எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐதராபாத், ஜூலை - 6 - தனித் தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி தெலுங்கானா பகுதியில் 2 நாள் பந்த் போராட்டம் நடைபெற்றது. இதனால் தெலுங்கானா பகுதியின் 11 மாவட்டங்களில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. மேலும் இப்பிரச்சனையை வலியுறுத்தி தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகரராவ், விஜயசாந்தி ஆகியோர் தங்களது எம்.பி. பதவிகளை நேற்று ராஜினாமா செய்தனர். ஆந்திராவை பிரித்து தனித் தெலுங்கானா மாநிலம் உருவாக்கித் தர வேண்டும் என்று கோரி தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த மக்கள் நீண்ட காலமாக போராட்டங்களை நடத்தி வந்தனர். இதையடுத்து தனி தெலுங்கானா அமைக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்தது. ஆனால் உறுதியளித்தபடி இன்னும் தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படவில்லை. தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்பதில் தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் ஒட்டுமொத்தமாக உறுதியாக உள்ளன. நேற்று முன்தினம் காங்கிரஸ் மற்றும் தெலுங்குதேசம் கட்சிகளைச் சேர்ந்த 75 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தள்ளனர். மேலும் 12 எம்.பி.க்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் ஆந்திர அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகரராவ், அக்கட்சியின் எம்.பி. விஜயசாந்தி ஆகியோர் தங்களது எம்.பி. பதவிகளை நேற்று ராஜினாமா செய்துள்ளனர். இவர்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமாருக்கு பேக்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் சபாநாயகர் மீராகுமாரை சந்திக்கப்போவதாக சந்திரசேகரராவ் கூறியுள்ளார். மேலும் 2 தெலுங்குதேசம் கட்சி எம்.பி.க்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் 11 எம்.எல்.ஏ.க்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
இந்த நிலையில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆந்திர மாநில ஜவுளித்துறை அமைச்சர் சங்கர்ராவும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆந்திர துணை சபாநாயகருக்கு பேக்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளார். இவரையும் சேர்த்து ராஜினாமா செய்துள்ள ஆந்திர அமைச்சர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
இந்தநிலையில் தெலுங்கானா பகுதியில் ஐதராபாத் உட்பட 11 மாவட்டங்களில் கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்தம் நடைபெற்றது. இதனால் தெலுங்கானா பகுதி முழுவதுமே ஸ்தம்பித்தது. 2 நாள் பந்த் போராட்டத்தை அடுத்து இந்த பகுதியில் கடைகள் வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், மார்க்கெட்டுகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. தெலுங்கானா அரசியல் கூட்டு செயற்குழு அழைப்பிற்கு இணங்க நேற்று இந்த பந்த் நடைபெற்றது. பந்த்தின் காரணமாக பேருந்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளும் இயக்கப்படவில்லை. சில இடங்களில் சாலைகளில் ஓடிய வாகனங்களை வழிமறித்து தெலுங்கானா ஆதரவாளர்கள் ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டனர். மேலும் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் பேரணி நடத்த முயன்றபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். மாணவர்கள் மீறிச் சென்றதால் போலீசார் மாணவர்கள் மீது கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஐதராபாத்தில் பெரும்பாலான பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆனால் ஆட்டோ ரிக்ஷாக்கள் மட்டும் ஓடிக்கொண்டிருந்தன. இந்த இரண்டு நாள் பந்த்தை முன்னிட்டு தெலுங்கானா முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வரும் நாட்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் தடையை ஏற்படுத்தி போராட்டம் நடத்தப்படும் எனவும் கூட்டு செயற்குழு அறிவித்துள்ளது. தெலுங்கானா அரசியல் கூட்டு செயற்குழுவில் டி.