எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை,ஜூன்.16 - அ.தி.மு.க. - தேமுதிக எதிர்ப்பால் மதுரை மாநகராட்சி கூட்டம் பாதியில் முடிந்தது. மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் பெ.சாலைமுத்து சரமாரி குற்றச்சாட்டுக்களை கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. திமுக ஆட்சியை இழந்து, அதிமுக மாபெரும் வெற்றி பெற்ற பிறகு மதுரை மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. திமுக மேயர் தேன்மொழி தலைமை வகித்தார். துணைமேயர் பி.எம்.மன்னன், ஆணையாளர் செபாஸ்டின் மற்றும் அனைத்து கட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். வழக்கமான உற்சாகத்தில் இல்லாமல் திமுக கவுன்சிலர்கள் சோர்ந்து போய் இருந்தனர். கேலியும், கிண்டலும், ஏளனமான சிரிப்பும் காணாமல் போய் ஒரு இருக்கமான முகத்துடன் திமுக கவுன்சிலர்கள் அமர்ந்திருந்தனர். கூட்டம் துவங்கியதும் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் பெ.சாலைமுத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, கடந்த காலத்தில் போலீசை வைத்து மதுரை மாநகராட்சியை கைப்பற்றிய திமுகவை மக்கள் நல்ல தீர்ப்பு அளித்து வீட்டுக்கு அனுப்பி உள்ளனர். பணநாயகம் தோற்கடிக்கப்பட்டு ஜனநாயகம் வென்றுள்ளது. ஜெயலலிதாவை 3 வது முறையாக மக்கள் அரியணையில் அமர்த்தியுள்ளனர். ஜனநாயகம் செத்துவிட்டது என நினைத்துக்கொண்டிருந்த வேளையில் மதுரை மாவட்ட கலெக்டர் அதை காப்பாற்றி உள்ளார். அதே போல் இது தாண்டா போலீஸ் என்பது போல் போலீசாரை சரியாக செயல்பட விட்ட கமிஷனர் கண்ணப்பன் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
மாநகராட்சியில் நடந்த முறைகேடுகளை தொடர்ந்து நாங்கள் சுட்டிக்காட்டி வந்தோம். ஆனால் அவை செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்தது. இந்திய அளவில் தமிழக மக்களுக்கு மிகப்பெரிய மரியாதை கிடைத்துள்ளது. பணத்தால் தமிழக வாக்காளர்களை எதுவும் செய்ய முடியாது என்பதை நிரூபித்து ஜெயலலிதாவை மிகப்பெரும்பான்மையாக வெற்றியடைய செய்து, பணத்தை நம்பிய அக்கிரமகாரர்களுக்கு மிகப்பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தினார்கள். ஜனநாயகத்தை காப்பாற்றிய தமிழக மக்களுக்கும், அதற்கு காரணமாக இருந்த தேர்தல் கமிஷனுக்கும் எங்கள் கட்சி சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.தென் மாநில முதல்வராக செயல்பட்ட மு.க.அழகிரியாலும் சுரேஷ்பாபுவாலும் அதிகாரிகளின் கைகள் கட்டப்பட்டது. ஆட்சி மாறி உள்ளது அதிகாரிகள் இனிமேலாவது திருந்தி கொள்ளவேண்டும். நாங்கள் யாரையும் பழி வாங்கமாட்டோம். பொதுமக்களாக இருந்தாலும், எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் அதிகாரிகள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். இதில் அதிமுக தலையிடாது. கடந்த 4 மாதமாக அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட்டதால் 27 லட்சம் ரூபாய் மிச்சப்படுத்தப்பட்டு அது பென்சனுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட்டு வருகிறது. இந்த பிரச்சினையில் அமைச்சரோ, நானோ அல்லது எங்கள் கட்சிக்காரர்களோ தலையிடவில்லை. நல்லதை செய்யும் போது நாங்கள் குறுக்கிடமாட்டோம். உப்பு திண்ணவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும். அதே போல் தவறு செய்தவர்கள் தண்டனை அடைந்தே தீர வேண்டும். தவறு செய்த உங்களுக்கு தண்டனை காத்துக்கொண்டிருக்கிறது. ஆண்டவன் எங்கள் பக்கம் இருக்கிறான், மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு தவறுகளுக்கு அதிகாரிகள் உடந்தையாக இருந்திருக்கிறீர்கள். இனிமேல் வரும் 5 ஆண்டுகளில் அதிகாரிகள் நேர்மையாக நடந்து அதற்கு பிராயசித்தம் தேடிக்கொள்ள வேண்டும். மாநகராட்சி புத்துயிர் பெற்று செழிப்பு மிக்க மாநகராட்சியாக திகழ வேண்டும் என்றார். இதைத்தொடர்ந்து மார்க்சிய கம்யூனிஸ்ட் கவுன்சிலர் கணேசன் பேசினார். அப்போது தேமுதிக கவுன்சிலர்கள் தங்கள் கட்சிக்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம் வழங்கி விட்டது. எனவே எங்களையும் பேச அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.