தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறையில் உள்ள 'நிர்வாக அதிகாரி (நிலை -III)' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஜூன்.16 - தமிழகத்தில் நியாயமான கல்வி கட்டண கொள்கையை நிறைவேற்ற முதலமைச்சர் ஜெயலலிதா தலையிட வேண்டும் என தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளிகளின் நிர்வாகிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாசலபாண்டியன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:
கடந்த இரண்டு ஆண்டுகளாக தனியார் பள்ளிகள் பல வழிகளில் பாதிக்கப்பட்டு பள்ளிகளை நடத்துவோமா வேண்டாமா என்ற சூழ்நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டு உள்ளோம்.
தமிழக அரசின் சமச்சீர்கல்விக்கு பெயரளவில் நாங்கள் எதிரானவர்கள் அல்ல, சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு தரமான கல்வி கொடுக்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்த விதமான மாற்று கருத்தும் இல்லை. ஆனால் இருக்ககூடிய கல்வியின் தரத்தை குறைக்க கூடாது என்றுதான் நாங்கள் கூறுகிறோம். இந்த கல்வி கொள்கையில் சரியான தரம் இல்லை. மற்ற மாநிலங்களை போல நமது கல்வி கொள்கை சிறந்ததாக அமைய வேண்டும். கல்வியின் தரம் தொலை நோக்கு பார்வை கொண்டதாக அமைய வேண்டும். தற்பொழுது உள்ள கல்வி திட்டம் போதுமான தரமானதாக இல்லை. நமது கல்வி திட்டம் தேசிய அளவில் முதன்மையானதாகவும், உலக அளவில் சிறந்ததாகவும் அமைய வேண்டும்.
தமிழக வரலாற்றில் புத்தகங்கள் இல்லாமல் பள்ளிகள் நடத்தப்படுவது இதுவே முதல் முறை. இதற்கு சென்ற அரசு கொண்டு வந்த கல்விக் கொள்கைதான் காரணம்.
தனியார் பள்ளிகள் சிறந்த ஆசிரியர்களை வைத்து மாணவர்களுக்கு தரமான கல்வி கொடுத்து வருகிறோம். ஆனால், சென்ற தமிழக அரசு தவறான கல்வி கட்டண கொள்கையினை அமல்படுத்தி எங்களை பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கிவிட்டது. அதனால், அரசின் இக்கொள்கையினை எதிர்த்து நாங்கள் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை சென்றோம். சென்னை உயர்நீதி மன்றத்தில் எங்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைத்தது. ஆனால், சென்ற அரசு உடனே இடைக்காலத்தடை பெற்றுவிட்டது. உச்சநீதிமன்றத்தின் ஆணையின் படி நீதிஅரசர் ரவிராஜபாண்டியன் ஏப்ரல் 30, 2011-க்குள் அல்லது விரைவில் கட்டணத்தை நிர்ணயிக்கவேண்டும் என்று கூறியிருந்தது. ஆனால், நேற்று 14-ம் தேதிதான் பள்ளிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் சென்னையில் பெரும்பாலான பள்ளிகளுக்கு இன்னும் கொடுக்கப்படவில்லை. நீதி அரசர் கோவிந்தராஜன் கொடுத்த கல்வி கட்டணத்தை விட பெரும்பாலன பள்ளிகளுக்கு கட்டணத்தை குறைத்துள்ளார்கள். 9 முதல் 12-ம் வகுப்பு வரை மிகவும் கட்டணம் மோசமான நிலையில் உள்ளது. பொதுவாக இந்த கட்டணத்தை வைத்து பள்ளிகள் நடத்தமுடியாத சூழ்நிலையில் உள்ளோம். ஆசிரியர்கட்கு போதுமான சம்பளம் கொடுக்க முடியவில்லை. ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் கொடுக்கக்கூடிய இன்கிரிமெண்ட் கொடுக்க முடியவில்லை. விலைவாசி ஏற்றம், லோன் பெற்ற பள்ளிகட்கு அதில் செலுத்தப்படும் வட்டி, நல்ல உள் கட்டமைப்பு வசதி போன்றவற்றை கணக்கில் கொள்ளப்படவில்லை.