ஆர்.எஸ்., பி.ஜே.பி. உள்பட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் இடம்பெற்றுள்ளன. தெலுங்கானா பகுதியில் நேற்று நடந்த பந்த் போராட்டத்தினால் அந்தப் பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்த 2 நாள் போராட்டத்தின் காரணமாக தெலுங்கானா பகுதியில் ரூ. 20 ஆயிரம் கோடிக்கு வங்கி பணப் பரிமாற்றங்கள் முடங்கிப்போயுள்ளன. இந்தப் பகுதியில் மட்டும் 5 ஆயிரம் வங்கிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வங்கிச் சொத்துக்கள் சேதப்படுத்தப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாகவே வங்கிக் கிளைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன என்று வங்கி அதிகாரிகள் சங்க தலைவர் ஒருவர் கூறினார். வங்கி பண பரிமாற்ற முட்டுக்கட்டைகளை போக்க குறைந்தது 3 நாட்கள் ஆகும் என்று வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
- தேர்தல் சீசனில் மட்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி, பா.ஜ.க. கூட்டணிக்கு தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி
- கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட மகாத்மா காந்தி பெயரில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை தொடர வேண்டும் : சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
மக்கள்தொகை கணக்கெடுப்பில் கேட்க வேண்டிய 33 கேள்விகள் மத்திய அரசு வெளியீடு
23 Jan 2026டெல்லி, மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது குடிமக்களிடம் கேட்க வேண்டிய 33 கேள்விகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
-
மதுராந்தகத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்: ஒரேமேடையில் பங்கேற்ற தே.ஜ. கூட்டணி தலைவர்கள்
23 Jan 2026செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நேற்ரு நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிகளை சேர்ந்த தலைவர்கள் ஒரேமேடையில் பங்கேற்றனர்.
-
மதுராந்தகம் வந்த பிரதமர் மோடி: இ.பி.எஸ். உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் உற்சாக வரவேற்பு
23 Jan 2026செங்கல்பட்டு, மதுராந்தகம் வந்த பிரதமர் மோடிக்கு இ.பி.எஸ். உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
-
அ.தி.மு.க. கூட்டணியில் த.வெ.க. இணையுமா..? செங்கோட்டையன் பதில்
23 Jan 2026சென்னை, பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணியில் த.வெ.க. இணையுமா என்பது குறித்து செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
-
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கான தோ்வெண்ணுடன் கூடிய பெயா் பட்டியல் வெளியீடு
23 Jan 2026சென்னை, தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதவுள்ள பள்ளி மாணவா்களுக்கு தோ்வு எண்ணுடன் கூடிய பெயா்ப் பட்டியலை தோ்வுத் துறை வெளியிட்டுள்ளது.
-
டி.டி.வி. தினகரனுடன் கை குலுக்கிய இ.பி.எஸ்.
23 Jan 2026செங்கல்பட்டு, தேசிய ஜனநாயக பொதுக்கூட்டத்தில் டி.டி.வி. தினகரனுடன் கை குலுக்கிய எடப்பாடி பழனிசாமி கை குலுக்கிக் கொண்டனர்.
-
குஜராத் போல கேரளத்திலும் பா.ஜ.க. ஆட்சி: பிரதமர் மோடி
23 Jan 2026திருவனந்தபுரம், குஜராத்தை போல கேரளத்திலும் பா.ஜ.க. ஆட்சியமைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
23 Jan 2026சென்னை, சென்னை உட்பட 7 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மின் பேருந்துகள் லாபத்தில் இயங்குகின்றன - அமைச்சர்
23 Jan 2026சென்னை, மின்சார பேருந்துகள் லாபகரமாக ஓடுகிறது என சட்டசபையில் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
-
தி.மு.க.வில் இணைந்தது ஏன்..? மாணிக்கராஜா விளக்கம்
23 Jan 2026சென்னை, அ.ம.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தது குறித்து மாணிக்கராஜா விளக்கம் அளித்துள்ளார்.
