எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐதராபாத், ஜூலை- 7 - ஆந்திராவை இரண்டாக பிரித்து தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்கக்கோரி தெலுங்கானா பகுதியில் நேற்று 2-வது நாளாக முழு அடைப்பு நடத்தப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப்போனது. ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்து, 11 மாவட்டங்கள் அடங்கிய தனி தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கித் தரவேண்டும் என்று தெலுங்கானா பகுதியை சேர்ந்த மக்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகிறார்கள். இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகரராவ் சாகும்வரை உண்ணாவிரதம் போராட்டத்தை மேற்கொண்டார். இந்த உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து ஆந்திரா முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. அப்பொழுது கல்வீச்சு, தீ வைப்பு போன்ற வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்றன. போராட்டம் விஸ்பரூபம் எடுத்ததை அடுத்து தனித் தெலுங்கானா மாநிலம் அமைத்திட மத்திய அரசு சம்மதம் தெரிவித்தது. அதன் அடிப்படையில் சந்திரசேகர ராவ் தனது உண்ணாவிரதத்தை கைவிட்டார்.
தனித் தெலுங்கானா அமைப்பது தொடர்பாக நீதிபதி கிருஷ்ணா தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைத்தது. அந்த குழு மத்திய அரசுக்கு 6 விதமான யோசனைகளை கூறியது. அதன் பிறகும் கூட, தனித் தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படவில்லை. இதையடுத்து தெலுங்கானா பகுதி மக்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சிகளும் களத்தில் குதித்தன.
தனித் தெலுங்கானா அமைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி தெலுங்கான பகுதியை சேர்ந்த காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 104 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதைபோல 12-க்கும் மேற்பட்ட எம்.பி.க்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். ஆந்திர மாநில அமைச்சர்கள் சிலரும் ராஜினாமா கடிதங்களை கொடுத்துள்ளனர். ஆனாலும் இந்த விஷயத்தில் மத்திய அரசு இணக்கமான நடவடிக்கையை இன்னும் மேற்கொள்ளவில்லை. இதையடுத்து தெலுங்கானா பகுதியில் 48 மணி நேர (2 நாள்கள்) முழு அடைப்பு போராட்டத்திற்கு தெலுங்கானா அரசியல் போராட்டக்குழு அழைப்பு விடுத்தது. நேற்று முன்தினம் இந்த முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றபோது உஸ்மானியா பல்கலைக் கழக மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் மாணவர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். 2-வது நாளாக நேற்று தெலுங்கான பிராந்தியத்தில் உள்ள 11 மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள், வங்கிகள், தியேட்டர்கள், பெட்ரோல்-பங்குகள் அடைக்கப்பட்டிருந்தன. போக்குவரத்து முற்றிலும் முடங்கிப்போனது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழக பஸ்கள் அனைத்தும் தெலுங்கானா பகுதியில் நிறுத்தப்பட்டன. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
ஐதராபாத், செகந்தராபாத்தில் மட்டும் 10 ஆயிரம் அரசு போக்குவரத்து கழக பஸ் சர்வீஸ்கள் ரத்து செய்யப்பட்டன. அரசு அலுவலகங்களுக்கு குறைந்த எண்ணிக்கையிலேயே ஊழியர்கள் வந்திருந்தனர். இதனால் அரசு பணிகள் ஸ்தம்பித்தன. தெலுங்கானா பகுதியில் உள்ள 4 மாவட்டங்களில் உள்ள சிங்கரேனி கொல்லியர்ஸ் சுரங்க கம்பெனியில் 70 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள் இவர்கள் அனைவரும் கடந்த 2 நாட்களாக பணிக்கு வராததால் நிலக்கரி உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தெலுங்கானா போராட்டக் குழுவின் அமைப்பாளர் பேராசிரியர் கோதண்டராமை போலீசார் கைது செய்துள்ளனர். உஸ்மானிய பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய பேரணியில் கலந்துகொள்ள சென்ற போது அவரை போலீசார் கைது செய்தனர். ஐதராபாத்தில் கலை கல்லூரியிலிருந்து சட்டமன்றத்திற்கு அருகில் உள்ள கன்பார்க் என்ற இடத்திற்கு உஸ்மானிய பல்கலைக் கழக மாணவர்கள் ஊர்வலமாக செல்ல திட்டமிட்டிருந்ததை அடுத்து சட்டமன்றத்திற்கு செல்லும் அனைத்து சாலைகளையும் போலீசார் மூடிவிட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
மகர விளக்கு பூஜைக்காக சபரிமலையில் இன்று நடை திறப்பு
29 Dec 2025சபரிமலை, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சமரிமலையில் இன்று முதல் நடை திறக்கப்படுகிறது.
-
அன்புமணி புதிய கட்சி தொடங்கட்டும்: பா.ம.க.வின் செயல் தலைவர் பேச்சு
29 Dec 2025சேலம், அன்புமணிக்கு அதிகாரம் வேண்டும் என்றால் புதிய கட்சி தொடங்கட்டும் என்று ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தி தெரிவித்தார்.
-
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் குடும்பத்துடன் சாமி தரிசனம்
29 Dec 2025திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஸ்ரீரங்க நாச்சியாரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
-
வெல்லும் தமிழ் பெண்கள் கூடும் மேற்கு மண்டல மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
29 Dec 2025திருப்பூர், வெல்லும் தமிழ்ப் பெண்கள் கூடும் தி.மு.க. மகளிர் அணி மேற்கு மண்டல மாநாடு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் திரளாக உற்சாக வரவேற்பு
29 Dec 2025கோவை, தி.மு.க. மகளிர் மாநாட்டுக்காக நேற்று கோவை வந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
வார தொடக்கத்தில் தங்கம், வெள்ளி விலை சற்று சரிவு
29 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று சற்று குறைந்து விற்பனையானது.
