எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திரிபோலி, ஆக.28 - திரிபோலி நகரை புரட்சிப் படையினர் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த பிறகு இப்போது மயான அமைதியுடன் காட்சியளிக்கிறது. இதுஒரு புறம் இருக்க பல மருத்துவமனைகளில் ஏராளமான பிணங்கள் அழுகிய நிலையில் குவியல் குவியலாக கிடக்கின்றன. லிபியாவில் கடந்த 42 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி நடத்திவந்த கர்னல் மும்மர் கடாபிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கொதித்தெழுந்தனர். கடாபியை விரட்டியடிக்க புரட்சிப் படைகள் போரிட்டன. புரட்சிப் படைகளுக்கும் கடாபியின் விசுவாச ராணுவத்திற்கும் இடையே நாடு முழுவதும் பல இடங்களில் யுத்தம் நடைபெற்றது. புரட்சிப் படைகளுக்கு ஆதரவாக நேட்டோ படைகளும் களத்தில் இறங்கின. கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த இந்த போர் கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. இறுதிச் சண்டையாக திரிபோலியில் கடாபி விசுவாசப் படைகளுக்கும் புரட்சிப் படைகளுக்கும் இடையே நடந்த உச்சக்கட்ட போரில் ஒரே நாளில் 400 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து கடாபி வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டார். ஆனால் அவர் எங்கே இருக்கிறார் என்பது இன்னும் திட்டவட்டமாக தெரியவில்லை.
திரிபோலி நகர் தற்போது புரட்சி படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. எங்கும் மயான அமைதி நிலவுகிறது. மின்சாரம் குடிநீர் இல்லாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இருந்தாலும் 42 ஆண்டுகால கடாபி ஆட்சி முடிவுக்கு வந்ததை திரிபோலி மக்கள் ஆங்காங்கே சில இடங்களில் தெருக்களில் கோஷங்களை எழுப்பி வெற்றிக் கொண்டாட்டங்களை நடத்தினர். பல மருத்துவமனைகளில் அழுகிய நிலையில் பிணங்கள் கிடக்கின்றன. இவர்கள் யாரால் கொல்லப்பட்டார்கள்? என்பது தெரியவில்லை. இந்த பிணஙகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஒரு மருத்துவமனையில் மட்டும் 21 பிணங்கள் குவியலாக வைக்கப்பட்டு உள்ளன. தெருக்களில் ஆங்காங்கே குப்பை கூளங்கள் சேர்ந்துள்ளன. தெருக்களிலும் கூட சில இடங்களில் அழுகிப்போன பிணங்கள் காணப்பட்டன. உங்களுக்கு விடுதலை, இனி தலைநிமிர்ந்து நடக்கலாம் என்று திரிபோலி மக்களுக்கு புரட்சிப் படையினர் அறைகூவல் விடுத்துள்ளனர். இதுவரை பறந்துகொண்டிருந்த கடாபியின் கொடிகள் கிழித்தெறியப்பட்டு புரட்சிப் படையினரின் கொடிகள் பல இடங்களில் ஏற்றப்பட்டுள்ளன.
படுகாயம் அடைந்த மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணிகளில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர். சிறை வைக்கப்பட்டுள்ள போர்க் கைதிகளை சரியாக நடத்துமாறும் செஞ்சிலுவை சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. திரிபோலி நகரம் நிசப்தமாக இருந்தாலும்கூட ஆங்காங்கே சில இடங்களில் அவ்வப்போது துப்பாக்கி சுடும் சப்தங்களும் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026 -
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ
-
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கல்யானைக்கு கரும்பளித்த லீலை.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் விழா தொடக்கம்.
- ஶ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் திருப்பாவை சாற்று முறை.
-
இன்றைய நாள் எப்படி?
14 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
14 Jan 2026


