எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொழும்பு,ஜூன்.- 12 - இலங்கை வரும்படி அதிபர் ராஜபக்சே விடுத்த அழைப்பை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக்கொண்டார். மன்மோகன் சிங் பயண திட்டம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது. இலங்கையில் நடந்த போரில் அப்பாவி தமிழர்கள் ஆயிரக்கணக்கானோர் சிங்கள படையினரால் கொல்லப்பட்டனர். மேலும் லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து அகதிகளாக வாழ்ந்து கொண்டியிருக்கிறார்கள். அவர்களுக்கு உடனடியாக மறுவாழ்வு அளிக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் ராமேஸ்வரம்,நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போது சிங்கள கடற்படையினரால் பல்வேறு இடையூறுகளுக்கு ஆளாகிறார்கள். இந்த இரண்டு பிரச்சினைகளுக்கும் தீர்வுகாணவும் இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு மறுவாழ்வு பணிகளை மேற்கொள்ளுவது குறித்தும் இலங்கை அதிபர் ராஜபக்சேவை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன், வெளியுறவு செயலாளர் நிரூபமாராவ் மற்றும் பாதுகாப்பு செயலாளர் பிரதீப் குமார் ஆகியோர் கொழும்பு சென்றனர். கொழும்பில் அதிபர் ராஜபக்சேவை அவர்கள் சந்தித்து பேசினர். பல்வேறு விஷயங்கள் குறித்த கடிதம் ஒன்றையும் ராஜபக்சேவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கொடுத்துவிட்டார். அதையும் அவர்கள் ராஜபக்சேவுடன் கொடுத்துவிட்டனர். மேலும் இலங்கை வரவேண்டும் என்ற ராஜபக்சேயின் அழைப்பை பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக்கொண்டார். இது குறித்தும் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது என்று ராஜபக்சேயின் செய்திதொடர்பாளர் பாண்டுலா ஜெயசேகரா நேற்று கொழும்பில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். ஆனால் இலங்கைக்கு பிரதமர் மன்மோகன் சிங் எப்போது பயணத்தை மேற்கொள்வார் என்ற விபரம் தெரிவிக்கப்படவில்லை. கடந்த 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொழும்பில் சார்க் உச்சி மாநாடு நடந்தது. அதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன்மோகன் சிங் கொழும்பு சென்றார். இதற்கிடையில் ராஜபக்சேவுடன் சிவசங்கர மேனன் சந்தித்து பேசிய விபரம் குறித்து எதுவும் வெளியிடப்படவில்லை. இருந்தபோதிலும் இலங்கை தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்சினைதான் பேச்சுவார்த்தையில் முக்கிய இடம் பெற்றிருக்கும் என்று உறுதியாக தெரிகிறது. இலங்கை மீது இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கும் சூழ்நிலையில் இலங்கைக்கு இந்திய உயரதிகாரிகள் சென்றது முக்கியத்துவம் வாய்ந்ததாக தெரிகிறது. மேலும் கொழும்பு செல்லும்முன்பு முதல்வர் ஜெயலலிதாவை சிவசங்கர மேனன் சந்தித்து பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
சோனியா மருத்துவமனையில் அனுமதி
06 Jan 2026புதுடெல்லி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உடல்நலக் குறைவால் தில்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
திடீர் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு: இந்தோனேசியாவில் 9 பேர் பலி
06 Jan 2026ஜகார்த்தா, இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணமான வடக்கு சுலவேசியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள்
-
எஸ்.ஐ.ஆர். விவகாரம்: முகமது சமி நேரில் ஆஜராக தேர்தல் ஆணையம் சம்மன்
06 Jan 2026கொல்கத்தா, எஸ்.ஐ.ஆர். விவகாரம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சமிக்கு தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
-
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
06 Jan 2026டோக்கியோ, ஜப்பானில் நேற்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை சுனாமி ஏற்படும் அச்சம் மக்கள் இடையே ஏற்பட்டது.
-
அதிபர் ட்ரம்ப்புடன் நோபல் பரிசை பகிர விரும்பும் வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர்
06 Jan 2026காரகஸ், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் அமைதிக்கான நோபல் பரிசை பகிர்ந்துகொள்ள வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ விருப்பம் தெரிவித்துள்ளார்.
-
வெனிசுலாவில் தேர்தல் கிடையாது: ட்ரம்ப்
06 Jan 2026வாஷிங்டன், வெனிசுலாவில் இப்போதைக்கு தேர்தல் கிடையாது என்று தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெனிசுலாவை மறுகட்டமைப்பு செய்ய வேண்டியது அவசியம் என்றும் தெரிவ
-
தொடர்ந்து சாதனைகளை படையுங்கள்: இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
06 Jan 2026சென்னை, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவை நிச்சயம் பழிதீர்ப்போம்: நிகோலஸ் மதுரோவின் மகன் உறுதி
06 Jan 2026நியூயார்க், அமெரிக்காவை கண்டிப்பாக பழிதீர்ப்போம் என்று அமெரிக்க படையால் கைது செய்யப்பட்ட நிகோலஸ் மதுரோவின் மகன் குரேரா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படத்தியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-01-2026
07 Jan 2026


