எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஜூன்.16 - தமிழகத்தில் நியாயமான கல்வி கட்டண கொள்கையை நிறைவேற்ற முதலமைச்சர் ஜெயலலிதா தலையிட வேண்டும் என தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளிகளின் நிர்வாகிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாசலபாண்டியன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:
கடந்த இரண்டு ஆண்டுகளாக தனியார் பள்ளிகள் பல வழிகளில் பாதிக்கப்பட்டு பள்ளிகளை நடத்துவோமா வேண்டாமா என்ற சூழ்நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டு உள்ளோம்.
தமிழக அரசின் சமச்சீர்கல்விக்கு பெயரளவில் நாங்கள் எதிரானவர்கள் அல்ல, சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு தரமான கல்வி கொடுக்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்த விதமான மாற்று கருத்தும் இல்லை. ஆனால் இருக்ககூடிய கல்வியின் தரத்தை குறைக்க கூடாது என்றுதான் நாங்கள் கூறுகிறோம். இந்த கல்வி கொள்கையில் சரியான தரம் இல்லை. மற்ற மாநிலங்களை போல நமது கல்வி கொள்கை சிறந்ததாக அமைய வேண்டும். கல்வியின் தரம் தொலை நோக்கு பார்வை கொண்டதாக அமைய வேண்டும். தற்பொழுது உள்ள கல்வி திட்டம் போதுமான தரமானதாக இல்லை. நமது கல்வி திட்டம் தேசிய அளவில் முதன்மையானதாகவும், உலக அளவில் சிறந்ததாகவும் அமைய வேண்டும்.
தமிழக வரலாற்றில் புத்தகங்கள் இல்லாமல் பள்ளிகள் நடத்தப்படுவது இதுவே முதல் முறை. இதற்கு சென்ற அரசு கொண்டு வந்த கல்விக் கொள்கைதான் காரணம்.
தனியார் பள்ளிகள் சிறந்த ஆசிரியர்களை வைத்து மாணவர்களுக்கு தரமான கல்வி கொடுத்து வருகிறோம். ஆனால், சென்ற தமிழக அரசு தவறான கல்வி கட்டண கொள்கையினை அமல்படுத்தி எங்களை பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கிவிட்டது. அதனால், அரசின் இக்கொள்கையினை எதிர்த்து நாங்கள் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை சென்றோம். சென்னை உயர்நீதி மன்றத்தில் எங்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைத்தது. ஆனால், சென்ற அரசு உடனே இடைக்காலத்தடை பெற்றுவிட்டது. உச்சநீதிமன்றத்தின் ஆணையின் படி நீதிஅரசர் ரவிராஜபாண்டியன் ஏப்ரல் 30, 2011-க்குள் அல்லது விரைவில் கட்டணத்தை நிர்ணயிக்கவேண்டும் என்று கூறியிருந்தது. ஆனால், நேற்று 14-ம் தேதிதான் பள்ளிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் சென்னையில் பெரும்பாலான பள்ளிகளுக்கு இன்னும் கொடுக்கப்படவில்லை. நீதி அரசர் கோவிந்தராஜன் கொடுத்த கல்வி கட்டணத்தை விட பெரும்பாலன பள்ளிகளுக்கு கட்டணத்தை குறைத்துள்ளார்கள். 9 முதல் 12-ம் வகுப்பு வரை மிகவும் கட்டணம் மோசமான நிலையில் உள்ளது. பொதுவாக இந்த கட்டணத்தை வைத்து பள்ளிகள் நடத்தமுடியாத சூழ்நிலையில் உள்ளோம். ஆசிரியர்கட்கு போதுமான சம்பளம் கொடுக்க முடியவில்லை. ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் கொடுக்கக்கூடிய இன்கிரிமெண்ட் கொடுக்க முடியவில்லை. விலைவாசி ஏற்றம், லோன் பெற்ற பள்ளிகட்கு அதில் செலுத்தப்படும் வட்டி, நல்ல உள் கட்டமைப்பு வசதி போன்றவற்றை கணக்கில் கொள்ளப்படவில்லை.
எனவே, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலையிட்டு இதில் நியாயமான கல்வி கட்டண கொள்கையை உருவாக்கவேண்டும். தேர்தலின் பொழுது ஜெயலலிதா முத்தரப்பு கமிட்டி அமைப்பதாக கூறினார். இந்த முத்தரப்பு கமிட்டியை அமைத்து நியாயமான கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். மேலும் தமிழகத்தில் தரமான கல்வி சி.பி.எஸ்.இ-க்கு இணையானதாகவும், உலகிலேயே தமிழ்நாட்டில் உள்ள கல்வி மிகவும் சிறந்தவையாகவும், அமைவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என கல்வியாளர்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கல்வி கட்டணத்திலும் தலையிட்டு நியாயமான தீர்ப்பினை எங்களுக்கு வழங்குமாறு அன்புடன் அனைத்து பள்ளிகள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு வெங்கடாசலபாண்டியன் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி உடல்நலக்குறைவால் காலமானார்
14 Jul 2025பெங்களூரு : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் நேற்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-07-2025.
14 Jul 2025 -
40 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்: டி.ஜி.பி. சங்கர் ஜிவால்
14 Jul 2025சென்னை, டி.எஸ்.பி., உதவி ஆணையர் பொறுப்பிலுள்ள 40 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. சங்கர் ஜிவால் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
மாயக்கூத்து திரை விமர்சனம்
14 Jul 2025எழுத்தாளர் நாகராஜன் கண்ணன், ஒரு கதை எழுதுகிறார்.
-
சூர்யா சேதுபதிக்கு இயக்குநர் அனல் அரசு புகழாரம்
14 Jul 2025சண்டை இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை 4 அன்று திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
-
கைமேரா இசை வெளியீட்டு விழா
14 Jul 2025மாணிக் ஜெய். என் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கைமேரா’. இத்திரைப்படத்தில் அறிமுக நாயகனாக LNT எத்திஷ் நடிக்கிறார்.
