எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருவனந்தபுரம்,ஜூலை.3 - உலகிலேயே மிகப் பெரிய பணக்கார கடவுளாக கருதப்படும் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இந்தியா முழுக்க அசையா சொத்துக்கள் இருக்கின்றன. ஆந்திராவில் மட்டும் திருப்பதி கோவில் பெயரில் 4 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கணக்கீடு செய்யப்பட்ட போது திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ. 53 ஆயிரம் கோடிக்கு அசையும், அசையா சொத்துக்கள், நகைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தங்க, வைர நகைகள் மட்டும் 20 டன் அளவுக்கு உள்ளது. இந்த நகைகளில் பல 12 ம் நூற்றாண்டு காலத்தில் செய்யப்பட்டவை ஆகும். கலைநயமிக்க இந்த நகைகள் போன்று இந்தியாவில் வேறு எந்த கோவிலிலும் இல்லை என்று கருதப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது திருவனந்தபுரத்தில் பத்மநாபசுவாமி கோவில் கருவறை அருகே 6 பாதாள அறைகளில் இருந்து எடுக்கப்பட்டு வரும் தங்க, வைர நகைகளின் குவியல் பிரமிப்பூட்டும் வகையில் உள்ளன. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி நடந்து வரும் இந்த கணக்கெடுப்பில் 6 அறைகளும் ஏ,பி,சி,டி,இ,எப். என கோடிடப்பட்டு ஒவ்வொரு அறையாக ஆய்வு நடந்து வருகிறது. நேற்று முன்தினம் வரை ரூ. 50 ஆயிரம் கோடிக்கு நகைகள் இருப்பது தெரியவந்துள்ளது. ஏ அறையில் மட்டும் 10 கிலோ எடையில் 18 அடி நீள தங்க மாலை இருந்தது. ஒரு பெட்டிக்குள் 1200 தங்க சங்கிலிகள் இருந்தன. 500 கிலோ எடை கொண்ட தங்க நாணயங்கள் ஒரு மூட்டையில் கட்டி வைக்கப்பட்டிருந்தது. இந்த ஒரு அறையில் மட்டும் கணக்கிடப்பட்ட நகைகளின் மதிப்பு ஒரு லட்சம் கோடியை தாண்டியதாம். திறக்கப்பட்ட பி அறையில் உள்ள பாதியளவு நகைகள் மட்டுமே மதிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் பல அறைகள் திறக்கப்படாமலேயே உள்ளது.
தற்போது பத்மநாபசுவாமி கோவிலின் சுரங்க அறைகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ள தங்க நாணயங்களில் 17 கிலோ நாணயங்கள் கிழக்கு இந்திய கம்பெனிக்காரர்கள் காலத்தில் செய்யப்பட்டவை ஆகும். ஒரு சாக்கு மூட்டையில் இருந்த தங்க நாணயங்கள், நெப்போலியன் காலத்தை சேர்ந்தவை என்று தெரியவந்துள்ளது. இந்த தங்க, வைர நகைகளில் பெரும்பாலானவை பத்மநாபசுவாமிக்கு காணிக்கையாக கொடுக்கப்பட்டவை. ஒரு அறையில் இருந்த ஆபரணங்கள் அனைத்தும் திருவாங்கூர் மன்னர்கள், அரசிகள் அணிந்தவை என்று தெரியவந்துள்ளது.
பல நூற்றாண்டுகளை கடந்தாலும் இன்னும் தங்க, வைர நகைகள் தற்போது செய்யப்பட்டவை போல் பளிச்சென்று மின்னுகின்றன. பத்மநாபசுவாமி கோவிலில் இன்னும் சில ரகசிய பாதாள அறைகள் திறக்கப்படாமல் உள்ளன. இந்த கணக்கெடுப்பு முடிய சுமார் ஒரு வாரமாகும் எனத் தெரிகிறது. அதன் பிறகு பத்மநாபசுவாமி கோயில் நகைகள் மதிப்பு பற்றிய விவரம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும். இதற்கிடையே நகை மதிப்பீடு தகவல்கள் வெளியாவதால் பத்மநாபசுவாமி கோயிலுக்கு வெளியாவதால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து விட்டது.
எனவே இனி மதிப்பீடு செய்யப்படும் தகவல்களை வெளியிடக் கூடாது என்று பத்மநாபசுவாமி கோயில் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பல ஆயிரம் கோடிக்கு தங்க, வைர நகைகள் உள்ளதால் பாதுகாப்பு கருதி கோவிலை சுற்றி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கோயிலை பற்றி வியக்கத்தக்க தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளதால் தீவிரவாதிகளால் ஏற்படக் கூடும் ஆபத்தை தடுக்கவும் ராணுவ பாதுகாப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்கார கடவுள் என்ற அந்தஸ்தை எட்டியுள்ளது. உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையானை திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி முந்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-10-2025.
18 Oct 2025 -
வைகையில் கடும் வெள்ளப்பெருக்கு : விவசாய நிலங்கள் கடும் பாதிப்பு
18 Oct 2025தேனி : தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
-
காலையில் குறைந்து, மாலையில் உயர்ந்த ஒரு பவுன் தங்கம் விலை
18 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று காலையில் குறைந்த நிலையில், மாலையில் அதிகரித்தது.
