எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவனந்தபுரம்,ஜூலை.3 - உலகிலேயே மிகப் பெரிய பணக்கார கடவுளாக கருதப்படும் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இந்தியா முழுக்க அசையா சொத்துக்கள் இருக்கின்றன. ஆந்திராவில் மட்டும் திருப்பதி கோவில் பெயரில் 4 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கணக்கீடு செய்யப்பட்ட போது திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ. 53 ஆயிரம் கோடிக்கு அசையும், அசையா சொத்துக்கள், நகைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தங்க, வைர நகைகள் மட்டும் 20 டன் அளவுக்கு உள்ளது. இந்த நகைகளில் பல 12 ம் நூற்றாண்டு காலத்தில் செய்யப்பட்டவை ஆகும். கலைநயமிக்க இந்த நகைகள் போன்று இந்தியாவில் வேறு எந்த கோவிலிலும் இல்லை என்று கருதப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது திருவனந்தபுரத்தில் பத்மநாபசுவாமி கோவில் கருவறை அருகே 6 பாதாள அறைகளில் இருந்து எடுக்கப்பட்டு வரும் தங்க, வைர நகைகளின் குவியல் பிரமிப்பூட்டும் வகையில் உள்ளன. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி நடந்து வரும் இந்த கணக்கெடுப்பில் 6 அறைகளும் ஏ,பி,சி,டி,இ,எப். என கோடிடப்பட்டு ஒவ்வொரு அறையாக ஆய்வு நடந்து வருகிறது. நேற்று முன்தினம் வரை ரூ. 50 ஆயிரம் கோடிக்கு நகைகள் இருப்பது தெரியவந்துள்ளது. ஏ அறையில் மட்டும் 10 கிலோ எடையில் 18 அடி நீள தங்க மாலை இருந்தது. ஒரு பெட்டிக்குள் 1200 தங்க சங்கிலிகள் இருந்தன. 500 கிலோ எடை கொண்ட தங்க நாணயங்கள் ஒரு மூட்டையில் கட்டி வைக்கப்பட்டிருந்தது. இந்த ஒரு அறையில் மட்டும் கணக்கிடப்பட்ட நகைகளின் மதிப்பு ஒரு லட்சம் கோடியை தாண்டியதாம். திறக்கப்பட்ட பி அறையில் உள்ள பாதியளவு நகைகள் மட்டுமே மதிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் பல அறைகள் திறக்கப்படாமலேயே உள்ளது.
தற்போது பத்மநாபசுவாமி கோவிலின் சுரங்க அறைகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ள தங்க நாணயங்களில் 17 கிலோ நாணயங்கள் கிழக்கு இந்திய கம்பெனிக்காரர்கள் காலத்தில் செய்யப்பட்டவை ஆகும். ஒரு சாக்கு மூட்டையில் இருந்த தங்க நாணயங்கள், நெப்போலியன் காலத்தை சேர்ந்தவை என்று தெரியவந்துள்ளது. இந்த தங்க, வைர நகைகளில் பெரும்பாலானவை பத்மநாபசுவாமிக்கு காணிக்கையாக கொடுக்கப்பட்டவை. ஒரு அறையில் இருந்த ஆபரணங்கள் அனைத்தும் திருவாங்கூர் மன்னர்கள், அரசிகள் அணிந்தவை என்று தெரியவந்துள்ளது.
பல நூற்றாண்டுகளை கடந்தாலும் இன்னும் தங்க, வைர நகைகள் தற்போது செய்யப்பட்டவை போல் பளிச்சென்று மின்னுகின்றன. பத்மநாபசுவாமி கோவிலில் இன்னும் சில ரகசிய பாதாள அறைகள் திறக்கப்படாமல் உள்ளன. இந்த கணக்கெடுப்பு முடிய சுமார் ஒரு வாரமாகும் எனத் தெரிகிறது. அதன் பிறகு பத்மநாபசுவாமி கோயில் நகைகள் மதிப்பு பற்றிய விவரம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும். இதற்கிடையே நகை மதிப்பீடு தகவல்கள் வெளியாவதால் பத்மநாபசுவாமி கோயிலுக்கு வெளியாவதால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து விட்டது.
எனவே இனி மதிப்பீடு செய்யப்படும் தகவல்களை வெளியிடக் கூடாது என்று பத்மநாபசுவாமி கோயில் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பல ஆயிரம் கோடிக்கு தங்க, வைர நகைகள் உள்ளதால் பாதுகாப்பு கருதி கோவிலை சுற்றி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கோயிலை பற்றி வியக்கத்தக்க தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளதால் தீவிரவாதிகளால் ஏற்படக் கூடும் ஆபத்தை தடுக்கவும் ராணுவ பாதுகாப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்கார கடவுள் என்ற அந்தஸ்தை எட்டியுள்ளது. உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையானை திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி முந்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 hours 1 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி3 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 23 hours ago |
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-04-2024.
20 Apr 2024 -
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.
-
கேன்டிடேட் செஸ் 12-வது சுற்று: இந்தியாவின் குகேஷ் உட்பட மூவர் முதலிடம்
19 Apr 2024ஒட்டோவா : கேன்டிடேட் செஸ் போட்டியின் 12 வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் உட்பட மூவர் முதலிடத்தில் உள்ளனர்.
-
ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம்
19 Apr 2024சண்டிகர் : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் அறிவித்துள்ளது.
மும்பை வெற்றி...