இதற்கு மேயர் தேன்மொழி அனுமதி மறுத்ததால் அதிமுக, தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் மேயரை முற்றுகையிட்டனர். இதைத்தொடர்ந்து மேயர் அனைத்து தீர்மானங்களும் நிறைவேறியதாக அறிவித்து, கூட்டம் முடிந்தது என்று கூறிவிட்டு எழுந்து சென்றுவிட்டார். அதிமுக ,தேமுதிக எதிர்ப்பால் கூட்டம் பாதியிலேலே முடிந்தது. இதை தொடர்ந்து அதிமுக,தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சியினர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதன் பிறகு மேயர் அலுவலகத்தில் இருந்து கொடுக்கப்பட்டசெய்தி குறிப்பில் தேமுதிகவுக்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம் கொடுத்த தகவல் எங்களுக்கு வரவில்லை.மேலும் இது உள்ளாட்சி சம்பந்தப்பட்டது. இதில் மாநில தேர்தல் கமிஷன்தான் அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
திமுகவினருக்கு இனிப்பு வழங்கிய அதிமுகவினர்
மாநகராட்சி கூட்டம் நடந்து கொண்டிருந்த போது, சட்டசபை தேர்தலில் அதிமுக அமோக வெற்றிப்பெற்றதை தொடர்ந்து அதிமுக கவுன்சிலர்கள், அனைத்து கட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகளுக்கு இனிப்பு வழங்கினர். ஆணையாளர் செபாஸ்டினுக்கு கொடுத்த போது வாங்கி கொண்டார். ஆனால் மேயரோ, துணை மேயரோ இனிப்பை வாங்க மறுத்துவிட்டனர். திமுக கவுன்சிலர்களுக்கு இனிப்பு வழங்கிய போது ஏய்யா எங்களை பாடாபடுத்திறீங்க என்று கூறியபடி இனிப்பை வாங்கமறுத்துவிட்டனர். இதே போல் காங்கிரஸ் கட்சி கவுன்சிலர்களும் இனிப்பை வாங்கவில்லை. அதிமுக கவுன்சிலர் ஒருவர் திமுக மண்டல தலைவர் நாகராஜனுக்கு இனிப்பை ஊட்டி விட்டது பார்ப்பதற்குஏ வேடிக்கையாக இருந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
தங்கம் விலை மேலும் உயர்வு
15 Oct 2025சென்னை : சென்னையில் நேற்று ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,860-க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.94,880-க்கும் விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-10-2025.
15 Oct 2025 -
விக்ரம் பிரபு அக்ஷய் குமார் கூட்டணியில் உருவாகும் சிறை
15 Oct 2025செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ SS லலித் குமார் தயாரிப்பில், விக்ரம் பிரபு & L.K அக்ஷய் குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், உண்மைச்
-
கரூர் நெரிசல் சம்பவத்தை எடுத்த அ.தி.மு.க.வினர்: துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சுட்டிக்காட்டிய அமைச்சர்கள்
15 Oct 2025சென்னை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சுட்டிக்காட்டி அமைச்சர்கள் பேசியதாவல் அ.தி.மு.க.வினர் வெளிநாடப்பு செய்தனர்.
-
நாளை வெளியாகும் டியூட்
15 Oct 2025அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் மற்றும் பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டியூட்’.
-
விளையாட்டு பல்கலை. சட்ட மசோதா: சுப்ரீம் கோர்ட்டில் கவர்னருக்கு எதிராக தமிழக அரசு வழக்கு
15 Oct 2025புதுடெல்லி : உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா தொடர்பாக கவர்னருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு த
-
ஒருநாள் - டி-20 போட்டி தொடர்: ஆஸ்திரேலியா புறப்பட்டது இந்திய அணி
15 Oct 2025மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள், டி-202 தொடரில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் நேற்று டெல்லி விமான நிலையத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டனர்.
-
நாளை தீபாவளி தினத்தன்று வெளியாகும் டீசல்
15 Oct 2025தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் & எஸ்பி சினிமாஸ் தயாரித்து வழங்க, சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'டீசல்'.
-
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக கவனஈர்ப்பு தீர்மானம்: தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
15 Oct 2025சென்னை : செப்.27-ம் தேதி மதியம் 12 மணிக்கு த.வெ.க.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: அ.தி.மு.க.விற்கு முதல்வர் பாராட்டு
15 Oct 2025சென்னை : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த அதே இடத்தில் அதற்கு இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அ.தி.மு.க.
