எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக.10 - தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுக்கு எதிராக ஜி.ஏ.வடிவேலு தலைமையில் காங்கிரஸ் சீரமைப்புக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் சத்திய மூர்த்தி பவனில் நேற்று காங்கிரஸ் போட்டி பொதுக் குழு நடைபெறும் என்று அறிவித்தனர். இதையடுத்து காங்கிரஸ் சீரமைப்புக் குழுவை சேர்ந்த ஜி.ஏ.வடிவேலு, ஜோதி ராமலிங்கம், இதய துல்லா ஆகிய 3 பேரையும் கட்சியில் இருந்து நீக்குவதாக தங்கபாலு அறிவித்தார். சத்தியமூர்த்தி பவனில் நேற்று வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடைபெறும் என்றும் வேறு கூட்டங்களுக்கு அனுமதி கிடையாது. நானே தலைவர் நான் எடுக்கும் முடிவே இறுதியானது, கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் உள்ளே நுழையவும் கூடாது என்று தங்கபாலு அறிவித்து இருந்தார். ஆனால் திட்டமிட்டபடி பொதுக்குழு கூட்டம் நடத்த காங்கிரஸ் சீரமைப்பு குழுவினர் ஏற்பாடு செய்தனர். போட்டி பொதுக்குழு நடத்தும் ஜி.ஏ.வடிவேலு, இதயதுல்லா கோஷ்டியினர் சத்தியமூர்த்தி பவனில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும், அதற்கு தங்கபாலு ஆட்களிடமிருந்து தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்திருந்தனர். இதனால் காங்கிரசார் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை நிலவியது. நேற்று காலையில் சத்தியமூர்த்திபவன் முன்பு போலீசார் தடுப்புவேலிகள் அமைத்து இருந்தனர். தங்கபாலு ஆதரவாளர்கள் சத்தியமூர்த்தி பவனுக்குள் திரண்டு இருந்தனர். நேரம் செல்ல செல்ல எதிர்ப்பாளர்களை எதிர்கொள்ள சத்தியமூர்த்திபவன் வாசல் முன்பு ஏராளமான தொண்டர்கள் திரண்டனர்.வெள்ளையனே வெளி யேறு இயக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தங்கபாலு ஆதரவாளர்களுக்கு தனி அனுமதி சீட்டு கொடுக்கப்பட்டு இருந்தது. அதை வைத்திருந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். காலை 11 மணி அளவில் தென்சென்னை மாவட்ட தலைவர் மங்கள் ராஜ் தலைமையில் சிலர் சத்தியமூர்த்தி பவனுக்குள் நுழைய முயன்றனர். அவர்களை தங்கபாலு ஆதரவாளர்கள் தடுத்தனர். இதனால் கைகலப்பு, தள்ளு முள்ளு ஏற்பட்டது.
பிடித்து தள்ளியதில் மங்கள்ராஜ் கீழே விழுந்தார். சிறிது நேரத்தில் ஜி.ஏ. வடிவேலு, இதயதுல்லா, மயிலை பெரியசாமி, எம்.எஸ்.திரவியம், ராமலிங்கஜோதி உள்பட ஏராளமானவர்கள் சத்தியமூர்த்தி பவனுக்கு திரண்டு வந்தனர். அவர்கள் சத்தியமூர்த்தி பவனுக்குள் நுழைய முயன்றனர். அவர்களை தங்கபாலு ஆதரவாளர்கள் தடுத்ததால் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. போலீசார் அரண் போல் நடுவில் நின்றபடி மோதலை தவிர்த்தனர். தங்கபாலு ஆதரவாளர்கள் தங்கபாலு வாழ்க என்று கோஷம் எழுப்பினார்கள். எதிர் அணியினர் காங்கிரசை அழித்த தங்கபாலு ஒழிக என்று கோஷம் எழுப்பினார்கள். எதிர்ப்பாளர்கள் ஒருவரை கூட உள்ளே விடாமல் தங்கபாலு ஆதரவாளர்கள் தடுத்தபடி நின்றனர். இதனால் வேறு வழியின்றி ஜி.ஏ.வடிவேலு தலைமையில் தொண்டர்கள் நடுரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். உடனே போலீசார் மறியல் செய்தால் கைது செய்வோம் என்றனர்.அதையும் மீறி நடுரோட்டில் அமர்ந்தனர். உடனே போலீசார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றினர். அதை பார்த்ததும் தங்கபாலு ஆதரவாளர்கள் தங்கபாலுக்கு ஜே என்று வெற்றிகோஷம் எழுப்பினர். கைது செய்யப்பட்டவர்கள் வேனுக்குள் இருந்தபோது எங்கிருந்தோ ஒரு கல் பறந்து வந்து வேன் மீது விழுந்தது. இதனால் பரபரபரப்பு ஏற்பட்டது.மறியல் செய்தவர்கள் கைதான பிறகும் வேறு யாரும் வரக்கூடும் எனக்கருதி தங்கபாலு ஆதரவாளர்கள் சத்தியமூர்த்தி பவன் வாசலிலேயே திரண்டு நின்றனர். கைதான இதயதுல்லா கூறும்போது, பொதுக்குழு உறுப்பினர்கள் பதவியே இல்லை என்று தங்கபாலு அறிவித்து விட்டார். நாங்கள் சோனியாகாந்தி உடல்நலம் பெற கூட்டு பிரார்த்தனை நடத்துவதற்காக சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தோம். ஆனால் எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. எனவே நடுரோட்டில் எங்கள் பிரார்த்தனையை நிறைவு செய்தோம்.தங்கபாலுவின் அராஜக போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். அவருக்கு ஆதரவாக குலாம் நபி ஆசாத்தும் செயல்படுகின்றார். தங்கபாலு மீது பல்வேறு புகார்கள் உள்ளன. தமிழ் நாட்டில் கட்சியை அழித்து விட்டார்கள். இதுபற்றி டெல்லியில் நியமிக்கப்பட்டுள்ள 4 பேர் குழுவிடம் புகார் தெரிவிப்போம் என்றார்.
