எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நியூயார்க்,ஆக.7 - சோனியா காந்திக்கு ஆபரேஷன் வெற்றிகரமாக முடிவடைந்தது. அவர் வேகமாக குணமடைந்து வருகிறார். இதனையொட்டி அவசர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண சிகிச்சை பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சோனியா காந்தி அடிக்கடி வெளிநாடு போய் வருவார். ஆனால் அவரது பயணம் ரகசியமாக இருக்கும். யாரும் கண்டு கொள்வதில்லை. இந்தத் தடவை திடீரென்று நியூயார்க் நகருக்கு போனார். அதுகுறித்து யாரும் கண்டுகொள்ளவில்லை. அதேசமயத்தில் காங்கிரஸ் விவகாரத்தை கவனிக்க ராகுல் காந்தி தலைமையில் 4 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்தார். இதனால் எல்லோருக்கும் சந்தேகம் ஏற்பட்டது. அதை விசாரிக்கும்போது அவர் அமெரிக்காவின் பொருளாதார நகரான நியூயார்க் நகரில் உள்ள மெமோரியல் கேன்சர் சென்டர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு ஆபரேஷன் செய்திருப்பது தெரியவந்தது. அவரை ராகுல் காந்தி, பிரியங்கா அவரது கணவர் ராபர்ட் வதேரா ஆகியோர் உடன் இருந்து கவனித்து வருவதும் தெரிந்ததே. இந்தநிலையில் ஆபரேஷனுக்கு பிறகு சோனியா காந்தி வேகமாக குணமடைந்து வருவதாகவும் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார் என்றும் நியூயார்க்கில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் அவர் மேலும் விரைவாக குணமடைய ஆலயங்களில் பிரார்த்தனைகள் நடந்து வருகின்றன. சோனியா காந்தி விரைவில் குணமடைய பிரபல நடிகர் அமிதாப்பச்சனும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கிடையில் சோனியா காந்தி இன்னும் இரண்டு வாரத்தில் இந்தியா திரும்புவார் என்று காங்கிரஸ் கட்சி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026


