எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஆக.10 - தமிழக அரசு இலவசமாக வழங்கும் கறவை மாடுகள், ஆடுகள் பெற தகுதியானவர்கள் யார் என்ற கேள்விக்கு முதல்வர் ஜெயலலிதா பதிலளித்து அதற்கு முற்றுபுள்ளி வைத்தார்.தமிழக அரசின் 2011-2012 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் மீதான விவதாம் இரண்டாவது நாளாக நேற்று நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தளி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, தமிழக அரசின் பட்ஜெட்டை அரசியல் பிரமுகர்கள், நடுநிலையாளர்கள் ,பத்திரிகையாளர்கள் பாராட்டும் போது முன்னாள் முதல்வர் கருணாநிதி வெளியில் வசைபாடுகிறார். அவர் மன்றத்தில் வந்து தனது கருத்தை பதிவுசெய்யலாம். பச்சைக்குழந்தைகள் பிஸ்கட்டுக்கு அழுவது போல் ஒரே இடத்தில் இடம் ஒதுக்கவேண்டும் என்று வராமல் உள்ளார்.
கடந்த சட்டசபையில் தற்போதைய பேரவை தலைவருக்கு கடைசியாய் ஓரத்தில் இடம் ஒதுக்கப்பட்டது. மின்சார அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கும் கடைசியில் இடம் ஒதுக்கப்பட்டது.இதனால் இவர்கள் பேரவை தலைவரை குனிந்துதான் பார்க்கவேண்டும் .ஆனால் கடந்த ஆட்சியில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக சஸ்பென்ட் செய்தபோது தன்னந்தனியாக வருகை புரிந்து தனியாக நின்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பேசினார். இன்று தி.மு.க.வினர் வெளியிலிருந்து அரசியல் செய்வது சரியான நிலைபாடல்ல.
வேளாண்மை துறை , மீன்வளம் போன்ற துறைகளில் முத்து முத்தாக பட்ஜெட் வந்துள்ளது. நுண்ணுயிர் பாசனம், நெல் உற்பத்திக்கு உதவும் வகையில் திட்டங்கள் அறிவித்துள்ளது வரவேற் கத்தக்கது.
நேற்று தமிழக முதல்வர் சட்டசபையில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியல் எதுவும் இல்லை என்று கூறினார். எந்த அடிப்படையில் பயனாளிகளுக்கு ஆடு, மாடுகள் வழங்கப்படும் என அறிய விரும்புகின்றேன் என்று பேசினார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய கால்நடைத்துறை அமைச்சர் சிவபதி உறுப்பினர் 6000 கறவை மாடுகள் 5 ஆண்டுகளில் வழங்கப்படும் என்று பேசினார். அது 6 ஆயிரம் அல்ல 60 ஆயிரம் என தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார். மேலும் கிராம சபைகள் மூலம் பரிந்துறைக்கப்படுவர்களுக்கு மாவட்ட கால்நடை இணை இயக்குநர், துணை இயக்குநர் பரிந்துறை அடிப்படையிலும் கிராமசபை கூட்டப்பட்டு நேர்மையான முறையில் முதல்வர் ஆணைப்படி கிராம சபை மூலமாக பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர் என்று கூறினார்.
இதற்கு பின் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் குணசேகரன் கிராமசபை மூலமாக பயனாளிகள் தேர்வு செய்யப்படுவது நல்ல முறையாக இருக்காது. நிலையை மாற்றி வருமானத்தின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படவேண்டும் என்றார். மேலும் ஆடு மாடுகள் தமிழகத்திலிருந்த வாங்கித்தரப்படுமா என்று கேள்வி எழுப்பினார். அப்போது குறிப்பிட்டு பேசிய முதல்வர் ஜெயலலிதா கறவை மாடுகள் வெளிமாநிலத்திலிருந்து வாங்கப்படும். ஆடுகள் தமிழ்நாட்டிலிருந்த வாங்கப்படும் என்றார். மேலும் வெளிமாநிலங்களுக்கு கறவை மாடுகளை பயனாளிகளே அரச அதிகாரிகள் துணையுடன் நேரில் சென்று தேர்வு செய்யலாம். இதற்கான போக்குவரத்து செலவு தங்குமிடச் செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் என்றார். கறவை மாடுகள் பெற தகுதியானவர்கள் பற்றி முதல்வர் குறிப்பிடும்போது எந்த அடிப்படையில் இலவச கறவை மாடுகள் வழங்கப்படுகிறது என்றால் மகளிர் தலைமை கொண்ட குடும்பத்திற்கு முன்னுரிமை, கறவை மாடு பெறுபவர்கள் 60 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். ஒரு ஏக்கருக்கு அதிகமாக நிலம் வைத்திருக்கக் கூடாது. கறவை மாடுகள் வைத்திருக்க கூடாது. பயனாளிகளின் கணவன், மனைவி, மாமனார், மாமியார் நெருங்கிய உறவினர்கள் மத்திய, மாநில அரசு பணிகளிலோ, கூட்டுறவு சங்கங்களிலோ பணியில் இருக்க கூடாது. இலவச ஆடுகள் பெறும் திட்டத்தில் பயனாளிகளுக்கு கறவை மாடுகள் கிடையாது. பயனாளி அதே பகுதியில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.