-
நாகாலாந்தில் நிலநடுக்கம்
23 Jan 2026நாகலாந்த், நாகாலாந்தில் வெள்ளிக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 4.0-ஆக பதிவாகியுள்ளது.
-
வடக்கில் சரிசெய்துவிட்டு பிரதமர் தெற்கே வரட்டும்: காங்கிரஸ் கட்சி விமர்சனம்
23 Jan 2026திருவனந்தபுரம், வட மாநிலங்களில் உள்ள பிரச்னைகளைத் தீர்த்துவிட்டு, தென் மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கட்டும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
-
நானும், டி.டி.வி. தினகரனும் ஜெயலலிதா வளர்த்த பிள்ளைகள் எடப்பாடி பழனிசாமி பேட்டி
23 Jan 2026சென்னை, நானும் டி.டி.வி. தினகரனும் ஜெயலலிதா வளர்த்த பிள்ளைகள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
தமிழ்நாடு தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இருக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பதிவு
23 Jan 2026புதுடெல்லி, தமிழ்நாடு தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இருக்கிறது என்றும் தி.மு.க அரசுக்கு விடை கொடுக்க தமிழக மக்கள் முடிவு செய்துள்ளனர் என்றும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
-
ஜம்மு-காஷ்மீரில் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு சட்டசபையில் இரங்கல் தீர்மானம்
23 Jan 2026சென்னை, ஜம்மு காஷ்மீரில் வாகன விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு தமிழக சட்டசபையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
ஜனநாயகன் பட வழக்கில் வருகிற 27-ம் தேதி தீர்ப்பு
23 Jan 2026சென்னை, ஜனநாயகன் படத்தின் தணிக்கை சான்று தொடர்பான வழக்கில் வரும் செவ்வாய்க்கிழமை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
-
இன்று ம.நீ.ம.செயற்குழு கூட்டம்
23 Jan 2026சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுவதாக கமல்ஹாசன் தெரிவித்தார்.
-
தேர்தல் சீசனில் மட்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி, பா.ஜ.க. கூட்டணிக்கு தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி
23 Jan 2026சென்னை, தேர்தல் சீசனில் மட்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி, பா.ஜ.க.
-
கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட மகாத்மா காந்தி பெயரில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை தொடர வேண்டும் : சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றம்
23 Jan 2026சென்னை, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மகாத்மா காந்தி பெயரில் தொடர வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்ட
-
இரட்டை இலை சின்னம் குறித்த வழக்கு: டெல்லி ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல்
23 Jan 2026புதுடெல்லி, இரட்டை இலை சின்னம் குறித்த வழக்கு குறித்து தேர்தல் ஆணையம் டெல்லி ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்தது.
-
திருவனந்தபுரம் - தாம்பரம் உள்பட 3 அம்ருத் பாரத் ரயில்களை துவக்கி வைத்தார் பிரதமர்
23 Jan 2026திருவனந்தபுரம், திருவனந்தபுரம் சென்டிரல் ரயில் நிலையத்தில் நேற்று காலை நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, திருவனந்தபுரம்- தாம்பரம் அம்ரித் பாரத் அறிம
-
திருவண்ணாமலையில் புதிய விமான நிலையம் அமையுமா? அமைச்சர் சிவசங்கர் பதில்
23 Jan 2026சென்னை, திருவண்ணாமலையில் விமான நிலையம் அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்துள்ளார்.
-
3.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெட்ரோ வளாகத்தில் பூங்கா: துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்
23 Jan 2026சென்னை, ரூ. 3.50 கோடி மதிப்பீட்டில் மெட்ரோஸ் பூங்காவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
23 Jan 2026- மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் வெள்ளி சிம்மாசனத்தில் பவனி
- திருச்சேறை சாரநாதர் விழா தொடக்கம்
- காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் புறப்பாடு
- திருமொச்சியூர், திருவாவடுதுறை, திருவானைக
-
இன்றைய ராசிபலன்
23 Jan 2026