நேற்று சத்தியமூர்த்தி பவனில் தியாகிகள் தினம் கொண்டாடப்பட்டது. தியாகிகள் தினத்தன்று எங்கிருந்தாவது 10 தியாகிகளை அழைத்து வந்து துண்டு போர்த்துவார்கள். இந்த ஆண்டு தியாகிகள் தினம் காங்கிரஸ் கட்சியின் கோஷ்டி மோதல் தினமாக மாறிப்போனது.
இதனிடையே சத்தியமூர்த்தி பவனுக்குள் வந்தே மாதரம் என்று கோஷமிட்டபடி நுழைய முயன்ற இளங்கோவன் கோஷ்டியை சேர்ந்த மங்களராஜை தங்கபாலு கோஷ்டியினர் தள்ளிவிட்டனர். இதனால் கீழே விழுந்த மங்களராஜ், தங்கபாலு ஆதரவாளர்கள் தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக அண்ணாசாலை காவல்நிலையத்தில் புகார் அளித்துவிட்டு சென்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
ஒரே நாளில் தங்கம் விலை ரூ.3,000 சரிவு
28 Oct 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 3,000 சரிந்து விற்பனையானது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தென்காசி பயணம்
28 Oct 2025சென்னை : அரசு நலத்திட்ட விழாவில் பங்கேற்க இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தென்காசி செல்கிறார். பின்னர் நாளை பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்துக்கொள்கிறார்.
-
காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்: கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோர் விஜய்யை நேரில் சந்தித்த பின் தகவல்
28 Oct 2025சென்னை : கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டோரின் காலில் விழுந்து விஜய் மன்னிப்பு கேட்டதாக விஜய்யை சந்தித்தவர்கள் கூறினர்.
-
நீடாமங்கலத்தில் மத்தியக் குழு ஆய்வு: நெல் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்துமாறு விவசாயிகள் கோரிக்கை
28 Oct 2025நீடாமங்கலம் : நீடாமங்கலம் அருகேயுள்ள கோவில்வெண்ணி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லில் ஈரப்பதம் குறித்து மத்தியக் குழுவினர் நேற்று (அக்.
-
6 நாட்களுக்குப் பிறகு ஒகேனக்கலில் குளிக்க, பரிசல் இயக்க அனுமதி
28 Oct 2025தருமபுரி : காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 14,000 கன அடியாக சரிந்துள்ளதால், 6 நாட்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும், பரிசல் பய
-
ஓரணியில் நின்று வாக்குரிமை பறிப்பை நாம் தடுப்போம் : துணை முதல்வர் உதயநிதி பதிவு
28 Oct 2025சென்னை : வரும் 2026 தேர்தலில் 68,000 வாக்குச்சாவடியிலும் வெற்றி என்ற புதிய வரலாறு படைப்போம் என தெரிவித்துள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஓரணியில் நின்று அநியாய வாக்
-
சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் ஆய்வு
28 Oct 2025சென்னை : சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
-
களப்பணியில் வெல்ல வேண்டிய தருணம் இது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
28 Oct 2025சென்னை : களப்பணியில் தி.மு.க. தொண்டர்களை வெல்ல எவரும் இல்லை எனக் காட்ட வேண்டிய தருணம் இது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி: கவனிக்க வேண்டிய 6 முக்கிய அம்சங்கள்
28 Oct 2025சென்னை : தமிழகத்தில் ‘எஸ்.ஐ.ஆர்.’ என்று சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடங்குவதால் 6 முக்கிய அம்சங்களை கவனிக்க வேண்டி உள்ளது.