பயனாளிகளில் 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட, மற்றும் மலைவாழ் மக்கள் கட்டாயம் இடம்பெறவேண்டும். மேலும் இலவச ஆடுகள் பெறும் பயனாளிகள் அந்த கிராமத்திலேயே வசிப்பவராக இருக்க வேண்டும். குடும்பத்தில் ஒருவராவது 18 வயது முதல் 60 வயதிற்குள் இருக்கவேண்டும். தற்போது ஆடு மாடுகள் வைத்திருக்க கூடாது. அரசு பணியில் கூட்டுறவு சங்கங்களில் பயனாளிகளின் தாய், தந்தை, மாமியார், மாமனார், மற்றும் நெருங்கிய உறவினர்கள் பணிபுரியக்கூடாது. கறவை மாடுகள் திட்டத்தில் பயனாளிகள் யாரும் இருக்ககூடாது. பயனாளிகளில் 30 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினராக இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டார்.
அப்போது மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் சட்டமன்ற தலைவர் செளந்தர்ராஜன் கறவை மாடுகள் வைத்திருந்து அவை இறந்து போயிருந்தால் சம்பந்தப்பட்ட பயனாளிகள் கறவை மாடுகள் பெற தகுதியானவர்களா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா பயனாளிகள் கறவை மாடுகள் இலவசமாக பெறும்போது சொந்தமாக மாடுகள் வைத்திருக்ககூடாது என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
கேரள நர்ஸ் நிமிஷா மரண தண்டனை ஒத்திவைப்பு
15 Jul 2025புதுடெல்லி, கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியாவுக்கு இன்று (ஜூலை 16) நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
சற்று குறைந்த தங்கம் விலை
15 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.73,160-க்கு விற்பனையானது.
-
அன்புமணியுடனான மோதல் போக்கு விரைவில் சரியாகும் : ராமதாஸ் பதில்
15 Jul 2025சென்னை : அன்புமணியுடனான மோதல் போக்கு விரைவில் சரியாகும் என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
-
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் விண்ணப்பிப்பவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை நிச்சயமாக கிடைக்கும் : சிதம்பரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
15 Jul 2025கடலூர் : தமிழகம் ஓரணியில் இருக்கும் போது டெல்லி அணியின் எந்த காவி திட்டமும் இங்கே பலிக்காது என சிதம்பரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
இன்று நீலகிரி, கோவையில் கனமழை பெய்ய வாய்ப்பு
15 Jul 2025சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை மாவட்டங்க
-
வரும் 25-ம் தேதி எம்.பி.யாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
15 Jul 2025சென்னை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஜூலை 25-ம் தேதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார்.
-
காமராஜர் பிறந்தநாள்: கவர்னர், அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம்
15 Jul 2025சென்னை, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழக ஆளுநர் ரவி, அ.தி.மு.க.
-
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு: இருதரப்பு உறவு குறித்து விளக்கம்
15 Jul 2025பெய்ஜிங், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இருதரப்பு உறவுகளின் சமீபத்திய வளர்ச்சி குறித்து விளக்கியுள்ளார்.
-
மயிலாடுதுறையில் முதல்வர் ரோடு ஷோ: 2 கி.மீ. நடந்து சென்று மக்களை சந்தித்தார்
15 Jul 2025மயிலாடுதுறை, தொடர்ந்து மயிலாடுதுறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 'ரோடு ஷோ'நடத்தினார்.
-
செஸ்: வைஷாலி முன்னேற்றம்
15 Jul 2025பிடே உலக கோப்பை மகளிர் செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள படுமி நகரில் நடைபெற்று வருகிறது. 29-ந்தேதி வரை நடை பெறும் இந்தப் போட்டியில் 107 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
-
புதிய பாஸ்போர்ட் கோரி சீமான் மனு: பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
15 Jul 2025சென்னை, பாஸ்போர்ட் தொலைந்து விட்டதால், புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனு குறித்து அறிக்கை தாக்கல் செய்
-
ரிஷப் பண்ட்டின் ரன் அவுட்தான் பெரிய திருப்புமுனை: கவாஸ்கர்
15 Jul 2025லண்டன் : ரிஷப் பண்ட் ரன் அவுட் ஆனது தான் போட்டியின் மிகப்பெரிய திருப்புமுனை என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
லார்ட்சில்...
