எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக.10 - தமிழக அரசு இலவசமாக வழங்கும் கறவை மாடுகள், ஆடுகள் பெற தகுதியானவர்கள் யார் என்ற கேள்விக்கு முதல்வர் ஜெயலலிதா பதிலளித்து அதற்கு முற்றுபுள்ளி வைத்தார்.தமிழக அரசின் 2011-2012 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் மீதான விவதாம் இரண்டாவது நாளாக நேற்று நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தளி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, தமிழக அரசின் பட்ஜெட்டை அரசியல் பிரமுகர்கள், நடுநிலையாளர்கள் ,பத்திரிகையாளர்கள் பாராட்டும் போது முன்னாள் முதல்வர் கருணாநிதி வெளியில் வசைபாடுகிறார். அவர் மன்றத்தில் வந்து தனது கருத்தை பதிவுசெய்யலாம். பச்சைக்குழந்தைகள் பிஸ்கட்டுக்கு அழுவது போல் ஒரே இடத்தில் இடம் ஒதுக்கவேண்டும் என்று வராமல் உள்ளார்.
கடந்த சட்டசபையில் தற்போதைய பேரவை தலைவருக்கு கடைசியாய் ஓரத்தில் இடம் ஒதுக்கப்பட்டது. மின்சார அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கும் கடைசியில் இடம் ஒதுக்கப்பட்டது.இதனால் இவர்கள் பேரவை தலைவரை குனிந்துதான் பார்க்கவேண்டும் .ஆனால் கடந்த ஆட்சியில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக சஸ்பென்ட் செய்தபோது தன்னந்தனியாக வருகை புரிந்து தனியாக நின்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பேசினார். இன்று தி.மு.க.வினர் வெளியிலிருந்து அரசியல் செய்வது சரியான நிலைபாடல்ல.
வேளாண்மை துறை , மீன்வளம் போன்ற துறைகளில் முத்து முத்தாக பட்ஜெட் வந்துள்ளது. நுண்ணுயிர் பாசனம், நெல் உற்பத்திக்கு உதவும் வகையில் திட்டங்கள் அறிவித்துள்ளது வரவேற் கத்தக்கது.
நேற்று தமிழக முதல்வர் சட்டசபையில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியல் எதுவும் இல்லை என்று கூறினார். எந்த அடிப்படையில் பயனாளிகளுக்கு ஆடு, மாடுகள் வழங்கப்படும் என அறிய விரும்புகின்றேன் என்று பேசினார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய கால்நடைத்துறை அமைச்சர் சிவபதி உறுப்பினர் 6000 கறவை மாடுகள் 5 ஆண்டுகளில் வழங்கப்படும் என்று பேசினார். அது 6 ஆயிரம் அல்ல 60 ஆயிரம் என தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார். மேலும் கிராம சபைகள் மூலம் பரிந்துறைக்கப்படுவர்களுக்கு மாவட்ட கால்நடை இணை இயக்குநர், துணை இயக்குநர் பரிந்துறை அடிப்படையிலும் கிராமசபை கூட்டப்பட்டு நேர்மையான முறையில் முதல்வர் ஆணைப்படி கிராம சபை மூலமாக பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர் என்று கூறினார்.
இதற்கு பின் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் குணசேகரன் கிராமசபை மூலமாக பயனாளிகள் தேர்வு செய்யப்படுவது நல்ல முறையாக இருக்காது. நிலையை மாற்றி வருமானத்தின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படவேண்டும் என்றார். மேலும் ஆடு மாடுகள் தமிழகத்திலிருந்த வாங்கித்தரப்படுமா என்று கேள்வி எழுப்பினார். அப்போது குறிப்பிட்டு பேசிய முதல்வர் ஜெயலலிதா கறவை மாடுகள் வெளிமாநிலத்திலிருந்து வாங்கப்படும். ஆடுகள் தமிழ்நாட்டிலிருந்த வாங்கப்படும் என்றார். மேலும் வெளிமாநிலங்களுக்கு கறவை மாடுகளை பயனாளிகளே அரச அதிகாரிகள் துணையுடன் நேரில் சென்று தேர்வு செய்யலாம். இதற்கான போக்குவரத்து செலவு தங்குமிடச் செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் என்றார். கறவை மாடுகள் பெற தகுதியானவர்கள் பற்றி முதல்வர் குறிப்பிடும்போது எந்த அடிப்படையில் இலவச கறவை மாடுகள் வழங்கப்படுகிறது என்றால் மகளிர் தலைமை கொண்ட குடும்பத்திற்கு முன்னுரிமை, கறவை மாடு பெறுபவர்கள் 60 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். ஒரு ஏக்கருக்கு அதிகமாக நிலம் வைத்திருக்கக் கூடாது. கறவை மாடுகள் வைத்திருக்க கூடாது. பயனாளிகளின் கணவன், மனைவி, மாமனார், மாமியார் நெருங்கிய உறவினர்கள் மத்திய, மாநில அரசு பணிகளிலோ, கூட்டுறவு சங்கங்களிலோ பணியில் இருக்க கூடாது. இலவச ஆடுகள் பெறும் திட்டத்தில் பயனாளிகளுக்கு கறவை மாடுகள் கிடையாது. பயனாளி அதே பகுதியில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.
