எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திரிபோலி, ஆக.23 - லிபிய தலைநகர் திரிபோலியை புரட்சிப் படை கைப்பற்றியது. கடாபியின் இரண்டு மகன்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். லிபியாவில் அதிபர் கடாபியின் ஆட்சியை எதிர்த்து பொதுமக்கள் போராடி வருகின்றனர். இந்த போராட்டம் கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த 5 மாதத்தில் பென் காசி, பிரகா உள்ளிட்ட முக்கிய நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் புரட்சிப் படைகள் கொண்டுவந்துள்ளன. போராட்டத்தை ஒடுக்க கடாபி ராணுவத்தை பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில் புரட்சிப் படையினர் தொடர்ந்து முன்னேறி தலைநகர் திரிபோலியை கைப்பற்றினர். திரிபோலியைச் சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகளையும் கைப்பற்றியுள்ளனர். மேலும் சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது. குறிப்பாக ராணுவத்தின் முக்கிய தளத்தையும் கிரீன் சதுக்க பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர் புரட்சிப் படையினர்.
திரிபோலிக்குள் அவர்கள் நுழைந்ததும், அங்கு குடியிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மார்டயர்ஸ் சதுக்கத்திற்கு வந்து அவர்களை வரவேற்றனர். அவர்கள் தங்களது கைகளில் லிபிய தேசிய கொடிகளை அசைத்து மகிழ்ந்தனர். கடவுள் மிகப்பெரியவர் என்று கூறி நடனமாடி மகிழ்ந்தனர். கடாபி மற்றும் அவரது மகன்களுக்கு எதிராக கோஷங்களை அவர்கள் எழுப்பினர்.
இதனிடையே கடாபியின் இரண்டு மகன்கள் புரட்சிப் படையால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சைப் அல் இஸ்லாம் என்பவரது பெயர் மட்டம் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் கடாபி தலைமறைவாகிவிட்டார். அவர் எங்கு பதுங்கி இருக்கிறார் என்பது தெரியவில்லை. புரட்சிப் படையினரிடம் தான் சரணடைய மாட்டேன் என்று அவர் ஏற்கனவே கூறியிருந்தார்.கடாபியின் வீழ்ச்சிக்கு மகிச்சி தெரிவித்தும் புரட்சிப் படையை வாழ்த்தியும் பொதுமக்கல் ஒருவருக்கொருவ் எஸ்.எம்.எஸ். அனுப்பி மகிழ்ந்தனர். தற்போது தலைநகரம் திரிபோலி புரட்சிப் படையினர் கைவசம் உள்ளது. ஆனால் கடாபி தங்கியிருக்கும் பாப் அல் அஜீஸியா என்ற இடம் மட்டும் ராணுவத்தினர் கைவசம் உள்ளது. இதை லிபிய அரசு மறுத்துள்ளது. நாடு முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக லிபியா அறிவித்துள்ளது. புரட்சிப் படை தாக்கியதில் திரிபோலியில் 1300 பேர் இறந்ததாகவும் இன்னும் ராணுவம் புரட்சிப் படையுடன் சண்டையிட்டு வருவதாகவும் லிபிய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் புரட்சிப் படை திரிபோலியை கைப்பற்றியது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடாபியின் ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது. எனவே அவர் பதவி விலகி மேலும் பலர் ரத்தம் சிந்துவதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 1 hour ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-09-2025.
14 Sep 2025 -
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு விழா: 2,885 கோடி ரூபாயில் புதிய திட்டப்பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு சார்பில் நடந்த அரசு விழாவில் ரூ.2,885 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினா
-
கிருஷ்ணகிரி 5 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 5 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
-
கிருஷ்ணகிரியில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
-
அபராதம் இன்றி வருமான வரியை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் : வருமான வரித்துறை தகவல்
14 Sep 2025மும்பை : ‘2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கு இதுவரை 6 கோடிக்கும் மேல் வருமான வரிக் கணக்குகள் (ஐடிஆா்) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக’ வருமான வரித் துறை சாா்பில் சனிக்கிழமை தெரிவ
-
ஒசூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ
14 Sep 2025ஒசூர் : ஒசூரில் முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ மேற்கொண்டார். ஒசூரில் ரோடு ஷோ சென்ற மு. க. ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
அஸ்ஸாமில் ரூ. 5,000 கோடியில் மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்
14 Sep 2025திஸ்பூர் : அஸ்ஸாம் மாநிலத்தில் கோல்கா மாவட்டத்தில் ரூ. 5,000 கோடி மதிப்பிலான மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்.
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து உதவித் தொகையினை வழங்குகிறார்
14 Sep 2025சென்னை : பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் அக்குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர
-
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட் இன்று இடைக்கால உத்தரவு
14 Sep 2025புதுடெல்லி : மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் திங்கள்கிழமை (செப்.15) இடைக்கால உத்தரவை அளிக்க உள்ளது.