-
தென் சென்னைக்கு உட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குபதிவு நடத்த தமிழிசை கோரிக்கை
20 Apr 2024சென்னை : தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். 
-
சென்னையில் ஓட்டுப்பதிவில் நகர்ப்புறங்களில் சுணக்கம் : ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம்
20 Apr 2024சென்னை : சென்னையில் ஓட்டுப்போடுவதில் நகர்ப்புற மக்கள் இடையே ஒரு சுணக்கம் ஏற்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஜெ.ராதாகிருஷ்ணன் கூறி
-
மாணிக்க மூக்குத்தி மீனாட்சி அம்மனுக்கு மதுரையில் இன்று கோலாகல திருக்கல்யாணம் : ரூ. 30 லட்சத்தில் மலர்களால் மணமேடை அலங்கரிப்பு
20 Apr 2024மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடக்கிறது. திருக்கல்யாணத்தையொட்டி ரூ.
-
24 மணி நேரமும் வாக்கு எண்ணும் மையங்களை கண்காணிக்க வேண்டும் : அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி அறிவுறுத்தல்
20 Apr 2024சென்னை : மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று
-
எலான் மஸ்கின் இந்திய பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
20 Apr 2024வாஷிங்டன், டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் தனது இந்திய பயணத்தை ஒத்திவைத்துள்ளார். ஆண்டின் இறுதியில் இந்தியா வர ஆவலாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
-
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்பிற்கு எதிராக குழு அமைப்பு: நீதிமன்றத்திற்கு முன்பு ஆதரவாளர் தீக்குளிப்பு
20 Apr 2024வாஷிங்டன், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிரான விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்றத்திற்கு முன்பு அவரது ஆதரவாளர் ஒருவர் தீக
-
பிரியங்காவின் உதவியாளர் பா.ஜ.,வில் இணைந்தார்
20 Apr 2024புதுடில்லி: காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்காவின் நெருங்கிய உதவியாளர் தஜிந்தர் சிங், அக்கட்சியில் இருந்து விலகி, சில மணி நேரங்களிலேயே பா.ஜ.,வில் இணைந்தார்.
-
சித்திரை திருவிழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் நடந்த தேரோட்டம் : மின்கம்பங்களில் சிக்கிய அலங்கார பந்தல்
20 Apr 2024தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவிலின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
-
தமிழகத்தில் 24-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
20 Apr 2024சென்னை : தமிழகத்தில் இன்று 21-ம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடு
-
நடுவானில் வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்: கென்யாவில் ராணுவ தளபதி உள்பட 10 பேர் உயிரிழப்பு
20 Apr 2024நைரோபி, கென்யாவில் நடுவானில் ஹெலிகாப்டர் வெடித்து சிதறிய விபத்தில் ராணுவ தளபதி உட்பட 10 பேர் பலியானார்கள்.
-
மதுபான கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
20 Apr 2024புது டெல்லி, மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது சி.பி.ஐ, அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகள்
-
பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் ஏவுகணையை வழங்கிய இந்தியா
20 Apr 2024மணிலா, ஒப்பந்தத்தின்படி பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை இந்தியா நேற்று வழங்கியுள்ளது.
-
திருச்சூரில் கோலாகலமாக நடந்த பூரம் திருவிழா: குடை மாற்றும் நிகழ்வை கண்டுகளித்த பக்தர்கள்
20 Apr 2024திருச்சூர், திருச்சூரில் பூரம் திருவிழா கோலாகலமாக நடந்தது. இந்நிகழ்வில் குடை மாற்றும் நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.
-
தேர்தலுக்கு பிறகு இண்டியா கூட்டணியே இருக்காது: மகராஷ்டிராவில் பிரதமர் மோடி பேச்சு
20 Apr 2024மும்பை, தேர்தலுக்கு பிறகு இண்டியா கூட்டணி சரிந்து விழும்.
-
இட ஒதுக்கீட்டு கொள்கை குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா கருத்து
20 Apr 2024புது டெல்லி, நாங்களும் இட ஒதுக்கீட்டு கொள்கையை தொட மாட்டோம்.
-
அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இண்டியா கூட்டணி தடுக்கும்: ராகுல் காந்தி
20 Apr 2024பாட்னா : அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இண்டியா கூட்டணி தடுக்கும் என்று பீகாரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசினார்.
-
வாக்குச்சாவடியில் விதிமீறல் ? நடிகர் விஜய் மீது புகார்
20 Apr 2024சென்னை, வாக்குச்சாவடியில் விதிமீறல்.? - த.வெ.க. தலைவர் விஜய் மீது புகார்
-
அழகர்கோவிலில் சித்திரை திருவிழா தொடக்கம்: அழகர்மலையிலிருந்து மதுரைக்கு இன்று கள்ளழகர் புறப்படுகிறார் : மூன்றுமாவடியில் நாளை எதிர்சேவை
20 Apr 2024மதுரை : மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோவில் சித்திரைத் திருவிழா கோலாகலமாகத் தொடங்கிய நிலையில் இன்று (ஏப். 21) மாலை அழகர்மலையிலிருந்து மதுரைக்கு கள்ளழகர் புறப்படுகிறார்.
-
பா.ஜ.க. மீண்டும் ஆட்சியமைத்தால் தேர்தல் பத்திரங்கள் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து
20 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் வென்று பாஜக ஆட்சியமைத்தால் வல்லுநர்களுடனான முறையான ஆலோசனைக்குப் பிறகு, தேர்தல் பத்திரங்கள் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்
-
மகாவீர் ஜெயந்தியையொட்டி செல்வப்பெருந்தகை வாழ்த்து
20 Apr 2024சென்னை : மகாவீர் ஜெயந்தியையொட்டி தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.