எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை,ஜூன்.16 - அ.தி.மு.க. - தேமுதிக எதிர்ப்பால் மதுரை மாநகராட்சி கூட்டம் பாதியில் முடிந்தது. மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் பெ.சாலைமுத்து சரமாரி குற்றச்சாட்டுக்களை கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. திமுக ஆட்சியை இழந்து, அதிமுக மாபெரும் வெற்றி பெற்ற பிறகு மதுரை மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. திமுக மேயர் தேன்மொழி தலைமை வகித்தார். துணைமேயர் பி.எம்.மன்னன், ஆணையாளர் செபாஸ்டின் மற்றும் அனைத்து கட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். வழக்கமான உற்சாகத்தில் இல்லாமல் திமுக கவுன்சிலர்கள் சோர்ந்து போய் இருந்தனர். கேலியும், கிண்டலும், ஏளனமான சிரிப்பும் காணாமல் போய் ஒரு இருக்கமான முகத்துடன் திமுக கவுன்சிலர்கள் அமர்ந்திருந்தனர். கூட்டம் துவங்கியதும் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் பெ.சாலைமுத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, கடந்த காலத்தில் போலீசை வைத்து மதுரை மாநகராட்சியை கைப்பற்றிய திமுகவை மக்கள் நல்ல தீர்ப்பு அளித்து வீட்டுக்கு அனுப்பி உள்ளனர். பணநாயகம் தோற்கடிக்கப்பட்டு ஜனநாயகம் வென்றுள்ளது. ஜெயலலிதாவை 3 வது முறையாக மக்கள் அரியணையில் அமர்த்தியுள்ளனர். ஜனநாயகம் செத்துவிட்டது என நினைத்துக்கொண்டிருந்த வேளையில் மதுரை மாவட்ட கலெக்டர் அதை காப்பாற்றி உள்ளார். அதே போல் இது தாண்டா போலீஸ் என்பது போல் போலீசாரை சரியாக செயல்பட விட்ட கமிஷனர் கண்ணப்பன் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
மாநகராட்சியில் நடந்த முறைகேடுகளை தொடர்ந்து நாங்கள் சுட்டிக்காட்டி வந்தோம். ஆனால் அவை செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்தது. இந்திய அளவில் தமிழக மக்களுக்கு மிகப்பெரிய மரியாதை கிடைத்துள்ளது. பணத்தால் தமிழக வாக்காளர்களை எதுவும் செய்ய முடியாது என்பதை நிரூபித்து ஜெயலலிதாவை மிகப்பெரும்பான்மையாக வெற்றியடைய செய்து, பணத்தை நம்பிய அக்கிரமகாரர்களுக்கு மிகப்பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தினார்கள். ஜனநாயகத்தை காப்பாற்றிய தமிழக மக்களுக்கும், அதற்கு காரணமாக இருந்த தேர்தல் கமிஷனுக்கும் எங்கள் கட்சி சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.தென் மாநில முதல்வராக செயல்பட்ட மு.க.அழகிரியாலும் சுரேஷ்பாபுவாலும் அதிகாரிகளின் கைகள் கட்டப்பட்டது. ஆட்சி மாறி உள்ளது அதிகாரிகள் இனிமேலாவது திருந்தி கொள்ளவேண்டும். நாங்கள் யாரையும் பழி வாங்கமாட்டோம். பொதுமக்களாக இருந்தாலும், எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் அதிகாரிகள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். இதில் அதிமுக தலையிடாது. கடந்த 4 மாதமாக அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட்டதால் 27 லட்சம் ரூபாய் மிச்சப்படுத்தப்பட்டு அது பென்சனுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட்டு வருகிறது. இந்த பிரச்சினையில் அமைச்சரோ, நானோ அல்லது எங்கள் கட்சிக்காரர்களோ தலையிடவில்லை. நல்லதை செய்யும் போது நாங்கள் குறுக்கிடமாட்டோம். உப்பு திண்ணவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும். அதே போல் தவறு செய்தவர்கள் தண்டனை அடைந்தே தீர வேண்டும். தவறு செய்த உங்களுக்கு தண்டனை காத்துக்கொண்டிருக்கிறது. ஆண்டவன் எங்கள் பக்கம் இருக்கிறான், மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு தவறுகளுக்கு அதிகாரிகள் உடந்தையாக இருந்திருக்கிறீர்கள். இனிமேல் வரும் 5 ஆண்டுகளில் அதிகாரிகள் நேர்மையாக நடந்து அதற்கு பிராயசித்தம் தேடிக்கொள்ள வேண்டும். மாநகராட்சி புத்துயிர் பெற்று செழிப்பு மிக்க மாநகராட்சியாக திகழ வேண்டும் என்றார். இதைத்தொடர்ந்து மார்க்சிய கம்யூனிஸ்ட் கவுன்சிலர் கணேசன் பேசினார். அப்போது தேமுதிக கவுன்சிலர்கள் தங்கள் கட்சிக்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம் வழங்கி விட்டது. எனவே எங்களையும் பேச அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.இதற்கு மேயர் தேன்மொழி அனுமதி மறுத்ததால் அதிமுக, தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் மேயரை முற்றுகையிட்டனர். இதைத்தொடர்ந்து மேயர் அனைத்து தீர்மானங்களும் நிறைவேறியதாக அறிவித்து, கூட்டம் முடிந்தது என்று கூறிவிட்டு எழுந்து சென்றுவிட்டார். அதிமுக ,தேமுதிக எதிர்ப்பால் கூட்டம் பாதியிலேலே முடிந்தது. இதை தொடர்ந்து அதிமுக,தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சியினர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதன் பிறகு மேயர் அலுவலகத்தில் இருந்து கொடுக்கப்பட்டசெய்தி குறிப்பில் தேமுதிகவுக்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம் கொடுத்த தகவல் எங்களுக்கு வரவில்லை.மேலும் இது உள்ளாட்சி சம்பந்தப்பட்டது. இதில் மாநில தேர்தல் கமிஷன்தான் அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
திமுகவினருக்கு இனிப்பு வழங்கிய அதிமுகவினர்
மாநகராட்சி கூட்டம் நடந்து கொண்டிருந்த போது, சட்டசபை தேர்தலில் அதிமுக அமோக வெற்றிப்பெற்றதை தொடர்ந்து அதிமுக கவுன்சிலர்கள், அனைத்து கட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகளுக்கு இனிப்பு வழங்கினர். ஆணையாளர் செபாஸ்டினுக்கு கொடுத்த போது வாங்கி கொண்டார். ஆனால் மேயரோ, துணை மேயரோ இனிப்பை வாங்க மறுத்துவிட்டனர். திமுக கவுன்சிலர்களுக்கு இனிப்பு வழங்கிய போது ஏய்யா எங்களை பாடாபடுத்திறீங்க என்று கூறியபடி இனிப்பை வாங்கமறுத்துவிட்டனர். இதே போல் காங்கிரஸ் கட்சி கவுன்சிலர்களும் இனிப்பை வாங்கவில்லை. அதிமுக கவுன்சிலர் ஒருவர் திமுக மண்டல தலைவர் நாகராஜனுக்கு இனிப்பை ஊட்டி விட்டது பார்ப்பதற்குஏ வேடிக்கையாக இருந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: புள்ளி பட்டியல் 'ஏ' பிரிவில் முதலிடத்தில் இந்திய அணி
15 Sep 2025துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் தற்போது வரை 6 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்த நிலைியல் புள்ளி பட்டியலில் ஏ பிரிவில் இந்திய அணியும் பி பிரிவில் ஆப்கானிஸ்தானும்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-09-2025.
15 Sep 2025 -
வக்பு திருத்த சட்டத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு: சில விதிகளுக்கு இடைக்காலத் தடை
15 Sep 2025புதுடெல்லி, மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு முழுவதுமாக தடை எந்த முகாந்திரமும் இல்லை என்று தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், வக்ஃப் சட்டத் திருத்த சட்
-
நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் அமைச்சரவையில் 3 பேர் பதவியேற்பு
15 Sep 2025காத்மாண்டு : நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் புதிய அமைச்சரவையில் 3 பேர் அமைச்சர்களாக நேற்று பதவியேற்றனர்.
-
மருத்துவ படிப்பை பாதியில் உதறிய மதராசி பட நடிகர்
15 Sep 2025சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான மதராசி படத்தில் துப்பாக்கியை எடுத்து சித்தார்தா சங்கரிடம் கொடுக்கும் காட்சி இருக்கும். திரையில் இந்த காட்சி வரும்போத
-
மிராய் திரைவிமர்சனம்
15 Sep 2025பேரரசர் அசோகர் சாகாவரம் பெறக்கூடிய ரகசியங்களை 9 புத்தகங்களில் எழுதி அதனை ஒரு இடத்தில் மறைத்து வைக்கிறார்.
-
குமாரசம்பவம் திரைவிமர்சனம்
15 Sep 2025இயக்குநராக வேண்டும் என்ற என்னத்தில் பயணிக்கும் நாயகன் குமரன் தியாகராஜன் வீட்டில் திடீர் மரணம் ஒன்று நிகழ்கிறது.
-
தங்கம் விலை சற்று சரிவு
15 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (செப். 15) சவரனுக்கு ரூ. 80 குறைந்து விற்பனையானது.