-
முன்பதிவு பெட்டிகளில் பயணிக்கும் வடமாநில பயணிகள் மீது நடவடிக்கை : தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு
15 Oct 2025சென்னை : முன்பதிவு பெட்டிகளில் வட மாநில பயணிகள் பயணிப்பதையடுத்து அவர்களுக்கு தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
மைலாஞ்சி பட இசை வெளியீட்டு விழா
15 Oct 2025அஜயன் பாலா இயக்கத்தில் மாடம் பட நடிகர் ஸ்ரீராம் கார்த்திக் நாயகனாக நடிக்கும் படம் மைலாஞ்சி இப்படத்தில் அவருக்கு ஜோடியாக க்ருஷா குரூப் நடித்திருக்கிறார்.
-
தண்ணீரிலும், தரையிலும் பயணிக்கும் பேரிடர் வாகனங்கள் வாங்கப்படும் : அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்
15 Oct 2025சென்னை : தண்ணீரிலும் தரையிலும் பயணிக்கும் பேரிடர் வாகனங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
-
வங்காளதேசத்தில் ஜவுளி ஆலையில் தீ விபத்து; 16 தொழிலாளர்கள் பலி
15 Oct 2025டாக்கா : வங்காளதேசத்தில் ஜவுளி ஆலையில் பயங்கர தீ விபத்தில் 16 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
-
தீபாவளிக்கு டாஸ்மாக் மது விற்பனை 500 கோடி ரூபாயை தாண்ட வாய்ப்பு
15 Oct 2025சென்னை : தீபாவளிக்கு டாஸ்மாக் மது விற்பனை ரூ.500 கோடியை தாண்ட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
பாக்ஸ்கான் நிறுவன முதலீடு விவகாரம்: தமிழக அரசுக்கு அ.தி.மு.க. கண்டனம்
15 Oct 2025சென்னை : தமிழ்நாட்டில் பாக்ஸ்கான் முதலீடு தொடர்பாக முதல்வருக்கு அ.தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது.
-
கரூர் நெரிசல் சம்பவத்தில் சுப்ரீம் கோர்ட் இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அரசு செயல்படும் : சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
15 Oct 2025சென்னை : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் பிறப்பிக்கும் இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அரசு செயல்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ள
-
எங்கள் கட்சிக்கு அனுமதி மறுத்த இடத்தில் த.வெ.க.வுக்கு அனுமதி : சட்டசபையில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
15 Oct 2025சென்னை : எங்கள் கட்சிக்கு அனுமதி மறுத்த இடத்தில் த.வெ.க.வுக்கு அனுமதி கொடுத்தனர் என எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டாக கூறினார்.
-
த.வெ.க. சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடத்த விஜய் உத்தரவு
15 Oct 2025சென்னை : கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடத்த வேண்டும் என விஜய் உத்தரவிட்டுள்ளார்.
-
இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டதாக ஆறு பாலஸ்தீனியர்கள் ஹமாஸ் ஆயுதக்குழுவால் சுட்டுக்கொலை
15 Oct 2025காசா சிட்டி : இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டதாக 6 பாலஸ்தீனியர்களை பொதுவெளியில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் சுட்டுக்கொன்றனர்.
-
கருப்பு பட்டை அணிந்து வந்த அ.தி.மு.க. உறுப்பினர்கள்
15 Oct 2025சென்னை : சட்டசபை கூட்டத்திற்கு நேற்று அ.தி.மு.க. உறுப்பினர்கள் கருப்பு பட்டை அணிந்து வந்திருந்தனர்.
-
கென்யா முன்னாள் பிரதமர் கேரளாவில் மரணம்
15 Oct 2025திருவனந்தபுரம் : கென்யா முன்னாள் பிரதமர் ரைலா ஒடிங்கா கேரளாவில் மரணம் அடைந்தார்.
-
தீபாவளிக்கு பண்டிகைக்கு டெல்லியில் பட்டாசுகளை விற்பதற்கு, வெடிப்பதற்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி
15 Oct 2025புதுடெல்லி : டெல்லியில் தீபாவளிக்கு பசுமை பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
-
தமிழக அரசின் நடவடிக்கையால் ஆம்னி பஸ் கட்டணம் குறைப்பு
15 Oct 2025சென்னை : 4 மடங்கு உயர்ந்த ஆம்னி பஸ் கட்டணம் தமிழக அரசின் நடவடிக்கையால் குறைக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாடு அரசின் கூடுதல் செலவுக்கு ரூ.2,915 கோடி முதல் துணை மதிப்பீடு : சட்டசபையில் அமைச்சர் தாக்கல்
15 Oct 2025சென்னை : 2025-2026ம் ஆண்டிற்கான முதல் துணை மதிப்பீடுகள் மொத்தம் ரூ.2,915 கோடி நிதியை ஒதுக்குவதற்கு வழிவகை செய்கின்றன என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.