-
நாடு முழுவதும் அதிகரித்துள்ள டிஜிட்டல் கைது சம்பவங்கள்: சுப்ரீம் கோர்ட் கவலை
18 Oct 2025புதுடெல்லி, நாடு முழுவதும் டிஜிட்டல் கைது சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கவலை தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், டிஜிட்டல் கைது விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்
-
விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும்: டி.டி.வி.தினகரன் தகவல்
18 Oct 2025சென்னை : விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
-
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் : வாகன ஓட்டிகள் அவதி
18 Oct 2025சென்னை : விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
-
ஜி.எஸ்.டி. குறைப்பால் நுகர்வோருக்கு பலன் : நிர்மலா சீதாராமன் பெருமிதம்
18 Oct 2025சென்னை : ஜி.எஸ்.டி. வரி குறைப்பின் பலன் மக்களுக்கு நேரடியாக சென்றுள்ளது என்றும், ஜி.எஸ்.டி.
-
கள்ளக்குறிச்சியில் வீடு தீப்பிடித்து விபத்து: உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி
18 Oct 2025சென்னை : எரிவாயு கசிவு காரணமாக வீடு தீப்பிடித்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
பீகார் துணை முதல்வரின் வயது, கல்வித்தகுதி குறித்து சர்ச்சை
18 Oct 2025பாட்னா, பீகார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி கல்வித்தகுதி குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
-
மத்திய அமைச்சர் அமித்ஷா 25-ம் தேதி கோவை வருகை
18 Oct 2025கோவை, ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகாசிவராத்திரி விழாவில் பங்கேற்க கோவைக்கு வருகிற 25-ம் தேதி மத்திய அமைச்சர் அமித்ஷா வருகிறார்.
-
காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்ற தமிழக பக்தர்கள் கும்பமேளாவில் புனித நீராடினர்
18 Oct 2025வாரணாசி, காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்ற தமிழக பக்தர்கள் கும்பமேளாவில் புனித நீராடினர்.
-
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது: அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
18 Oct 2025வாஷிங்டன், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது என்று அதிபர் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
-
ஒருதலை காதலால் விபரீதம்: கல்லூரி மாணவியை கொன்ற வாலிபர்
18 Oct 2025ஸ்ரீராமபுரம் : ஒருதலை காதலால் விபரீதம்.. கல்லூரி மாணவியை கொன்ற வாலிபர் போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
-
தீவிரமாகும் வடகிழக்கு பருவமழை: பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் வெளியீடு
18 Oct 2025சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை முன்னிட்டு பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்
-
பெரம்பூரில் ரூ.34.9 லட்சம் மதிப்பில் பல்நோக்கு மையக் கட்டிடம் திறப்பு
18 Oct 2025சென்னை : பெரம்பூரில் ரூ.34.9 லட்சம் மதிப்பில் பல்நோக்கு மையக் கட்டிடத்தை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.
-
சபரிமலை கோவிலுக்கு புதிய மேல்சாந்தி தேர்வு
18 Oct 2025திருவனந்தபுரம் : சபரிமலை கோவிலில் புதிய மேல்சாந்தி தேர்வு செய்யப்பட்டார்.
-
ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்தது இந்தியா..!
18 Oct 2025புதுடெல்லி, அதிபர் ட்ரம்ப் கருத்து கூறிய நிலையில் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்ததுள்ளது இந்தியா.
-
முற்றிலும் உள்நாட்டில் தயாரான பிரமோஸ் ஏவுகணைகள் ராணுவத்திடம் ஒப்படைப்பு
18 Oct 2025லக்னோ : பிரமோஸ் ஏவுகணைகளின் முதல் தொகுப்பு தயாரிக்கப்பட்டு இந்திய பாதுகாப்புப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
-
பஞ்சாப்பில் பயணிகள் ரயிலில் தீ விபத்து: பயணிகள் அதிர்ச்சி
18 Oct 2025அமிர்தசரஸ், பஞ்சாப் மாநிலத்தில் பயணிகள் ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதையடுத்து பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
-
தீபாவளியை முன்னிட்டு வரும் 22-ம் தேதி வரை 110 சிறப்பு ரயில்கள் இயக்கம்
18 Oct 2025சென்னை, தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் 22-ம் தேதி வரையில் 110 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபட இன்று முன்பதிவு தொடக்கம் : தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் ஒதுக்கீடு
18 Oct 2025திருமலை : தீருப்பதி கோவிலில் வழிபட தரிசன டோக்கன்கள் இன்று முதல் ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
-
கூடுதல் கட்டணம் வசூல் புகார்: ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.43.50 லட்சம் அபராதம்
18 Oct 2025சென்னை, ஆம்னி பஸ்களுக்கு ரூ.43.50 லட்சம் அபராதம், விதித்து வரி வசூத்த போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ. ஆட்சியில் தலித்துகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது: ராகுல்
18 Oct 2025லக்னோ, பா.ஜ.க. ஆட்சியில் தலித்துகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
-
தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள் என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள் : வானதி சீனிவாசன் விமர்சனம்
18 Oct 2025கோவை : தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள்" என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
-
ரூ.1.5 லட்சம் கோடியை எட்டியது பாதுகாப்பு துறைக்கான உற்பத்தி : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்
18 Oct 2025லக்னோ : வர்த்தகம் இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ள மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தற்போது பாதுாகப்பு துறைக்கான உ