பயனாளிகளில் 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட, மற்றும் மலைவாழ் மக்கள் கட்டாயம் இடம்பெறவேண்டும். மேலும் இலவச ஆடுகள் பெறும் பயனாளிகள் அந்த கிராமத்திலேயே வசிப்பவராக இருக்க வேண்டும். குடும்பத்தில் ஒருவராவது 18 வயது முதல் 60 வயதிற்குள் இருக்கவேண்டும். தற்போது ஆடு மாடுகள் வைத்திருக்க கூடாது. அரசு பணியில் கூட்டுறவு சங்கங்களில் பயனாளிகளின் தாய், தந்தை, மாமியார், மாமனார், மற்றும் நெருங்கிய உறவினர்கள் பணிபுரியக்கூடாது. கறவை மாடுகள் திட்டத்தில் பயனாளிகள் யாரும் இருக்ககூடாது. பயனாளிகளில் 30 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினராக இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டார்.
அப்போது மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் சட்டமன்ற தலைவர் செளந்தர்ராஜன் கறவை மாடுகள் வைத்திருந்து அவை இறந்து போயிருந்தால் சம்பந்தப்பட்ட பயனாளிகள் கறவை மாடுகள் பெற தகுதியானவர்களா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா பயனாளிகள் கறவை மாடுகள் இலவசமாக பெறும்போது சொந்தமாக மாடுகள் வைத்திருக்ககூடாது என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
ஆஸ்திரேலியா அணியிடம் ஒருநாள் தொடரை இழந்தது இந்தியா
23 Oct 2025அடிலெய்டு: அடிலெய்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததை அடுத்து 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை வென்றுள்ளது.
-
ஸ்ரேயாஸ்-ரோகித் வாக்குவாதம்
23 Oct 2025அடிலெய்டில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
-
மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு
23 Oct 2025மேட்டூர்: மேட்டூர் அணை 4-வது நாளாக உயர்ந்தது.
-
பிரபல இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்
23 Oct 2025சென்னை: பிரபல இசையமைப்பாளர் சபேஷ் நேற்று சென்னையில் காலமானார்.
-
ட்ரம்ப் தென்கொரியா வரவுள்ள நிலையில் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
23 Oct 2025பியாங்காங்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தென்கொரியா வரவுள்ள நிலையில் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
2-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி: பாகிஸ்தான் மண்ணில் வரலாறு படைத்தது தென் ஆப்பிரிக்கா..!
23 Oct 2025ராவல்பிண்டி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 18 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக பாகிஸ்தான் மண்ணில் முதல் வெற்றியை தென்
-
நிதீஷ் குமாரை ஒருபோதும் பா.ஜ.க. முதல்வராக்காது: தேஜஸ்வி யாதவ்
23 Oct 2025பாட்னா: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நிதீஷ் குமாருக்கு அநீதி இழைக்கப்படுகிறது, ஒருபோதும் பா.ஜ.க. நிதீஷ் குமாரை முதல்வராக்கப்போவதில்லை என்று ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர்
-
விராட் கோலி டக் அவுட்
23 Oct 2025ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
-
1,000 ரன்களை கடந்த இந்தியர்: ஆஸ்திரேலிய மண்ணில் பல சாதனைகள் படைத்த ரோகித்
23 Oct 2025அடிலெய்டு: ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் போட்டியில் 1000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-10-2025.
24 Oct 2025 -
வரும் 28-ம் தேதி மாமல்லபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம்
24 Oct 2025சென்னை, 'என் வாக்குச்சாவடி' 'வெற்றி வாக்குச்சாவடி' என்ற பெயரில் தி.மு.க.
-
ஆம்னி பேருந்து தீ விபத்து: பிரமதர் மோடி, ஆந்திரா அரசு சார்பில் நிவாரணம் அறிவிப்பு
24 Oct 2025ஐதராபாத், ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்து கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்னதேகுரு கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் மீது மோதி
-
முகத்துவாரத்தில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
24 Oct 2025சென்னை, முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
-
தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: எந்தெந்த மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை?
24 Oct 2025சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், எந்தெந்த மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் விவரத்தை தெரித்
-
தமிழகத்தில் திடீர் மின்சார கட்டணம் அதிகரிப்பு ஏன்? மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்
24 Oct 2025சென்னை, தமிழகத்தில் திடீர் மின்சார கட்டணம் அதிகரிப்பு ஏன் என்பது குறித்து மின்வாரிய அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
-
வருகிற 30-ம் தேதி தென் கொரியாவில் சீன அதிபர் ஜின் பிங்கை சந்திக்கிறார் ட்ரம்ப்
24 Oct 2025வாஷிங்டன், தென்கொரியாவில் வருகிற 30-ம் தேதி சீன அதிபருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தித்து பேசுகிறார்.
-
ரூ.42.45 கோடியில் மறுசீரமைக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்காவை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
24 Oct 2025சென்னை, ரூ.42.45 கோடியில் நடந்த மறுசீரமைப்பு பணிகளுக்கு பிறகு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தொல்காப்பியப் பூங்காவை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்காதது ஏன்..? மலேசியா பிரதமர் அன்வர் விளக்கம்
24 Oct 2025கோலாலம்பூர், ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்காதது ஏன் என்பது குறித்து மலேசியா பிரதமர் அன்வர் விளக்கமளித்துள்ளார்.
-
குனார் நதியில் அணை கட்ட தாலிபான்கள் எடுத்த முடிவால் பாகிஸ்தானுக்கு புது பிரச்சினை
24 Oct 2025பாகிஸ்தான், குனார் நதியில் அணை கட்ட தாலிபான்கள் எடுத்த முடிவால்பாகிஸ்தானுக்கு புது பிரச்சினை ஏற்பட்டுள்ளது.


