எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக.10 - தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுக்கு எதிராக ஜி.ஏ.வடிவேலு தலைமையில் காங்கிரஸ் சீரமைப்புக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் சத்திய மூர்த்தி பவனில் நேற்று காங்கிரஸ் போட்டி பொதுக் குழு நடைபெறும் என்று அறிவித்தனர். இதையடுத்து காங்கிரஸ் சீரமைப்புக் குழுவை சேர்ந்த ஜி.ஏ.வடிவேலு, ஜோதி ராமலிங்கம், இதய துல்லா ஆகிய 3 பேரையும் கட்சியில் இருந்து நீக்குவதாக தங்கபாலு அறிவித்தார். சத்தியமூர்த்தி பவனில் நேற்று வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடைபெறும் என்றும் வேறு கூட்டங்களுக்கு அனுமதி கிடையாது. நானே தலைவர் நான் எடுக்கும் முடிவே இறுதியானது, கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் உள்ளே நுழையவும் கூடாது என்று தங்கபாலு அறிவித்து இருந்தார். ஆனால் திட்டமிட்டபடி பொதுக்குழு கூட்டம் நடத்த காங்கிரஸ் சீரமைப்பு குழுவினர் ஏற்பாடு செய்தனர். போட்டி பொதுக்குழு நடத்தும் ஜி.ஏ.வடிவேலு, இதயதுல்லா கோஷ்டியினர் சத்தியமூர்த்தி பவனில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும், அதற்கு தங்கபாலு ஆட்களிடமிருந்து தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்திருந்தனர். இதனால் காங்கிரசார் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை நிலவியது. நேற்று காலையில் சத்தியமூர்த்திபவன் முன்பு போலீசார் தடுப்புவேலிகள் அமைத்து இருந்தனர். தங்கபாலு ஆதரவாளர்கள் சத்தியமூர்த்தி பவனுக்குள் திரண்டு இருந்தனர். நேரம் செல்ல செல்ல எதிர்ப்பாளர்களை எதிர்கொள்ள சத்தியமூர்த்திபவன் வாசல் முன்பு ஏராளமான தொண்டர்கள் திரண்டனர்.வெள்ளையனே வெளி யேறு இயக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தங்கபாலு ஆதரவாளர்களுக்கு தனி அனுமதி சீட்டு கொடுக்கப்பட்டு இருந்தது. அதை வைத்திருந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். காலை 11 மணி அளவில் தென்சென்னை மாவட்ட தலைவர் மங்கள் ராஜ் தலைமையில் சிலர் சத்தியமூர்த்தி பவனுக்குள் நுழைய முயன்றனர். அவர்களை தங்கபாலு ஆதரவாளர்கள் தடுத்தனர். இதனால் கைகலப்பு, தள்ளு முள்ளு ஏற்பட்டது.
பிடித்து தள்ளியதில் மங்கள்ராஜ் கீழே விழுந்தார். சிறிது நேரத்தில் ஜி.ஏ. வடிவேலு, இதயதுல்லா, மயிலை பெரியசாமி, எம்.எஸ்.திரவியம், ராமலிங்கஜோதி உள்பட ஏராளமானவர்கள் சத்தியமூர்த்தி பவனுக்கு திரண்டு வந்தனர். அவர்கள் சத்தியமூர்த்தி பவனுக்குள் நுழைய முயன்றனர். அவர்களை தங்கபாலு ஆதரவாளர்கள் தடுத்ததால் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. போலீசார் அரண் போல் நடுவில் நின்றபடி மோதலை தவிர்த்தனர். தங்கபாலு ஆதரவாளர்கள் தங்கபாலு வாழ்க என்று கோஷம் எழுப்பினார்கள். எதிர் அணியினர் காங்கிரசை அழித்த தங்கபாலு ஒழிக என்று கோஷம் எழுப்பினார்கள். எதிர்ப்பாளர்கள் ஒருவரை கூட உள்ளே விடாமல் தங்கபாலு ஆதரவாளர்கள் தடுத்தபடி நின்றனர். இதனால் வேறு வழியின்றி ஜி.ஏ.வடிவேலு தலைமையில் தொண்டர்கள் நடுரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். உடனே போலீசார் மறியல் செய்தால் கைது செய்வோம் என்றனர்.அதையும் மீறி நடுரோட்டில் அமர்ந்தனர். உடனே போலீசார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றினர். அதை பார்த்ததும் தங்கபாலு ஆதரவாளர்கள் தங்கபாலுக்கு ஜே என்று வெற்றிகோஷம் எழுப்பினர். கைது செய்யப்பட்டவர்கள் வேனுக்குள் இருந்தபோது எங்கிருந்தோ ஒரு கல் பறந்து வந்து வேன் மீது விழுந்தது. இதனால் பரபரபரப்பு ஏற்பட்டது.மறியல் செய்தவர்கள் கைதான பிறகும் வேறு யாரும் வரக்கூடும் எனக்கருதி தங்கபாலு ஆதரவாளர்கள் சத்தியமூர்த்தி பவன் வாசலிலேயே திரண்டு நின்றனர். கைதான இதயதுல்லா கூறும்போது, பொதுக்குழு உறுப்பினர்கள் பதவியே இல்லை என்று தங்கபாலு அறிவித்து விட்டார். நாங்கள் சோனியாகாந்தி உடல்நலம் பெற கூட்டு பிரார்த்தனை நடத்துவதற்காக சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தோம். ஆனால் எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. எனவே நடுரோட்டில் எங்கள் பிரார்த்தனையை நிறைவு செய்தோம்.தங்கபாலுவின் அராஜக போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். அவருக்கு ஆதரவாக குலாம் நபி ஆசாத்தும் செயல்படுகின்றார். தங்கபாலு மீது பல்வேறு புகார்கள் உள்ளன. தமிழ் நாட்டில் கட்சியை அழித்து விட்டார்கள். இதுபற்றி டெல்லியில் நியமிக்கப்பட்டுள்ள 4 பேர் குழுவிடம் புகார் தெரிவிப்போம் என்றார்.
