எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி,ஆக.19 - ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் குறித்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 2 குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்துள்ள சி.பி.ஐ. 3 வது குற்றப்பத்திரிக்கையை தயாரித்து வருகிறது. அதன் பிறகு மேலும் சிலர் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே ஸ்பெக்ட்ரம் ஊழல் பண பரிமாற்றங்கள் குறித்து அமலாக்கப் பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற ஆய்வில் லூப் டெலிகாம் நிறுவனத்தின் 2 கிளை நிறுவனங்கள், அன்னிய செலவாணி விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் மூலம் ரூ. 384 கோடி ஊழல் நடந்திருப்பது தொடர்பாக ஆவணங்களை அமலாக்கப்பிரிவினர் சேகரித்து வருகின்றனர். இதற்கிடையே அந்த இரண்டு நிறுவனங்களுக்கும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. ஏற்கனவே லூப் டெலிகாமில் இருந்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ரூ. 4,300 கோடி அளவுக்கு முறைகேடு குற்றச்சாட்டுகள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