எனவே, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலையிட்டு இதில் நியாயமான கல்வி கட்டண கொள்கையை உருவாக்கவேண்டும். தேர்தலின் பொழுது ஜெயலலிதா முத்தரப்பு கமிட்டி அமைப்பதாக கூறினார். இந்த முத்தரப்பு கமிட்டியை அமைத்து நியாயமான கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். மேலும் தமிழகத்தில் தரமான கல்வி சி.பி.எஸ்.இ-க்கு இணையானதாகவும், உலகிலேயே தமிழ்நாட்டில் உள்ள கல்வி மிகவும் சிறந்தவையாகவும், அமைவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என கல்வியாளர்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கல்வி கட்டணத்திலும் தலையிட்டு நியாயமான தீர்ப்பினை எங்களுக்கு வழங்குமாறு அன்புடன் அனைத்து பள்ளிகள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு வெங்கடாசலபாண்டியன் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
-
தி.மு.க அரசை பற்றி பேசினாலே ஜெயில்தான் என்ற நிலை உள்ளது : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
24 May 2022சென்னை : தி.மு.க அரசை பற்றி பேசினாலே ஜெயில்தான் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
-
இந்தோ - பசிபிக் பிராந்திய அமைதிக்கு வித்திடும் அமைப்பாக 'குவாட்' இருக்கிறது : பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம்
24 May 2022டோக்கியோ : உலக அரங்கில் குவாட் அமைப்பு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
-
சிறையில் இருந்து வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசிய வழக்கில் இருந்து முருகன் விடுதலை
24 May 2022வேலூர் : சிறையில் இருந்து வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசிய வழக்கில் இருந்து முருகன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
-
தமிழகத்தில் 3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்
24 May 2022சென்னை : வெப்பச்சலனத்தால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மாநில வரியை மத்திய அரசு சுரண்டி விட்டது : சேலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
24 May 2022ஆத்தூர் : மாநில வரியை மத்திய அரசு சுரண்டி விட்டது என்று தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் கடந்த ஓராண்டு காலம் செய்த ஆட்சியின் மூலம் மிகப்பெரிய நம்பிக்கை பிற
-
6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் நேரில் ஆய்வு
24 May 2022சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் ஆய்வு செய்தா
-
கொரோனா பாதிப்பு குறைவான மாவட்டங்களில் மெத்தனம் கூடாது : அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தல்
24 May 2022சென்னை : ”கொரோனா தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் அதிகாரிகள் மெத்தனமாக இருக்கக்கூடாது” என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்
-
கோவில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாசம் இருக்கக்கூடாது : ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
24 May 2022மதுரை : கோவில் திருவிழாக்களில் நிபந்தனைகளை மீறி ஆபாசமாக வார்த்தைகள், ஆபாசமான நடனங்களும் இருந்தால் சம்பந்தப்பட்ட போலீசார் உடனடியாக சட்டரீதியான நடவடிக்கை தொடரலாம் என்று ம
-
வாட்ஸ் ஆப் செயலி வாயிலாக இனி மத்திய அரசு சேவைகள்
24 May 2022புது டெல்லி : வாட்ஸ் ஆப் செயலி வாயிலாக இனி மத்திய அரசு சேவைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் குரங்கு அம்மை பரவாமல் தடுக்க நடவடிக்கை: அறிகுறிகள் உள்ளவர்களை தெரிவிக்குமாறு உத்தரவு : மாவட்ட கலெக்டர்களுக்கு சுகாதார செயலாளர் சுற்றறிக்கை
24 May 2022சென்னை : தமிழகத்தில் குரங்கு அம்மை பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் விதமாக அறிகுறிகள் உள்ளவர்களை தெரிவிக்குமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு சுகாதார செயலாளர் சுற்றறிக்கை மூ
-
பெரியார் பற்றிய பாடத்தை நீக்கவில்லை: இந்துக்கள் உணர்வுகளை புண்படுத்தும் வாக்கியங்கள் மட்டுமே நீக்கியுள்ளோம் : கர்நாடக கல்வித்துறை அமைச்சர் விளக்கம்
24 May 2022பெங்களூரு : பாடப்புத்தகத்திலிருந்து பெரியார் பற்றிய பாடத்தை நீக்கவில்லை.
-
பிரசாந்த் கிஷோருக்கு பதில் சுனில்: 2024 பார்லி. தேர்தலுக்கு தயாராக காங்கிரஸில் குழுக்கள் அறிவிப்பு : நாடு தழுவிய பேரணி நடத்தவும் திட்டம்
24 May 2022புதுடெல்லி : 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் அளிக்கும் நடவடிக்கையாக புதிய குழுக்களை கட்சித் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளா
-
மக்கள் அச்சப்பட தேவையில்லை: குரங்கம்மை பாதித்த நாடுகளில் இருந்து தமிழகம் வருவோர் தீவிர கண்காணிப்பு : அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டி
