எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஸ்ரீநகர், ஆக.6 - காஷ்மீர் மாநிலத்தில் குரியத் மாநாட்டு அமைப்பின் இரு பிரிவுகளின் தலைவர்கள் உள்பட ஏராளமான பிரிவினைவாத தலைவர்கள் நேற்று வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். காஷ்மீர் மாநிலத்தில் கடந்த வாரம் போலீஸ் காவலில் இருந்த வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீர் மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த வன்முறை சம்பவங்கள் தற்போது அதிகமாக தலைதூக்கியதை அடுத்து பிரிவினைவாத தலைவர்கள் பலர் ஸ்ரீநகரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குரியத் மாநாட்டு கட்சி என்ற அமைப்பின் இரு பிரிவுகளின் தலைவர்களான சையது அலி ஷா கிலானி, மீர்வாய்ஸ் உமர் பரூக் ஆகியோர் அவர்களது வீடுகளில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதே போல மேலும் பல பிரிவினைவாத தலைவர்களும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறக்கூடாது என்று போலீசார் தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இவர்களது வீடுகளை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இவர்கள் வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் தொழுகை செய்வதற்காக கூடும் கூட்டங்களின் போது அசம்பாவிதங்கள் நேராமல் தடுக்கும் நோக்கத்துடனேயே இவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
போலீஸ் காவலில் வாலிபர் மரணம் அடைந்ததற்கு கண்டனம் தெரிவித்து நேற்று கண்டன பேரணி நடத்த கிலானி திட்டமிட்டு இருந்தார் என்றும், அதைத் தடுக்கும் நோக்கத்திலேயே போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர் என்றும் பிரிவினைவாத தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


