எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாகர்கோவில் , ஜூன் 16 - நாகர்கோவிலில் லஞ்சம் வாங்கிய சுரங்கத்துறை இயக்குநர் கைது செய்யப்பட்டார்.நாகர்கோவில் பனந்தால்மூடை அடுத்துள்ள அவரிகாளை விளையை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவர் காரோடு பகுதியில் கல்குவாரி நடத்தி வருகிறார்.கடந்த 8 ந் தேதி கல் எடுப்பதற்காக புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் மாரிமுத்துவிடம் 200 பாஸ் வாங்குவதற்கு வந்தார். அப்போது அவரிடம் சுரங்கத்துறை அதிகாரி மாரிமுத்து அடுத்து வரும் 25 ஆயிரம் கொண்டுவரவேண்டும் என்று கூறியதாகவும், அதற்கு ரமேஷ்குமார் 20 ஆயிரம் தருவதாகவும் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து ரமேஷ்குமார் விஜிலென்ஸ் டி.எஸ்.பி.சுந்தர்ராஜனிடம் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து டி.எஸ்.பி அறிவுரையின் பேரில் ரமேஷ்குமார் சுரங்கத்துறை அதிகாரி மாரிமுத்துவிடம் ரூ 20 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த டி.எஸ்.பி. சுந்தர்ராஜன் மற்றும் தர்மராஜ், சாலமன்துறை ஆகியோர் சென்று கையும் களவுமாக மாரிமுத்துவை பிடித்து ரூ.20 ஆயிரம் லஞ்சப்பணத்துடன் மாரிமுத்துவை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மாரிமுத்துவின் சொந்த ஊர் ராஜபாளையம் ஆகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