-
திரு.வி.க. நகர் எம்.எல்.ஏ.வின் தாயார் மறைவு; முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
28 Oct 2025சென்னை : திரு.வி.க. நகர் எம்.எல்.ஏ.வின் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.
-
நெல் கொள்முதல் விவகாரம்: தமிழக அரசுக்கு விஜய் கேள்வி
28 Oct 2025சென்னை : உரிய நேரத்தில் நெல் கொள்முதல் செய்யாதது ஏன்? என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள த.வெ.க.
-
முன்னாள் நீதிபதி தலைமையில் 8-வது ஊதியக்குழு அமைப்பு : மத்திய அமைச்சரவை ஒப்புதல்
28 Oct 2025புதுதில்லி : சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 8-வது ஊதியக் குழு அமைக்கப்படுவது மற்றும் பரிந்துரை விதிமுறைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி த
-
தே.ஜ. கூட்டணி முதல்வர் வேட்பாளரை அறிவிக்க தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தல்
28 Oct 2025பாட்னா : பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளரை தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவிக்க வேண்டும் என்று தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
-
6.1 ரிக்டர் அளவில் துருக்கியில் நிலநடுக்கம்
28 Oct 2025அங்காரா : துருக்கி நாட்டில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால், மேற்கு மாகாணங்களில் உள்ள முக்கிய நகரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
-
த.வெ.க. புதிய நிர்வாகக்குழு அறிவிப்பு
28 Oct 2025சென்னை : தமிழக வெற்றிக் கழகத்திற்கு புதிய நிர்வாகக் குழுவை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
-
தகவல் ஆணையர்கள் நியமன விவகாரத்தில் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
28 Oct 2025புதுடெல்லி : தகவல் ஆணையர்கள் நியமன விவகாரத்தில் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
இரு மாநிலங்களில் வாக்காளர் அட்டை: பிரசாந்த் கிஷோருக்கு நோட்டீஸ்
28 Oct 2025பாட்னா : இரு மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை இருக்கும் விவகாரத்தில் பிரசாந்த் கிஷோர் பதிலளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
-
விவசாயம் மற்றும் தொழில்துறை நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம் : துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு
28 Oct 2025கோவை : விவசாயம், தொழில்துறை இரண்டும் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம் என்று தெரிவித்துள்ள துணை ஜனாதிபதி சி.பி.
-
வடகிழக்கு பருவமழை எதிரொலி: 6 நாட்களில் 4.12 லட்சம் பேருக்கு உணவு: தமிழ்நாடு அரசு தகவல்
28 Oct 2025சென்னை : வடகிழக்கு பருவமழை எதிரொலி காரணமாக 6 நாட்களில் 4.12 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
உடான் திட்டத்தின்கீழ் இந்தியாவில் சிறிய ரக பயணிகள் விமானங்களை தயாரிக்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம்
28 Oct 2025மாஸ்கோ : இந்தியாவில் சிறிய ரக பயணிகள் விமானம் தயாரிக்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.
-
மோந்தா புயல் ஆந்திராவுக்கு 50 கி.மீ. தொலைவில் நெருங்கியது
28 Oct 2025சென்னை : மோந்தா புயல் ஆந்திராவுக்கு 50 கி.மீ. தொலைவில் நெருங்கியது.
-
சென்னையில் இன்று முதல் மழை குறையும்
28 Oct 2025சென்னை : சென்னையில் இன்று முதல் மழை குறைந்துள்ளதாக வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்தார்.
-
தி.மு.க. இந்த மண்ணில் இருக்கும் வரை பா.ஜ.க.வின் பகல் கனவு நிறைவேறாது : மாமல்லபுரம் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை
28 Oct 2025சென்னை : தமிழ்நாட்டின் மீது தாக்குதல் தொடுக்கும் பா.ஜ.க.வின் பகல்கனவு, தி.மு.க. இந்த மண்ணில் இருக்கும் வரை நிறைவேறாது என முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.
-
பீகாரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட இன்டியா கூட்டணி : குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை
28 Oct 2025பாட்னா : பீகாரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட இன்டியா கூட்டணி வெளியிட்டுள்ளது.
-
பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை: ஷ்ரேயாஸ் ஐயர் உடல் நலம் குறித்து சூர்யகுமார் தகவல்
28 Oct 2025சிட்னி : ஷ்ரேயாஸ் ஐயர் உடல் நலம் குறித்து பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என்றும் தற்போது உடல் நிலை சீராக உள்ளதாக இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்


