியாது என்று அமெரிக்காவுக்கு ரஷ்யா கூறியுள்ளது.
-
பாம் திரைவிமர்சனம்
15 Sep 2025ஒற்றுமையாக இருந்து பிரிந்த இரண்டு கிராம மக்கள் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.
-
தங்கம் விலை சற்று சரிவு
15 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (செப். 15) சவரனுக்கு ரூ. 80 குறைந்து விற்பனையானது.
-
சக்தி திருமகன் படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா
15 Sep 2025விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன்னனோட்டம் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
-
பிளாக்மெயில் திரைவிமர்சனம்
15 Sep 2025மருந்து கடை சப்ளையராக வேலை செய்யும் ஜி.வி.பிரகாஷ் செய்யாத குற்றத்திற்காக தன் கடை உரிமையாளருக்கு ரூ.50 லட்சம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்.
-
பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளம் பாதித்த இடங்களை பார்வையிட்டார் ராகுல் காந்தி
15 Sep 2025பஞ்சாப் : பஞ்சாபின் அமிர்தசரஸில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று, இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கலந்துரையாடினா
-
எங்களுடைய அடிப்படையே பதவி அல்ல, பொறுப்புதான்: 'அன்பு கரங்கள்' திட்ட தொடக்க விழாவில் முதல்வர் பேச்சு
15 Sep 2025சென்னை, அரசியல் என்பது மக்கள் பணி. அது கடுமையான பணி.
-
வக்பு திருத்த சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு
15 Sep 2025சென்னை, வக்பு திருத்த சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
-
பீகாரில் தொகுதி பங்கீட்டில் இழுபறி: 243 தொகுதிகளிலும் போட்டியிட தேஜஸ்வி யாதவ் அதிரடி முடிவு
15 Sep 2025பாட்னா : பீகாரில் தொகுதி பங்கீட்டில் இழுபறி 243 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.
-
ஆசிய கோப்பை 6-வது லீக்: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
15 Sep 2025துபாய் : ஆசிய கோப்பை 6-வது லீக் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
மும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை: சிவப்பு எச்சரிக்கை
15 Sep 2025மும்பை : மும்பையில் கொட்டித் தீர்த்த கனமழையால் அந்த பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் சேலம், வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
15 Sep 2025சென்னை, தமிழகத்தில் சேலம், வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வரி - தடைகளை விதிப்பதால் பிரச்சினைகளை தீர்க்க முடியாது : அதிபர் ட்ரம்புக்கு சீனா பதிலடி
15 Sep 2025பீஜிங் : வரி-தடைகளை விதிப்பதால் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்று ட்ரம்புக்கு சீனா கூறியுள்ளது.
-
முதல்முறையாக ராமதாஸ் மகள் பா.ம.க. கூட்டத்தில் பேச்சு
15 Sep 2025கிருஷ்ணகிரி : முதல்முறையாக டாக்டர் ராமதாசின் மகள் பா.ம.க. கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
-
பார்லி.யில் காப்பீட்டு திருத்த மசோதா தாக்கல் செய்யப்படுவது எப்போது? - நிர்மலா சீதாராமன் பதில்
15 Sep 2025புதுடெல்லி : காப்பீட்டு திருத்த மசோதா எப்போது தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
-
பேரறிஞர் அண்ணா என்றால் தமிழ்நாடு, தமிழ், திராவிடம் எடப்பாடி பழனிசாமி புழஞ்சலி
15 Sep 2025சென்னை, சந்தேக கேள்விகளுக்கு தன் செயலால், சாதனையால் பதில் சொன்ன தென்னாட்டுத் தென்றல் என்று அண்ணாவுக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ள எடப்பாடி பழனிசாமி, அண்ணா என்றால் தமிழ்நாட