முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காணாமல் போன ஐ.ஏ.எஸ். அதிகாரி கதி என்னை?

புதன்கிழமை, 31 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

ஆல்வார், செப்.- 1 - காணாமல்போன ஐ.ஏ.எஸ். அதிகாரி நவீன் ஜெயின் கதி என்ன என்று தெரியவில்லை. அவரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கிடையில் அவரது மனைவியும் மகனும் ஜெயப்பூர் திரும்பியுள்ளனர்.
கடந்த 2001- ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்.அதிகாரியான நவீன் ஜெயின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாரன் மாவட்ட கலெக்டராக இருந்தார். சமீபத்தில் அவர் ஜெய்பூர் கமிஷனராக மாற்றம் செய்யப்பட்டார். இந்தநிலையில் அவர், டெல்லிக்கு நேற்றுமுன்தினம் குடும்பத்துடன் சென்றுள்ளார். ஷாபாத் நகரில் காலை உணவு சாப்பிடுவதற்காக ஒரு ஓட்டலில் தங்கியுள்ளனர். ஆனால் அங்கு நவீன் செயினை காணவில்லை. அவரது குடும்பத்தினர்கள் மட்டும் தங்கியிருந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர். ஐ.ஏ.எஸ். அதிகாரியாகி 11 ஆண்டுகளாகியும் இன்னும் ஒரு முறையான வீடு தமக்கு இல்லையே என்று ஜெயின் வருத்தத்துடனும் விரக்தியுடனும் இருந்ததாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. ஜெய்பூர் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள ஜெயினுக்கு இன்னும் பங்களா ஒதுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. ஜெயினை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையில் ஜெயின் குடும்பத்தினர் ஜெயப்பூர் திரும்பியுள்ளனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்