24 May 2022கன்னியாகுமரி : மக்கள் அச்சப்பட தேவையில்லை.
-
ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் கோரியதாக புகார்: பஞ்சாப் சுகாதார அமைச்சர் டிஸ்மிஸ் : முதல்வர் பகவந்த் மான் அதிரடி உத்தரவு
24 May 2022சண்டிகர் : ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய தனது அமைச்சரவையின் சுகாதார அமைச்சர் டாக்டர் விஜய் சிங்லாவை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பதவி நீக்கம் செய்துள்ளார்.
-
3-வது நாளாக தொடர்ந்து சரிவு: இந்தியாவில் கொரோனா புதிய பாதிப்பு 1,675 ஆக குறைந்தது
24 May 2022புதுடெல்லி : இந்தியாவில் கொரோனா புதிய பாதிப்பு 1,675 - ஆக குறைந்துள்ளது.
-
சென்னையில் 20 நாட்களில் 18 கொலைகள்: கொலைநகராக மாறும் தலைநகர்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
24 May 2022சென்னை : சென்னையில் கடந்த 20 நாட்களில் 18 கொலைகள் நடந்துள்ளதாக முன்னாள் முதல்வரும், எதிரக்கட்சித் தலைவருமாகிய எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
-
கேரள மாநிலத்தையே உலுக்கிய விஸ்மயா வழக்கில் கணவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை
24 May 2022கொல்லம் : கேரள மாநிலத்தையே உலுக்கிய விஸ்மயா வழக்கில் கணவர் குற்றவாளி என்று அறிவித்திருந்த நிலையில், அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்து நேற்று க
-
சர்வதேச யோகா தினத்தில் மைசூரில் 21-ம் தேதி மக்களுடன் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்பு
24 May 2022புதுடெல்லி : சர்வதேச யோகா தினம்- மைசூரில் 21-ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
-
அடுத்த 30 ஆண்டுகளுக்கு பாஜகவை மையப்படுத்தியே இந்திய அரசியல் : பிரஷாந்த் கிஷோர் கணிப்பு
24 May 2022புதுடெல்லி : பாரதிய ஜனதா கட்சியை யார் ஆதரித்தாலும், எதிர்த்தாலும் அடுத்த 20 முதல் 30 ஆண்டுகளுக்கு அக்கட்சியை மையப்படுத்தியே இந்தியாவின் அரசியல் இருக்கும் என்று தேர்தல்
-
15-18 வயதுடைய 80 சதவீத சிறார்களுக்கு முதல் தவணை தடுப்பூசி: மாண்டவியா
24 May 2022புதுடெல்லி : இந்தியாவில் 15 முதல் 18 வயது வரையுள்ள சிறார்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை
-
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சிறப்பான செயல்பாடு: பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் பாராட்டு
24 May 2022டோக்கியோ : கொரோனா தொற்றை இந்தியா சிறப்பாக கட்டுப்படுத்தி உள்ளது என்று பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
டி-20 உலக கோப்பை : இந்திய அணியில் அஸ்வினை சேர்க்க வேண்டும் - கவாஸ்கர்
24 May 2022மும்பை : பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சாதித்து வரும் அஸ்வினை 20 ஓவர் உலக கோப்பை அணியில் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர்
-
இலங்கையில் இதுவரை இல்லாத அளவு பெட்ரோல் லிட்டர் ரூ.420-ம், டீசல் ரூ.400 ஆகவும் உயர்வு
24 May 2022கொழும்பு : இலங்கையில் நேற்று ஒரே நாளில் பெட்ரோல் விலை 24.3 வீதமும், டீசல் விலை 38.4 சதவீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரின் சிறந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா : வீரேந்திர சேவாக் புகழாரம்
24 May 2022மும்பை : பேட்டிங் செய்யும்போது காட்டும் அதே ஆக்ரோஷத்தை, கேப்டனாகவும் காட்டுவார் என்று நினைத்தேன்.
-
10-ம் வகுப்பு கணிதத்தேர்வை எழுதாத 45,618 மாணவர்கள் : தமிழக தேர்வுத்துறை தகவல்
24 May 2022சென்னை : நேற்று நடைபெற்ற தேர்வில் 45,618 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.