நேற்று சத்தியமூர்த்தி பவனில் தியாகிகள் தினம் கொண்டாடப்பட்டது. தியாகிகள் தினத்தன்று எங்கிருந்தாவது 10 தியாகிகளை அழைத்து வந்து துண்டு போர்த்துவார்கள். இந்த ஆண்டு தியாகிகள் தினம் காங்கிரஸ் கட்சியின் கோஷ்டி மோதல் தினமாக மாறிப்போனது.
இதனிடையே சத்தியமூர்த்தி பவனுக்குள் வந்தே மாதரம் என்று கோஷமிட்டபடி நுழைய முயன்ற இளங்கோவன் கோஷ்டியை சேர்ந்த மங்களராஜை தங்கபாலு கோஷ்டியினர் தள்ளிவிட்டனர். இதனால் கீழே விழுந்த மங்களராஜ், தங்கபாலு ஆதரவாளர்கள் தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக அண்ணாசாலை காவல்நிலையத்தில் புகார் அளித்துவிட்டு சென்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 31-12-2025.
31 Dec 2025 -
தமிழ்நாடு மக்களுக்கு நிம்மதியை வழங்கும் ஆண்டாக 2026 புத்தாண்டு அமையட்டும் : எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
31 Dec 2025சென்னை, புத்தாண்டு தமிழக மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை வழங்கும் ஆண்டாக அமையட்டும் என்றும் நிறைவான சந்தோஷத்தையும், தித்திக்கும் நிகழ்வுகளையும் வழங்கும் ஆண்டாக அமையட்ட
-
ஒரே நாளில் இரண்டு முறை குறைந்தது தங்கத்தின் விலை: சவரன் ரூ. 99,840-க்கு விற்பனை
31 Dec 2025சென்னை, ஒரே நாளில் நேற்று தங்கம் சவரனுக்கு ரூ. 960 ரூபாய் குறைந்தது, ஒரு சவரன் 99 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையானது.
-
உலகிலேயே முதல் நாடாக கிரிபாட்டி தீவில் பிறந்தது புத்தாண்டு
31 Dec 2025கிரிபாட்டி, உலகிலேயே முதல் நாடாக 2026-ஐ கிரிபாட்டி தீவு வரவேற்று கொண்டாடியது.
-
சட்டம் ஒழுங்கைக் காக்க முடியவில்லை என்றால் எதற்கு ஆட்சியில் இருக்கிறீர்கள்..? தமிழக அரசுக்கு இ.பி.எஸ். கேள்வி
31 Dec 2025சென்னை, போதைப் பொருளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், சட்டம் ஒழுங்கைக் காக்க முடியவில்லை என்றால், எதற்கு நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள்?
-
தமிழ்நாட்டில் மீண்டும் இ.பி.எஸ். தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமையும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை
31 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் மீண்டும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆசியுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமையும் என்று அ.தி.மு.க.
-
அதிபர் ட்ரம்ப் அரசுக்கு பதிலடி: அமெரிக்கர்கள் மீது பயணத்தடை விதித்தது 2 ஆப்பிரிக்க நாடுகள்...!
31 Dec 2025மாலி, அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவுக்குப் பதிலடியாக மாலி மற்றும் புர்கினா ஃபஸோ ஆகிய 2 நாடுகளின் அரசுகள் அமெரிக்கர்கள் மீது பயணத் தடை விதித்துள்ளன.
-
பிறந்தது 2026 புத்தாண்டு: சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்
31 Dec 2025புதுடெல்லி, 2026ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் வகையில் கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது.