-
விஜய் வருகையால் அனைத்து கட்சிகளின் வாக்குகள் சிதறும் : கார்த்தி சிதம்பரம் எம்.பி. கருத்து
15 Sep 2025மாானமதுரை : விஜய் வருகையால் அனைத்து கட்சிகளின் வாக்குகள் சிதறும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.
-
பாம் திரைவிமர்சனம்
15 Sep 2025ஒற்றுமையாக இருந்து பிரிந்த இரண்டு கிராம மக்கள் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் 'அன்புக்கரங்கள' திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்
15 Sep 2025சென்னை, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 2000 உதவித்தொகை வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று (செப். 15) தொடக்கி வைத்தார்.
-
இந்தியாவுடனான உறவை முறிக்க முடியாது: அமெரிக்காவுக்கு ரஷ்யா பதில்
15 Sep 2025மாஸ்கோ : எண்ணை வாங்கும் விவகாரம் தொடர்பாக இந்தியாவுடனான உறவை முறிக்க முடியாது என்று அமெரிக்காவுக்கு ரஷ்யா கூறியுள்ளது.
-
பிளாக்மெயில் திரைவிமர்சனம்
15 Sep 2025மருந்து கடை சப்ளையராக வேலை செய்யும் ஜி.வி.பிரகாஷ் செய்யாத குற்றத்திற்காக தன் கடை உரிமையாளருக்கு ரூ.50 லட்சம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்.
-
சக்தி திருமகன் படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா
15 Sep 2025விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன்னனோட்டம் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
-
பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளம் பாதித்த இடங்களை பார்வையிட்டார் ராகுல் காந்தி
15 Sep 2025பஞ்சாப் : பஞ்சாபின் அமிர்தசரஸில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று, இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கலந்துரையாடினா
-
எங்களுடைய அடிப்படையே பதவி அல்ல, பொறுப்புதான்: 'அன்பு கரங்கள்' திட்ட தொடக்க விழாவில் முதல்வர் பேச்சு
15 Sep 2025சென்னை, அரசியல் என்பது மக்கள் பணி. அது கடுமையான பணி.
-
பீகாரில் தொகுதி பங்கீட்டில் இழுபறி: 243 தொகுதிகளிலும் போட்டியிட தேஜஸ்வி யாதவ் அதிரடி முடிவு
15 Sep 2025பாட்னா : பீகாரில் தொகுதி பங்கீட்டில் இழுபறி 243 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.
-
ஆசிய கோப்பை 6-வது லீக்: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
15 Sep 2025துபாய் : ஆசிய கோப்பை 6-வது லீக் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
பார்லி.யில் காப்பீட்டு திருத்த மசோதா தாக்கல் செய்யப்படுவது எப்போது? - நிர்மலா சீதாராமன் பதில்
15 Sep 2025புதுடெல்லி : காப்பீட்டு திருத்த மசோதா எப்போது தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
-
வரி - தடைகளை விதிப்பதால் பிரச்சினைகளை தீர்க்க முடியாது : அதிபர் ட்ரம்புக்கு சீனா பதிலடி
15 Sep 2025பீஜிங் : வரி-தடைகளை விதிப்பதால் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்று ட்ரம்புக்கு சீனா கூறியுள்ளது.
-
முதல்முறையாக ராமதாஸ் மகள் பா.ம.க. கூட்டத்தில் பேச்சு
15 Sep 2025கிருஷ்ணகிரி : முதல்முறையாக டாக்டர் ராமதாசின் மகள் பா.ம.க. கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
-
சென்னையில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கக்கோரி காவல்துறையிடம் மனு
15 Sep 2025சென்னை, சென்னையில் த.வெ.க. தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ள அனுமதிகோரி கமிஷனர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
-
மும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை: சிவப்பு எச்சரிக்கை
15 Sep 2025மும்பை : மும்பையில் கொட்டித் தீர்த்த கனமழையால் அந்த பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
பேரறிஞர் அண்ணா என்றால் தமிழ்நாடு, தமிழ், திராவிடம் எடப்பாடி பழனிசாமி புழஞ்சலி
15 Sep 2025சென்னை, சந்தேக கேள்விகளுக்கு தன் செயலால், சாதனையால் பதில் சொன்ன தென்னாட்டுத் தென்றல் என்று அண்ணாவுக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ள எடப்பாடி பழனிசாமி, அண்ணா என்றால் தமிழ்நாட
-
கொடைக்கானல் அருகே 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன்: 12 பேர் காயம்
15 Sep 2025கொடைக்கானல் : கொடைக்கானல் அருகே 100 அடி பள்ளத்தில் சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.