-
தெருநாய் கணக்கெடுப்பு பணிகளுக்கு ஆசிரியர்களை உட்படுத்திய டெல்லி அரசுக்கு எதிர்ப்பு
29 Dec 2025டெல்லி, தெருநாய் கணக்கெடுப்பு பணிகளுக்கு ஆசிரியர்களை உட்படுத்திய டெல்லி அரசின் உத்தரவிற்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
-
7 லட்சம் மாணவிகளுக்கு உதவித்தொகை மற்றும் பல்வேறு திட்டங்களால்: தமிழகத்தில் கல்லூரிக்கு செல்லும் பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு:
29 Dec 2025திருப்பூர் மகளிரணி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
-
பட்ஜெட் தொடர்பாக ஆலோசிக்க இன்று பொருளாதார நிபுணர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி
29 Dec 2025புதுடெல்லி, பட்ஜெட் தொடர்பாக ஆலோசிக்க இன்று புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார்.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு இடம் இல்லை கனிமொழி எம்.பி. திட்டவட்டம்
29 Dec 2025சென்னை, இண்டியா கூட்டணி உடையும் என்று நயினார் நாகேந்திரன் கனவு காண்கிறார் என்று தெரிவித்துள்ள கனிமொழி எம்.பி., நிச்சயமாக, தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு இடம் இல்லை என்பதை
-
அன்புமணி என்னை தினமும் காயப்படுத்துகிறார் - ராமதாஸ்
29 Dec 2025சேலம், அன்புமணி என்னை தினமும் காயப்படுத்துகிறார் என்று ராமதாஸ் கூறினார்.
-
பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் கண்ணீர் விட்டு அழுத ராமதாஸ்..!
29 Dec 2025சேலம், சேலத்தில் நேற்று நடைபெற்ற பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி பற்றி பேசியபோது ராமதாஸ் கண்ணீர்விட்டு அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றிக் கூட்டணி அமைப்பேன்: டாக்டர் ராமதாஸ் பேச்சு
29 Dec 2025சேலம், வரும் சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றி கூட்டணியை அமைப்பேன் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
தமிழக மகளிர் என்றைக்கும் தி.மு.க. பக்கம்தான் உள்ளனர்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
29 Dec 2025திருப்பூர், தமிழக மகளிர் என்றைக்கும் தி.மு.க.
-
3 மீனவர்கள் கைது எதிரொலி: மண்டபத்தில் மீனவர்கள் திடீர் போராட்டம்
29 Dec 2025ராமேசுவரம், மண்டபம் பகுதியில் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
வரும் ஜனவரியில் கேரளா வருகிறார் பிரதமர் மோடி: பா.ஜ.க.வின் 'மிஷன் 2026' திட்டத்தை அறிவிக்கிறார்
29 Dec 2025திருவனந்தபுரம், வரும் ஜனவரி மாதம் கேரளா வருகை தரும் பிரதமர் மோடி, பா.ஜ.க.வின் 'மிஷன் 2026' திட்டத்தை அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆஜர்
29 Dec 2025கரூர், கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள சி.பி.ஐ . அலுவலகத்தில் த.வெ.க. துணை பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூ ஆஜராகினர்.
-
4-வது நாளாக தொடர்ந்த போராட்டம் இடைநிலை ஆசிரியர்கள் கைது
29 Dec 2025சென்னை, சென்னையில் நேற்று 4-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட இடை நிலை ஆசிரியர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர்.
-
ஆரவல்லி மலைத்தொடர் விவகாரம்: முந்தைய தீர்ப்பை நிறுத்தி வைத்தது சுப்ரீம் கோர்ட்..!
29 Dec 2025புதுடெல்லி, ஆரவல்லி மலைத்தொடர் விவகாரத்தில் முந்தைய தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் நிறுத்தி உத்தரவிட்டுள்ளது.
-
துணை ஜனாதிபதி இன்று ராமேசுவரம் வருகிறார்: 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை
29 Dec 2025ராமேசுவரம், துணை ஜனாதிபதி இன்று ராமேசுவரம் வருகையை முன்னிட்டு நகரின் பல்வேறு பகுதிகளில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
த.வெ.க. தலைவர் விஜய்யை முதல்வராக ஏற்று கொள்பவர்களுடன்தான் கூட்டணி : செங்கோட்டையன் திட்டவட்டம்
29 Dec 2025கோவை, த.வெ.க தலைவரை முதல்வராக ஏற்றுக் கொள்பவர்களுடன் தான் கூட்டணி என்று மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ள த.வெ.க.
-
நியூசி.,க்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர்..?
29 Dec 2025புதுடெல்லி, அடுத்த மதம் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-12-2025.
29 Dec 2025 -
பாதுகாப்புப்படைக்கு ரூ.79 ஆயிரம் கோடியில் ஆயுதங்கள் கொள்முதல்: மத்திய அரசு ஒப்புதல்
29 Dec 2025டெல்லி, இந்திய பாதுகாப்புப்படைக்கு ரூ.79 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆயுதங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஒப்ப
-
சென்னையில் சர்வதேச பாய்மரப் படகுப்போட்டி: முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி ஆலோசனை
29 Dec 2025சென்னை, சென்னையில் அடுத்த ஆண்டு இந்திய, சர்வதேச இளையோர் பாய்மரப் படகுப்போட்டி சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற உள்ளது.



