எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திரிபோலி, ஆக.23 - லிபிய தலைநகர் திரிபோலியை புரட்சிப் படை கைப்பற்றியது. கடாபியின் இரண்டு மகன்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். லிபியாவில் அதிபர் கடாபியின் ஆட்சியை எதிர்த்து பொதுமக்கள் போராடி வருகின்றனர். இந்த போராட்டம் கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த 5 மாதத்தில் பென் காசி, பிரகா உள்ளிட்ட முக்கிய நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் புரட்சிப் படைகள் கொண்டுவந்துள்ளன. போராட்டத்தை ஒடுக்க கடாபி ராணுவத்தை பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில் புரட்சிப் படையினர் தொடர்ந்து முன்னேறி தலைநகர் திரிபோலியை கைப்பற்றினர். திரிபோலியைச் சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகளையும் கைப்பற்றியுள்ளனர். மேலும் சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது. குறிப்பாக ராணுவத்தின் முக்கிய தளத்தையும் கிரீன் சதுக்க பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர் புரட்சிப் படையினர்.
திரிபோலிக்குள் அவர்கள் நுழைந்ததும், அங்கு குடியிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மார்டயர்ஸ் சதுக்கத்திற்கு வந்து அவர்களை வரவேற்றனர். அவர்கள் தங்களது கைகளில் லிபிய தேசிய கொடிகளை அசைத்து மகிழ்ந்தனர். கடவுள் மிகப்பெரியவர் என்று கூறி நடனமாடி மகிழ்ந்தனர். கடாபி மற்றும் அவரது மகன்களுக்கு எதிராக கோஷங்களை அவர்கள் எழுப்பினர்.
இதனிடையே கடாபியின் இரண்டு மகன்கள் புரட்சிப் படையால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சைப் அல் இஸ்லாம் என்பவரது பெயர் மட்டம் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் கடாபி தலைமறைவாகிவிட்டார். அவர் எங்கு பதுங்கி இருக்கிறார் என்பது தெரியவில்லை. புரட்சிப் படையினரிடம் தான் சரணடைய மாட்டேன் என்று அவர் ஏற்கனவே கூறியிருந்தார்.கடாபியின் வீழ்ச்சிக்கு மகிச்சி தெரிவித்தும் புரட்சிப் படையை வாழ்த்தியும் பொதுமக்கல் ஒருவருக்கொருவ் எஸ்.எம்.எஸ். அனுப்பி மகிழ்ந்தனர். தற்போது தலைநகரம் திரிபோலி புரட்சிப் படையினர் கைவசம் உள்ளது. ஆனால் கடாபி தங்கியிருக்கும் பாப் அல் அஜீஸியா என்ற இடம் மட்டும் ராணுவத்தினர் கைவசம் உள்ளது. இதை லிபிய அரசு மறுத்துள்ளது. நாடு முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக லிபியா அறிவித்துள்ளது. புரட்சிப் படை தாக்கியதில் திரிபோலியில் 1300 பேர் இறந்ததாகவும் இன்னும் ராணுவம் புரட்சிப் படையுடன் சண்டையிட்டு வருவதாகவும் லிபிய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் புரட்சிப் படை திரிபோலியை கைப்பற்றியது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடாபியின் ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது. எனவே அவர் பதவி விலகி மேலும் பலர் ரத்தம் சிந்துவதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026


