முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண் சிசுக் கொலையை தடுக்க மகராஷ்டிரா அரசு திட்டம்

செவ்வாய்க்கிழமை, 12 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

மும்பை,ஜூலை.12 - அதிகரித்து வரும் பெண் சிசுக் கொலையை தடுக்க மகராஷ்டிரா அரசு திட்டமிட்டுள்ளது. மகராஷ்டிரா மாநிலத்தில் 2011 ம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி பெண் குழந்தைகளின் விகிதாச்சாரம் மிகவும் குறைந்துள்ளது. ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 683 பெண் குழந்தைகளே உள்ளனர். குறிப்பாக பீட் மாவட்டத்தில் இது மிகவும் குறைந்து காணப்படுகிறது. குழந்தைகள் கருவில் இருக்கும் போதே அவற்றின் பால் தன்மையை கண்டுபிடிக்கும் கரு முன்னறி சோதனை மகராஷ்டிர மாநிலத்தில் அதிகமாக காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றை கருத்தில் கொண்டே மகராஷ்டிரா அரசு பெண் சிசுக் கொலையை தடுக்கும் நோக்கத்தில் பெண் குழந்தைகளை காப்போம் என்ற திட்டத்தை தொடங்கவுள்ளது. 

உலக மக்கள் தொகை தினமான நேற்று முதல் இந்த திட்டம் துவங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மகராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவான் இது தொடர்பான கண்காட்சி ஒன்றை திறந்து வைக்கவுள்ளதாகவும், ஆம்சிமுல்கி என்ற இணைய தளத்தையும் தொடங்கி வைக்கவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய அரசும் கருவில் உள்ள குழந்தைகளின் பால் தன்மையை அறியும் கரு முன்னறி சோதனையை தடை செய்யும் 1994 ம் ஆண்டின் பாலின தேர்வு தடை சட்டத்தை கடுமையாக அமல்படுத்தும்படி மகராஷ்டிரா அரசை வலியுறுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago