Idhayam Matrimony

10 மாவட்டங்களில் ஆதார் அட்டை எடுக்கும் பணி நீட்டிப்பு

திங்கட்கிழமை, 30 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.31 - சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஆதார் அட்டை புகைப்படம் எடுக்கும் பணி நீட்டிக்கப்படுகிறது. அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியமாகிறது. ஆதார் அட்டை எண் முக்கியமாக கருதப்படுவதால் தமிழகம் முழுவதும் பொது மக்கள் புகைப்படம் எடுத்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் இதுவரை 4 கோடியே 77 லட்சம் பேர் ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுத்துள்ளனர். இது 70 சதவீதமும், 3 கோடியே 86 லட்சம் பேருக்கு ஆதார் அட்டை எண் வழங்கப்பட்டுள்ளது. இது 80.99 சதவீதமாகும்.

மற்ற மாவட்டங்களை விட சென்னை மாவட்டத்தில்தான் புகைப்படம் எடுப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதுவரை 22 லட்சத்து 60 ஆயிரம் பேர் புகைப்படம் எடுத்துள்ளனர். இது 54 சதவீதமாகும்.

ஆதார் அட்டை எண் 15 லட்சத்து 51 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது 83 சதவீதம்.

நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட குறைந்த அளவில் புகைப்படம் எடுத்துள்ள 10 மாவட்டங்களில் இன்றுடன் (31_ந் தேதி) முதல் கட்டப் புகைப்படம் எடுக்கும் பணிகள் முடிவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அவை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி அல்லது மார்ச் வரை கூட புகைப்படம் எடுக்கும் பணி தொடரும் என்று அதிகாரி தெரிவித்தார்.

இது குறித்து மக்கள் தொகை கணக்கெடுப்பு துறை இணை இயக்குனர் கிருஷ்ணாராவ் கூறியதாவது:_

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் புகைப்படம் எடுக்கும் பணி நீட்டிக்கப்படுகிறது. பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை இந்த பணி மேற்கொள்ளப்படும். அதனால் இந்த வாய்ப்பை பொது மக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஈரோடு, கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம், திருப்பூர் ஆகிய 8 மாவட்டங்களில் 2_வது கட்டப் பணி தொடங்க உள்ளது. ஏற்கனவே 14 மாவட்டங்களில் 2_வது கட்டப்பணி நடைபெற்று வருகிறது. சென்னை மாநகராட்சி பகுதியில் புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டாமல் இருக்கிறார்கள். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 hour ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 hour ago