-
நிபா வைரஸ் பரவல் எதிரொலி: தமிழக, கேரள எல்லைகளில் அலர்ட்
15 Jul 2025சென்னை, கேரளாவில் நிபா வைரஸ் தொற்றுக்கு 2 பேர் பலியானதையடுத்து நீலகிரி மாவட்ட தமிழக - கேரள எல்லைகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
-
ஒடிசா மாணவியின் மரணம் பா.ஜ.க.வின் நேரடிக் கொலை : ராகுல் காந்தி கடும் தாக்கு
15 Jul 2025புதுடெல்லி : ஒடிசாவில் நீதிக்காக போராடிய மகளின் மரணம், பா.ஜ.க. அமைப்பால் செய்யப்பட்ட கொலையே தவிர வேறொன்றும் இல்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் நடிகை சரோஜாதேவி உடல் நல்லடக்கம்
15 Jul 2025பெங்களூரு, மறைந்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல் அவரது சொந்த ஊரில் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
-
உழவன் செயலி, பயிர் கடன் தள்ளுபடி: பட்டியலிட்டார் எடப்பாடி பழனிசாமி
15 Jul 2025அரியலூர், விவசாயிகளுடனான சந்திப்பின் போது உழவன் செயலி, பயிர் கடன் தள்ளுபடி குறித்து இ.பி.எஸ். பட்டியலிட்டு பேசினார்.
-
இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
15 Jul 2025லண்டன் : இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணி அறிவிக்கப் பட்டுள்ளது.
முன்னிலை...
-
மனுக்களுக்கு தீர்வு காணப்படவில்லை: அதிகாரிகள் மீது துரைமுருகன் ஆதங்கம்
15 Jul 2025வேலூர், ''பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மனுக்களாகவே உள்ளன.
-
100 கோடி மக்களுக்கு முன்மாதிரி: சுபான்ஷூ சுக்லாவை வரவேற்று பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி
15 Jul 2025புதுடில்லி : விண்வெளி பயணத்தை முடித்துக் கொண்டு பூமிக்கு திரும்பிய இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுக்லாவை, நாட்டு மக்களுடன் இணைந்து வரவேற்கிறேன் என பிரதமர் மோடி கூறி
-
புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: முதல்வர் ரங்கசாமி
15 Jul 2025புதுச்சேரி : அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் மட்டுமின்றி, பிற படிப்புகளுக்கும் 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கச
-
பூமிக்கு திரும்பினார் சுபான்ஷூ சுக்லா: பெற்றோர் கண்ணீர் மல்க வரவேற்பு
15 Jul 2025கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி பயணம் மேற்கொண்ட இந்திய விமானப்படை வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்டோருன் டிராகன் விண்கலம் பத்திரமாக அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்பரப்
-
பாலியல் புகார்: பேராசிரியர் மீது நடவடிக்கை இல்லாததால் மாணவி தற்கொலை
15 Jul 2025புவனேஷ்வர் : ஒடிசாவில் பாலியல் துன்புறுத்தல் புகாருக்கு முறையான நடவடிக்கை எடுக்காததால் தீக்குளித்த மாணவி பரிதாபமாக பலியானார்.
-
கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம்: : முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
15 Jul 2025சென்னை : கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம் என்று காமராஜரின் 123-வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
2-வது அணியாக டெஸ்ட் வரலாற்றில் மே.இ.தீவுகள் அணி மோசமான சாதனை
15 Jul 2025சபினா பார்க் : ஒரு இன்னிங்சில் மிகக் குறைந்த ஸ்கோரைப் பதிவுசெய்த 2-வது அணி எனும் மோசமான சாதனையை வெஸ்ட் இண்டீஸ் அணி படைத்துள்ளது.
-
பறக்கும் விமானத்தில் திருமணம் செய்த ஜோடி வலைதளங்களில் வீடியோ வைரல்
15 Jul 2025துபாய், பறக்கும் விமானத்தில் திருமணம் செய்த ஜோடிகளில் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.