-
தமிழக சட்டசபை தேர்தல்: விருப்ப மனுக்கள் வழங்கும் கால அவகாசத்தை நீட்டித்த காங்கிரஸ்
31 Dec 2025சென்னை, தமிழக சட்டசபை தேர்தலில் விருப்ப மனுக்கள் வழங்க கால அவகாசத்தை ஜனவரி மாதம் 15-ம் தேதி வரை நீட்டித்து காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
-
இறுதிச்சடங்கில் இந்தியா சார்பில் ஜெய்சங்கர் பங்கேற்பு: பிரதமர் மோடியின் இரங்கல் கடிதம் கலீதா ஜியா மகனிடம் ஒப்படைப்பு
31 Dec 2025டாக்கா, மறைந்த வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று டாக்கா நகரத்துக்குச் சென்ற நிலையில் பிரதமர்
-
நியூசிலாந்தில் புத்தாண்டு கொண்டாட்டம்
31 Dec 2025வெலிங்டன், 2026 புத்தாண்டை வாணவேடிக்கைகளுடன் நியூசிலாந்து வரவேற்றது.
-
சட்டப்பேரவை தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்: மாவட்ட செயலாளர்களுக்கு இ.பி.எஸ். அறிவுறுத்தல்
31 Dec 2025சென்னை, சட்டப்பேரவை தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் தொகுதி வாரியாக வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்களின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அ.தி.மு.க.
-
ஆபரேஷன் சிந்தூரின்போது சீனா மத்தியஸ்தம் செய்ததா? இந்தியா திட்டவட்டமாக மறுப்பு
31 Dec 2025புதுடெல்லி, இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற சண்டையின் போது மத்தியஸ்தம் செய்ததாக டிரம்ப் கூறி வரும் நிலையில் தற்போது சீனாவும் இதே கருத்தை கூறியுள்ளதை இந்தியா திட்டவட
-
தமிழகத்தில் 2027 டிசம்பர் 31ஆம் தேதி வரை மின்சார வாகனங்களுக்கு மேலும் 2 ஆண்டுகள் வரி விலக்கு நீட்டிப்பு: தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு
31 Dec 2025சென்னை, தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கான 100 சதவீதம் சாலை வரி விலக்கு 2027 டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது
-
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள் ஆலோசனை
31 Dec 2025சென்னை, அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.
-
பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு அரசு ரூ.248 கோடி நிதி ஒதுக்கீடு தமிழ்நாடு அரசாணை வெளியீடு
31 Dec 2025சென்னை, பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு கொள்முதல் செய்வதற்கு ரூ.248 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு
-
கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமா...? த.வெ.க. நிர்வாகி நிர்மல் குமார் விளக்கம்
31 Dec 2025புதுடெல்லி, கரூர் வழக்கு தொடர்பாக விஜய்யிடம் விரைவில் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளதாக சி.டி.ஆர். நிர்மல் குமார் கூறியுள்ளார்.
-
த.வெ.க.வுடன் காங்கிரஸ் கூட்டணியா? காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் பதில்
31 Dec 2025காரைக்குடி, காரைக்குடியில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பா.சிதம்பரம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- பிப்ரவரி மாதமே தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு
-
4 மாவட்டங்களில் ரூ.48 கோடியில் விளையாட்டு உட்கட்டமைப்பு பணிகள் துணை முதல்வர் உதயநிதி அடிக்கல்
31 Dec 2025சென்னை, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரூ.48.76 கோடியில் விளையாட்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
கரூர் வழக்கு தொடர்பாக த.வெ.க. நிர்வாகிகளிடம் 3 -வது நாளாக நீடித்த சி.பி.ஐ. விசாரணை
31 Dec 2025புதுடெல்லி, கரூர் வழக்கு தொடர்பாக த.வெ.க. நிர்வாகிகளிடம் நேற்று 3 -வது நாளாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
-
ஏற்றமிகு ஆண்டாக 2026 அமையட்டும்: முதல்வர் ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து: நாம் மாபெரும் வெற்றியை நோக்கி முன்செல்கிறோம்
31 Dec 2025சென்னை, 2025 ஆண்டில் மாநில உரிமைகளுக்கான நமது போராட்டங்களுக்கு குறைவே இல்லை என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைதியும், நல்லிணக்கமும், மகிழ்ச்சியும், புதிய வ
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை ஜன. 6-ம் தேதி கூடுகிறது
31 Dec 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 6-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
2.22 கோடி ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு: தமிழ்நாடு முழுவதும் டோக்கன்கள் வழங்கும் பணி விரைவில் துவக்கம்
31 Dec 2025சென்னை, தமிழ்நாடு முழுவதும் உள்ள 2.22 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன்கள் வழங்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளது.
-
கல்வி நிதி விடுவிப்பதை தவிர மற்ற எல்லாவற்றிலும் ஆர்வம்: மத்திய அமைச்சர் மீது கனிமொழி விமர்சனம்
31 Dec 2025சென்னை, தமிழ்நாட்டுப் பிள்ளைகளுக்கு சேரவேண்டிய ரூ. 2,291 கோடி கல்வி நிதியை விடுவிப்பதைத் தவிர, தமிழ்நாட்டில் நடக்கும் மற்ற எல்லாவற்றிலும் மத்திய பா.ஜ.க.
-
சாலை வரி விலக்கு நீட்டிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் நன்றி
31 Dec 2025சென்னை, சாலை வரி விலக்கு நீட்டிப்பு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளனர்.