-
அரசியலில் அப்பா- மகன் உறவு மிக மிக முக்கியம் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
14 Jul 2025திருச்சி : 'அரசியலில் அப்பா- மகன் உறவு மிக மிக முக்கியம்' என தி.மு.க. நிர்வாகி இல்லத் திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி பேசுகையில் தெரிவித்தார்.
-
சரோஜா தேவி மறைவு: பிரதமர் மோடி இரங்கல்
14 Jul 2025புதுடெல்லி : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஓடும் ரெயிலில் கர்ப்பிணியை கீழே தள்ளிய வழக்கு: குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவு
14 Jul 2025திருப்பத்தூர் : ஓடும் ரெயிலில் கர்ப்பிணியை கீழே தள்ளிய வழக்கில் குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் மீது 45 நாளில் தீர்வு : கூடுதல் தலைமை செயலாளர் உறுதி
14 Jul 2025சென்னை : ''உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காணப்படும் என அரசு கூடுதல் தலைமை செயலாளரான ஐ.ஏ.எஸ்., அதிகாரி அமுதா தெரிவித்
-
தமிழக எம்.பி, எம்.எல்.ஏ.-க்கள் மீதான ஊழல் வழக்கு விவரங்களை வழங்க உத்தரவிடக்கோரி த.வெ.க. மனு
14 Jul 2025சென்னை : தமிழகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான ஊழல் வழக்கு குறித்த விவரங்களை வெளியிட மாநில தகவல் ஆணையருக்கு உத்தரவிடக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உயர்
-
முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் : லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
14 Jul 2025மதுரை : முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று (ஜூலை 14) அதிகாலை 5.31 மணியளவில் கும்பங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபி
-
விமான விபத்துக்கு பராமரிப்பு பிரச்சினைகள் காரணமில்லை : ஏர் இந்தியா சி.இ.ஓ. தகவல்
14 Jul 2025புதுடெல்லி : அகமதாபாத் விமான விபத்துக்கு இயந்திரவியல் (மெக்கானிக்கல்), பராமரிப்பு சார்ந்த (மெயின்டனன்ஸ்) பிரச்சினைகள் காரணமாக இருக்கவில்லை என ஏர் இந்தியா சி.இ.ஓ.
-
கோவா, அரியானா உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்
14 Jul 2025புதுடெல்லி, கோவா உள்பட 3 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம் செய்து ஜனாதிபதி திரெளபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும்: இ.பி.எஸ். மீண்டும் திட்டவட்டம்
14 Jul 2025சேலம், 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
உள்ளே செல்ல அனுமதி மறுப்பு: தியாகிகள் கல்லறைக்கு சுவர் ஏறி சென்று முதல்வர் உமர் அஞ்சலி
14 Jul 2025ஸ்ரீநகர் : தியாகிகளின் கல்லறைக்குச் செல்ல முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அவர் சுவர் ஏறி குறித்துச் சென்று அஞ்சலி செலுத்தினார்.
-
படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் பலி: இயக்குனர் பா.ரஞ்சித் வழக்கு பதிவு
14 Jul 2025நாகை : படப்பிடிப்பு தளத்தில் ஸ்டன்ட் காட்சியின் போது ஸ்டண்ட் மாஸ்டர் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்ட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு
-
நடிகை சரோஜாதேவி மறைவு: அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்
14 Jul 2025சென்னை, நடிகை சரோஜாதேவி மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.;
-
நாடு முழுவதும் அடுத்த மாதம் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்: இந்திய தேர்தல் கமிஷன் திட்டம்
14 Jul 2025புதுடெல்லி, நாடு முழுவதும் அடுத்த மாதம் முதல் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தத்தை மேற்கொள்ள தேர்தல் கமிஷன் திட்டமிட்டு உள்ளது.
-
புதின் அழகாக பேசுகிறார்; ஆனால் குண்டுகளையும் வீசி விடுகிறார்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தாக்கு
14 Jul 2025வாஷிங்டன், புதின் அழகாக பேசுகிறார் . ஆனால் அனைவர் மீதும் குண்டுகளை போடுகிறார் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் நடைமுறைக்கு வந்தது 'ப; வடிவ வகுப்பறைகள்
14 Jul 2025சென்னை, தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் "ப" வடிவ வகுப்பறைகள் நேற்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
-
அமர்நாத்தில் பனி லிங்கத்தை 2 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர்
14 Jul 2025ஸ்ரீநகர், அமர்நாத் யாத்திரை தொடங்கியதில் இருந்து இதுவரை 2 லட்சம் பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.
-
பயணத்தை தொடங்கியது டிராகன்: சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் இன்று பூமிக்கு திரும்புகின்றனர்
14 Jul 2025நியூயார்க், சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேருடன் பூமியை நோக்கி தனது பயணத்தை டிராகன் விண்கலம் தொடங்கியது. இன்று மாலை அவர்கள் பூமிக்கு திரும்புகின்றனர் .
-
ஏ.டி.எம். எந்திரங்களில் ரூ.500 வினியோகம் நிறுத்தம்? மத்திய அரசு விளக்கம்
14 Jul 2025புதுடெல்லி, சட்டப்பூர்வமாக ரூ.500 நோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
மிசஸ் & மிஸ்டர் திரை விமர்சனம்
14 Jul 2025வனிதா விஜயகுமாரும், ராபர்ட்டும் காதல் திருமணம் செய்து கொண்டு பாங்காக்கில் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். 40 வயதை எட்டும் வனிதா குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறார்.